Wednesday, August 31, 2022

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்." ( மாற்கு.2:14)

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்." ( மாற்கு.2:14)


சுங்கத்துறையில் அமர்ந்திருந்த
 லேவியை  நோக்கி இயேசு கூறிய வார்த்தைகள்:  

"என்னைப் பின்செல்." 

.அவரும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றார்.

தனது சீடர்களைத் தேர்ந்தெடுக்க இயேசு பயன்படுத்திய வார்த்தைகள், 

"என்னைப் பின்செல்." 

அவர்களும் மறு வார்த்தை பேசாமல் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு விட்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் அனைவருக்கும் பொருந்தும்.

குருக்களும், துறவிகளும் மட்டுமல்ல,

இயேசுவை விசுவசித்து அவர் வழி நடக்கும் அனைவரும் அவருடைய சீடர்கள்தான்.

அனைவருக்கும இயேசுவின் நற்செய்திப் பணியில் பங்கு உண்டு.

தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் தன் வழி நடக்க அழைப்பதற்காகத்தான் இயேசு மனிதனாக பிறந்தார்.

குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களுக்கு அளிக்கப்படாத சில பொறுப்புகளையும் இயேசு கொடுத்திருக்கிறார்.

திருப்பலி நிறைவேற்றுதல், பாவங்களை மன்னித்தல், அதிகாரப்பூர்வமாக போதித்தல் போன்றவை குருக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விசேஷமான பொறுப்புகள்.

நற்செய்தியின்படி வாழவும், நாம் வாழும் வழிப்படி வாழ மற்றவர்களை அழைக்கவுமான கடமை அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் நாம் அனைவருமே இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் இயேசு நம் உள்ளத்தில் இருந்து கொண்டு, 

"என்னைப் பின்செல்" என்று அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.

இயேசு நமக்கு வழி காட்டுபவர் மட்டும் அல்ல, நம்மை வழி நடத்துபவரும் அவர்தான்.

ஒரு ஊருக்கு வழி எது என்று கேட்டால் வழி காட்டுபவர் செல்ல வேண்டிய திசையை காண்பித்து விட்டு அங்கேயே நின்று கொள்வார்.

ஆனால் வழி நடத்துபவர் நம்முடனேயே வருவார்.

ஒவ்வொரு வினாடியும் நம்முடனே இருந்து ஆலோசனைகள் கூறிக் கொண்டேயிருப்பார்.

செல்ல வேண்டிய இடத்திற்கு அவரே நம்மை அழைத்துச் சென்று விடுவார்.

அதைப் போலவே விண்ணுலகை நோக்கிய நமது ஆன்மீக பயணத்தில் இயேசு நமது உள்ளும் புறமும் இருந்து நம்மை வழி நடத்துகிறார்.

நமது உள்ளும் புறமும் இருக்கிறார் என்றால் 

இயேசு நமக்குள் இருக்கிறார், நாம் அவருக்குள் இருக்கிறோம்.

அவர் நமது உள்ளத்தில் என்றும் தங்கியிருக்கிறார்.

உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம் நம்மோடு பேசுகிறார்.

நாம் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடாதிருந்தால் அவரது குரல் நமக்கு தெளிவாக கேட்கும்.

 அனாவசியமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால் நமது கவனம் சிதறும்.

உள்ளத்தில் முழுவதுமாக அவரோடு இணைந்திருந்தால் அவரது எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறி நமது சொல்லிலும் செயலிலும் நம்மை வழி நடத்தும்.

சில வழி நடத்துதல்கள்:

காலையில் இறைவாக்கை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இறைவன் உள் உணர்வுகள் மூலம் நம்மோடு பேசுவார்.

வாசிக்கப்படும் இறைவாக்கை பகலில் எப்படி செயல்படுத்தலாம் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எண்ணங்களை தோன்றச் செய்பவர் இறைவன்தான்.

அன்றைய நாளில் அதற்கான சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் இறைவன் நமது உள் உணர்வு மூலம் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

                       ***

வேறு வேலையாக வெளியே சென்றாலும் கோவில் அருகில் இருக்குமானால் உள்ளே  வந்து என்னை சந்தித்து விட்டு போ என்ற  நற்கருணை  நாதரின் குரல் உள்ளத்தில் ஒலிக்கும்.

அதை மீறி நம்மால் செல்ல முடியாது.

கோவிலுக்குள் நுழைந்து நற்கருணை  ஆண்டவரை சந்தித்து விட்டுதான் செல்வோம்.

                   .  ***

காலையிலேயே நம்மை முழுவதும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் பகல் முழுவதும் இயேசுவின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக தோன்றி கொண்டேயிருக்கும்.

                    .  ***

யாரோடும் பேசும்போது கோபம் வந்தால் இயேசுவின் கருணை உள்ள முகம் உள்ளத்தில் தோன்றும். கோபம் காணாமல் போய்விடும்.

                          ***

 நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது நமது விசுவாச அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி உள்ளத்தின் உள்ளிருந்தே தூண்டுபவர் பரிசுத்த ஆவியானவர் தான்.

                             ***

நம்மை பற்றி அவதூராக பேசி, நமது பெயரைக் கெடுத்தவர்கள் நமக்கு எதிரே வரும்போது அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு, அவர்களோடு  இயல்பாகப்  பேச  வைப்பவரும் உள்ளத்தில் இருந்து நம்மோடு உரையாடும் ஆண்டவர் தான்.

                          ***

தேவைப்படுவோரைத் தேடிச்சென்று அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வைப்பவரும் நம் ஆண்டவர் தான்.

                               ***

நாம் செபிக்கும் போது நம்மை  வெறுப்பவர்களுக்காக வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பவரும் நம் ஆண்டவர் தான்.
                 
இதைப் போன்ற  அனுபவங்கள் இயேசுவுக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு மட்டும்தான் ஏற்படும்.

தங்களுக்காக வாழ்பவர்களுக்கு ஏற்படாது.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் இயேசுவுக்காக மட்டும் வாழ்வோம்.

அவரோடு விண்ணகம் சென்று அங்கும் அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, August 29, 2022

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்" ( மாற்கு.2:10,11)

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்" ( மாற்கு.2:10,11)

இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்று,

 அதன் பின்பு நாற்பது பகலும், நாற்பது இரவும் நோன்பிருந்து,

அதன் பின்புதான் தனது நற்செய்திப் பணியை ஆரம்பித்தார். 

அவர் தச்சுத் தொழில் செய்து வாழ்ந்த நாசரேத்தூரை விட்டு,

 செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.

அங்கிருந்துதான் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

ஒரு நாள் அவர் வீட்டில் இருந்தபோது அவர் சொல்வதை கேட்பதற்காகவும், அவர் கையால் குணம் பெறவும் ஏராளமான மக்கள் வந்தார்கள். 

அவர்களுக்கு அவர் போதித்துக் கொண்டிருந்தபோது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர்.

கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.

இயேசு நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடத்தில் எல்லாம் நற்செய்தியை அறிவித்ததோடு,

தன்னைப் பார்க்க வந்த நோயாளிகளை எல்லாம் குணமாக்கினார்.

ஏன் நோயாளிகளைக் குணமாக்கினார்?

அதிலும் நற்செய்திப்பணி இருந்ததால்தான்.

நற்செய்திப் பணிக்கும், நோயாளிகளைக் குணமாக்கியதற்கும் என்ன சம்பந்தம்?

நற்செய்திப் பணியின் நோக்கம் என்ன?

இறைவனிடம் மக்களுக்கு விசுவாசத்தை வளர்த்தல்.

பாவ மன்னிப்பு.

விசுவாச வாழ்க்கை வாழ்ந்து,
 பாவ மன்னிப்பு பெற்றால் தான் நம்மால் விண்ணகம் செல்ல முடியும்.

விசுவாசம் இறைவன் நமக்கு இனாமாகத் தரும் ஒரு பரிசு. அதை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்வது நமது கடமை.

தன்னிடம் சுகம் பெற வருவோர்க்கெல்லாம் இயேசு முதலில் விசுவாசத்தைப் பரிசாக அளிக்கிறார்.

அடுத்து அவர்களது பாவங்களை மன்னிக்கிறார். 

பாவங்களை மன்னிக்கிறார் என்றாலே அதற்கான மனஸ்தாபத்தையும் பரிசாக அளித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

அடுத்து குணமளிக்கிறார்.

குணமளித்த பின்,

"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று என்கிறார்.

திமிர்வாதக்காரனை குணமாக்கிய புதுமையில்,

அவர்கள் விசுவாசத்தைக் கண்டு
(அதாவது அவர் அளித்த பரிசை ஏற்றுக் கொண்டதை கண்டு)

 திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

அதன் பின்,

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்:
 எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.

 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான்."

அவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அவனை குணமாக்குகிறார்.

கடவுள் ஒருவருக்கே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.

ஆகவே தான் செய்த புதுமையினால் தான் கடவுள் என்பதையும் நிரூபிக்கிறார்.

இயேசு மண்ணுலகில் மனிதனாக பிறந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான். 


அவரது பாடுகள், சிலுவை மரணம் உட்பட,

அவரது ஒவ்வொரு செயலும்,

 அதை நோக்கமாக கொண்டதாகவே இருக்கும்.

இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடவுளிடம் ஏதாவது ஒரு உதவியை கேட்கும் போது,

முதலில் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால் தான் நாம் கேட்கும் உதவி கிடைக்கும்.

ஒருவருக்கு ஒரு நோய் வருகிறது என்றால்

 கடவுள் அவரது விசுவாசத்தை உறுதிப்படுத்தி

 அவரது பாவங்களை மன்னிக்க விரும்புகிறார் 

என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பசி வருகிறது.

நாம் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் பெறவே நமக்குத் துன்பங்கள்  ஏற்படுகின்றன.

இதை உணர்ந்து செயல்பட்டால் நாம் ஒவ்வொரு நிமிடமும் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் கேட்போம்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது நான் செய்ய வேண்டிய முதல் வேலை,

 நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கஷ்டங்கள் நீங்க வேண்டுமென்று ஆசித்தால் கடவுளை நோக்கி,

"ஆண்டவரே உமக்கு சித்தம் இருந்தால் எனது கஷ்டங்களை நீக்கியருளும்." என்று செபிக்க வேண்டும்.

நமது விசுவாசம் நன்கு உறுதிப்பட்டால் நாம் இப்படி செபிப்போம்:

"ஆண்டவரே நீர் எங்களுக்காக பாரமான சிலுவையை சுமந்தீர்.

நான் எனக்கு வந்திருக்கும் கஷ்டங்களை எனது பாவங்களுக்கு பரிகாரமாகவும், 

உமது மகிமைக்காகவும்

 சிலுவையாய்ச் சுமக்க எனக்கு வேண்டிய அருள் உதவி செய்யும்."

இன்று விண்ணுலகில் வாழும் புனிதர்கள் இவ்வுலகில் வாழும்போது தங்களுக்கு வந்த கஷ்டங்களை பொறுமையோடு சிலுவையாய் சுமந்தவர்கள்தான்.

புனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள பக்தி  நமது ஆன்மீக வாழ்வில் அவர்களைப் பின்பற்ற நமக்கு உதவ வேண்டும்.

அதற்கான அருள் வரத்தை ஆண்டவரிடம் கேட்டு வேண்ட வேண்டும்.

நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவும்,

 நமக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தரவுமே

நமக்குத் துன்பங்கள் வருகின்றன.

துன்பங்கள் வரும்போது இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.(மாற்கு1:40)

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.
(மாற்கு1:40)

இயேசுவை நோக்கி ஒரு தொழுநோயாளி  
 முழந்தாளிட்டு செய்த செபம்:

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" 

இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு சொன்னது, 

"விரும்புகிறேன், குணமாகு." 

உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.

தொழுநோயாளியின் நோய் 
அரோசிகமாக இருக்கலாம்,

ஆனால் அவன் செய்த செபம் நாம் எல்லோரும் பின்பற்றக் கூடியது.

அவன் ஆண்டவரை நோக்கி,

 நாம் எல்லோரும் வழக்கமாக கேட்பதை போல

 ''என் நோயை குணமாக்கும்" என்று சொல்லவில்லை.

"நீர் விரும்பினால் 

என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"

அதாவது,

"ஆண்டவரே, உமக்கு விருப்பம் இருந்தால்

 என்னைக் குணமாக்க உம்மால் முடியும்."

தனது வேண்டுதலை விட கடவுளின் சித்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறான்.

அவன் சுகமாக விரும்பியது உண்மை. ஆனால் அது கடவுளின் சித்தப்படி நடக்க வேண்டும் என்பதை அவனது செபம் நமக்கு உணர்த்துகிறது.

கர்த்தர் கற்பித்த செபத்தில் நமக்கு வேண்டியதை கேட்பதற்கு முன்னால்,

"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!"

என்று இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுகிறோம்.

இப்படி வேண்டதான் கர்த்தர் கர்ப்பித்தார்.

நல்ல சம்பளம் தரக்கூடிய ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

அது கிடைக்க இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?

"விண்ணக தந்தையே, நான் இப்போது கேட்கப் போவது என்னுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இடைஞ்சலாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் உமக்கு தெரியும்.

நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

அது எனக்கு கிடைக்க வேண்டும் என்பது உமது சித்தமானால் எனக்கு கிடைக்கச் செய்யும்.

அது உமக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த வேலை வேண்டாம்.

என்ன வேலை கிடைக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அதைப் பெற்றுத் தாரும்."

"நான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்.

இந்த திருமணம் உமது விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் நடத்தி வையும்.

ஏற்றதாக இல்லாவிட்டால் நடத்த வேண்டாம்.

நீரே எனக்கு உரிய பெண்ணை முடிவு செய்யும்.

உமது சித்தப்படி நடக்கவே உலகில் நான் வாழ்கிறேன்.

உமது சித்தம் நிறைவேறட்டும்."

சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டில் சுனாமியினால் ஆயிரக்கணக்கானோர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்தார்கள்.

இயற்கை கடவுளுடைய படைப்பு.

கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக அது செயல்படாது.

ஏன் சுனாமியால் ஆயிரக்கணக்கானோரை கடவுள் அழித்தார்?

அதற்கு ஒரே பதில் தான்.

அது அவருடைய சித்தம்.

அவரது ஒரே மகன் இயேசுவின் பாடுகளின்போது நடந்தவற்றைத் தியானித்தால் அவரது சித்தம் பற்றி புரியும். 

இயேசுவின் நற்செய்தி அறிவிக்கும் வாழ்வின்போது பலமுறை அவரை கைது செய்ய அவரது எதிரிகள் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் தந்தை திட்டமிட்ட நேரம் இன்னும் வராததால் அவர் அவர்கள் கையில் அகப்படவே இல்லை.

கடைசி இரவு உணவு சாப்பிட்டபின் கெத்சேமனி தோட்டத்திற்குச் சென்றால் அவருடைய எதிரிகள் அவரை பிடிக்க வருவார்கள் என்று அவருக்கு தெரியும்.

யூதாஸ் அவரை முத்தமிட்டு காட்டி கொடுப்பான் என்றும் அவருக்குத் தெரியும்.

அவருடைய எதிரிகள் அவரை கைது செய்து கல்தூணில் கட்டி வைத்து அடிப்பார்கள்,

 முள்முடி சூட்டி அடித்து, அவமானப்படுத்துவார்கள்,

சிலுவையை சுமக்க வைப்பார்கள்,

சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்றெல்லாம் அவருக்கு தெரியும்.

ஆனாலும் அவருடைய அப்போஸ்தலர்களுடன் அவர்  அங்கே சென்றார்.

ஏனென்றால் அதுவே அவரது தந்தையின் சித்தம்.

தந்தையின் சித்தம்தான் மகனின் சித்தமும்.

தந்தையின் சித்தப்படிதான் எல்லாம் நடக்கும் என்பது நமக்கு புரிந்து விட்டால் நமது வேண்டுதல்களின் முறையே மாறிவிடும்.

"இயேசுவே, எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும். நாங்கள் வேளாங்கண்ணி அன்னையின் ஆலயத்திற்கு சென்று காணிக்கை செலுத்துகிறோம்" என்று நேர்ச்சை செய்ய மாட்டோம்.

",இயேசுவே, உமக்கு சித்தமிருந்தால் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும்" என்று மட்டும் வேண்டுவோம்.

உவரி அந்தோனியார் கோவிலில் இருக்கும் அதே இயேசு தான் நமது கோவிலிலும் இருக்கின்றார்.

நாம் எங்கே இருந்து செபம் செய்தாலும் அந்தோனியாருக்கு கேட்கும்.

திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போவதை விட கடவுளின் சித்தப்படி வாழ்வதுதான் முக்கியம்.

திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போக வேண்டாம் என்று சொல்லவில்லை.

அது கடவுளின் சித்தப்படி நடப்பதின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

நமது சித்தப்படி நடப்பதற்காக போவதை விட கடவுளின் சித்தப்படி நடப்பதற்காக போவது ஒரு பக்தி முயற்சி.

திரு யாத்திரைகள் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்க உதவியாக இருக்க வேண்டும்.

உண்மையான விசுவாச வாழ்வுக்கு முதலிடம் கொடுப்போம்.

இறைவனின் சித்தப்படி நடப்பது தான் உண்மையான விசுவாச வாழ்வு.

திருவிழாக்கள், திரு யாத்திரைகள் போன்றவை அதற்கு உதவியாக இருக்க வேண்டும். 

"நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்"

என்ற இயேசுவின் செபமே அவருடைய சீடர்களாகிய நமது செபமாக இருக்கட்டும்.

லூர்து செல்வம்.

Sunday, August 28, 2022

''நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்"(மாற்கு.6:23)

''நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்"
(மாற்கு.6:23)

ஏரோது அரசன் தான் செய்த தவறைக் கண்டித்ததற்காக அருளப்பரைச் சிறையில் வைத்திருந்தாலும்,

 அவர் நீதிமானும், புனிதருமாய் இருந்ததால், அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான்.

ஆனால் ஒரு சிறுமியின் நடனத்தில் மயங்கி,

''உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்.

 அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தான். 

விளைவு, அவளது விருப்பத்திற்கு ஏற்ப அருளப்பரைக் கொல்ல வேண்டியிருந்தது.

ஒரு சிறுமியின் நடனத்தில் மயங்கியதால் ஒரு புனிதரைக் கொன்றதற்காக அவன் மேல் நமக்கு கோபம் வருகிறது.

ஆனால் அனேக சமயங்களில் நாமும் கூட அப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமது ஞாபகத்திற்கு வருவது இல்லை.

ஏரோது அடுத்தவரைக் கொண்றான். ஆனால் நம்மில் அனேகர் தங்களைத் தாங்களே கொன்று கொள்ளுகிறார்கள்.

ஒரு வகையில் இது தற்கொலைதான்.

ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து, குளித்து, நன்றாக உடையுடுத்தி பூசைக்கு புறப்பட்டு கொண்டிருந்தான்.

வீட்டில் அதிகாலையிலிருந்தே TV ஓடிக்கொண்டிருந்தது.

கோவிலுக்கு போக கால் எடுத்து வைக்கும் போது தற்செயலாக கண் TV யில் விழுந்தது

நெடுநாள் பார்க்க ஆசைப்பட்ட படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

அதில் மயங்கி, 
''கொஞ்ச நேரம் படம் பார்த்துவிட்டு போவோமே என்று உட்கார்ந்தான்."

முடிந்தவுடன் எழுந்து வேகமாக கோவிலுக்கு நடந்தான்.

கோவில் Compound gate ஐ அடைந்தபோது, பலி செலுத்திய குரு,

"சென்று வாருங்கள் பூசை முடிந்து விட்டது" என்று கூறிக் கொண்டிருந்தார். 

சாமியாரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அப்படியே வீட்டுக்கு திரும்பி விட்டான்.

ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை என்று தெரிந்தும் போகாததால் அவன் பாவம் செய்து தனது ஆன்மாவைக் கொன்று விட்டான்.

பாவத்தின் மூலம் ஆன்மாவின் உயிராகிய புனிதம் தரும் அருளை இழக்கும் போது ஆன்மா மரிக்கிறது.  

அடுத்து நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது தான் அது உயிர் பெறுகிறது.

ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் முன்பே மரணம் அடைய நேரிட்டால் மரித்த ஆன்மா நித்தியத்துக்கும் மரித்த ஆன்மாதான்.

ஏரோது செய்த பாவத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே கொலைதான். 

அனேக சமயங்களில் நாம் ஆன்மாவை கொல்லா விட்டாலும் அற்ப பாவங்களின் மூலம் அதை சுகவீனப்படுத்துவது தேவைப் படாதவற்றின் மேல் நமக்கு ஏற்படும் கவர்ச்சிதான்.

இறைவாக்கை வாசிக்கும் போதும்,
செபம் சொல்லும் போதும் அவற்றுக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் நாம் நமது ஆன்மாவைக் காயப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்க செல்லும் முன்பு நமது ஆன்மீக வாழ்வை சிறிது நேரம் பரிசோதித்து பார்த்தால் நாம் எத்தனை முறை ஆன்மாவை காயப்படுத்தியிருக்கிறோம் என்பது புரியும்.

இறைவனை நினைக்கும் போது அவரைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.

சுவாமியார் பிரசங்கம் வைக்கும்போது நமது மனது பிரசங்கத்தில்தான் இருக்க வேண்டும்.

மத்தியானம் சாப்பிடப் போகும் பிரியாணியில் இருக்கக் கூடாது.

விண்ணகத்திற்காக வாழும்போது மண்ணகத்தின் கவர்ச்சிகள் நம்மைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.

Saturday, August 27, 2022

''அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"(லூக்.14:14)

''அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"
(லூக்.14:14)

"தாத்தா,     நாம் விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிட வேண்டும் என்று இயேசு கூறுகிறாரே, ஏன்."

'', பதிலைத்தான் அவரே விட்டாரே, 
''ஏனெனில், நமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"

''அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். நமக்கு எதுவும் தர முடியாதவர்களை ஏன் விருந்துக்கு அழைக்க வேண்டும்?''

",ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை படைத்தவர் யார்?"

"கடவுள்."

'',அவர் நம்மை படைக்கும் முன் நாம் இல்லை. நம்மை முழு மனிதனாக படைத்தவர் அவர். அப்படியானால் நாம் முழுமையாக யாருக்கு சொந்தம்?"

"நாம் முழுமையாக கடவுளுக்குதான் சொந்தம்."

",அப்படியானால் நாம் யாருக்காக வாழ வேண்டும்?"

"நாம் முழுமையாக கடவுளுக்குதான் சொந்தமாக இருப்பதால் நாம் முழுமையாக கடவுளுக்காகத்தான் வாழ வேண்டும்.''

",மிக முக்கியமான வார்த்தை 'முழுமையாக'. .000001 சதவீதம் கூட அவரை தவிர வேறு யாருக்காகவும்,

 நமக்காகவும் கூட,

 வாழ நமக்கு உரிமை இல்லை.

நாம் மூச்சு விடுவது கூட அவருக்காகத் தான்.''

" நமது அயலானை நேசிக்க வேண்டும்,

 அவனுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறாரே."

', ஆம், கூறியிருக்கிறார். பிறரை நேசிப்பதும் அவருக்காகத்தான், அவருடைய படைப்பு 
என்பதற்காகத்தான்.

''என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

நமது கடமை கடவுளை அறிந்து, அவரை நேசித்து, அவருக்கு சேவை செய்து அவரோடு நித்திய காலம் விண்ணுலகில் வாழ்வதுதான்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும், அவருக்காக நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

அவருக்கு சேவை செய்ய வேண்டும், அவருக்காக நமது அயலானுக்கும் சேவை செய்ய வேண்டும்.

நமது அயலானையும் நேசிக்கும்போது கடவுளையே நேசிக்கிறோம்.

நமது அயலானுக்கும் சேவை செய்யும்போது கடவுளுக்கே சேவை செய்கிறோம்.

கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு 
சாமியாரிடம் சென்று,

"நான் உண்டியலில் போட்ட காணிக்கையை திரும்பி தாருங்கள்" என்று கேட்கலாமா?"

".பைத்தியக்காரன்தான் கேட்பான்."

",நமது அயலானுக்கு சேவை செய்வது கடவுளுக்கு காணிக்கை போடுவது போல.

போட்ட காணிக்கையை திரும்பி கேட்பது,

உனது சொற்படி,

பைத்தியக்காரத்தனம்."

"இப்போது புரிகிறது. பிறருக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வது போல.

 பிறருக்கு செய்த சேவையை திரும்பவும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்."

",பைத்தியக்காரனாக செயல்படாதே என்று தான் இயேசு சொல்கிறார்.

உனக்கு பதிலுக்கு பதில் தர முடியாதவர்களுக்கு கொடு என்று சொல்கிறார்.

கொடுப்பதை இறைவனது மகிமைக்காக கொடுக்க வேண்டும்.

பதிலுக்குப் பதில் செய்வார்கள் என்று எதிர்பார்த்து விருந்து கொடுத்தால் அதற்குப் பெயர் விருந்து அல்ல, கடன்.

நாம் வாழ்வது இறைவனது மகிமைக்காகத்தான்.

லூர்து செல்வம்.

Thursday, August 25, 2022

''சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்: ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன்."(மத்.25:23)

''சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்: ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன்."
(மத்.25:23)

ஆண்டவர் கூறிய  உவமையில்
பயணம் செல்ல இருந்த ஒருவன் தன் ஊழியரை அழைத்துத் தாலந்துகளைக் கொடுத்துச் சென்றது போல,

கடவுள் மனிதனை உலகில் படைக்கும்போது  ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான ஆன்மீக வரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொருவரும் இறைவனால் தனக்கு தரப்பட்ட ஆன்மீக வரத்தில் வளர கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, அசிசி நகர் பிரான்சிஸ்கு ஏழ்மையின் மீது பற்றைக் கொடுத்தார்.

ஏழ்மையின் மீது அவருக்கு இருந்த பற்றை வளர்த்தார். 

இந்த பற்றுதான் அன்று மக்களிடையே இருந்த பண ஆசையின் விளைவாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த திருச்சபைக்கு அவரால் நல்லது செய்ய முடிந்தது.

அன்னைத் தெரசாளுக்கு நோயாளிகளுக்கு உதவும் ஆர்வத்தைக் கொடுத்தார்.

இந்த ஆர்வத்தால்தான் தெருக்களில் தொழு நோயால் இறந்து கொண்டிருந்தவர்களுக்கு சேவை செய்து அவர்களை விண்ணக வாழ்வுக்கு அனுப்ப முடிந்தது.

சவேரியாருக்கு வேத போதக ஆர்வத்தைக் கொடுத்தார்.

கடவுள் கொடுத்த ஆர்வத்தை வளர்த்து உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்.

இந்த வேத போதகரின் உடல் இன்று வரை அழியாமல் இந்தியாவில்தான் இருக்கிறது.

சிறுமலர் தெரெசாளுக்கு Convent compound  எல்கைக்குள் இருந்து கொண்டே ஆன்மாக்களை மனந்திருப்பும் ஆர்வத்தைக் கொடுத்தார்.

சவேரியாருக்கு நிகராக தனது செபத்தின் மூலம் ஆன்மாக்களை மனம் திருப்பினார்.

பர்ண ஞானம் அல்போசாளுக்கு துன்பத்தில் கடவுளை காணும் ஆர்வத்தைக் கொடுத்தார்.

இந்த ஆர்வம் தான் அவளைப் புனிதையாக்கியது.

சுவாமி ஸ்டெய்னுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக உழைப்பதில் ஆர்வத்தைக் கொடுத்தார்.

இவ்வாறு உழைத்ததற்காக அவர் கைது செய்யப்பட்ட போதும் உழைப்பை கைவிடவில்லை.

அவரது மரணம் ஒரு வேத சாட்சிக்கு உள்ள மரணம்.

இதேபோன்று எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு வரத்தைக் கொடுத்திருப்பார்.

வரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு சிறிய வரமாக இருந்தாலும்  அதில் வளர வேண்டும்.

ஆண்டவர் கூறிய உவமையில் ஐந்து தாலந்துகளைப் பெற்றவன் அவற்றைப் பத்தாக ஆக்கியது போலவும்,

இரண்டு தாலந்துகளைப் பெற்றவன் அவற்றைப் நான்காக ஆக்கியது போலவும்,

நமக்கு கிடைக்கும் வரங்களில் வளர வேண்டும்.

சிறியவற்றில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக உரியவர்களாக இருந்தால்

 மிகப் பெரிய விண்ணக சாம்ராஜ்யத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.

புனித அசிசி நகர் பிரான்சிஸ்கு 
புனித கல்கத்தா தெரசா
புனித சவேரியார்
புனித சிறுமலர் தெரெசா
புனித அல்போன்ச
சுவாமி ஸ்டெய்ன் 

ஆகியோருக்கு மட்டுமல்ல 
நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வரத்தை கடவுள் தந்திருக்கிறார்.

அதை அவருக்காகவே பயன்படுத்துவது நமது கடமை.

பத்து கோடிகளுக்கு அதிபதி ஒரு கோடியை ஏழைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு சன்மானம் கிடைக்குமோ,

அதே சன்மானம் பத்து ரூபாய் மட்டும் உள்ளவன் ஒரு ரூபாயை ஏழைகளுக்கு கொடுத்தால் கிடைக்கும்.

கொடுக்க எதுவுமே இல்லாதவன் கூட  ஆறுதலாக கொடுக்கும் ஒரு வார்த்தைக்கும் விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது என்ன பாடத்தை நன்கு படித்தால் நமக்கு அரசில் பெரிய பதவி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து படிக்கிறோம்.

அதே முயற்சி நமது ஆன்மீகத்திலும் இருக்க வேண்டும்.

தேவ அழைத்ததில் ஆர்வம் கொண்ட துறவிகள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று சிறிய மாணவர்களுக்கு தங்கள் துறவற சபையைப் பற்றி கூறி மாணவர்களை அழைப்பதை பார்த்திருக்கிறோம்.

அவர்களின் அழைப்பை ஆராய்ந்து, அதற்குரிய தகுதி தங்களிடம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து,

தகுதி இருந்தால் அதை அவர்களில். வளர்க்க வேண்டும்.

ஞானோபதேச வகுப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மாணவனை Sister அழைத்து,

"உன்னைப் பேச வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

ஆண்டவரைப் பற்றி மட்டுமே பேசு.

உனது பேச்சுக்கு சன்மானம் உண்டு."

அன்போடு Sister சொன்ன வார்த்தைகளை மாணவன் ஏற்றுக் கொண்டான்.

அதன் பிறகு பாட நேரத்தில் பேசுவதை விட்டு விட்டான்.

மற்ற நேரங்களிலும் அரட்டை அடிப்பதை விட்டு விட்டான்.

 ஆண்டவரைப் பற்றியே பேச ஆரம்பித்தான்.

 இறை அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.

எழுத ஆசை உள்ளவர்கள் கடவுளை பற்றியே எழுதுவோம்.

பாட ஆசைப்படுகிறவர்கள் கடவுளை பற்றியே பாடுவோம்.

கேட்க ஆசைப்படுகிறவர்கள் கடவுளை பற்றியே கேட்போம்.

பார்க்க முடிந்தவர்கள் இயற்கையில் இறைவனின் வல்லமையைப் பார்ப்போம்.

நமது ஐம்பொறிகளும் இலவசமாகவே நமக்கு தரப்பட்டுள்ளன. அவற்றை இறைவனுக்காகவே பயன்படுத்துவோம்.

இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

என்றென்றும் இறைவனோடே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

''விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." ( மத்.25:13)

''விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." ( மத்.25:13)

இயேசு விண்ணரசை, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு  ஒப்பிடுகிறார்.

மணமகன் வந்த போது பத்து பேரில் ஐவர் தயாராக  இருந்தார்கள். ஆனால் ஐவர் தயாராக  இல்லை.

தயாராயிருந்தோர் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். 

தயாராக  இல்லாதவர்கள்  மணவீட்டில் நுழைய முடியவில்லை.

மணவீடு விண்ணகம். இயேசு மணமகன். 

நாம் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.

இயேசு நம்மை விண்ணகத்திற்கு அழைக்க எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது.

நமது மரணம்தான் நமக்கு இயேசுவின் அழைப்பு

எப்போது மரணம்  வரும் என்று நமக்குத் தெரியாது.

வரும்போது நாம் விண்ணகம் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.

 அதாவது பாவம் இன்றி, புனிதமாக்கும் அருள் (Sanctifying grace) நிலையில்    இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் மட்டுமே விண்ணகம் செல்வார்கள்.


சுய நினைவில் நல்ல 
சுகத்தோடு இருக்கும்போதே நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து ஆன்மாவை புனிதமாக்கி எப்போதும் புனித நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மரணம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது.

எப்போது மரணம் வரும் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த  வினாடியே வரலாம்.

அடுத்த  மணியில் வரலாம்.

அடுத்த  நாள் வரலாம்.

அடுத்த  வருடம் வரலாம்.

எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் கட்டாயம் வரும்.

ஆகவே நாம் எப்போதும் புனித நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவர் ஒருவர் அவரிடம் வந்த நோயாளிக்கு ஊசி போடுவதற்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது Heart attack வந்து உடனே இறந்து விட்டார்.

மருத்துவம் பார்ப்பதையே தொழிலாக கொண்ட அவருக்கு மருத்துவம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

நண்பர் ஒருவர் Heart attack வந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மனைவி பிழைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர் மருத்துவமனையில் இருக்கும் போதே Heart attack வந்து
 இறந்து விட்டார்.

நாம் எப்போதும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் நாம் மரணிக்கும் நேரத்தை நமக்கு முன் அறிவிக்கவில்லை.

எப்போதும் கடவுள் நினைவிலையே இருப்பவர்கள் மரணத்துக்கு அஞ்ச மாட்டார்கள்.

எப்போதும் புனித நிலையில் வாழ்வோம்.

இருந்தாலும் இறைவனிடமே,
இறந்தாலும் இறைவனிடமே.

லூர்து செல்வம்.

Wednesday, August 24, 2022

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்எதிர்ச் செயல்களா?. (தொடர்ச்சி)

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து வாழ்வதும்
எதிர்ச் செயல்களா?
(தொடர்ச்சி)

"தாத்தா, அப்பா என்னை பார்த்து,

"நாளை Merit scholarship test. ஒன்று நடைபெறுகிறது. அதை எழுத உனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதை எழுதி வெற்றி பெற்றால் உனக்கு merit scholarship கிடைக்கும். அதை பயன்படுத்தி படித்தால் வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கும்.''

 என்று சொன்னால்,

அவர் தருகிற சுதந்திரம் தேர்வு எழுதி பயன் பெறுவதற்காகத்தான்.

அதேபோல கடவுள் நம்மைப் பார்த்து, "எனது கட்டளைகளைக் கடை பிடித்தால் நிலை வாழ்வு கிடைக்கும்" என்று சொன்னால்

 அதற்கு "எனது கட்டளைகளைக் கடை பிடியுங்கள்" என்று தான் அர்த்தம். 

நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் நமது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துகிறோம் என்று தான் பொருள்.

ஆகவே சுதந்திரமாக வாழ்வதும் கீழ்படிவதும் ஒன்றுதான். (அதாவது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தினால்.)

நான் சொல்வது சரியா, தாத்தா?"

", Super correct. அன்னை மரியாளும் இதைத்தான் செய்தாள்.

கவிரியேல் சம்மனசு கடவுளது செய்தியை அவளுக்கு அறிவித்த போது, நமது அன்னை, தனது சுதந்திரத்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு,

''"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள்.

அடிமைக்கு சுதந்திரம் கிடையாது.

மரியாள் தனது சுதந்திரத்தையே சுதந்திரமாக  கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டாள்.

அவளது வாழ்வே அர்ப்பண வாழ்வுதான்.

ஒரு வினாடி கூட அவள் தனக்காக வாழவில்லை, கடவுளுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.

அன்னையின் மீது உண்மையான பக்தி உள்ளவர்கள் அவளைப் போலவே செயல்பட வேண்டும்.

தாயைப் போலவே பிள்ளைகளும் இருக்க வேண்டும்.

உண்மையான விசுவாச வாழ்வு அர்ப்பண வாழ்வு தான்.

நமது சுதந்திரத்தை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு,

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று நமது ஆண்டவரை போல் கூற வேண்டும்.

இயேசுவைப் பொருத்தமட்டில், அவர் கடவுள். அவரது விருப்பமும் தந்தையின் விருப்பமும் ஒன்றுதான். ஏனெனில் தந்தையோடும், தூய ஆவியோடும் அவர் ஒரே கடவுள்.

கடவுளாகிய அவர் யாருக்கும் அடிமையாக முடியாது.

ஆனால், அவரது வார்த்தைகளை நாம் சொல்லி செபித்தால்,

"என் விருப்பம் அன்று," என்று சொல்லும் போது நாம் கடவுளுடைய அடிமைகள் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது விருப்பம் நிறைவேற வேண்டும், நமது விருப்பம் அல்ல.

அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று கூறும் போதே கடவுளது விருப்பத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டாள்.

ஆண்டவரது அடிமையாக வாழ்வதுதான் உண்மையான சுதந்திர வாழ்வு.

 முழுமையான சுதந்திரத்தோடு நம்மை நாமே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழும் வாழ்வு."

"ஆண்டவரைப் போலவும் அன்னை மரியாளைப் போலவும் நம்மால் வாழ முடியுமா தாத்தா?"

", வாழ முயற்சிக்கலாமே.

உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

Be perfect, even as your heavenly Father is perfect.”
(மத். 5:48)

அவரது தந்தையைப் போலவே நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்பும் இயேசு 

 அவரைப் போலவும், அவரது அன்னையைப் போலவும் நாம் வாழ ஆசித்தால் வேண்டாம் என்றா சொல்வார்?

தந்தையைப் போலவும், மகனைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும் நம்மால் எப்படி வாழ முடியும் என்று கேட்க வேண்டாம்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார்.

அதற்கான வரத்தை அவரிடமே கேட்போம்.

கட்டாயம் தருவார்."

''பாடுகள் பட்டு மரிப்பதற்காகவே மனிதனாக பிறந்த இயேசு ஏன்

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்."

என்று செபித்தார்?''

",இயேசு மனிதனாக பிறந்தது நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிக்க.

நமது மனித பலகீனம் தான் நமது பாவங்களுக்கு காரணம்.

இயேசு சர்வ வல்லவ கடவுள். அவரால் பாவம் செய்ய முடியாது.
ஏனெனில் கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது தான் பாவம்.

பாவம் செய்ய முடியாத இயேசு மனித பலகீனங்களை ஏற்றுக்கொண்டு தான் மனிதனாகப் பிறந்தார்.

மனித பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்போதே நாம் நமது பலகீனத்தால் பாவம் செய்ய நமக்கு சோதனைகள் ஏற்படும் போது 

அவற்றை எப்படி வெல்ல வேண்டும் என்று நமக்கு போதிக்க இயேசு ஆசைப்பட்டார்.

அதனால் தான் செபிக்கச் செல்லும்போதே 

"சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்"

என்று மூன்று அப்போஸ்தலர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.

பலகீனத்தினால் பாவம் செய்ய  சோதனை எப்படி வரும், 
அதை நாம் எப்படி வெல்ல வேண்டும் என்று நமக்கு செயல் மூலம் காண்பிக்கவே அவருக்கே சோதனையை வர அனுமதித்தார்.

தனது நற்செய்தி பணியை ஆரம்பிக்கும் போதே பசாசு அவரை சோதிக்க அனுமதித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

அவரே அனுமதித்த சோதனையால்தான் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற மனிதனாக பிறந்த இயேசு,

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்." என்று கேட்டார்.

சோதனையை எப்படி வெல்வது என்று நமக்கு போதிக்கவே,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

இது செயல்முறைக் கல்வி. 

நமக்கு பாவம் செய்ய சோதனை வரும் போது நாம் கடவுளைப் பார்த்து,

''தந்தையே, எனது விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு வரும் சோதனையை அகற்றி 

உமது விருப்பத்தை நிறைவேற்ற வரம் தாரும்" என்று செபிக்க வேண்டும்.

இது சோதனை நேரத்தில் செபிக்க இயேசுவே கற்றுத்தரும் செபம்.

இன்னொரு உண்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.

நற்செய்தி பணியின் ஆரம்பத்திலும்,
இறுதியிலும்  மனிதனான தனக்கு சோதனை வர அனுமதிக்கிறார்.

அதை வெல்லும் வழியையும் கற்றுத் தருகிறார்.

சோதனைகளைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை,

இறைவனது சித்தத்தை நிறைவேற்றுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்களை சோதனைகளால் வெல்ல முடியாது என்ற பாடத்தை கற்றுத் தருகிறார்.

இறைவனது சித்தப்படி நடப்பவர்கள் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

அவர்கள் தான் இறைவன் தங்களுக்குத் தந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள்."

''அதாவது

இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்கள் = இறைவன் தந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள்.

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து வாழ்வதும் எதிர்ச் செயல்கள் அல்ல.

இணைந்த செயல்கள்."

லூர்து செல்வம்.

Monday, August 22, 2022

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்எதிர்ச் செயல்களா?

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்
எதிர்ச் செயல்களா?

"தாத்தா, கடவுள் தேர்வு செய்யவும், செயல்படவும் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள்.

தன்னுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்றும் சொல்கிறீர்கள். 

சுதந்திரம் என்றாலே ஒருவர் தனது விருப்பப்படி செயல்படலாம் என்று தானே  பொருள்.

நமது விருப்பப்படி செயல்பட நமக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு நம்மைத் தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை."

",உன்னுடைய குழப்பத்திற்கு முதல் காரணம் நம்முடைய மொழி. 

உலகைச் சார்ந்த நமது அனுபவ எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நாம் நமது மொழியை உருவாக்கினோம்.

 ஆனால் இறைவனைச் சார்ந்த காரியங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதே மொழியை தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. 

ஆனால் மனித அனுபவங்களை புரிந்து கொள்வது போல் இறை அனுபவங்களை புரிந்து கொள்ள கூடாது. 

இறையியல் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

அகராதியை எடுத்து ஒரு சொல்லுக்கு பொருள் பார்த்தால் அது மனித அனுபவம் சார்ந்த பொருளைத்தான் கொடுக்கும்.

அதே சொல் இறை அனுபவம் சார்ந்த விசயத்தை சொல்ல பயன்படுத்தப்பட்டிருந்தால் 

அந்த சொல்லுக்கு மனித அனுபவம் சார்ந்த பொருளைக் கொடுக்கக் கூடாது.

உதாரணத்திற்கு விசுவாசப் பிரமாணத்தில்

"கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்''

என்று  சொல்கிறோம். 

மனித அனுபவத்தில் ஒரு தாயின் வயிற்றில்  உற்பத்தி ஆன  குழந்தை உலகிற்குள் வருவதைத் தான் பிறப்பு என்ற சொல்லால் குறிக்கிறோம்.

அதுவரை இல்லாத குழந்தைதான் உற்பவித்து  பிறக்கிறது.

"என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் நான்  பிறந்தேன்"

என்று நான் சொன்னால், நான் குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளும்   நான் இல்லை.

இது நமது அனுபவ எல்லைக்கு உட்பட்டது.

ஆனால் இறை அனுபவத்தில்,

"இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்''என்ற சொற்றொடருக்கு நமது அனுபவ பொருளைக் கொடுக்கக் கூடாது.

கொடுத்தால் 'பிறக்கும் வரை சுதன் இல்லை' என்ற பொருள் வரும்

ஆனால் நமது விசுவாசப்படி தந்தையைப் போலவே சுதனும் 
துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கமும் முடிவும் இல்லாத தந்தையின் மகன்தான் துவக்கமும் முடிவும் இல்லாத இறைமகன் இயேசு.

மகன் என்பதைக் குறிக்க 'பிறந்தார்'  என்ற வார்த்தைதான் நமது மொழியில் உள்ளது.

அது இறைவனுக்கு பயன்படுத்தப்படும் போது அதை மனித அனுபவத்தில் புரிந்து கொள்ளக் கூடாது.

புரிகிறதா?"

"புரிகிறது. மனித அனுபவத்தில் தாயும் தந்தையும் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது.

ஆனால் இறை அனுபவத்தில் இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை. மனித சுபாவத்தில் தந்தை இல்லை.

மனித சுபாவத்தைப் 
 பொருத்தமட்டில் இயேசு அன்னை மரியாள் வயிற்றில் மனுவுரு எடுக்கும் வரை அவருக்கு மனித சுபாவம் இல்லை.

ஆனால் தேவ சுபாவத்தில் அவர் நித்தியர்.

அவர் தந்தையின் மகன் என்பதை குறிக்க மட்டுமே 'பிறந்தார்' என்ற சொல்  பயன்படுத்தப்படுகிறது, அதன் அகராதி அர்த்தத்தில் அல்ல.

இப்போது சுதந்திரம் என்ற சொல்லுக்கு வாருங்கள்."

",மனித அனுபவப்படி ஒருவனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றால் அவன் தனது விருப்பப்படி நினைக்கலாம், பேசலாம், செயல்படலாம்.

அப்பா மகனைப் பார்த்து,

"இன்று உனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.

 உனது விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம்"

 என்று கூறினால், மகன் எங்கு சென்றாலும் அவனைக் கடிந்து கொள்ள மாட்டார்.

ஆனால் இறைவன் கொடுத்திருக்கும் சுதந்திரத்திற்கு இந்த பொருள் இல்லை.

கடவுள் மனிதனை அவரை அறிந்து, நேசித்து, அவருக்கு சேவை செய்து, அவரோடு நித்திய காலம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படைத்தார்.

கடவுள் தனது அன்பின் விளைவாக மனிதனை ஒன்றும் இல்லாமையிலிருந்து  படைத்தார்.

மனிதன் கடவுளை அறிந்து நேசித்து அவருக்காக வாழும் வாழ்வை ஆன்மீக வாழ்வு என்கிறோம்.

 ஆன்மீக வாழ்வை ஒழுங்காக வாழ்ந்தால்தான் அவனுக்கு இறைவனோடு வாழும் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

இதற்கு கடவுளின் அருள் தேவை.

நமது ஆன்மீக வாழ்வுக்கான அருளை கடவுளே நிறைய தருகிறார்.

அவ்வருளைப் பயன்படுத்தி தனது முயற்சியால் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்ட வேண்டும்.

ஆண்டவர் மனிதனைப் பார்த்து,

"மகனே,  நீ என்னை அறிந்து, 
என்னை நேசித்து,
எனக்கு சேவை செய்து,
 என்னோடு நித்திய காலம்  மோட்சத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் உன்னைப் படைத்திருக்கிறேன்.

நீ  என்னை நேசிக்க வேண்டும்.
அதோடு உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நீ என்னுடைய இந்த கட்டளைகளைக் கடைப் பிடித்தால்  முடிவில்லா காலம் நீ என்னோடு  பேரின்பத்தில் வாழலாம்.

கடைப் பிடிக்காவிட்டால்  நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்காது.

உனக்குப்  பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேன்.

உனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நித்திய பேரின்ப வாழ்வை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

 நீ எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

 நீ உனது சுதந்திரத்தை பயன்படுத்தி எனது விருப்பத்தை நிறைவேற்று.

நிறைவேற்றினால் என்றென்றும் என்னோடு வாழ்வாய்.

அந்த வாழ்வுக்குப் பெயர் மோட்சம்.

நிறைவேற்றாவிட்டால் நானில்லாமல் (without me) வாழ்வாய்.

அந்த வாழ்வுக்குப் பெயர் நரகம்."

என்கிறார்."

"இதற்குப் பெயர் தான் சுதந்திரமோ?"

(தொடரும்)

லூர்து செல்வம்

"நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன"(மத்.23:25)

"நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன"
(மத்.23:25)

பள்ளிக்கூட மாணவன் ஒருவன் தான் என்னென்ன பாடங்களை வீட்டில் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறிய குறிப்புகளை ஒரு பேப்பரில் எழுதி அதை தன்னுடைய tiffin carrier ல் வைத்தான்.

வீட்டிற்கு வந்து அந்த பேப்பரை எடுக்கவும் இல்லை, வீட்டுப்பாடத்தை படிக்கவும் இல்லை.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு வேளையின் போது பாத்திரத்தை திறந்து, சாப்பிட ஆரம்பித்தான்.

கடைசியில் உணவை அள்ளும்போது அவன் முந்திய நாள் வைத்திருந்த பேப்பரும் கையில் வந்தது.

அவனுக்கு அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.

 பாத்திரத்தின் உட்பகுதியை தேய்க்காமல் வெளிப்புறத்தை மட்டும் தேய்த்து விட்டு பாத்திரத்திற்குள் சாப்பாட்டை வைத்திருக்கிறார்கள்.

மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவை பார்த்து கத்தினான்.

"பாத்திரத்தில் உள்பகுதியைத் தேய்க்காமல் சாப்பாட்டை வைத்தது எனது தப்புதான்.

 ஆனால் இதிலிருந்து நீ ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 

வீட்டுப்பாடத்தைப் படித்து அதை மனதில் ஏற்றாமல் வெளிப்புறத்தில் uniform சட்டையை அணிந்து கொண்டு பள்ளிக்கூடம் போனது உனது தப்பில்லையா?

உன்னை மாணவன் ஆக்குவது உனது பாடமா அல்லது சீருடையா?"

"பாடம்தான். ஆனால் சீருடை அணிந்தால் தானே மாணவன் போல் தெரியும்."

"நீ படிப்பதற்காக பள்ளிக்கூடம் போகிறாயா? மாணவன் போல் தோன்றுவதற்காக பள்ளிக்கூடம் போகிறாயா?"

.நம்மில் அநேகர் எப்படி வாழ வேண்டும் என்பதை விட,

 எப்படி வாழ்வதுபோல் தோன்ற வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

தோன்றுவது புறம். வாழ வேண்டியது அகம்.

ஒருவனுடைய செயல்களைத் தீர்மானிப்பது அவனுடைய உள்ளம்.

உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகின்றன.

நல்லதை எண்ணுபவன் நல்லதைப் பேசுவான், நல்லதைச் செய்வான்.

உள்ளத்தில் கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுப்பவன் கெட்ட செயல்களில்தான் ஈடுபடுவான்.

உடலின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஆன்மாவுக்கு எந்த பயனும் இல்லை.

ஞாயிற்றுக் கிழமை காலையில் குளித்து, சுத்தமான உடை அணிந்து கோவிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் திருப்பலியில் கலந்துகொள்ளத் தகுதி அடையப் போவதில்லை.

 ஆன்மாவில் பாவமாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருப்பது தான் திருப்பலி காண தகுதியை தரும்.

உள்ளத்தை நன்கு பரிசோதித்து பாவம் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து உள்ளத்தை பரிசுத்தமாக்கிய பின்தான் திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

அழுக்கான உடை அணிந்து வருபவர்களிடம் ஆண்டவர் வர தயங்க மாட்டார். 

ஆனால் அழுக்கான உள்ளத்தோடு
  வருபவர்களிடம் ஆண்டவர் வர விரும்ப மாட்டார்.

 சிலர் வெளி கவர்ச்சிக்காக தகுதியற்ற உடை அணிந்து திருப்பலிக்கு வருவதால் மற்றவர்களுடைய கண் கெட காரணமாகிறார்கள்.

அதனால் மற்றவர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் பொறுப்பாளி ஆகிறார்கள்.

சிலர் நல்ல நடிகர்கள். உள்ளத்தில் ஆயிரம் கெட்ட எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் நல்லவர்கள் போல நடிப்பார்கள்.

 வெளிவேடதாரிகளாகிய (hypocrites) இவர்களை ஆண்டவர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்கிறார்.

இவை வெளிப்பார்வைக்கு அழகாக இருக்கும்..

உள்ளே அழுகிய உடல் அல்லது எலும்புக் கூடுகள் இருக்கும்.

இவர்களால் சமூகத்திற்குக் கேடு.

நம்மால் சமூகம் பயன் பெற வேண்டுமென்றால், நமது எண்ணம் நல்லதாக இருப்பதோடு,

 எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றோடொன்று முரண்பாடு இல்லாததாக இருக்க வேண்டும்.

முதலில் நமது அகத்தைச் சுத்தமாக்குவோம்.

புறம் தானாகச் சுத்தமாகிவிடும்.

லூர்து செல்வம்.

Sunday, August 21, 2022

Are freedom and Obedience contradictory terms?

Are freedom and Obedience contradictory terms? 
************""*******************

One day a friend of mine asked me, "You say that God has given us freedom of choice and action. You also say that He wants us to obey His commandments. I don't understand. I think freedom gives one right to act as he likes. Why is he expected to obey "

This is the problem with the people who confuse themselves by giving human interpretation to God related terms. 

Dictionary defines a word in the context of its usage among the human language speakers. 

We cannot apply the human usage of words to religion related matters. 

For instance, our Nicene creed refers to the Son of God as 'begotten, not made'. 

 Dictionary defines 'beget' as 
'bring (a child) into existence by the process of reproduction'. 

In the human context, the child cannot exist before it is begotten. 

But in the Divine context the Son of God is eternal, one with the Father from all eternity. 

Just because we refer to the Second Person of the Holy Trinity as 'Son', we have no other go but to use the human word 'beget'; but it should not be taken in the human meaning. 

We should interpret it in the Divine context where everything that refers to God is eternal.

Any human word with human meaning cannot be applied to God or God related matters.  

The same thing applies to 'freedom' in the religious context. 

Dictionary defines freedom as, 'condition or right of being able or allowed to do, say, think, etc. whatever you want to, without being controlled or limited'. (Cambridge Dictionary) 

But God-given freedom does not come within this definition.

God gave man freedom of choice that he may choose his reward himself and get the reward by merit. 

God created man that he may know Him, love Him, serve Him and enjoy eternal life with Him as a reward for his knowledge, love and service. 

God created man from nothing out of pure love. 

Having been created from nothing, man needs God's help in every step of his spiritual life, in knowing, loving and serving God, just as he needs it in his material life. 

We call the spiritual help as 'grace '. 

God gives us His grace freely to be of help in our spiritual progress. 

It is God's will that man wins the eternal reward by his merit. 

To win by merit man should have the freedom either to accept or reject the grace given by Him. 

If he accepts the grace by his free choice he wins the reward. 

If he rejects the grace by his free choice he loses the reward.  

So, God-given freedom does not mean that man has full permission to behave as he likes. 

Suppose, your father says to you , "Today you are free to go wherever you like to go and do whatever you like. "

Such a freedom includes permission. 

He cannot take you to task even if you go for a film as he has given you freedom to go wherever you like to go. 

 Because here freedom includes permission. 

But if he says, "Tomorrow there will be a merit scholarship test. You are free to attend it. Those who attend the test will be eligible for scholarship ". 

God given freedom is of this type. 

Here those who use the freedom to attend the test will be eligible for scholarship. Those who use their freedom not to attend the test will not be eligible for scholarship.

God given freedom gives us two choices - 

either to accept His grace  

or to reject it,  

in other words,

 to choose eternal life 

either with Him  

or without Him. 

With Him means Heaven, without Him means hell. 

If we choose Heaven, we must love and serve Him, that is, we should obey His commandments. 

If we choose hell, we can disobey His commandments. 

So, we are free to choose obedience or disobedience. 

Now it must be clear : obedience to God's commandments is the object of our freedom. 

Saints freely surrendered their freedom to God's will. 

"Thy will be done" is the best prayer as we surrender ourselves fully before God by this prayer. 

We must remember that Jesus taught us this prayer; Jesus Himself said this prayer in the Gethsemane garden just before His Passion. 

So obedience is not contradictory to freedom; by obeying God by observing His commandments, we are using our freedom correctly. 

Lourdu Selvam.

நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்.( மத்.23:23)

நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்.
( மத்.23:23)

  ஒருவன் விலை கொடுத்து ஒரு மாம்பழத்தை வாங்கி, அதன் தொலியை மட்டும் உரிந்து சாப்பிட்டு விட்டு, உள்ளே உள்ள பழத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டால்,

அவனை என்னவென்று அழைக்கத் தோன்றும்.

மன நிலை பாதிக்கப் பட்டவன் என்றுதானே!

மோயீசன் எழுதிக் கொடுத்த திருச்சட்டப்படி வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கோவிலுக்குக் கொடுத்து விட்டு,

அதே திருச்சட்டம் போதிக்கும் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்ட மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரகளையும் எப்படிப்பட்டவர்கள் என்று அழைக்கலாம்?

காணிக்கையை செலுத்த வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

ஆனால் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை வாழ்வாக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்.

கடவுளுக்கு தேவை நமது பணம் அல்ல, வாழ்க்கை.

விசுவாசமும், நீதியும், இரக்கமும் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

நெல்லை Rice mill க்குக் கொண்டு போய், குத்தி, அரிசியை அங்கேயே போட்டு விட்டு, உமியை மட்டும் வீட்டுக்குக் கொண்டு வந்தால்,

அதைச் சமைத்துச் சாப்பிட முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு போய், காணிக்கை போட்டுவிட்டு, பூசை நேரத்தில் பராக்கு பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் பூசைக்கு உரிய பலன் கிடைக்குமா?

அதே போல் தான் ஆண்டவருக்கு விருப்பமான விசுவாசம், நீதி, இரக்கப்படி வாழாமல்,

 காணிக்கையை மட்டும் ஒழுங்காய் கொடுத்து வந்தால்

நமது வாழ்க்கை ஆண்டவருக்கு ஏற்றதாக இருக்குமா?

கோவிலுக்கு கட்டாயம் காணிக்கை கொடுக்க வேண்டும்.

ஆனால் ஆண்டவர் சொன்னபடி வாழாவிட்டால் காணிக்கையால் எந்த பயனும் இல்லை.

வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுக்க வேண்டுமா?

இது பழைய ஏற்பாட்டு சட்டம்.

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும் என்றுதான் தாய்த் திருச்சபை கூறுகிறது.

திருச்சபை சொல்கிறபடி வாழ்வோம்.

ஆண்டவருக்கு ஏற்ற கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு,

நமது ஞான மேய்ப்பர்களுக்கு உதவ காணிக்கையும் செலுத்துவோம்.

லூர்து செல்வம்.

Saturday, August 20, 2022

"உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்." (மத்.23:11)

"உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்." (மத்.23:11)

"தாத்தா, பெரியவன் பணியாளனாய் இருக்கட்டும்" என்று இயேசு கூறுகிறார்.

பெரியவன் என்றால் யார்?"

", இயேசு மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் பற்றிப் 
பேசும்போதுதான் பெரியவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

'அவர்கள் சொல்கிறபடி நடங்கள், நடக்கிறபடி நடக்காதீர்கள்' என்று சொல்கிறார்.

ஆகவே மற்றவர்களை வழி நடத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களைத்தான் இது குறிக்கும்.

அரசியலைப் பொறுத்த மட்டில் நம்மை ஆளும் அமைச்சர்கள் பெரியவர்கள்.

நிர்வாக அமைப்புகளில் நிர்வாகி பெரியவர்.

பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் பெரியவர்.

வகுப்பில் வகுப்பு ஆசிரியர் பெரியவர்.

குடும்பத்தில் பெற்றோர் பெரியவர்கள்.

நமது திருச்சபையில் நம்மை வழி நடத்தும் ஆயர்களும், குருக்களும் பெரியவர்கள்.

பணியாளன் மற்றவர்களுக்கு சேவை செய்பவன்."

"வழி நடத்தும் தலைவர் எப்படி பணியாளனாக இருக்க முடியும்?"

", நீ இப்படிக் கேட்பாய் என்று தெரிந்துதான் நம்மைப் படைத்த கடவுளே மனிதனாகப் பிறந்து, தனது வாழ்க்கை மூலம் நமக்கு முன்மாதிரிகை காண்பித்தார்.

அவர் உலகில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

அதில் முதல் 30 ஆண்டுகள் தனது அன்னைக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

அவர் கடவுள். அவர் கீழ்ப் படிந்து நடந்தது இரண்டு மனிதர்களுக்கு.

அவர் நற்செய்தி அறிவித்த மூன்று ஆண்டுகளும் மற்றவர்களுக்கு சேவை செய்து தான் வாழ்ந்தார்.

புனித வியாழனன்று, தனது சீடர்களின் கால்களைக் கழுவினார்.     

பாடுகளின் போது தன்னைத் துன்புறுத்தியவர்கள் சொன்னபடி நடந்ததோடு, அவர்கள் கொடுத்த அடிகளையும், அவமானங்களையும் எதிர்த்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.

சிலுவையை தோளில் ஏற்றிய போது ஏற்றுக்கொண்டு கல்வாரி மலை வரை அதை சுமந்து சென்றார்.

ஆடைகளை உறிந்த போது தடுக்கவில்லை.

சிலுவையில் படு என்றவுடன் படுத்தார்.

கைகளை விரி என்றவுடன் விரித்தார்.

கைகளிலும், கால்களிலும் ஆணிகளை அறையும்போது தடுக்கவில்லை.

இறந்த அவர் உடலை சிலுவையிலிருந்து இறக்கும் வரை சிலுவையிலேயே தொங்கினார்.

மனிதனாய் உரு எடுத்த நாளிலிருந்து மரிக்கும் வரை தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு  சேவை செய்துதான் வாழ்ந்தார். 

அன்பின் குணம் என்ன தெரியுமா?"

"சொல்லுங்கள்."

",அன்பு என்பது மனதில் உள்ள உருவம் இல்லாத உணர்வு. 

அது வெளிப்படும் போது பணிச் செயல்களாத உருவம் எடுக்கும்.

இதை உலக அனுபவத்திலும் பார்க்கிறோம்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய்  தனது அன்பினால் குழந்தைக்கு என்னவெல்லாம் செய்கிறாள்  என்பதை கவனித்திருக்கிறாயா?"

"அனுபவித்தேயிருக்கிறேன்.

அதை குளிப்பாட்டுவது,
 அதற்கு உணவு ஊட்டுவது, 
உடை உடுத்துவது,
வெளிக்கு இருந்தால் கால் கழுவி விடுவது,
இடுப்பில் எடுத்துச் செல்வது

இது போன்ற ஆயிரக்கணக்கான பணி செயல்களை குழந்தைக்கு செய்வது தாய் தானே."

",வழி நடத்தும் தலைவர் பணியாளனாய் மாறுவது எப்படி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

கடவுள் எப்படிப்பட்டவர்?"

"அன்பே வடிவான சர்வ வல்லவர்."

", கடவுள்தான் அன்பு. God is love.

மனித தாய் அன்பு உள்ளவள், அன்பே உருவானவள் அல்ல.

அன்பு உள்ள மனிதத் தாய் தான் பெற்ற குழந்தைக்கு பணி செயல்கள் செய்யும்போது,

அன்பே உருவான கடவுள் தான் படைத்த மனிதர்களுக்கு எவ்வளவு சேவை செய்வார்?

படைத்த வினாடியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் தான் படைத்த மனிதனை,

பெற்றதாய் தன் குழந்தையை கவனிப்பதை விட,

அளவில்லாத மடங்கு அதிகமாய்,

கவனித்து வருகிறார் என்பது உனக்கு தெரியுமா?"

"நானே அவரது கவனிப்பை அனுபவித்து கொண்டு தானே இருக்கிறேன்.

தாய்  எனக்கு உணவு தரலாம்.

ஆனால் உணவு என்ற ஒன்றை படைத்தவர் கடவுள் தானே.

தாய் தந்த உணவு சீரணிக்கவும், 
என் உடம்பில் சேரவும், நான் வளரவும் உதவுவது கடவுள் தானே. 

எனது வாழ்வில் 
என்னெள்ள நடக்க வேண்டும், 
எப்படி எப்படி நடக்க வேண்டும், எப்பெப்போ நடக்க வேண்டும்,
எங்கெங்கே நடக்க வேண்டும் என்று நித்திய காலமாய்த் திட்டமிட்டு அதன்படி என்னை வழிநடத்தி வருபவர் அவர்தானே.

பாவம் தவிர மற்றெல்லா நிகழ்வுகளையும் திட்டமிடுவர் அவர்தான்.

நான் பாவத்தில் விழுந்து விட்டால் 
அதிலிருந்து என்னை மீட்கத் திட்டமிடுவர் அவர்தான்.

 நம் வாழ்வில் தற்செயலாக எதுவும் நடப்பதில்லை.

கீழே விழச் செய்பவரும் அவரே, தூக்கி விடுபவரும் அவரே.

எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே. 

இவை எல்லாம் ஒரு தாய் போல கடவுள் நமக்கு செய்து கொண்டிருக்கும் பணி.

 அளவில்லாத அன்பின் வெளிப்பாடு."

",நமது தலைவர்களும்
 அரசியலிலும் சரி,
 சமூகத்திலும் சரி,
 குடும்பத்திலும் சரி, 
திருச்சபையிலும் சரி,

நம்மைப் படைத்தவரின் 
முன் மாதிரிகையை பின்பற்றி தங்கள் அன்பை தங்கள் பொறுப்பில் உள்ளவர்களுக்கு செய்யும் சேவையில் வெளிப்படுத்த வேண்டும்.

அன்பு பணி செய்வது மட்டுமல்ல, தவறு செய்தவர்களை மன்னிக்கும்,

தலைவருக்கு உரிய அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை பயங்காட்டிக் கொண்டிருக்காது.

நம்மைப் பொறுத்தமட்டில் நமது தலைவர்கள் சொல்படி,

அவர்கள் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.

மனித பலவீனத்தால் அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் பின்பற்றக் கூடாது.

இது இயேசு நமக்குக் கூறும் புத்திமதி.

சாமியார் ஞாயிற்றுக் கிழமை கோவிலில் பிரசங்கம் வைத்துக் கொண்டிருக்கும் போது சிலர் பிரசங்கத்தைக் கவனிப்பதற்குப் பதில் சாமியாரை விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

Treatment க்காக மருத்துவரிடம் செல்பவர்கள் அவர் மருத்துவ ஆலோசனை கூறும்போது ஆலோசனையைக் கவனிக்க வேண்டும்.

மருத்துவரை மனதுக்குள்ளே

 விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலோசனையைக் கவனிக்கா விட்டால் எப்படி மருந்து சாப்பிட முடியும்? எப்படி நோய் குணமாகும்?

பிரசங்கத்தைக் கவனிக்கா விட்டால் எப்படி இறைவாக்குப்படி வாழ முடியும்?

இறைவாக்குப்படி வாழாவிட்டால் எப்படி விண்ணகம் செல்ல முடியும்?

ஆண்டவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது சாதாரண மக்கள் நற்செய்தியை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

பரிசேயரும், சதுசேயரும், மறை நூல் அறிஞர்களும் அவரது சொற்களை குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆண்டவரைச் சிலுவையில் அறையக் காரணமாக இருந்தவர்களும் அவர்கள்தான்.

அவர்களது வேலையை நாம் செய்யக் கூடாது.

நம்மை வழி நடத்தும் நமது ஆன்மீகத் தலைவர்கள் நம்மிடையே ஆன்மீக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். 

அவர்களது பணியை ஏற்று, அவர்களது சொற்படி நடப்போம்.

நிலை வாழ்வை அடைவோம்."

லூர்து செல்வம்.

Thursday, August 18, 2022

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)(தொடர்ச்சி)

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)
(தொடர்ச்சி)

"தாத்தா, புனிதர்களும், மற்ற மோட்சவாசிகளும் விண்ணகத்தில் வாழ்கின்றார்கள்.

நாம் மண்ணகத்தில் வாழ்கிறோம்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", உனது கேள்வியே தவறு."

"வேறு எப்படி கேட்க வேண்டும்?"

",நீ பூமியில் வாழும் மனிதர்கள் பேசும் மொழியில் கேள்வி கேட்கிறாய்."

" தாத்தா நான் பூமியில் வாழும் மனிதன் தானே, என்னால் மனித மொழியில் தானே கேள்வி கேட்க முடியும்.''

",அது எனக்கும் தெரியும். உன்னால் மனித மொழியில் தான் கேள்வி கேட்க முடியும். என்னால் மனித மொழியில் தான் பதில் சொல்ல முடியும்.

கணித ஆசிரியர் கணித பாடம் நடத்தும் போது கணிதம் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார், 

அறிவியல் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்தும் போது அறிவியல் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார், 

தமிழ் ஆசிரியர் தமிழ்ப் பாடம் நடத்தும் போது இலக்கியத் தொடர்புடைய வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார்."

" தாத்தா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அதோடு சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."

",சம்பந்தம் இருக்கிறது என்பது இப்போது புரியும்.

மனித மொழி பேசும் நாம் எது சம்பந்தமான வார்த்தைகளை பயன்படுத்துவோம்?"

"மனித அனுபவத்திற்குள் வரும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்."

",நீ 'விண்ணகம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டாய்.

எங்கே என்ற வினாவிற்கு எது விடையாக வர வேண்டும்?" 

"ஏதாவது ஒரு இடம் விடையாக வர வேண்டும்."

",ஆனால் விண்ணகம் ஒரு இடம் அல்ல. அதைப் பற்றிய கேள்விக்கு 
இடம் தொடர்புடைய வினாச் சொல்லை பயன்படுத்தக்கூடாது."

"வேறு எந்த வினாச்சொல்லை பயன்படுத்த வேண்டும்?"

",முதலில் விண்ணகத்தைப் பற்றி சொல்கிறேன், மனித மொழியில் தான் சொல்கிறேன், வேறு வழி இல்லை.

 ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகம், அதாவது, மோட்சம் ஒரு வாழ்க்கை நிலை. (State of life) அதற்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.

எங்கே, எப்போது எந்த வினாச் சொற்களுக்கு அங்கு இடமில்லை.

நேரம் இல்லாததால் அது தொடர்புடைய   வார்த்தைகள்  பயன்படுத்தப்படுவதில்லை,    

 நாம் மனித மொழியில் பேசுவதால் அவற்றைப் பயன்படுத்த நேர்ந்தாலும் புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
மனித கணக்குபடி இயேசுவோடு சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் விண்ணகம் சென்று 1,989 ஆண்டுகள் ஆகின்றன.

சென்று என்ற வார்த்தையை வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறோம். ஏனெனில் மனித மொழியில் இடத்திற்குத்தான் செல்ல முடியும்.

இன்று ஒருவன் மரித்து விண்ணகம் சென்றால் மனித கணக்குபடி நல்ல கள்ளன் சென்று 
1,989 ஆண்டுகள் கழித்து செல்வான்.

ஆனால் விண்ணகத்தில் இருவருக்கும் மத்தியில் நேர இடைவெளியே கிடையாது. ஏனென்றால் அங்கு நேரம் இல்லை.

அங்கு இருப்பது நித்தியம்.

உலகத்தில் உள்ள காலத்தை ஒரு நேர்கோடாக எடுத்துக் கொண்டால், நித்தியம் ஒரு புள்ளி மட்டுமே."

"தாத்தா, விண்ணக அனுபவத்தை மனித மொழியால் விவரிக்க முடியாது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் மனித மொழியால் தான் விவரிக்கிறோம். புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணம் கூறுங்கள்."


", இயேசு 'வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.'

என்று கூறுகிறோம்.

ஆனால் விண்ணகத்தில் வலது பக்கம், இடது பக்கம் எதுவும் கிடையாது.

'இயேசு தனது தந்தைக்கு நிகரான வல்லமையில் இருக்கிறார்' என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் சட பொருட்களால் ஆனது. மனித உடலே ஒரு சடப் பொருள்தான்.

சடப் பொருளுக்குதான் வலது, இடது பக்கங்கள் உண்டு.

ஆவிக்கு பக்கங்கள் இல்லை

கடவுள் ஒரு ஆவி.

புனிதர்களும் மற்ற மோட்ச வாசிகளும் விண்ணகத்தில் இருக்கிறார்கள் என்றால் விண்ணக பேரின்ப நிலையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்."

"கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கூறுகிறோம்?"

",கடவுள் எங்கும் நம்மைப் போல இடத்தை அடைத்துக் கொண்டிருக்கவில்லை.

தன்னுடைய ஞானத்தாலும், காரணத்தாலும், வல்லமையாகும், அன்பினாலும் எங்கும் இருக்கிறார்.

இப் பிரபஞ்சத்தை முழுவதும், ஒவ்வொரு அணுவையும், படைத்து பராமரித்து வருபவர் அவரே.

அனைத்துக்கும் ஆதி காரணர் அவரே.

அனைத்துக்கும் ஆதி காரணராகவும்,
அனைத்தையும் அறிந்தவராகவும், அனைத்தையும் பராமரிப்பவராகவும் இருப்பதால் அவரை எங்கும் இருக்கிறார் என்கிறோம்."

"கடவுள் எங்கும் இருக்கிறார். ஆனால் மற்ற மோட்ச வாசிகள்? அவர்கள் மனிதர்கள்தானே?

ஒரே நேரத்தில் இந்தியாவில் இருப்பவர்களும் புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுகிறார்கள்.

அமெரிக்காவில் இருப்பவர்களும் அவரை நோக்கி வேண்டுகிறார்கள்.

உலகமெங்கும் இருப்பவர்களும்
அவரை நோக்கி வேண்டுகிறார்கள்.

எல்லோருடைய வேண்டுதல்களையும் அவர் கேட்கிறார்.

எல்லோருக்காகவும் ஒரே நேரத்தில் இறைவனிடம் வேண்டுகிறார்.

இது எப்படி முடிகிறது?"

", இதற்காகத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்,

உலகில் வாழும் நமக்குதான் இடமும், நேரமும்.

விண்ணகத்தில் இடமும் இல்லை, நேரமும் இல்லை. ஆகவே அவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.

மனித மொழியில் கூறுகிறேன்,

யார் உலகில் எங்கிருந்து ஒரு விண்ணக வாசியுடன் பேசினாலும் அவர்கள் பேச்சை அவர் கேட்பார். இடப் பிரச்சனை அவருக்கு இல்லை.

அதுமட்டுமல்ல விண்ணக வாசிகள் கடவுளோடு இணைந்து இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு நாம் அனுப்பும் செய்தி கடவுள் வழியாகத்தான்  செல்லும்.

கடவுளுக்குத் தெரியாமல் நாம் எதுவும் செய்ய முடியாது.

உலகில் நமது அனுபவத்தை விண்ணக வாசிகளோடு ஒப்பிடக் கூடாது.

உலகில் நண்பர் ஒருவருக்கு செய்தி அனுப்பினால் அது போக நேரம் ஆகும்.

விண்ணகத்தில் நேரம் கிடையாது.

"அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று நாம் நினைக்கும் போதே நமது செபம் அவருக்குச் சென்று விடும். 

நாம் சப்தமாக வார்த்தைகளை பயன்படுத்தி செபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மனதால் நினைத்தாலே போதும்.

நினைக்கும் போதே யாரை நோக்கி வேண்டுகிறோமோ அவரிடம் வேண்டுதல் சேர்ந்து விடும். 

வார்த்தைகளும், சப்தமான குரலும் நமது திருப்திக்காகத்தான்.

பரிமாறப்படுவது எண்ணங்களே, மொழி அல்ல."

"அப்படியானால் நமது செபத்திற்கு வல்லமை கொடுப்பது நாம்தான் என்று சொல்லுங்கள்."

", நானென்ன சொல்வது, இயேசுவே சொல்லியிருக்கிறார்.

நோயாளியைக் குணமாக்கிய ஒவ்வொரு முறையும்

'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று'

என்று சொல்வதே அவர் வழக்கம்.

விசுவாசத்தோடு சொல்லப்படும் செபம் தான் வல்லமை உள்ள செபம்.

விசுவாசம் இருக்க வேண்டியது செபிக்கும் நம்மிடம்தான்.

விசுவாசத்தின் அளவுக்கு ஏற்ப செபத்தின் வல்லமை கூடும் அல்லது குறையும்.

உறுதியான விசுவாசத்துடனும், கேட்பது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் சொல்லும் செபம்தான் வல்லமை உள்ளது.

விசுவாசம் இல்லாமல், மனதில் வேறு எதையோ நினைத்துக் கொண்டு யாரோ எழுதிய செப வார்த்தைகளைச் சப்தமாகச் சொன்னால், அது செபம் அல்ல

செபம் உள்ளத்திலிருந்து வரவேண்டும், உதட்டிலிருந்து மட்டுமல்ல.

உள்ளங்கள் பேசுவதுதான் உண்மையான செபம்.

மனதை ஒருநிலைப்படுத்தாமல் செபிக்க முடியாது

வாயைத் திறக்காமல் செபத்தை மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலே போதும்.

உள்ளங்கள் பேச ஆரம்பித்து விடும்.

நீண்ட செபங்களை விட ஒரே வாக்கியத்தில் முடியும் மனவல்லப செபங்களுக்கு வல்லமை அதிகம்.

இயேசுவே இரட்சியும்.

இயேசுவே இரக்கமாயிரும்.

மரியே வாழ்க.

சேசு, மரி, சூசை துணை.

புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காவல் சம்மனசே எனக்குத் துணையாக இரும்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.

இது போன்ற சிறு செபங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.

நீண்ட செபங்களை விட இவற்றுக்கு வல்லமை அதிகம்.

கடவுளை நோக்கியும், வின்ணக வாசிகளை நோக்கியும் நாம் செய்யும் செபம் நாம் எப்போதும் விண்ணக நினைவாகவே இருக்க உதவும்.

நமது விண்ணக பயணத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

புனிதர்களோடு நமக்குள்ள உறவு நம்மையும் புனிதர்களாக வாழ உதவும்.

புனிதர்களோடு செப உறவில் இணைவோம்.

புனிதத்தோடு வாழ்ந்து, புனிதர்களோடு நாமும் நிலை வாழ்வில் இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 17, 2022

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

''தாத்தா, கடவுளையும், அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்த இயேசு, நம்மை நாமே நேசிக்க வேண்டும் என்று தனியாக ஏன் கட்டளை கொடுக்கவில்லை?" 

",நம்மை நாமே நேசிப்பது நமது இயல்பு.(Nature)

கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போல அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் நம்மையே நேசிக்கிறோம்.

உலகில் பிறந்த நாம் வாழ வேண்டும் என்று ஆசிப்பதே நம்மை நாமே நேசிப்பதன் விளைவுதான்."

 "கடவுள் தன்னைத்தானே நேசிப்பதும் நம்மை நேசிப்பதும் அவரது  இயல்புதானே. 

அதே இயல்பை அவரது சாயலில் படைக்கப்பட்ட  நமக்கும் இயல்பாக தந்திருக்கலாமே. 

அப்படித் தந்திருந்தால் நாம் அவரை நேசிக்கவும் பிறரை நேசிக்கவும் தனியாக கட்டளைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே, அதை ஏன் கடவுள் செய்யவில்லை?"

",கடவுள் சுதந்திரம் என்ற அவரது இயல்பை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இறையன்பையும், பிறர் அன்பையும் நம்முடைய இயல்பாகிவிட்டால் நமக்கு தந்திருக்கும் சுதந்திரத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டிருக்கும்.

யாரை நேசிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கடவுள் நமக்கு முழு சுதந்திரத்தை தந்திருக்கிறார்.

அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் இறைவனையும், நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

அதற்காகத்தான் கடவுள் அவரையும், பிறனையும் நேசிக்க வேண்டும் என்று கட்டளைகள் தந்திருக்கிறார்.

கட்டளைகளை அனுசரிக்கவும் அனுசரியாதிருக்கவும் நமக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. 

அனுசரிப்பவர்களுக்கு நிலையான விண்ணக பேரின்ப வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

விண்ணக பேரின்ப வாழ்வை நாம் முயற்சி செய்து ஈட்ட வேண்டும். நமது முயற்சிக்கு வேண்டிய அருள் உதவிகளை கடவுள் செய்வார்.

விண்ணக பேரின்ப வாழ்வை ஈட்ட நமக்கு சுதந்திரம் தந்திருக்காவிட்டால் நாம் சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் பொம்மைகளாக மாறிவிடுவோம்.

நமக்கும், இயற்கை விதிகளின்படி இயங்கும் சடப் பொருட்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்."

"தாத்தா, சுதந்திரம் இருப்பதினால்தானே பாவம் செய்கிறோம்.

நாம் பாவம் செய்ததால்தானே நம்மை மீட்க கடவுள் மனிதனாய்ப் பிறந்து, பாடுகள் பட்டு சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது.

நமக்கு சுதந்திரம் இருந்திருக்காவிட்டால் நம்மால் பாவம் செய்ய முடிந்திருக்காது,

கடவுளுக்கும் பாடுகள் படவேண்டிய அவசியம் இருந்திருக்காது."

", இங்கே பார் பேரப்புள்ள, கடவுளுக்கு சிந்திக்க, செயல்பட முழு சுதந்திரம் இருக்கிறது.

அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

அவரால் படைக்கப்பட்ட நாம் அவர் சொல்கிறபடி செயல்பட வேண்டும். அவ்வளவுதான்."

"சரி, தாத்தா, இனிமேல் கடவுளைப் பற்றி ஏன் என்று கேள்வி கேட்க மாட்டேன்.

நம்மை நாம் நேசிப்பதுபோல பிறனையும்  நேசிக்க வேண்டும் என்ற கட்டளை  நமக்கு மட்டுமா, அல்லது ....?"

",மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும்."

"இறந்து போட்சத்துக்குச் சென்று விட்டவர்களுக்குமா?"

'', கட்டளைப்படி நடக்கிறவர்கள் மட்டும் தான் மோட்சத்திற்குப் மோட்சத்துக்குப் போவார்கள்.

மோட்சத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை எதுவும் தேவை இல்லை.

 இறைவனையும், நம்மையும் நேசிப்பது மட்டுமே அவர்கள் வேலை.

நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

உலகில் நாம் நமது பிறனிடம் உதவி கேட்பதுபோல விண்ணக வாசிகளிடமும் உதவி கேட்கலாம்."

"தாத்தா, நம்மிடம் அன்பு அதிகமாக இருந்தால் நம்மிடம் உதவி கேட்காதவர்களுக்கும் நாமே சென்று உதவுவது போல் விண்ணகவாசிகளும் நாம் கேட்காமலேயே நமக்கு உதவலாம் அல்லவா?"

",நிச்சயமாக. அவர்கள் எப்போதும் நமக்கு தங்களது செபத்தின் மூலம் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய்.

 அவளுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் அவள் தன் திரு மகனிடம் பரிந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்.

ஒவ்வொரு புனிதரும் அதையே செய்கிறார்கள்.

 புனிதர் பட்டம் பெறாத நமது உறவினர்களும் விண்ணகத்தில் நமக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பூமியில் நம்மைப் பெற்று கண்ணும் கருத்துமாக வளர்த்த நமது தாயும்,

நம்மோடு உயிருக்கு உயிராய் வாழ்ந்த நமது சகோதர, சகோதரிகளும்,

மற்ற உறவினர்களும் 
 விண்ணகத்திற்குச் சென்றபின் நம்மை மறப்பார்களா?

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

நாம்தான் அதைப்பற்றி எண்ணுவதில்லை."

"உங்களுடைய உறவினர்களுள் யாராவது உங்களுக்கு நேரடியாக விண்ணிலிருந்து உதவி செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?"

",மறக்க முடியாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 

ஒருமுறை சுகம் இல்லாத எனது தம்பியை (அமலோற்பவம்) தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

அரசு மருத்துவர் எவ்வளவோ முயன்றும் அவனை குணமாக்க முடியவில்லை.

அவர் எங்களிடம், "நாங்கள் கொடுக்க வேண்டிய மருந்து எல்லாம் கொடுத்து விட்டோம்.

இதற்கு மேல் எங்களால் முடியாது.

நீங்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள்." என்றார்.

நான்: ''டாக்டர், நீங்கள் இதுவரை கொடுக்காத வேறு ஏதாவது மருந்து இருந்தால் ஒரு முறை கொடுத்துப் பாருங்கள். அதற்கும் வாந்தி கட்டுப்படாவிட்டால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறோம்."

"ஒரு மருந்து இருக்கிறது. ஆனால் அதை உற்பத்தி செய்யும் கம்பெனி இப்போது இல்லை. ஆகவே அந்த மருந்து எங்கும் கிடைக்காது. நீங்கள் விரும்பினால் மருந்தின் பெயரை எழுதி தருகிறேன், வாங்கித் வந்தால் கொடுத்து பார்க்கிறேன்."

மருந்தின் பெயரை எழுதித் தந்தார். கிடைத்தால் ஐந்து மாத்திரைகள் வாங்கி வர சொன்னார்.

நான் மருந்து வாங்க செல்லும் போதே எங்களை பெற்ற தாயிடம் வேண்டிக் கொண்டே சென்றேன்.

"அம்மா உங்களது மகன் சாகும் தருவாயில் இருக்கிறான். ஏதாவது புதுமை செய்தாவது அவனை காப்பாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு. இறைவனிடம் மன்றாடுங்கள். நான் வாங்க செல்கிற மருந்து கிடைக்க வேண்டும். உங்கள் மகன் குணமாக வேண்டும். குணம் ஆனபின் நன்றியாக உங்களது கல்லறையில் எனது தலைமுடி எடுத்து விடுவேன்." என்று நேர்ச்சை செய்து கொண்டே சென்றேன். 

பிரேமா மெடிக்கல் ஸ்டோரில்தான் நான் மறந்து வாங்குவது வழக்கம்.

நான் கடைக்குச் சென்ற போது மருந்து கடைக்காரர் மதிய உணவிற்காக கடையைப் பூட்டிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் மருந்து சீட்டைக் காட்டினேன்.

"இந்த மருந்து ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்காக ஒரு முறை தேடி பார்க்கிறேன்" என்று கூறி கடையை திறந்தார்.

நேராக சென்று ஒரு இடத்தில் கையை வைத்தார். ஆச்சரியத்தோடு என்னை திரும்பி பார்த்தார்.

"சார், கடவுள் உங்களோடு இருக்கிறார். இன்று காலை வரை இங்கு இல்லாத மருந்து இங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை." என்று கூறிக்கொண்டு மருந்தை கையில் எடுத்தார்.

சரியாக ஐந்து மாத்திரைகள் தான் இருந்தன.

"நம்பிக்கையோடு செல்லுங்கள். இது கடவுள் செயல்."  என்று கூறிக்கொண்டே  மருந்தை என் கையில் தந்தார்.

நான் அதை நன்றியோடு வாங்கிக்கொண்டு,  வேகமாக மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம்  கொடுத்தேன்.

டாக்டருக்கு ஒரே ஆச்சரியம்.

" இதன் கம்பெனியை மூடி ஒரு ஆண்டு ஆகிறது. இப்போது இது கிடைத்திருப்பது கடவுள் அருளால்தான்." என்று கூறிக்கொண்டு தம்பிக்கு உடனே ஒரு மாத்திரை கொடுத்தார்.

அதை சாப்பிட்டவுடன் தூங்கிவிட்டான்.

இரத்த வாந்தி அதன் மேல் எடுக்கவே இல்லை.

இரவில் ஒரு மாத்திரை கொடுத்தார்.

டாக்டருக்கு அதிசயத்தின் மேல் அதிசயம்.

"கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இன்று ஒரு நாள் மருத்துவமனையில் இருக்கட்டும். நாளை காலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்."

இறைவனுக்கு நன்றி கூறியதோடு

 எங்களுக்காக  இந்த உதவியை பெற்றுத் தந்த என்னுடைய அம்மாவுக்கும் நன்றி கூறினேன்.

சில நாட்கள் கழித்து நான் வாக்குக் கொடுத்தபடி எனது அம்மாவின் கல்லறைக்கு சென்று முடியை எடுத்துக் கொண்டேன்.'

"தாத்தா, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நமக்காக வேண்ட புனிதர் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிகிறது. நமக்கு வேண்டியது விசுவாசம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?"(மத்.22:12)

"நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?"
(மத்.22:12)

இயேசு விண்ணரசைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனோடு ஒப்பிடுகிறார்.

விருந்துக்கு உலகோர் அனைவரும் அழைக்கப் பட்டிருக்கின்றனர்.

ஒரு நிபந்தனை, ஞானஸ்நானம் என்ற திருமண உடை அணிந்து வரவேண்டும். 

ஞானஸ்நானத்தின்போது நமது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

அந்த பாவம் அற்ற நிலையில் தான் விருந்துக்கு வர வேண்டும்.
பாவத்தோடு வருகிறவர்கள் திருமண உடை இன்றி வருகின்றார்கள்.

திருமண உடை இன்றி வருகின்றவர்கள் விருந்துக்கு அழைத்தவரை அவமானப்படுத்துகிறார்கள்.

அதற்குரிய விளைவை சந்திப்பார்கள்.

நாம் ஒவ்வொரு முறை திருப்பலிக்குச் செல்லும் போதும் இயேசுவால் அளிக்கப்படுகிற திருவிருந்துக்குதான் செல்கிறோம்.

செல்லும்போது ஞானஸ்தானத்தின் போது பெற்ற திருமண உடையில் தான்,

அதாவது பாவம் இல்லாத நிலையில் தான்,

செல்ல வேண்டும்.

திருமண உடை இல்லாமல் பாவத்தோடு சென்று திரு விருந்தில் கலந்து கொள்பவர்கள் திரு விருந்து அளிப்பவரைப் அவமானப்படுத்துகிறார்கள்.

திரு விருந்துக்கு அழைக்கும் இயேசு தன்னையே நமக்கு விருந்தாக அளிக்கிறார்.

நமது ஆன்மீக உணவாக அவர் நம்முள் வரும்போது நமது ஆன்மா பாவமாசு இன்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

இயேசு பரிசுத்தமானவர்.

பரிசுத்தமானவர் தங்க பாவஅசுத்தம் நிறைந்த உள்ளமாகிய அறையை திறந்து விடுபவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

ஆண்டவரை பாவத்தோடு வரவேற்பதே ஒரு பாவம்.

பாவ நிலையில் உள்ளவர்கள் திருப்பலிக்கு வருமுன்னால் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து தங்களது ஆன்மாவை பரிசுத்தமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

பரிசுத்தமான இருதயத்தோடு திரு விருந்து அருந்த வேண்டும்.

பரிசுத்தமான இருதயத்தோடு திரு விருந்து அருந்துபவர்கள்

நிலை வாழ்வில் என்றென்றும் அவரோடு இணைந்து வாழ்வார்கள்.

பரிசுத்தமாய் வாழ்வோம்.

பரிசுத்தரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, August 16, 2022

அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது".(மத்.20:10)

"அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது".(மத்.20:10)

"தாத்தா, திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்திய உவமையில்

வேலை செய்தவர்கள் செய்த வேலையின் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் சமமாக கூலி கொடுக்கப்பட்டதாக ஆண்டவர் கூறுவதோடு,

விண்ணரசு கூலி கொடுத்த வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாயிருப்பதாக ஆண்டவர் கூறுகிறாரே,

விண்ணரசில் நாம் உலகில் வாழ்ந்த வாழ்விற்கு.ஏற்ற பலன் கிடைக்காதா?

புனிதர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் சமமான பேரின்பம்தான் கிடைக்குமா?"

"Hello my dear man, ஒவ்வொரு உவமையும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தும்.

அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஒன்பது மணி, 
பகல் பன்னிரண்டு மணி,
 பிற்பகல் மூன்று மணி,
மாலை ஐந்து மணி
ஆகிய வித்தியாசமான நேரங்களில் வேலையில் சேருகின்றார்கள்.

ஆரம்பத்திலிருந்து வேலை செய்தவர்களை விட கடைசியில் வேலையில் சேர்ந்தவர்கள் செய்த பணி மிகவும் குறைவு.

ஆயினும் தோட்ட உரிமையாளர் எல்லோருக்கும் முதலில் பணியில் சேர்ந்தவர்களுக்கு அளித்த கூலியையே கொடுக்கிறார். 

ஆண்டவர் அப்போஸ்தலர்களிடம்

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்," என்று கூறியிருந்தார்.

ஆண்டவர் கூறியபடி அப்போஸ்தலர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார்கள்.

அவர்களின் வாரிசுகளாகிய நம்முடைய குருக்களும் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவர்களுக்கு ஆண்டவர் வாக்களித்த சன்மானம் எது?"

"மீட்பு."

",ஒருவன் பிறந்த உடனேயே ஞானஸ்நானம் பெற்று அவன் வாழ்கின்ற நூறு ஆண்டுகளும் நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்கின்றான்.

பிற சமய குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவனது இருபதாவது வயதில் மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்று மரணம் வரை நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்கின்றான்.

இன்னொருவன் தனது எண்பதாவது வயது வரை பாவ வாழ்க்கையே வாழ்ந்து சாகும் தருணத்தில் மனம் திரும்பி ஞானஸ்நானம் பெற்று மரிக்கிறான்.

இம்மூவருக்கும் ஆண்டவர் அளிக்கும் சன்மானம் என்ன?"

"மீட்பு."

",அதாவது நூறு ஆண்டுகள் கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும், 

இருபதாவது வயதிலிருந்து கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும், 

கடைசி ஒரு சில நிமிடங்கள் மட்டும் கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தவனுக்கும்

ஆண்டவர் அளிப்பது ஒரே சன்மானம்தான், மீட்பு.

எத்தனை ஆண்டுகள் ஒருவன் கிறிஸ்தவனாக வாழ்ந்தான் என்பதை அல்ல 

மரிக்கும்போது எந்த நிலையில் இருந்தாள் என்பதையே ஆண்டவர் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர் 
அவரது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வாக்களித்த கூலி ஒரு வெள்ளிக் காசு.

அதையே வேலை செய்தவர்கள் அனைவருக்கும் தான் வாக்களித்தபடி கூலியாகக் கொடுக்கிறார்.

நற்செய்தியை விசுவசித்து ஞானஸ்நான வாழ்வு வாழ்பவர்களுக்கு ஆண்டவர் வாக்களிக்கும் சன்மானம் மீட்பு.

இறுதி வரை ஞானஸ்நான வாழ்வு வாழ்பவர்கள் அனைவருக்கும்,

( வாழ்ந்த கால அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்)

மீட்பு அளிக்கிறார்.

ஒருவன் நமது கண் முன்னாலேயே வாழ்வின் இறுதிவரை பாவியாகவே வாழ்ந்து மரிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் அவன் மோட்சத்திற்குச் செல்வானா? நரகத்திற்கு செல்வானா?

திராட்சை தோட்ட உவமை அடிப்படையில் உனது பதில் இருக்க வேண்டும்."

" திராட்சை தோட்ட உவமை அடிப்படையில் சொல்வதானால்

தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்."

", ஏன்?''

"நம் கண் முன்னால் அவன் வாழ்ந்தது பாவ வாழ்வு.

அவன் நமது கண் முன்னாலே மரிக்கலாம். ஆனால் அவனது மனதில் ஓடிய எண்ணங்கள் நமது கண்ணுக்கு தெரியாது. அவன்  மரணம் அடைந்து கொண்டிருக்கும் போது, கடைசி வினாடியில்  தன் வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டிருக்கலாம். 

மனஸ்தாபப்பட்டிருந்தால் அவன் கட்டாயம் மோட்சத்திற்குத்தான் போவான்.

மனஸ்தாபப்படாதிருந்தால் நரகத்துக்குப் போவான்.

 அவன் மனஸ்தாபப்பட்டானா, இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆகவே உங்களது கேள்விக்கு எனக்குப் பதிலும் தெரியாது."

", Very good. நீ உவமையை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.

நாம் மனம் திரும்புவதற்கு கால வரையறையே கிடையாது.

புனித அகுஸ்தினார் தனது முப்பதாவது வயதில்தான் மனம் திரும்பினார்.

மரணம் அடையும் போது கூட மனம் திரும்பலாம்.

நமது ஆண்டவர் அளவு கடந்த இரக்கம் உள்ளவர்."

லூர்து செல்வம்.

Monday, August 15, 2022

பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." (மத். 19:23)

"பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." (மத். 19:23)

"தாத்தா, பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது." என்று ஆண்டவர் சொல்கிறார்.

அப்படியானால் பிச்சைக்காரர்கள் மட்டும்தானே மோட்சத்திற்குப் போக முடியும்!

மற்ற எல்லோரிடமும்தான் பணம் ஏதாவது ஒரு உருவத்தில் இருக்கிறதே!"

", அதாவது பணம் உள்ளவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்கிறாய், அப்படித்தானே."

"ஆமா. இல்லாதவர்கள் எல்லாம் ஏழைகள் என்றால் உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள்தானே."

",அப்படியானால் பிச்சைக்காரர்களும் பணக்காரர்கள் தானே.

அவர்கள் பணத்தை தானே பிச்சையாக எடுக்கிறார்கள்."

"அப்படியானால் யாருமே மோட்சத்திற்குப் போக முடியாது என்கிறீர்களா?"

",நான் அப்படிச் சொல்லவில்லை.
ஆண்டவரும் அப்படிச் சொல்லவில்லை."

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." என்றுதான் ஆண்டவர் கூறியிருக்கிறார்."

''அப்படியானால் பணக்காரர்களுக்கு கடவுளின் அரசு கிடையாது என்றுதானே அர்த்தம்.

எல்லோரிடமும்தான் பணம் இருக்கிறதே."

",வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் பேசுகிறாய்.

பணம் உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல.

பணம் இல்லாதவர்கள் எல்லாம் ஏழைகளும் அல்ல."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. யார் பணக்காரர்கள்?
 யார் ஏழைகள்?"

",பணத்தின் மீது பற்று உள்ளவன் பணக்காரன்.

பணத்தின் மீது பற்று இல்லாதவன் ஏழை.

'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:' என்றால் 

'உலக செல்வத்தின் மீது பற்று இல்லாதவர்களே, நீங்கள் பேறு பெற்றோர்' என்பது பொருள்.

நாம் பற்று கொள்ள இரண்டு விதமான செல்வங்கள் இருக்கின்றன.

1. விண்ணகச் செல்வம். இதன் மீது பற்று உள்ளவர்கள் விண்ணக வாழ்வை அடைவதற்காகவே இவ்வுலகில் வாழ்வார்கள். அவர்களுக்கு விண்ணகம் உறுதி.

2,உலகச் செல்வம். இதன் மீது பற்று உள்ளவர்களிடம் விண்ணகச் செல்வத்தின் மீது பற்று இருக்காது. இவர்கள் உலக செல்வத்தை அடைவதற்காகவே வாழ்வார்கள். விண்ணக வாழ்வு இவர்களுக்கு கிடைக்காது."

"பணமே இல்லாதவர்கள் கூட அதன் மீது பற்றுடன் வாழ்ந்தால் பணக்காரர்கள் தான் என்கிறீர்கள்."

",ஆமா. கையில் நிறைய பணம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாமல் விண்ணக வாழ்வின் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் ஏழைகளே. 

உலகப் பற்று இல்லாமல் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள், ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் விண்ணரசு உரியது."

"இன்னும் புரியவில்லை. பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க வேண்டும். அப்படியானால் பணத்தை சம்பாதிக்கிறவர்கள் எல்லோரும் அதன் மீது பற்று உள்ளவர்கள் தானே.

படித்து பட்டம் பெற்று வேலை தேடுகின்றவர்கள் அதிக சம்பளம் தரும் வேலைக்கு ஆசைப்படுவார்களா? 

அல்லது சம்பளமே தராத வேலைக்கு ஆசைப்படுவார்களா?

வாங்குகின்ற சம்பளத்தின் மீது எப்படி பற்று இல்லாமல் இருக்கும்?

அப்படியானால் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் யாருக்கும் விண்ணகம் கிடைக்காதா?"

",பாடப் புத்தகம் வாங்குவதற்காக அப்பாவிடம் பணம் கேட்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

உனக்கு ஆசை பணத்தின் மீதா பாடப் புத்தகத்தின் மீதா?"

"பாடப் புத்தகத்தின் மீது ஆசை இருப்பதால் தானே அதை வாங்க பணம் கேட்கிறேன்.

அப்பாவிடம் வாங்கிய பணத்தை அழகு பார்க்காமல் கடைக்காரரிடம் கொடுத்து விடுவேன். அவர் பதிலுக்கு பாடப் புத்தகம் தருவார்."

",இறைவனுக்கு சேவை செய்வதற்காக பணம் சம்பாதித்தால் உனக்கு பணத்தின் மீது பற்றா இறைவன் சேவை மீது பற்றா?"

"இறைப் பணி மீது தான் பற்று."

"இப்போவாவது புரிகிறதா?" 

", புரிகிறது. உலகில் வாழ்பவர்கள் எல்லோரிடமும் அதன் செல்வம் இருக்கும். அதை இறைப்பணியில் செலவழிக்க வேண்டும்.

உலகச் செல்வத்தை இறைபணியில் செலவழித்தால் அந்த செல்வமும் விண்ணகச் செல்வமாக மாறிவிடும்."

"நான் ஒரு ஒப்புமை சொல்கிறேன்.

நான் சென்னைக்கு செல்ல விரும்பினால் என்னிடம் உள்ள பணத்தை பேருந்து கட்டணத்திற்காக இழந்து தான் 

பேருந்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

 இழக்க முடியாத அளவிற்கு பணத்தின் மீது எனக்கு பற்று இருந்தால் சென்னைக்கு செல்ல முடியாது. அதை பார்த்துக் கொண்டே வீட்டில் இருக்க வேண்டியதுதான்.

அதேபோல நான் என்னுடைய உலக செல்வத்தை இறைப் பணிக்காக இழந்தால்தான் 

இறைவன் வாழும் விண்ணகத்திற்கு என்னால் செல்ல முடியும்.

இழக்க முடியாத அளவுக்கு எனக்கு உலக செல்வத்தின் மீது பற்று இருந்தால் என்னால் விண்ணகம் செல்ல முடியாது."

", Correct. விண்ணக வாழ்வை அடையும் நோக்கத்தோடு இவ்வுலகில் வாழ்பவன்தான் விண்ணக செல்வத்தின் மீது பற்று உள்ளவன்.

உலக வாழ்வை மட்டுமே எண்ணி வாழ்பவன் உலகின் மீது பற்று உள்ளவன்.

அவனுக்கு விண்ணக வாழ்வின் மீது பற்று இல்லாததால் விண்ணகம் செல்ல முடியாது.

அதனால்தான் ஆண்டவர்

பணக்காரன், 

அதாவது பணத்தின் மீது மட்டும் பற்று உள்ளவன், 

விண்ணரசில் நுழைவது அரிது.

என்றார்."

"நம்மிடம் உள்ள உலக செல்வத்தை பிறர் அன்புப் பணிகளில் செலவழித்தால் அதை இறைவனுக்காகவே செலவழிக்கிறோம்.

நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் இறை பணி செய்வோம்.

உலக செல்வத்தின் உதவியால் விண்ணக செல்வதை ஈட்டுவோம்.

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்போம்.

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்போம்.

சுகம் இல்லாமல் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி செய்வோம்.

இதைப் போன்ற எண்ணற்ற பிறரன்பு பணிகளில் உலக செல்வத்தைச் செலவழித்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

பிறருக்காக வாழ்வதன் மூலம் இறைவனுக்காக வாழ்வோம்.


இறைவனோடு நிலை வாழ்வு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Friday, August 5, 2022

கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."(1 திமோ2:6)(தொடர்ச்சி)

கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."

(1 திமோ2:6)
(தொடர்ச்சி)


", பேரப்புள்ள, 'நேற்று கடைசியில் நீ கேட்ட கேள்வியைத் திரும்பவும் கேளு."

"கடவுள் மாறாதவர். மாறாமையை தனது இயல்பாக (Nature)க் கொண்ட கடவுளை மாற்ற முடியாது.

அவருடைய திட்டங்கள் யாவும் நித்தியமானவை.

நம்மை எப்படி வழி நடத்த வேண்டும் என்று அவர் நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிறார்.

மாறாத கடவுளின் நித்திய கால திட்டத்தை எப்படி நமது செபத்தாலோ புனிதர்கள் செபத்தாலோ மாற்ற முடியும்?"

",பேரப்பிள்ளை உன்னுடைய கேள்வியில் ஒரு பிழை இருக்கிறது."

"கேள்வியில் ஒரு பிழையா? தேர்வு எழுதுகிறவன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எழுத வேண்டும்.

கேள்வியில் பிழை உள்ளது என்று எழுதினால் எப்படி மதிப்பெண் கிடைக்கும்?"

",யாராவது உன்னிடம் 'இந்தியாவை ஏன் ஒரு தீவு என்று அழைக்கிறோம்?' என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?" 

"கேள்வி தவறு என்று சொல்வேன்."

",அதைத்தான் நானும் சொல்கிறேன்."

"என்ன பிழை?"

",மாறாத கடவுளின் நித்திய காலத் திட்டத்தை மாற்ற நாமோ புனிதர்களோ செபிக்கவில்லை. 

செபிக்கிற சாதாரண மக்களுக்கு நம்மைப் படைத்தவர் கடவுள், நாம் கேட்டதைத் தருவார் என்று மட்டும் தெரியும். கடவுளின் திட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது.

புனிதர்களுக்கு கடவுளின் திட்டத்தைப் பற்றித் தெரியும். அதை மாற்ற செபிக்க மாட்டார்கள்."

"அப்படியானால் கேள்வி எப்படி இருக்க வேண்டும்?"

",கேள்வியை விடு, நான் சொல்வதைக் கேள்.

 கடவுள் நிறைவானவர். (Perfect)
ஆகவே அவரால் மாற முடியாது.

குறைவானது (Imperfect) மட்டுமே வளர்ச்சி அடைய மாற வேண்டும்.

மனிதர்கள் குறைவானவர்கள். ஆகவேதான் மாறிக் கொண்டேயிருக்கிறோம்.

கடவுளுடைய அன்பு மாறாதது. கடவுள் நம்மை நித்திய காலமாக அன்பு செய்கிறார். அந்த அன்பு ஒருபோதும் மாறாது.

நாம் பாவம் செய்யும்போது நாம்தான் அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பை இழக்கிறோம். மாறுகிறோம்.

ஆனால் நம்மீது கடவுளுக்கு இருக்கும் அன்பு மாறாது.

லூசிபெரை (Lucifer) எந்த அளவு நேசித்தாரோ அதே அளவுதான் சாத்தானையும் நேசிக்கிறார்.

மோட்ச வாசிகளை எந்த அளவு நேசிக்கிறாரோ, அதே அளவு நரகவாசிகளையும் நேசிக்கிறார்.

மோட்ச வாசிகள் அந்த அன்பை அனுபவிக்கிறார்கள்.

நரகவாசிகளால் அனுபவிக்க முடியாது.

நாம் பாவம் செய்யும்போது நாம்தான் அவரை விட்டு பிரிகிறோம்.

நமது பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு நம்மை ஏற்றுக் கொள்ளும்படி கடவுளை மன்றாடுகிறோம்.

அவரும் ஏற்றுக் கொள்கிறார். நாம் மாறுகிறோம்.

உனக்கு இப்போது ஒன்று புரிந்திருக்கும். நாம் மாறுவதற்காகத் தான் செபிக்கிறோம், கடவுளை மாற்றுவதற்காக அல்ல.

கடவுளின் எல்லா திட்டங்களும் நமது நன்மைக்கே. அவற்றை ஏன் மாற்ற வேண்டும்?"

"கடவுள் மாறாதவர், மனிதனாய்ப் பிறந்த இயேசு?"

",இயேசுவைப் பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம் ஒரு முக்கியமான உண்மையை மனதில் வைத்திருக்க வேண்டும். 

இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள் அவர் முற்றிலும் கடவுள்(Fully God) முற்றிலும் மனிதன்.(Fully Man)

தேவ சுபாவத்தில் தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒன்றானவர்.

நித்தியர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

மனித சுபாவத்தில் மரியாளின் வயிற்றில் மனிதனாய் உற்பவித்தார். 

பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், பாடுகள் பட்டார், மரித்தார்.

நம்மை போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.

பாவம் தவிர மற்ற எல்லா பண்புகளிலும் அவர் முழுமையான மனிதர்.

நமக்காகவே சர்வ வல்லவராகிய அவர், பாவம் தவிர, மற்ற மனித பலகீங்களை தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டார்.

மரணமே அடைய முடியாத இறைமகன் நமக்காக சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்."

"தாத்தா, ஒரு நிமிடம்.

 மாறவே முடியாத இறைவனின் மகன் நம்மை மீட்பதற்காக,

 தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி, 

மாற்றத்திற்கு உட்பட்ட, மனித குலத்தில் பிறந்து,  

பாடுகள் பட்டு, மரித்திருக்கும் போது 

நாம் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக,

செபத்தின் மூலம்,

அவரது விருப்பத்தை மாற்ற முயல்வது அறியாமை.

அவரது விருப்பப்படி நாம் மாறுவோம்.

பாவிகளாய் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து பரிசுத்தர்களாய் மாறுவோம்.

நாம் பரிசுத்தர்களாய் மாற அவரது அருள் வரம் கேட்டு செபிப்போம்.

நாம் மாறி, அவரது விருப்பப்படி நடப்பது ஒன்றே விண்ணகம் செல்ல வழி.

மண்ணில் வாழும்போது விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்.

"இயேசுவே, எங்களை உமக்கு ஏற்றவர்களாக மாற்றும்.

உமக்காக, உமக்காக மட்டுமே, நாங்கள் வாழ வரம் தாரும்."

லூர்து செல்வம்.