Sunday, March 8, 2020

ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

**  **  **  **   ** ** **   ** ** ** **
நிறைவு (Perfection) இறைவனுக்கு மட்டுமே உரியது.

அவர் மட்டுமே அளவற்றவர்.

அவர் நமமைப் படைத்தபோது தன் சாயலாகப் படைத்தார்.

அதாவது அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பு, நீதி, ஞானம், சுதந்திரம் போன்ற அவரது பண்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஆயினும் நாம் அளவுள்ளவர்களே.

எந்தப் பண்பிலும் நம்மால் முழுமையாக , நிறைவாக இருக்க முடியாது.

இறைவனால் வளர்ச்சி அடைய முடியாது.

நிறைவு அதிக நிறைவாக முடியாது.

Perfection cannot become more perfect.

அளவுள்ள நாம் வளர முடியும்.
வளர வேண்டும்.

தளரவும் முடியும்.
தளரக்கூடாது.

நாம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் நிறைவை அடையமுடியாது.

ஏனென்றால் நிறைவு இறைவனுக்கு மட்டுமே உரிய பண்பு.

ஆயினும் இயேசு நம்மிடம்

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"

என்கிறார்.


மனிதர்களாகிய நாம் இறைத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக ஆக இருக்க முடியாது என்று இயேசுவுக்குத் தெரியும்.

 ஆனாலும் நமது ஆன்மீகப் பயணம் நிறைவை நோக்கி,

அதாவது,

நிறைவானவராகிய இறைத் தந்தையை நோக்கியே இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விரும்பம்.

Perfection must be our aim.

ஒரு கப் தண்ணீர் ஒரு கடல் தண்ணீராக முடியாது.

ஆனால் அதைக் கடல் நீரில் ஊற்றி விட்டால், அது கடலோடு இரண்டறக் கலந்து விடும்.

அவ்வாறே நிறைவற்ற நாமும் நமது வாழ்வின் இறுதியில் நிறைவோடு,

அதாவது நிறைவாக இருக்கின்ற இறைவனோடு கலக்க  வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

It is Jesus' desire that we who are imperfect must get united with God, who is perfect, in heaven, at the end of our life in this world.

இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றுவதே நம் வாழ்வின் இலட்சியம்.

இயேசுவே, உமது சித்தம் எமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment