Saturday, June 29, 2019

அன்பு செய்வது அவ்வளவு எளிதா?

அன்பு செய்வது அவ்வளவு எளிதா?
++++++++++++++++++++++++

தேனாய் இனிக்கிறது தேன்,  ஆனால் அதைச் சுவைத்துப் பார்ப்பது அவ்வளவு எளிதா?

சுவைத்துப் பார்க்க அது நாவிற்கு வரவேண்டும்.

நாவிற்கு வருமுன் கைக்கு வரவேண்டும்.

அது கைக்கு வருமுன் மரத்தின் உச்சியில் தேனீக்கள் கட்டியுள்ள கூட்டை அடையவும்

தேன்அடையை எடுக்கவும் படவேண்டிய கஸ்டத்தை

மரம் ஏறி, தேனீக்களிடமிருந்து முகமெங்கும் கொட்டு வாங்கியவர்களே அறிவார்கள்!

காதலிப்பதும் கல்யாணம் புரிவதும் இனிமையான அனுபவங்கள்தான்.

ஆனால் அந்த அனுபவங்களை அனுபவிக்க படவேண்டிய கஸ்டங்கள் பட்டவனுக்குதான் தெரியும்.

புதிய வீட்டில் குடியேறுவது மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதற்காகப் படவேண்டிய கஸ்டங்கள்?

கட்டியவனைக் கேளுங்கள், அவன் சொல்லுவான்.

அன்பு செய்வதும் அப்படித்தான்.

நம்மை அன்பு செய்கிற கடவுள்,  நமது அன்பைப் பெறுவதற்காக பட்ட கஸ்டங்கள்!

சிலுவையைக் கேளுங்கள்!
தன் கண்ணீர் அனுபவத்தைச் சொல்லும்!

அன்பு மயமான கடவுள் நம்மைப் படைத்தது அன்பு செய்வதற்கு மட்டும்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்ய,

நம்மைப் போல் நம் அயலானை அன்பு செய்ய.

உலகத்திலேயே மிக இனிமையான காரியம் அன்பு செய்வதுதான்,

மிகக் கடினமான காரியமும் அன்பு செய்வதுதான்.

இருதயத்தில் மட்டுமே அன்பு செய்து கொண்டிருப்பது மிக எளிது.

ஆனால் அது முழுமையான அன்பு அல்ல.

அது Starting point தான்.

பந்தய ஓட்டம் ஓடுபவன் துவக்கக் கோட்டிலேயே அசையாமல்   நின்று கொண்டிருந்தால் எப்படி வெற்றி பெறுவான்?

ஓடினால்தான் முடிவுக்கோட்டைக் கடக்க முடியும்.

இருதயத்தில் பொங்கிவரும் அன்பு சொல்லிலும் செயலிலும் இறங்கி அன்பு செய்யப்படுவோரை மகிழ்விக்க
வேண்டும்.

அது எளிதான காரியமல்ல.

கடினமானது மட்டுமல்ல, கஸ்டங்களும், பிரச்சனைகளும் கூட  நிறைந்ததாக இருக்கும்.

நம் ஆண்டவர் இயேசு நம்மீது கொண்டுள்ள  தன் அன்பை சொல்லிலும், செயலிலும் காட்ட விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிவந்தார்.

பாவிகளாகிய நம்மைத் தேடிவந்தவர் நமக்காகப் பட்ட அவமானங்களும்,கஸ்டங்களும் கொஞ்சமா?

நம்மீது அவருக்கிருந்த அன்பு அவருக்குப் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் தேடித்தந்தது. 

அதுதான் முழுமையான அன்பு.

நம்மை சிலுவை மூலம் அன்பு செய்த இயேசுவை நாம் எப்படி அன்பு செய்கிறோம்?

இயேசுவை நோக்கி,

"Jesus, I love you."

"இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்."

என்று அடிக்கடி சொல்கிறோம்.

நமது இருதயத்திலிருந்து எழுந்துவரும் இந்த செபம் இனிமையானது மட்டுமல்ல, சக்திவாய்ந்ததும்கூட.

சொல்லால் நமது அன்பைத் தெரிவித்த நாம், செயல்மூலம் எப்படித் தெரிவிப்பது? 

அதற்காகத்தான் நம்மைத் தனியாகப் படைக்காமல் ஒரு குடும்பத்தில் படைத்திருக்கிறார். 

நாம் பிறந்து வளரும் சிறிய அமைப்பு மட்டுமல்ல, மனித சமுதாயமே நமது குடும்பம்தான்.

மனித குலத்தினர் அனைவரும் நமது சகோதர, சகோதரிகள்தான்.

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

நமது அயலானுக்கு  நாம் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்கிறோம்.

அயலானை நேசிக்கும்போது, இயேசுவையும் நேசிக்கிறோம்.

அயலானை நேசிக்காவிட்டால் இயேசுவை நேசிக்கிறோம் என்று சொல்வது பொய்.

"நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்." (1அரு.4:20)

அயலானை நேசிப்பது அவ்வளவு எளிதான காரியமா?

அயலானை நேசிப்பது அதாவது பிறரன்பு ஒரு தடை ஓட்டம் (Obstacle race) மாதிரி.

தடையோட்ட களத்தில் இடையூராக தடைகள் நிறைய இருக்கும்.

அவற்றை எல்லாம் தாண்டி ஓடி வெல்ல வேண்டும்.

பிறருக்கும் நமக்கும் இடையே உள்ள தடைகளுக்கு கணக்கே கிடையாது.

"என்னை வெறுப்பவனை நான் எப்படி அன்பு செய்வது? "

இங்கே வெறுப்பு ஒரு தடையாக இருக்கிறது.

அத்தடையைத் தாண்டி அவர்களை அன்பு செய்ய இயேசு கேட்கிறார்.

"உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? "

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

நம்மை வெறுப்பவர்களை நேசிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு நன்மையும் செய்ய வேண்டும்.

இது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஆனால் இயேசுவின் அருளால் எல்லாம் முடியும்.

பகைவரையும் நேசிக்க அருள்வரம் கேட்டு இயேசுவை மன்றாட வேண்டும்.

சாதி, சமய, இன வேறுபாடுகள் போன்ற தடைகளும் இடையே வரும்.

எல்லோரும் நம்மைப் படைத்த அதே தந்தையின் பிள்ளைகள்தான் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இத்தடைகள் நீங்கிவிடும்.

நமது அன்பைக் காண்பிக்க இயலாத சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

நமது மனிதகுடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம்  போன்ற இயற்கை நிகழ்வுகளால் வெளிநாடுகளில் மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தால் நாம் நேரடியாக நமது அன்பைத் தெரிவிக்க இயலாது.

பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதன்மூலம் நமது அன்பைக் காட்டவேண்டும்.

அன்பைப் பரிமாறிக்கொள்ள எளிய வழிகள் நிறைய உள்ளன.

சந்திப்பவர்களை நோக்கி புன்முறுவல் பூப்பது,

அவர்களின் நலன் விசாரிப்பது,

அவர்களை வாழ்த்துவது,

அவர்களுக்கு ஆறுதல் கூறுவது,

அவர்களிடம் மகிழ்ச்சியோடு பேசி நமது மகிழ்ச்சியை அவர்களோடு பரிமாறிக்கொள்வது

இவை எல்லாம் செலவே இல்லாத எளிய வழிகள்.

மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசாதிருப்பது மிக எளிய வழி.

சிலருக்கு இது கடினமான வழியாகத் தோன்றலாம்.

பிறரைக் கெடுத்துப் பேச சோதனை வந்தால் வாயைத் திறக்காமலே இருப்பது நல்லது.

தடைகளைத் தாண்டி அன்பு செய்வோம்.

கொடைகளின் வள்ளலாம் ஆண்டவர் அருள் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, June 28, 2019

இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.

இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.
----------*-----------*---------------*

ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டார் :

LOVE is a four lettered word.

மாணவர்களைப் பார்த்து,

"இந்த ஆங்கிலச் சொற்றொடரை ஆங்கிலம் கலவா தூய தமிழில் மொழியர்க்க வேண்டும்.

தாள் ஒன்றை எடுத்து மொழி பெயர்ப்பை எழுதுங்கள்." என்றார்.

மாணவர்கள் எழுதிமுடித்தவுடன் பேப்பர்களை வாங்கி, விடைகளை  வாசித்துப் பார்த்தார்.

அநேக மாணவர்கள்,

"அன்பு நான்கெழுத்து வார்த்தை" என்று எழுதியிருந்தார்கள்.

வார்த்தை வார்த்தையாக சரி,
ஆனால், மொத்தத்தில் தப்பு!

சிலர்
"Love நான்கெழுத்து வார்த்தை"
என்று எழுதியிருந்தார்கள்.

வாக்கியம் சரி, விடைதப்பு.

ஒருவன்,
"லவ் நான்கெழுத்து வார்த்தை''
என்று எழுதியிருந்தான்.

முழுவதும் தப்பு.

ஒருவன்

"கடவுள் நான்கெழுத்து வார்த்தை''
என்று எழுதியிருந்தான்!

Super correct!

God is Love.

கடவுள் =  Love.

கடவுள் அன்புமயமானவர் என்று நம் புத்திக்குத் தெரியும்.

இருதயத்துக்குத் தெரியுமா?

தாய் குழந்தையைப் பெற்றவுடன் அது அவளது இருதயத்தில் குடியேறிவிடுகிறது!

புத்தி அறிவின் இருப்பிடம்.
இருதயம் அன்பின் இருப்பிடம்.

அன்பைச் சுவைக்க வேண்டுமென்றால் இருதயத்தில் குடியேற வேண்டும்.

ஒரு இளைஞன் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறான்.

அவனது புத்திக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவனது இருதயம் அவளை வரவேற்கிறது, புத்தி சொல்லாமலேயே இருதயம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது!

நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவில் புத்தியைவிட இருதயத்துக்கே வேலை அதிகம்.

அறிவையும் ஞானத்தையும் விட அன்பே முக்கியமானது.

கிராமங்களிலுள்ள எழுத வாசிக்கத் தெரியாத,  படிப்பறிவில்லாத அநேகருக்கு  இயேசு  நமது இரட்சகர் என்பது மட்டும் தெரியும்.

இயேசுவுக்குத் தங்கள் இருதயத்தைக் கொடுத்துவிட்டு அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

படித்துப் பட்டம் பெற்றவர்களைவிட அதிக பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.

பைபிளில் Quiz program நடத்தினால் 0 மதிப்பெண்தான் பெறுவார்கள்.

அவர்களது பக்தியை அளக்க நம்மிடம் அளவுகோல்கள் இல்லை.

ஞாயிறு பிரசங்கம்தான் அவர்கட்கு பைபிள்.

பிரசங்கம் வைக்கும் சாமியார்தான் அவர்கட்கு கிறிஸ்து.

கீழ்ப்படிதல்தான் வாழ்க்கை.

இறையன்புதான் அவர்ளுக்கு உயிர்.

இயேசு அன்புமயமானவர் என்பதால்தான் இயேசுவை நினைக்கும்போது அவரது இருதயம் ஞாபகத்துக்கு வருகிறது.

நமது புத்தியில் அறிவுநிலையில் மட்டும் இருப்பவர்களால் நம்மையோ, நமது வாழ்க்கையையோ மாற்றமுடியாது.

வரலாற்றைப் படிக்கும்போது நமது புத்திக்குள் நிறையபேர் ஏறியிருப்பார்கள்.

யாராலும் நமது சிந்தனைமுறையும், வாழ்க்கைமுறையும் மாறியிருந்தால் அவர்கள் நமது இதயத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

நமது இருதயத்தில் இருப்பவர்களால் மட்டுமே நம்மை மாற்றமுடியும்.

பைபிள் வாசிக்கிறோம். பூசையில் பிரசங்கம் கேட்கிறோம். பைபிள் இறை வார்த்தை, பிரசங்கம் அதற்கான விளக்கம்.

பைபிள் வாசகம் நமது வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா?

எந்த அளவுக்கு மாற்றியுள்ளதோ அந்த அளவுக்கு இறைவார்த்தை நமது இருதயத்தில் இடம்பிடித்துள்ளது என்று அர்த்தம்.

எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காவிட்டால் அறிவெல்லாம் தலைக்குள் மாட்டிக்கொண்டது என்று அர்த்தம்.

இருதயத்திற்குள் இறங்காமல் எல்லாம் தலைக்குள் மாட்டிக்கொண்டால் தலை கனமாகிவிடும்!

அது ரொம்ப ஆபத்து!

அறிவு நிலையிலுள்ள வார்த்தை உணர்வுநிலைக்கு, (அன்பைத்தான் உணரமுடியும்)

அதாவது இருதயத்திற்குள் வந்தால்தான் அது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நாமும் இயேசுவாக மாறிக்கொண்டிருப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நாம் நமது  விரோதிகளை நேசிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நமக்குத் தீமை செய்தவர்கட்கு நன்மை செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் நம்மை அவமானப் படுத்துபவர்களை மன்னிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் பாவிகளை நேசிப்போம், அவர்களை இயேசுவிடம் கூட்டிவருவோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் இறைவன் விருப்பமே நமது விருப்பமாக மாறும்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களோடு வீண் அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு, அவர்கட்கு நற்செய்தியை அறிவிப்போம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர் நலனுக்காக நம்மையே தியாகம் செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசமாட்டோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் தேவைப்படுவோருக்கு  உதவி செய்வோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் மற்றவர்களைத் தீர்ப்பிடமாட்டோம்.

இயேசு நம் இருதயத்தில் குடியிருந்தால் உள்ளத்தில் ஏழைகளாக (Poor in spirit),
உலகப் பொருட்கள்மீது பற்றற்றவர்களாக வாழ்வோம்.

புத்தி (Intellect),

மனது (Mind),

அன்பு (Love)

ஆகிய மூன்று தத்துவங்களுமே இறைவன் நமக்கு அளித்துள்ள நன்கொடைகளே.

புத்தி அறிகிறது.

மனது நினைக்கிறது.

அன்பு நேசிக்கிறது.

அறிவதும், நினைப்பதும் நேசிப்பதற்காகத்தான்.

அன்பு இல்லாவிட்டால் மற்ற இரண்டும் இருந்தும் பயனில்லை.

அன்புதான் ஆன்மீக வாழ்வின் உயிர்.

நம்மைப் படைத்த இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது
அன்பை மட்டும்தான்.

உண்மையான அன்பு சும்மா இருக்காது.

நற்செயல்களால் செழித்து வளரும்.

அன்பின் இருப்பிடம்  இருதயம்.

ஆகவே அன்பின் தேவன் இயேசுவை நம் இருதயத்துக்குள் குடியேற்றுவோம்.

அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும்
அன்பு செய்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, June 27, 2019

The laity must cooperate with the hierarchy.

The laity must cooperate with the hierarchy.
*******************************
Power or service?
----------------------------

The followers of Jesus are bound by love, as Jesus is Love.

All the members of our hierarchy and laity are followers of Jesus and hence are united with one another by love.

Love expresses itself in service.

The word 'minister',  which we usually use to refer to people in authority, really means 'servant'.

God Himself became man and lowered Himself to the state of a servant by washing the legs of His disciples, including Judas.

"Therefore, if I, your Lord and Teacher, have washed your feet, you also ought to wash the feet of one another. 

For I have given you an example, so that just as I have done for you, so also should you do." (John.13:14,15)

"And whoever is the leader, let him become the server."  (Luke.22:26)

So,  our hierarchy is not meant to be a power structure.

It is meant to serve as a bridge between men and God.

Any power they have is not theirs, but rather Christ’s.

Their only job is to allow Christ to work through them.

The priests are in the place of Jesus Himself. 

Jesus gives us

whatever He wants to give us

through His priests.

Only priests can administer the sacraments,

through which

our sins are forgiven,

Our Lord is given to us as our spiritual food,

we are confirmed in our faith

and

our marriages are blessed .

Priests Offer the Sacrifice.

Throughout human history,

in every culture and religion,

the priest is always the one who offers the sacrifice

on behalf of the people.

Jesus is our High Priest and His priests participate in his priesthood.

The sacrifice of Christ on the cross is the only  perfect sacrifice ever offered.

When a priest offers the sacrifice of the Mass,

he re-presents the sacrifice of Christ on the cross.

Holy Mass is the life of the church.

No priest,  no Mass.

So,

No priest, no life.

It is essential for the Church,

that the sacrifice of the Mass  is offered  throughout the world

every second.

Every second has a  Mass or even more Masses offered.

Holy Mass is offered ceaselessly by one priest or other.

We ,the laity,  unite ourselves   with the priest while the Mass is  offered,

as we cannot do it ourselves .

Together with the priest we  offer Jesus to our Heavenly Father, as reparation for our sins.

Without priests the laity are like a car without an engine!

It is Christ who offers Holy Mass, in the person of the priest.

The priests die fully to themselves  at every Mass, when they say,

"This is my body."

"This is my blood."

When they say these words we see Jesus Himself in them.

Of course, the salvation path to heaven is the same for all the members of the church, both the priests and the laity.

It is a path of Sacraments and grace.

Both have to receive the grace of God through the Sacraments instituted by Jesus in order to attain salvation.

So priests have double responsibility.

(All the members of the hierarchy, from His Holiness downward, are basically priests)

A doctor has to take care of

his own health

and that of his patients.

Let us take for example a parish priest.

First he has to save his own soul.
He is also responsible for the salvation of all his parishioners.

The parish priest is like a father of a family, that is why we call him 'Father'.

A chief minister takes care of his state as a whole. He need not know each and every citizen individually.

But it is not enough that the father of a family takes care of his family as a whole.

He must take care of each and every member of his family  fully, individually.

It is not enough that he gets food for the whole family,

he must see that each and every member is served food and that he/she eats what is served.

In the same way a parish priest must give each and every parishioner individual spiritual attention.

The only work of a parish priest is

to administer the Sacraments,

  lead the people under his care in the right path towards heaven with his spiritual direction

and spread the Word of God by preching His Gospel.

If he does this properly  he won't have time for any other work.

In fact he  is full time servant of Jesus.

God has chosen him only for spiritual service to be done for those who have been given to him for his care.

He has not been chosen for any temporal administration.

In practice we have overloaded him with work which presses him down when he tries his level best to rise up in his spiritual service to God and man.

The works like
School administration,
financial management,
land administration,
building churches don't need years of intensive study in philosophy and theology
and ordination.

Such parish works, temporal by nature,  must
be entrusted to the laity,

so that the priest can get more time to do his spiritual services like

visiting houses,

hearing confessions,

visiting the sick with our Eucharistic Lord,

recctifying irregular  marriages etc. etc.

Every parish has a parish council.

It can take over the temporal works of the parish to help  our spiritual Father to give more attention to the spiritual welfare of the people.

'The church' must be under the care of the hierarchy.

'Church' must be administered by the laity.

'The church' refers to the mystical body of Christ. திருச்சபை
The Roman Catholic Church.

'Church ' refers to the building.
கோவில். (Going to 'church' daily for Mass is good for our soul)

A priest, whether he is a diocesan priest or religious priest, is meant for spiritual service, not temporal service.

Our missionaries started schools and colleges purely for Evangelical work.

It is time to evaluate the quality of the Evangelical work our schools and colleges are doing  now.

We should not be like other worldly educational institutions, which have producing results as their only aim.

Admitting only bright students and make them pass is not an achievement.

It is like hospitals admitting only healthy people for treatment!

We must

give preference to intellectually poor Christian students for admission

and prepare them spiritually and accademically for future life.

We should have schools and colleges for the spiritual and temporal benefits of our people,

but if they don't help us evangelically, they are no better than eys without sight.

Both the hierarchy and the laity are parts of the same mystical body of Christ, interrelated and interdependent

and should be mutually helpful,

to attain one and the same end, everlasting life with our Creator.

Lourdu Selvam.

Tuesday, June 25, 2019

"குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்."(லூக்.9:11)

"குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்."(லூக்.9:11)
++++++++++++++++++++++++

"அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்." (லூக்.9:11)

இயேசு தன்னைப் பின்தொடர்ந்த மக்களுக்குக் கடவுளின்
அரசைப்பற்றிப் போதித்தார்.

குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.

முதலாவது இறையரசைப்பற்றி
போதித்தார்.

அடுத்து நோயாளிகளைக் குணமாக்கினார்.

லூக்காஸ்

'நோயாளிகளை' என்று எழுதாமல்

'குணமாக வேண்டியவர்களை'

என்று எழுதுகிறார்.

ஏன்?

குணமாக வேண்டாதவர்களும் இருக்கிறார்களா?

கடவுளின் பராமரிப்பைப் பற்றி தியானித்தால்

கடவுள் ஒவ்வொரு மனிதனையும் படைக்குமுன்பே அவனுக்கென்று ஒரு பராமரிப்புத் திட்டத்தை நித்தியகாலமாகவே வைத்திருப்பதும்,

அவர் தன் திட்டத்தின்படியே பராமரிப்பதும் புரியும்.

நமது கடந்த கால வாழ்வின் நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்

சில உண்மைகள் புரியவரும்.

சில நிகழ்வுகள் நாம் கேட்காமலேயே நிகழ்ந்திருக்கும்.

சில செபத்தில் கேட்டு நிகழ்ந்திருக்கும்.

சில கேட்டும் நிகழ்ந்திருக்காது.

நாம் எந்த ஊரில், எந்தக்குடும்பத்தில்,
எந்த சீதோஸ்ணப்பகுதியில்
பிறந்து வளர வேண்டுமென்பது இறைவன் வகுத்த திட்டம்.

நாம் கேட்டு இறைவன் நம்மைப் படைக்கவில்லை.

படைத்த பின்புகூட நாம் கேட்காமலேயே அநேக காரியங்களை நமது வாழ்வில் நிகழ்த்திவருகிறார்.

நான் இத்தனை ஆண்டுகள் உலகில் வாழ வேண்டும் இறைவனிடம் கேட்கவே இல்லை.

ஆனாலும் என்னை 82 ஆண்டுகளாக வாழவைத்திருப்பது அவரது பராமரிப்பு.

இந்நென்ன நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று  இறைவனிடம் கேட்டு, 

நாம் கேட்டபடி  நடந்த நிகழ்வுகளும் நம் வாழ்வில் இருக்கின்றன.

சில நிகழ்வுகள் நடக்க வேண்டும் இறைவனிடம் கேட்டும் நிகழாதவையும் உண்டு.

உலக நோக்கில்  பேசுபவர்கள்,

"ஆண்டவரிடம் கெஞ்சிக் கேட்டேன், அவர் தரவில்லை"

என்று வருத்தத்தோடு கூறுவார்கள்.

உலகக் கண்ணோக்கோடு பார்க்காமல் நமது விசுவாசக் கண்ணோடு நோக்கினால்

இறைவன் திட்டப்படி நடந்தவை எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்குதான் என்பது புரியும்.

நாம் கேட்டும் தராப்படாதிருந்தாலும் அதுவும் நமது நன்மைக்கே.

நமக்கு எது நன்மை பயக்கும் இறைவனுக்கு தெரியும்.

நோய்கள் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகள், நாம் சுமக்க வேண்டும் என்பதற்காகவே இறைவனால் அனுமதிக்கப் படுபவை.

ஆனாலும் அவற்றின் பழுவைக் குறைக்க வேண்டுமென்றோ,

அவற்றை முற்றிலும் நீக்க வேண்டுமென்றோ

இறைவன் நமது அன்புள்ள தந்தை என்ற முறையில் அவரிடம் வேண்டுவதற்கு நமக்கு முழு உரிமை உண்டு.

இயேசுவே அதற்கு ஒரு உதாரணம்.

பாடுகள்பட்டு மரித்து பலியாக வேண்டும் என்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்தவர் நம் ஆண்டவர்.

அதற்காகவே அவர் பாவம் தவிர

(அவரால் பாவம் செய்ய முடியாது,  ஏனெனில் அவர் கடவுள்.)

எல்லா மனித பலகீனங்களையும் தன் மனித சுபாவத்தில் ஏற்றுக் கொண்டார்.

பயம் ஒரு மனித பலகீனம்.

தான் அனுபவிக்கப் போகும் பாடுகளின் வேதனையை முன்னறிந்து, 

பயந்து, பயத்தில் இரத்த வேர்வை சிந்தி, தன் தந்தையை நோக்கி,

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" 
என்று செபித்தார்"

இயேசுவைப் போலவே  நாமும்
செபிக்கலாம்.

நமது செபமும்

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்ற வார்த்தைகளோடு  நிறைவு பெற வேண்டும்.

நமது வார்த்தைகள் இருதயத்திலிருந்து வரவேண்டும்.

அப்போதுதான் நாம் கேட்டது கிடைத்தாலும்,கிடைக்கா விட்டாலும்,

நிறைவேறியது இறைவன் சித்தம்தான் என்று மகிழ்ச்சியோடிருப்போம்.

நாம் சுகமில்லாதிருக்கும்போது

நாம் நமது சுகத்திற்காக வேண்டும்
செபம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்

நாம் குணமாக வேண்டியவர்கள்.

ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால்  சிலுவையைச் சுமக்கவேண்டியவர்கள்.

இரண்டுமே இறைவன் சித்தம்தான்.

இயேசுவும் அதைத்தான் செய்தார்.

தன் துன்பக்கலம் நீங்கும்படி செபித்தாலும்,

பிதாவின் சித்தப்படி சிலுவையைச்  சுமந்தாரே!

"விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே,

உமது சித்தம்  விண்ணுலகில் நிறைவேறுவதுபோல

இவ்வுலகிலும் நிறைவேறுக."

என்பதுதான் இயேசுவே நமக்குக் கற்றுத்தந்த செபம்.

சில சமயங்களில் கடவுள் நமக்கு சிலுவைகளை அனுப்புவது நாம் அவரை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

நாம் கடவுளை மறந்திருக்கும்போது,

நமது மறதியிலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்து,

அவரோடு செபத்தொடர்பை ஏற்படுத்துவதற்காகவே சிலுவைகளை அனுப்புவார்.

உண்மையில்   அவரது அருள் உதவியின்றி

நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

ஆனால் பிரச்சனை ஏதும் இல்லாதிருக்கும்போது

ஏதோ நமது திறமையினாலேயே நாம் சாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கர்வம் ஏற்பட்டால்,

அக்கர்வத்திலிருந்து நம்மை மீட்டு, அவர்பால் ஈர்ப்பதற்காக ஒரு சிலுவையை அனுப்புவார்.

அது நோய் , தொழிலில் நட்டம், குடும்பத்தில் பிரச்சனை  போன்ற எந்த  ரூபத்திலாவது வரலாம்.

எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் சுயமாக தீர்வுகாண முடியாத அளவில் இருக்கும்.

அப்போதுதான் கடவுள் இருப்பதே நமது ஞாபகத்திற்கு வரும்.

இந்த நிலையில் நாம் கடவுளை நேரடியாகவோ புனிதர்கள் மூலமாகவோ தேட ஆரம்பிப்போம்.

கடவுளை நோக்கி மன்றாடுவோம்.

விசுவாசத்தோடு மன்றாடினால் நமது மன்றாட்டு கேட்கப்படும்.

துன்பங்கள் நீங்கியபின் நாம் கடவுளை மறந்துவிடக்கூடாது.

நமக்கு சிலுவைகள் வருவதே நமக்கு இரட்சண்யம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

ஆகவே என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இறைவன் நம்மைக் காப்பார்.

லூர்து செல்வம்.

Monday, June 24, 2019

Man of action.

Man of action.
-----------------------

Being a catholic itself doesn't give us an automatic entry into Heaven.

Only living Catholicism will  lead us into eternal  union with our Creator in heaven.

So instead of bragging ourselves and boasting about our faith

let us look for the things of Heaven and comply with the  law of Jesus,

"Love me and your neighbour.'

Let our love express itself not merely in words,

but in acts of charity as well.

Let us put our differences aside and consider ourselves as the children of the same God,

created for only one purpose, eternal union with Him.

We all came from the same God, only to return to Him and Him alone.

God has has sent us here for 'treasure hunting!'

By 'treasure' I refer to the acts of love, as they alone can earn for us the 'eternal treasure', heaven.

So let us waste no time in hunting for the things of the world, forgetting our real purpose, 'hunting for eternl treasure.

Our Divine Lord is a 'Man of action' , not merely of words.

So, let us do whatever He did.

Let us live Chrst!

Lourdu Selvam .

Saturday, June 22, 2019

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்."
--------------------------------------------

."செல்வம், சாப்பாடு ரெடியா?"

." நீங்க சாப்பிட ரெடியா?"

"ரெடி."

"சாப்பாடு வந்தாச்சி."

.."வா, சாப்பிட்டுக் கொண்டே  பேசுவோம்."

."பேசிக்கொண்டே சாப்பிட்டால்தான்  நன்கு சீரணம் ஆகும்னு சொல்லுவாங்க."

.."சரி, அப்போ பேசிக்கொண்டே  சாப்பிடுவோம்.

முதல்ல சாப்பாட்ட வை."

."முதல்ல சாப்பாட்டைப் பற்றி ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்கு."

.."சரி, கேளு."

."இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு வயிறார உண்ணக் கொடுத்தார்.

இயேசு சர்வ வல்லபர்.

நம்மை  ஒன்றுமில்லாமை யிலிருந்துதான்  படைத்தவர்.

அவர் நினைத்திருந்தால் ஒன்றுமில்லாமையிலிருந்து உணவை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாமே.

எதற்காக ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்தினார்?

.."என்னடி கேள்வி இது?

அவர் நினைத்திருந்தால் நம் எல்லோரையும் மோட்சத்திலேயே படைத்திருக்கலாம்.

அவர் நினைத்திருந்தால் யாரையும் படைக்காமலேயே இருந்திருக்கலாம். அவர் பாடுபடவேண்டிய அவசியமே இருந்திருக்காது.

ஏண்டி, அவர் நினைக்காததை எல்லாம் 'அவர் நினைத்திருந்தால்'னு கேட்டால் நான் என்னடி பதில் சொல்லுவேன்?

ஒண்ணு செய்வோம். நான் முதல்ல மோட்சத்துக்குப் போனா நானே ஆண்டவர்ட்ட கேட்டு அவர் பதிலை உங்கிட்ட சொல்றேன். நீ முதல்ல போனா நீ கேட்டுச் சொல்லு."

."என்ன சொல்றீங்க நீங்க? நீங்க சொல்றதப் பார்த்தா, பைபிளையே மோட்சத்திலே போய் வாசிப்போம்னு சொல்லிடூவீங்க போலிருக்கு.

"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்."ன்னு இயேசுவே சொல்லியிருக்காரு.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது நம்மிடம் வந்த பரிசுத்த ஆவி இப்போவும் நம்மோடுதான் இருக்காரு.

பைபிள் வசனத்தை வாசித்து,
பரிசுத்த ஆவியை நினைத்து தியானித்தால் அவர் நமக்கு அதன் பொருளை அறிவுறுத்துவார்."

"அதை நீயே செய்திருக்க வேண்டியதுதானே,

'ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்கு.'ன்னு எங்கிட்ட ஏன் கேட்ட?"

."ஹலோ! அதுக்கு 'இரண்டு பேரும் தியானிப்போம்'னு அர்த்தம்."

."சரி, முதலில் உனக்கு ஒரு டெஸ்ட்.

ஏவாளை ஏமாற்றிய அந்த சாத்தான் யாரை விழுங்கலாம் என்று உலகெங்கும் சுற்றித் திரிகிறது.

நம்மிடமே மாறுவேடத்தில் வந்து ஏமாற்றும்.

தியானத்தின்போது நம்மிடம் பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது சாத்தானா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?"

."அது ரொம்ப எளிது.

நமக்கு உணர்த்தப்படும் கருத்து தாய்த் திருச்சபையின் போதனைக்கு ஒத்திருந்தால்
அது பரிசுத்த ஆவியால் உணர்த்தப்படுவது.

எதிராயிருந்தால் சாத்தானால்
உணர்த்தப்படுவது. சரியா? "

.."Very good!  Testல் pass!  கூட்டுத் தியானத்தை ஆரம்பிப்போமா?

ஆண்டவர் சீடர்களிடம் சொன்னார்,

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று.

அவர்களோ, "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் உண்டு. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான்  முடியும்" என்றனர்

உணவு கொடுக்கப் போவது ஆண்டவர்.

ஏன் சீடர்ளிடம்,

'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று சொன்னார்?"

."இந்தப்புதுமை

மறுநாள் இயேசு

தன் உடலையும், இரத்தத்தையும் நமக்கு  உணவாகத் தரவிருப்பதை

அறிவிப்பதற்கு முன்னோட்டம்.

அந்த அறிவிப்பு பெரிய வியாழனன்று திவ்ய நற்கருணையை ஏற்படுத்துவற்கு முன்னோட்டம்.

சரியா? "

.."correct.  இந்தப் புதுமையில் பயன்படுத்தப்படுவது அப்பம்.

பெரிய வியாழனன்று பயன்படுத்தப்படுவதும் அப்பம்.

பெரிய வியாழனன்று,
"இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று சீடர்களிடம் கூறுகிறார்.

அதாவது

சீடர்கள்தான் உலகம் முடியும் வரை

அப்ப ரசக் குணங்களுக்குள் இயேசுவை வரவழைத்து,

அவரை உணவாக மக்களுக்குத் தரவேண்டும்.

ஆகவேதான்

நற்கருணைத் திருவிருந்துக்கு முன்னோட்டமான

'ஐயாயிரம் பேருக்கு உணவுகொடுக்கும்' செயலையும்

சீடர்கள்தான் செய்ய வேண்டும்.

இயேசு இப்படிச் சொல்வதாக கற்பனை செய்து பாருங்கள்:

"சீடர்களே,

நான் சிலுவையில் மரணம் அடையுமுன்,

உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பதற்காக,

திவ்யநற்கருணையை ஏற்படுத்தி,

உங்களுக்கு என் உடலையும், இரத்தத்தையும்

உணவாகத் தருவேன்.

நான் என்னையே உங்களுக்கு உணவாகத் தருவதுபோல

நீங்கள் உலகம் முடியும்வரை என் மக்களுக்கு என்னை உணவாகத் தர வேண்டும்.

அதற்காக உங்களுக்கு குருப்பட்டம் கொடுப்பேன்.

நீங்கள் என்னை விருந்தாக என் மக்களுக்குத் தரவிருப்பதற்கு முன்னோட்டம்தான்

இந்த ஐயாயிரம் பேருக்கான இன்றைய விருந்து.

நீங்கள்தான் உணவைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

ஆகவே

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.''

சரியா? "

.."Correct. இயேசுவின் இன்றைய சீடர்கள்தான் நமது குருக்ள்.

இப்போது ஆரம்பத்தில் நீ கேட்ட கேள்விக்கு விடைகிடைத்து விட்டதா?"

."அதாவது

'அவர் நினைத்திருந்தால் ஒன்றுமில்லாமை யிலிருந்து உணவை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாமே.

எதற்காக ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்தினார்?'

என்ற கேள்விக்கு."

.."ஆமா."

."சீடர்கள் இயேசுவின் கட்டளைப்படி 'அப்பம் பிட்பது'தான் நற்கருணை.

அதற்கு முன் அடையாளமாகத்தான் இயேசு ஐந்து 'அப்பங்களை' ஐயாயிரம் பேருக்கு உணவாகக் கொடுத்தார்!

கரெக்டா?

.."கரெக்ட்."

."திருச்சபையின் போதனைக்கு எதிராக ஒன்றும் சொல்லிவிட வில்லையே?"

.."இல்லை."

."பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி.

ஆமா, சாப்பிடவில்லையா?"

.."ஆமா. சாப்பாடு நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறது. வா, சாப்பிடுவோம்."

லூர்து செல்வம்.