Friday, December 24, 2021

Happy Christmas!

           Happy Christmas!



", Happy Christmas,! தாத்தா!"

", , Happy Christmas!  Christmasஐ எப்படிக் கொண்டாடப்  போகிறாய்?"

"போன ஆண்டு கொண்டாடியது போலவே இந்த ஆண்டும் கொண்டாடுவேன்."

",போன ஆண்டு எப்படி கொண்டாடினாய்?"

''24ஆம் தேதி  இரவு முழுவதும் கண்விழித்திருந்தேன். 

நடு இரவு 12 மணிக்கு Christmas பூசை.

வீட்டுக்கு வந்து Cake வெட்டினோம்.

அப்புறம் வேட்டு போட்டோம்.

அதற்குள் விடிந்து விட்டது.

அப்புறம் 25ம் தேதி முழுவதும்
நல்ல தூக்கம், சாப்பாட்டு நேரம் தவிர."

", என்னடா சொல்ற, கிறிஸ்துமசே 25ம் தேதிதான், நீ அன்று முழுவதும் தூங்கினேன் என்கிறாய்!

அப்போ நீ கிறிஸ்மசைக் கொண்டாடவில்லை, தூங்கியிருக்கிறாய்!"

"தாத்தா, 24ம் தேதி முழுவதும் விழித்திருந்தேனே!

 பகலில் கிறிஸ்மசுக்காக வீட்டை அலங்கரித்தேரம்.

இயேசு பாலனுக்கு குடில் கட்டினோம்.

மாலையில் Star தொங்கப் போட்டோம்.

இரவில் பூசை கண்டோம்.

 கேக் வெட்டினோம்.

 வேட்டு போட்டோம்.

25ம் தேதி மட்டும் தூங்கினேன்.

இரவு முழுவதும் விழித்திருந்தால் பகலில் தூங்கித்தானே ஆக வேண்டும்.''

",நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?

 ஆண்டு முழுவதும் விழுந்து விழுந்து படித்தேன்.

 தேர்வின்போது உட்கார்ந்து கொண்டே தூங்கினேன் என்பது போல் இருக்கிறது.

 ஆண்டு முழுவதும் தூங்காமல் படிப்பதே தேர்வைத்  தூங்காமல் எழுதுவதற்காகத்தான்.

 ஆண்டு முழுவதும் தூங்காமல் படித்துவிட்டு தேர்வு நேரத்தில் தூங்கினால் படித்து என்ன பயன்?"


"தாத்தா,  வழக்கமாக இரவில் தூங்கிவிட்டு பகலில் விழித்திருந்து வேலை பார்ப்போம்.

 இரவில் தூங்காமல் இருந்தால் அதற்கு ஈடு கட்ட பகலில் தூங்கித் தானே ஆக வேண்டும்!" 

",நீ சொல்வது

 ' ஒரு நாள் ஒரு சந்தி இருந்தால் மறுநாள் இரண்டு மடங்கு சாப்பிட வேண்டும்' 

என்று சொல்வதுபோல் இருக்கிறது.

 ஒரு சந்திக்கு ஈடுகட்ட பலசந்தி இருந்தால் ஒருசந்தியால் பயனில்லை.

உனக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால்,

 "ஒரு நாள்  தர்மம் கொடுத்தால், மறுநாள் கொடுத்ததைத்  திருட வேண்டும்" 

என்று சொல்வது போல் இருக்கிறது."

"வேறு எப்படித்தான் கிறிஸ்மசைக்
 கொண்டாட வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?"

",இயேசு எந்த நோக்கத்திற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதே நோக்கத்தை நாமும் நிறைவேற்றும் விதமாக கிறிஸ்துமசைக் கொண்டாட வேண்டும்.

இயேசு நமக்கு மீட்பை தருவதற்காக பிறந்தார்.

ஆகவே மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் கிறிஸ்மஸ் அடங்கியிருக்கிறது, மற்றவர்களிடமிருந்து பெறுவதில்  அல்ல.

 இல்லாதவர்களுக்கு  கொடுப்பதின் மூலமாகத்தான் கிறிஸ்துமசைக்  கொண்டாட வேண்டும்."

"தாத்தா, நான் பையன்.

என்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

உணவு தருவது அம்மா.
 உடை தருவது அப்பா.

 தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?"

", அன்பு இல்லை?
அன்பான ஆறுதல் தரும் வார்த்தைகள் இல்லை?

அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு வேறு பையன்கள் இல்லை? 

இரவில் இயேசு பாலனை சந்தித்த நாம் பகலில் அவரோடு மற்றவர்களை சந்திக்க வேண்டாமா?

அவர்களிடம் இயேசுவைப் பற்றி பேச வேண்டாமா?

வீட்டிலேயே அம்மா, அப்பாவுக்கு உதவி செய்யலாம்.

ஞான வாசகங்கள் வாசிக்கலாம்.

செபம் சொல்லலாம்.

நாம் செய்யக்கூடிய ஆன்மீக காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன."


'.அவற்றை எல்லாம் செய்யலாம் தாத்தா.

தூங்க வேண்டிய நேரத்தில் விழித்து இருந்தோமே, அதை எப்படி சரிக்கட்ட?"

", ஆண்டவருக்காக தியாகம் செய்தது நாம் அவருக்கு  கொடுத்த காணிக்கை.

சரிக் கட்டுவதற்காக தியாகம் செய்வதில்லை.

அப்படி செய்தால் அது வியாபாரம்."

"சரி, தாத்தா. அடுத்த கிறிஸ்மசுக்கு இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்." 

",ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது.

 செயல்படுத்த வேண்டும்.

மற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்து கொள்வதில்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது."


"இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். உங்களுக்கு உங்கள் அம்மாமேல் பாசம்  இருக்கிறதா?"

",அதிலென்ன சந்தேகம்?"

".அதில் சந்தேகம் இல்லை.

 ஆனால் அடுத்த கேள்விக்கு முன்னுரையாகக் கேட்டேன்.

அம்மாவுக்கு ஏதாவது கஷ்டம் வர விடுவீர்களா?"

",வர விடமாட்டேன்."

"நீங்களே அம்மாவுக்கு கஷ்டம் வர விட்டால் 

நீங்கள் அவர்களை நேசிக்க வில்லை என்றுதானே அர்த்தம்."

",அடுத்த கேள்வியை நேரடியாக கேள். நீ என்ன கேட்க விரும்புவது என்று எனக்குப் புரிகிறது."

"அப்போ அந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

எது நடந்தாலும் கடவுள் திட்டப்படி தான் நடக்கும் என்பதை மறக்காமல் பதில் சொல்லுங்கள்."

", மரியாளின் வயிற்றில் இயேசு உற்பவித்த வினாடியிலிருந்து அவள் வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களை அனுபவித்தாள்.

அவளை வியாகுல மாதா என்று நாம் அழைக்கும் அளவிற்கு அவள் கஷ்டங்களை அனுபவித்த அம்மாவாக இருந்தாள்.

இயேசு கடவுள். அவருடைய திட்டப்படி தான் அவருடைய அம்மாவுக்கு கஷ்டங்கள்  நேர்ந்தன.

பெற்ற தாய்க்கு கஷ்டங்களை அனுமதித்த  இயேசுவுக்கு தாய் மேல் பாசம் இருந்ததா? இருந்திருந்தால் தாய்க்கு கஷ்டங்களை வர விட்டிருப்பாரா?

இதுதானே உன் கேள்வி?"

"இதுவேதான். இப்போ பதில் சொல்லுங்கள்."

", இயேசு கடவுள். கடவுளின் செயல்பாடுகளை ஆன்மீகக் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.

உலகியல் கண்ணோக்கிலிருந்து அல்ல.

இயேசு எதைச் செய்தாலும் ஆன்மீக நலனை மையமாக வைத்து செய்வாரேயொழிய  உடல் நலனை மையமாக வைத்து அல்ல.

அவர் உலகில் மனிதனாகப் பிறந்தது நமது ஆன்மாவை மீட்க,

உடலை அல்ல.

ஆன்மீக ரீதியில் ஒருவன் நலமாக இருக்கிறான் என்றால், அவனிடம் பாவம் எதுவும் இல்லை, அருள் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவனிடம் பாவங்கள் நிறைய இருந்து அருள் இல்லாவிட்டால் அவன் ஆன்மீக வியாதியஸ்தன் என்று அர்த்தம்.

இப்போ ஒரு உண்மை உனக்கு புரிந்திருக்க வேண்டுமே."

"புரிந்து விட்டது. 

மனிதனுக்கு உடல் ரீதியாக வருபவை எல்லாம் உண்மையான கஷ்டங்கள் அல்ல,

பாவத்தால் ஆன்மாவுக்கு வருவதுதான் உண்மையான கஷ்டம்.

அந்த வகையில் அன்னை மரியாள் பாவம் மாசு இல்லாதவள், அருள் நிறைந்தவள்.

அவள் சிறிதுகூட கஷ்டப்படாமல் அவளை காப்பாற்றியவர் அவளது மகன் ஆண்டவர் இயேசுதான்.

இயேசுவின் அருளால்தான் அவள் பாவ மாசின்றி உற்பவித்தாள்.
அருளால் நிரப்பப்பட்டாள்.

அவள் உடல் ரீதியாக   பட்ட கஷ்டங்கள் இறைவனின் பார்வையில், கஷ்டங்களே அல்ல.

ஆன்மீக கண்ணோக்கில் 

உலகில் வாழ்ந்த, 
வாழ்கின்ற,
வாழப்போகிற 
மனிதர்கள் அனைவரிலும் 

அதிக ஆரோக்கியமாக,

 கஷ்டமே இல்லாமல் வாழ்ந்தவள் அன்னை மரியாள் மட்டுமே.

இதைத்தானே சொல்ல வந்தீர்கள்."

",.கரெக்ட். இறைவனுக்கு மிகவும் பிடித்தது பாவமாசு இல்லாத ஆன்மா தான்.

அந்த வகையில் இறைவனுக்கு மிகவும் பிடித்தவள் இயேசுவின் தாய்.

இப்போ சொல்லு,

ஆன்மீக நோக்கில் 

ஆரோக்கியமாக 

கஷ்டமே இல்லாமல் 

தன் அன்னையை காப்பாற்றிய இயேசுவுக்கு தாய் மீது பற்று இருந்ததா இல்லையா?"

"இப்போ எனக்கு சிறிது கூட சந்தேகமில்லை.

 இயேசு தன் தாயை அளவில்லாத விதமாய் நேசித்தார்."

", இன்னொன்றையும் தெரிந்து கொள். 

யார் இறைவனை அதிகம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு அவர் அதிகமான உடல் ரீதியான துன்பங்களை அனுமதிப்பார்.

உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆன்மீகப் பெயர் சிலுவை.

இயேசு சிலுவையில் தன்னையே பலியிட்டு நமக்கு ஆன்மிக மீட்பைத் தந்ததால்,

சிலுவை  மீட்பின் அடையாளம் ஆயிற்று. 

இயேசு தனது சிலுவை மரணத்தை தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,

நாமும் நமக்கு வரும் சிலுவையை ஏற்று இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்

நமக்கு இறைவனது அருள் கிடைக்கும்.

சிலுவை நமக்கு ஆன்மீக அருளை ஈட்டும் கருவி. நமது ஆன்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் சிலுவையைச் சுமந்தாக வேண்டும்.

அன்னை மரியாளும் தன் மகனோடு வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்தாள்.

அதனால் தான் வியாகுல மாதா என்று அழைக்கப்படுகிறாள்.

அருளை சம்பாதிக்க வேண்டுமா? சிலுவையைச் சுமக்க வேண்டும்.

உலகில் நமக்கு சம்பளத்தை ஈட்டி தருவது துன்பமா? உழைப்பா?"

"உழைப்பு."

",ஆன்மாவிற்கு அருளை ஈட்டித் தரும் அது துன்பமா? சிலுவையா?"

"சிலுவை. இப்போது இன்னொன்றும் புரிகிறது.

நமக்கு வரும் உடல் ரீதியான துன்பத்தை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டால் 

அது மீட்பைத் தரும் சிலுவையாக மாறுகிறது.

ஏற்றுக் கொள்ளாவிட்டால் துன்பம் துன்பமாகவே இருக்கும்.

துன்பம் ஆன்மீக ரீதியாக பலன் தர வேண்டுமென்றால் அதை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டு சிலுவையாக மாற்ற வேண்டும்.

துன்பத்தை சிலுவையாக மாற்ற மனதுடையோர், தங்களுக்கு அதிகமான துன்பம் வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அவர்களுக்கு துன்மங்கள் அதிகமாக அதிகமாக சிலுவைகளும் அதிகமாகும்.

சிலுவைகள் அதிகமாக அதிகமாக ஆன்மாவுக்கு அருள்வரத்து அதிகமாகும்.

அருள்வரத்து அதிகமாக அதிகமாக ஆன்மீக ஆரோக்கியம் அதிகமாகும்.

ஆன்மீக ஆரோக்கியம் அதிகமாக அதிகமாக நித்திய வாழ்வின் பேரின்பம் அதிகமாகும்."

", உடலுக்கு வரும் துன்பங்களை இறைவனுக்காக ஏற்று,

அதை சிலுவையாக மாற்றி,

அதை இறைவனுக்காக சுமந்து,

விண்ணகத்தை அடைவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment