Saturday, April 27, 2019

சரியான பயந்தாங்கொள்ளிகள்!

சரியான பயந்தாங்கொள்ளிகள்!
*****************************

"என்னாச்சி? ஆள் அசந்துபோய் உட்கார்ந்திருக்கீங்க."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்றைக்கு வெயில் கொஞ்சம் அதிகம்."

"கொஞ்சந்தானே அதிகம். அதெற்கெல்லாம் அசந்தா எப்படி!

ஆமா, தினமும் காலையில் எழுந்தவுடனே, பைபிளைத் திறக்கீங்களே, எதுக்கு?"

"இதென்னடி கேள்வி, பைபிளை எதுக்குத் திறப்பாங்க? வாசிக்கத்தான்."

"வாசித்திட்டு? "

"மூடிவச்சிடுவேன்."

"இதவிட பைபிளைத் திறக்காமலே இருக்கலாம்."

"ஏண்டி? மூடாமலே வச்சிரணும்னு சொல்லுதியா?"

" 'வாசி, யோசி, விசுவாசி'ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

பைபிள நிறந்து மூடுவதைவிட முக்கியமான வேலை

வாசித்ததை யோசிப்பதும் அதாவது தியானிப்பதும்

தியானித்ததை விசுவசித்து, அதன்படி நடப்பதும்."

"வா, உட்கார், இருவரும் சேர்ந்து சப்தமாகத் தியானிப்போம்."

"இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை மதலேன்மரியாள் சொல்லியும் சீடர்கள் நம்பவில்லை.

இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"முதல்ல நீ நினைக்கிறத சொல்லு."

"சீடர்கள் 12 பேரில் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் போக

மீதி 11 பேர் பாடுகள் ஆரம்பிக்கும்வரை அவருடன் இருந்தார்கள்.

இயேசு கைது செய்யப்பட்டவுடன் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அனைவரும் இயேசுவைவிட்டு ஓடிவிட்டார்கள்.

சரியான பயந்தாங்கொள்ளிகள்!

அருளப்பர் மட்டும் சிலுவை அடியில் நின்றார்.

பாடுகள் முடிந்தபின்னரும் தங்கள் உயிருக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என பயந்து ஒரு வீட்டில் ஒழிந்துகொண்டார்கள்.

பக்தியுள்ள சில பெண்கள் சிலுவைப்பாதையில் இயேசுவைப் பின்பற்றியதோடு

சீடர்களைப்போல் ஒழிந்து கொள்ளாமல், துணிச்சலாக கல்லரைக்குச் செல்லுகிறார்கள்.

பக்தியுள்ள, பயமில்லாத இந்தப் பெண்களுக்குதான் இயேசு உயிர்த்த செய்தி அறிவிக்கப்படுகிறது.

ஏழுபேய்களிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்த மதலேன்மரியாளுக்குதான் இயேசு முதலில் காட்சி கொடுக்கிறார்.

உயிர்த்த இயேசுவைத் தான் பார்த்ததைச் சொல்லியபிறகும் சீடர்கள் நம்பவில்லை.

ஒருபுறம் சீடர்கள் மீது நமக்கு கோபம் வருகிறது, விசுவாசமற்ற பயந்தாங்கொள்ளிகள்!

இன்னொருபுறம் அவர்கள் மூலம் இயேசுவின் மகிமை வெளிப்படப்போகிறது என்று மகிழ்ச்சியும் ஏற்படுகிது."

"என்ன, பயந்தாங்கொள்ளிகள் மூலம் இயேசுவின் மகிமை வெளிப்படப்போகிதா?"

"ஆமா,

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது

இயேசு மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு அளித்த பயிற்சியால்

எந்தவித பயனும் ஏற்படாததுபோல் தோன்றும்.

ஆனால் கொஞ்சம் யோசியுங்கள்.

உலகின் கடைசி எல்கைவரை அனைத்து நாடுகளிலும் அவர் நிறுவிய திருச்சபையைப் பரப்ப அவர் தேர்ந்தெடுத்த 12 சீடர்களில் ஒருவன் அவரைக் காட்டிக்கொடுத்தவன், பதினொருவர் பயந்தாங்கொள்ளிகள்!

பயந்தாங்கொள்ளிகள் கையில் திருச்சபையை ஒப்படைத்துவிட்டு அவர் பரலோகம் சென்றுவிட்டார்.

அந்த பயந்தாங்கொள்ளிகள்
மூலமாகத்தான்

திருச்சபையும் உலகம் முழுவதும் பரவி

கோடிக்கான உறுப்பினர்களை விண் நோக்கிய வழியில்

வெற்றிகரமாக வழிநடத்துகிறது.

இதிலிருந்து என்ன புரிகிறது?"

"திருச்சபையை வழிநடத்துவது மனித சக்தி அல்ல,  தெய்வீக சக்தி என்று புரிகிறது.

பரிசுத்த ஆவி வரும்வரை பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சீடர்கள்,

பரிசுத்த ஆவி வந்தவுடன் எவ்வளவு துணிவோடு வெளியே வந்து,

தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் நற்செய்தியை அறிவித்தார்கள்."

"திருச்சபை மனிதர்களை இரட்சண்ய பாதையில் வழிநடத்த,

குற்றம் குறைகள் உள்ள மனிதர்களால்,

திருச்சபையின் மொழியில் சொல்லப்போனால், பாவிகளால்

(நாம் அனைவரும் பாவிகள்தான்)

நிருவகிக்கப்படும் ஒரு தெய்வீக நிருவனம்.

திருச்சபையை நிருவகிக்கும் மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்,

ஆனால் திருச்சபை ஒரு பரிசுத்தமான நிருவனம்.

அதை நிருவகிப்பவர் இயேசு கிறிஸ்து,  சர்வ வல்லப கடவுள்.

திருச்சபைக்கு இராயப்பர் படகு என்ற செல்லப்பெயர் உண்டு.

அது பயங்கர புயற்காற்றும்,  பனையளவு எழுந்து விழும் இராட்சச அலைகளும் உள்ள கடலில் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

படகிற்கு வெளியே உள்ளவர்கள் சீக்கிரம் படகு மூழ்கிவிடும் என்று நம்பி  மகிழ்ச்சியாக உள்ளனர்.

படகிற்கு உள்ள சிலர் படகு எங்கே மூழ்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இயேசுவின் சீடர்களைப் போல

நம்பிக்கை இல்லாதவர்களாய்,

பயப்படக்கூடாது.

இயேசு நம்மோடு படகிற்குள் இருக்கும்போது

நாம் ஏன் பயப்படவேண்டும்?

இயேசு நம் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக தூங்கிக் கொண்டிருப்பதுபோல காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் தூங்கமாட்டார்.

படகு அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது."

"ஆக இந்த உண்மையை நமக்கு அறிவுறுத்ததான் சீடர்களை பயந்தாங்கொள்ளிகளாய்  இருக்க அனுமதித்தார்."

"வாழ்வது நாமல்ல, இயேசுவே நம்மில் வாழ்கிறார்.

நம்மை வழிநடத்துபவர் அவரே."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment