Monday, April 29, 2019

சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

"சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்."
*****************************

நமது மரணத்தின்போது நமது ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தவுடன் மண்ணிற்குத் திரும்பிவிடுகிறது.

ஆனால் இயல்பிலேயே, நல்லவனும்சரி, கெட்டவனும்சரி, சாக விரும்புவதில்லை.

பிறந்தது போலவே ஆன்மாவும் உடலும் சேர்ந்த நாம் நித்தியத்துக்கும் இறைவனோடு வாழவேண்டுமென்பது என்பது இறைவனே நம்மில் பதித்த இயல்பான ஆசை.

ஆனாலும் நமது பாவத்தினால் நாமே நம்மீது மரணமாகிய பிரிவை வரவழைத்துக் கொண்டோம்.

ஆனால் கடவுள் நம்மீது இரங்கி, மனிதனாய்ப் பிறந்து, தன் தனது பாடுகளாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் நம் மரணத்தை வென்றார்.

தனது பாடுகளால் நமது துன்பங்களையும்,

மரணத்தினால் நமது மரணத்தையும்

ஆசீர்வாதங்களாக (Blessings) மாற்றியதோடு

தனது உயிர்ப்பினால் நமக்கும் உயிர்ப்பை உறுதிப்படுத்தினார்.

அதாவது நாமும் ஒருநாள் உயிர்ப்போம்,

அதன்பின் இப்போது இயேசுவும், மாதாவும் எப்படி மோட்ச நிலையில் இருக்கிறார்களோ,

அதேபோல் நாமும் உயிர்த்தபின் ஆன்ம சரீரத்தோடு மோட்ச நிலையில் வாழ்வோம்.

அப்போது நமது உடல் சடப்பொருளாக (Material body)இருக்காது.

அதற்கு உணவு, உறக்கம், சிற்றின்பம் போன்ற இவ்வுலகைச் சார்ந்த எதுவும் தேவைப்படாது.

உயிர்த்த இயேசுவின் உடல் எப்படி இருக்கிறதோ அதேபோல் நமது உடலும் இருக்கும்.

'சரீர உத்தானம், நித்திய ஜீவியம்' இரண்டுமே விசுவாச சத்தியங்கள்.

"சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment