Thursday, February 28, 2019

ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்(மாற்கு.9:50)

ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்
(மாற்கு.9:50)
+++++++++++++++++++++++++

உள்ளங்கள் ஒன்றையொன்று அன்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதுதான் சமாதானம்.

அன்பின் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் மனிதனைப் படைத்தபோது இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே பரிபூரண சமாதானம் நிலவியது.

ஆனால் மனிதன் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்ததின்மூலம் இறைவனோடு கொண்டிருந்த சமாதானத்தை முறித்துக்கொண்டு வந்துவிட்டான்.

ஆனால் இறைவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

அவரால் மாற்றிக் கொள்ளவும் முடியாது, ஏனைனில் இயல்பிலேயே அவரால் மாறமுடியாது.

By nature He cannot change.

ஆகவே அவர் நம்மை அவரோடு சமாதான நிலைக்குள் இழுத்துக்கொள்ள

நாம் செய்த பாவத்திற்கு

அவரே பரிகாரம் செய்ய நித்திய காலமாகவே தீர்மானித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்யமுடியாது.

ஆகவே மனிதனைய்ப் பிறந்து மனித சுபாவத்தில் பரிகாரம் செய்யத் தீர்மானிதார்.

இந்த நோக்கோடுதான் அவரது அன்பு மகன் மனிதன் ஆனார்.

இறைமகன் மனுமகன் ஆன நோக்கத்தை இறைத் தூதர்கள் விண்ணினின்று இசைத்த பாடல்மூலம் மண்ணுலகோர்க்கு அறிவித்தனர்

"விண்ணுகில் இறைவனுக்கு மகிமையும்,

மண்ணுலகில் நன்மனதோற்கு சமாதானமும் உண்டாகுக."

சமாதான தேவனின் மண்ணுலக வருகையை அறிவிக்கவந்த இறைத்தூதர்கள்

சமாதானத்திற்கு ஒரு நிபந்தனையும் கூறியுள்ளனர்.

'நன்மனதோற்குச் சமாதானம்."

'Peace to men of good will.'

இறைமகன் தன் சிலுவை மரணம் மூலம் மனித குலம் இழந்த சமானத்தை மீட்டுவிடுவார்.

அதை நாம் அனுபவிக்க நமக்கு நல்ல மனது வேண்டும்.

நல்ல மனது

1.பாவம் இல்லாதிருக்கும்.

2.தனக்கும் மற்றவர்கட்கும் நல்லதையே நினைக்கும்.

3.யார் மீதும் பொறாமையோ, கோபமோ கொள்ளாது.

4.எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும்.

5.பாரபட்சம் இல்லாமல் அன்பு செய்யும்.

இறைவன் பாடுபட்டு,

இரத்தம் சிந்தி,

உயிரைக்  கொடுத்துப்
பெற்றுத்தந்த சமாதானத்தை

நாமும்  அனுபவித்து

மற்றவர்கட்கும் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியிலும்

நமது பலியை
இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்

என்பதற்காகத்தான் பலியின் ஆரம்பத்திலேயே

உத்தம மனஸ்தாபப்பட்டு

நமது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புக்கேட்கிறோம்.

திருவிருந்தில் கலந்து கொள்ளுமுன்பு அருகில் உள்ளவர்களோடு நமது சமாதானத்தைப் பரிமாறிக்கொள்கிறோம்.

இது வெறும் சடங்கல்ல.

ஆண்டவர் கோவிலில் காணிக்கை செலுத்தும் முறைபற்றிக் கூறும்போது,

"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,


24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து."(மத்.5:24)

என்று கூறுகின்றார்.

சாதாரண காணிக்கையைச் செலுத்தும்போதே   சமாதானத்தை எதிர்பார்க்கும் இறைவன்,

தன் மகனையே பலியாகக் கொடுக்கும்போது சமாதானத்தை எதிர்பார்க்காமலிருப்பாரா?

உள்ளத்தில் பகைமையை வைத்துக்கொண்டு நாம் செலுத்தும் பலி எப்படி இறைவனுக்கு ஏற்றதாய் இருக்கும்.

உண்மையில் நாம் திருப்பலிக்குச் செல்லுமுன்பே மனத்தாங்கல் இருப்பவர்களோடு சமாதானம் செய்துவிட வேண்டும்.

ஆனால் இப்போது 'சமாதானம்' ஏன்ற வார்த்தைக்குப் பதில் 'அமைதி' என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள்.

அதனால்தான் பகைவரைப் பார்த்தவுடன் எதுவும் பேசாமல் அமைதியாக வந்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன்!

இரண்டு பகைவர்கள் அமைதியாயிருந்தால் சமாதானமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

அமைதியாய் இருப்பவர்களெல்லாம்
சமாதானமாய் இருக்கிறார்கள்  என்றும் அர்த்தமல்ல.

முதல் உலகப்போர் முடிந்தபின் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அப்புறம் நாடுகள் அமைதியாய் இரண்டாம் உலகப்போருக்குத் தயாரிக்க ஆரம்பித்தனர்!

பாவத்தினால் நமது முதல் பெற்றோர் இழந்த சமாதானத்தை இயேசு மீட்டுத்தந்திருக்கிறார்.

அந்த சமாதானத்தோடு வாழ்வோம் இறைவனோடும், நம் அயலானோடும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment