Wednesday, March 18, 2020

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று." (மத். 5:28)

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று." (மத். 5:28)
**  **  **  **   ** ** **   ** ** ** **

"ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." (அரு. 1:1)

"அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின:"(3)

ஒரே இறைவன்

நித்திய காலமாக சிந்திக்கிறார். சிந்தனையில் பிறந்தவர் (நித்திய காலமாக)
வார்த்தை. (சிந்தனை, சொல்)

அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின. (செயல்)

சிந்திக்கிறவர்- தந்தை
சிந்தனை         - மகன்
செயல்    .          - அன்பு

இறைவன் தன் அன்பைப் பகிர்ந்து கொள்ளவே நம்மைப் படைத்தார்.



சிந்தனை, சொல், செயல் - 
இம்மூன்றும் இறைவனுக்கு உரியவை.

இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தார்.

ஆகவேதான் நாம் 

சிந்திக்கிறோம்.

சிந்தனையை வார்த்தை (சொல்) மூலம் வெளியிடுகிறோம்.

சிந்தனையையும், வார்த்தையையும் செயலில் காட்டுகிறோம்.

இறைவன் சிந்திக்கிறதைத்தான் சொல்கிறார். (இறைவார்த்தை-பைபிள்)

சொற்படியே செயல்படுகிறார்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருப்பது சத்தியம்.

"நானே வழியும் உண்மையும்
                               -------------------
 உயிரும்." இயேசு

உண்மை என்றால் சத்தியம்.

உள் + மெய்= உண்மை

நினைப்பும், செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மை, அதாவது, சத்தியம்.


நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்தால்தான் 

நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலை பத்திரமாகப் பாதுகாக்கிறோம்.

ஆனால் நமது பாவத்தினால் நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலைப் பழுதுபடுத்திவிட்டோம்.


அதனால்தான் அநேக சமயங்களில் நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்துப்போவதில்லை.

நினைப்பதை நினைத்தபடி பேசுவதில்லை.

பேசியபடி செய்வதில்லை.

Many a times our thought, word and action don't tally with one another.


நாம் செயல் படாமலும் பேசாமலும் இருந்தாலும்கூட சிந்தனை ஓய்வதில்லை.

நமது உள்ளம் சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறது.

நமது சிந்தனை ஓட்டத்திலிருந்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நமது வாழ்க்கையின் தரத்தை தீர்மானிப்பது நமது சிந்தனையே.

இயல்பாக நாம் சிந்தித்ததையே செயல்படுத்துகிறோம்.

நல்ல சிந்தனை உள்ளவர்கள் நல்லதையே பேசுவார்கள்,
 நல்லதையே செய்வார்கள்.

இது இயல்பானது.

ஆனால் சிந்திக்கும் போதே நமது சிந்தனையை பேச்சிலும் செயலிலும் காட்டக்கூடாது என்று சிந்தித்து செயல்படுபவர்கள்

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்.

உள்ளே அழுகிக் கொண்டிருக்கும் பிணம்.

வெளியே அழகாக வெள்ளை அடிக்கப்பட்ட தோற்றம்.


இப்படிப்பட்டவர்களை  hypocrites,  வெளிவேடக்காரர்கள் என்று அழைப்போம்.

இயேசுவுக்கு இவர்களைப் பிடிக்காது.

மனதிலே கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு

 நல்லவன் போல் பேசினாலோ நடித்தாலும் அவன் வெளிவேடக்காரன்.

நமது சொற்களுக்கும் செயல்களுக்கும் சிந்தனையே காரணமாக இருப்பதால்

 நமது புண்ணியங்களும் சரி,

 பாவங்களும் சரி

 சிந்தனையிலேயே  ஆரம்பிக்கின்றன.

 பக்தியுள்ளவன் எப்பொழுதும் இறைவனைச் சார்ந்த காரியங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான்.

 அவனது சிந்தனையிலிருந்துதான்   அவனுடைய நற்பேச்சும்,
நற்செயலும் பிறக்கின்றன.

 அதேபோல் பாவம் செய்பவனும் பாவத்தை தனது சிந்தனையில் தான் ஆரம்பிக்கிறான்.

திருடுபவன் திருட வேண்டும் என்ற திட்டத்தைத் தன் சிந்தனையில்தான் வகுக்கிறான்.

திட்டம் வகுத்த பின்  அவனால் திருட முடியாவிட்டாலும் கூட  அவன் திருட்டு என்ற பாவத்தைச் செய்து விட்டான்.


 இயேசு கூறுகிறார் 

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று."(மத். 5:28)



"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.

21 ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,

22 களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.

23 இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்." (மாற்கு.7:20-23)

ஆகவே நாம் நமது உள்ளத்தை எப்போதும் தூய்மையாக  வைத்துக் கொள்ள வேண்டும்.

 நமது எண்ணங்கள் யாவும் இறைவனைச்    சார்ந்தனவாகவே இருக்க வேண்டும்.

அப்போதுதான் நமது பேச்சும் செயலும் இறைவனைச் சார்ந்ததாகவே இருக்கும்.

சோம்பல் பசாசின் பட்டறை என்பார்கள்.

சோம்பேறியின் உள்ளத்தில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களே உதிக்கும்.

ஆகவே ஒரு வேலையும் இல்லாவிட்டால் நமது உள்ளத்தை நல்ல எண்ணங்களால்  நிரப்பும் வேலையைச் செய்ய வேண்டும்.

ஞான வாசகம், தியானம், ஜெபம், தவம், பிறர் சிநேக வேலைகள் போன்றவை இதற்கு உதவும்.

நம்மால் மற்றவர்களுடைய
பேச்சைக்  கேட்க முடியும்,

 செயலைப் பார்க்க முடியும், ஆனால் எண்ணங்களை அறிய முடியாது.

ஆகவே ஒருவனுடைய பேச்சையும், செயலையும் மட்டும் வைத்து அவனுடைய குணத்தை அறிய  முடியாது.

ஆகவேதான் யாரையும் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ தீர்ப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

 ஆனால் இறைவன் நமது உள்ளத்தை முழுவதும் அறிவார்.

நமது பேச்சாலும் செயலாலும் மனிதரை ஏமாற்றலாம்,

 ஆனால் இறைவனை ஏமாற்ற முடியாது.

அவர் நமது உள்ளத்தின் ஆழத்தையும் அறிவார்.

God knows even our innermost thoughts.

நாம் வாழ்வது இறைவனுக்காக,

 வாழப்போவது இறைவனோடு.

நாம் திருப்திப்படுத்த வேண்டியது இறைவனை மட்டுமே.

நமது உள்ளத்தை முற்றிலுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

நமது சொல்லும் செயலும் அர்ப்பணிக்கப்பட்ட உள்ளத்தைப் பின்பற்றும்.

நமது உள்ளம் இறைவன் வாழும் ஆலயம்.

அங்கு வாழ வேண்டியது இறைவன் மட்டுமே.

நாம் சொந்தமாக இருக்க வேண்டியது அவருக்கு மட்டுமே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment