Thursday, April 16, 2020

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது.

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது. 
**  **  **   ** ** **   ** ** ** ** **

 நாம் இப்போது இயேசு உயிர்த்த விழா மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

ஆனாலும் சிலுவை இன்றி  உயிர்ப்பு இல்லை.

ஆகவே உயிர்த்த இயேசு  பாடுகள் பட்டபோது  நடந்த நிகழ்ச்சிகளையும் தியானிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இப்போது ஜெத்சமனி தோட்டத்தில்  நிற்கிறோம்.

யூதாஸ் படைவீரர்களையும், தலைமைக்குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் அழைத்துக்கொண்டு,

 விளக்குகளோடும், பந்தங்களோடும் படைக்கருவிகளோடும் அங்கே வருகிறான்.

இராயப்பரும், மற்ற சீடர்களும் இயேசுவின் அருகில் நிற்கிறார்கள்.

சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருக்கிறது. . 

அவர் அதை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, 

அவனது வலக்காதை வெட்டுகிகிறார். 

 அவ்வூழியனின் பெயர் மால்குஸ்.

இயேசு  அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்துகிறார்.  

 இயேசு இராயப்பரை நோக்கி, "உன் வாளை உறையில் போடு. ஏனெனில், வாள் எடுப்போர் எல்லாரும் வாளால் மடிவர்.

தந்தை எனக்குக் கொடுத்த துன்பகலத்தில் நான் குடிக்காதிருப்பேனோ ?" 
என்கிறார்.

இயேசு  தான் நற்செய்தி அறிவித்து வந்த மூன்று ஆண்டுகளும் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு.

Every action has a reaction.

காலையில் எழுந்து உற்சாகத்துடன் வீட்டைவிட்டு வெழியே வருகிறேன்.

நண்பர் ஒருவர் எதிரே வருகிறார்.

நான் உற்சாகத்துடன் அவரை நோக்கி உரத்த குரலில்,

" Hi, Selva, Good morning! How are you?"

நிச்சயமாக என் உற்சாகம் அவரை தொற்றிக்கொள்ளும்.

"Hi, Lourdu, very Good morning!
I am fine. How are you.?"

 அவரிடம் தொற்றிக்கொண்ட என்னுடைய உற்சாகமும், வாழ்த்தும் 

அவர் யாரையெல்லாம் பார்க்கிறாரோ அவர்களிடமும்  தொற்றிக்கொள்ளும்.

அதோடு நிற்காது.

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களையும்,

இப்படியே விரிந்து கொண்டு செல்லும்.

ஒரு ஊரணியின் நடுவில் ஒரு சிறு கல்லைப் போட்டால் அது ஏற்படுத்தும் அலை ஊரணி எங்கும் விரிவது போல

ஒருவரிடமிருந்து வெளிவரும் சொல்லோ, செயலோ எதிர்வினை (Reaction) அலைகளை விரித்துக் கொண்டே செல்லும்.

இயேசு செய்த புதுமைகள் இரண்டு விதமான எதிர், எதிர் வினை அலைகளை ஏற்படுத்தின.

1. சாதாரண மக்களிடையே அவர் மீது விசுவாசத்தை ஏற்படுத்தின. அவர்கள் சென்றவிடமெல்லாம் அதைப் பரப்பினார்கள். 

இயேசு சென்றவிடமெல்லாம்  அவரது நற்செய்தியைக் கேட்கவும்,

 வியாதிகளிடமிருந்து குணம் பெறவும் மக்கள் அலை  அலையாய் அவரைத் தேடி வந்தார்கள்.

பாவிகள் மன்னிக்கப் பட்டார்கள்.

2. படித்த அறிவு ஜீவிகளாகிய பரிசேயர், சதுசேயர் போன்றோரிடம் 

சாதாரண மக்களிடம் ஏற்பட்ட reaction னுக்கு எதிரான எதிர்வினை ஏற்பட்டது.

அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

மாறாக,இயேசு மீது பொறாமையும், கோபமும் ஏற்பட்டதோடு 

நாளுக்கு நாள் அவை வளர்ந்து வந்தன.

 இயேசு வளர்ந்தால் மக்களிடையே  தங்களுக்கு இருந்த மதிப்பு போய்விடும் என்று எண்ணிய அவர்கள்

 இயேசுவைக் கொலை செய்ய வழி தேடி கொண்டிருந்தார்கள்.

 அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு தான் இறைத் திட்டத்தினுடைய பெருமையை உணர முடிகிறது.

 இறைவன் நல்லவர், நல்லதை மட்டும் செய்யக்கூடியவர்.

 அதுமட்டுமல்ல

 தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கூடியவர்.


தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கூடியவராய் இருப்பதால்தான் 

நன்மையை மட்டும் விரும்பும்

 அவர் தீமையையும் அனுமதிக்கிறார்.

பாவம் ஒரு  தீமை.

உயிர்த்த திருநாள் அன்று திரு வழிபாட்டில் 

திருச்சபை பாவத்தை 

"பாக்கியமான பாவமே"

என்று அழைக்கிறது.

 ஏன் தீமையைத் திருச்சபை "பாக்கியமான "

என்று அழைக்கிறது?

 ஏனெனில் ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகத்தான்

 இறைமகன் மனிதனாக பிறந்து நம்மிடையே தங்கினார்.

 சர்வ வல்லமையுள்ள கடவுளையே சாதாரண மனித சுபாவத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது நமது ஆதிப்பெற்றோர் செய்த பாவம்.

 அதனால்தான் இன்றும் இயேசு நற்கருணை வடிவில் நம்மிடையே இருக்கின்றார்,

 நமக்கு உணவாக வருகின்றார்.

ஆக தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக்கூடிய வல்லமை இருப்பதால்தான் 

இறைவன் உலகில் தீமையை அனுமதிக்கிறார்.

சாதாரண மக்களிடையே இயேசுவின் புதுமைகள் விசுவாசத்தை வளர்த்தது நன்மை.


 பரிசேயர் சதுசேயரிடம் கோபமும் பொறாமையும் வளர்ந்தது தீமை.

இந்த தீமையில் இருந்து தான் இயேசு தான் எதற்காக பூமிக்கு வந்தாரோ அதை வரவழைத்தார்.

அதாவது மீட்பை வரவழைத்தார்.

பரிசேயரும் சதுசேயரும்

இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதால்தான் நமக்கு இரட்சணம் கிடைத்தது.

அதற்காக நாம் பாவம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

நாம் செய்ய வேண்டியது புண்ணியத்தை மட்டும்தான்.

நம்முடைய  சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி பாவம் செய்வது  இறைவனுடைய சித்தத்திற்கு எதிரானது.

அவர் நமது சுதந்திரத்தை மதிப்பதால் அதைத் தவறாக பயன்படுத்தும் போதும் நம்மை தடுப்பது இல்லை.

ஆனாலும் நாம் செய்த பாவத்திலிருந்து நன்மையை வரவழைக்க அவரால் முடியும்.

இப்போது கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

இராயப்பர் மால்குஸின் காதை வெட்டியது இயேசுவின் விருப்பத்திற்கு விரோதமான செயல்.

வெட்டும்போது இயேசு அதை தடுக்கவில்லை,

 பாவத்தை அனுமதிப்பது போல.

ஏன் தடுக்கவில்லை?

 அந்த தவற்றிலிருந்து மற்றொரு பெரிய நன்மையை வரவழைப்பதற்காக.

 மால்குசின் காதை வெட்டியதால் என்ன நன்மை ஏற்பட்டது?

 இயேசுவை அவருடைய விரோதிகள் கொல்வதற்காக கைது செய்து கொண்டு போகிறார்கள்.

 கைதுக்கு முக்கியமான காரணம் தலைமைக்குரு.

மால்குஸ் அவரது ஊழியன்.

இயேசு புதுமை செய்து குணமாக்கியது,

அவரைக் கொலை செய்ய அழைத்துப் போக வந்தவனை.


(அவனை இயேசுவின் விரோதி என்று சொல்லமாட்டேன், ஏனெனில் இயேசு யாரையும் விரோதியாக நினைப்பதில்லை. யூதாசையே அவர் "நண்பா"
என்று அழைத்தார்.)

அவரைக் கொலை செய்ய அழைத்துப் போக வந்தவனுக்கு அவர் செய்த நற்செயலுக்கு கட்டாயம் ஒரு reaction இருந்திருக்கும்.

அதைப்பற்றி நற்செய்தியாளர்கள் எதுவும் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

 நமக்கு அது முக்கியம் அல்ல.

 இயேசு அவனுக்கு செய்த புதுமையை அவன் மறந்திருக்கவே மாட்டான்.

  அவன் காதை தொடும் போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வந்திருக்கும் என்று நம்புவோம்,

 அதைத் தலைமை குருவுக்குத் தெரிவித்திருந்திருப்பான்.

அவனது ஊழியன்பால் இயேசுவின் அன்புச் செயல் பற்றிய செய்தி அவனுடைய மூளையில் ஏதாவது ஒரு பகுதியில் பதிவாகி இருந்திருக்கும்.

மேலும் காதை ஒட்டவைத்த புதுமையை அவரைப் பிடிக்க வந்த மற்றவர்களும் பார்த்திருப்பார்கள்.

அவர்களுடைய மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு. 

இதற்கு பைபிளில் ஆதாரம் உண்டா?

"இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்." (லூக்.23:34)

இவ்வசனத்தைத் தியானித்தால் எல்லாம் புரியும்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment