Monday, May 20, 2019

பழமையும் புதுமையும்.

பழமையும் புதுமையும்.


**********************************

"Good morning, Father."

"Good morning. Glad to meet you.எப்படி இருக்கீங்க?"

"I'm fine. 

நேற்று சொந்த ஊர்ல முதல் திருப்பலி நிறைவேற்றினேன்.

 ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.

 வசீகர வார்த்தைகளைச் சொல்லும்போதும்,

 மரியன்னையின் கையில் தவழ்ந்த அதே இயேசு என் கரங்களில் தவழ்ந்தபோதும்

 நான் அடைந்த ஆனந்தத்தை விபரிக்க மனித மொழியில் வார்த்தை இல்லை."

"அருள் நிறைந்த மரியன்னைக்குக்கூட கிடைக்காத பாக்கியம் குருக்களுக்கு!

மரியாள் 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அதே இயேசுவை 

குருவானவர் அரை மணி நேரப் பூசைப்பலியில் அப்ப, ரசத்திலிருந்து பெற்றெடுக்கிறார், தினமும்! 

அம்மாவுக்குக் கொடுக்காத பாவமன்னிப்பு அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கே உரியது,

அதை குருக்களோடு மட்டும்தான் இயேசு பகிர்ந்திருக்கிறார்." 

"சுவாமி, எனது குருத்துவப் பணியை ஆரம்பிக்குமுன் இப்பணியில் அனுபவமிக்க தங்களிடமிருந்து சில அறிவுரைகளைப் பெற ஆசிக்கிறேன்."

"குருமடத்தில் தங்களுக்குப் போதிய பயிற்சி அளித்திருப்பார்களே."

"உண்மைதான். 

ஆயினும் என்னைக் குருமடத்திற்கு அனுப்பியவர் நீங்கள்தானே!  

உங்களது அறிவுரையுடனும், ஆசீருடனும்தான் என் பணியை ஆரம்பிக்கவேண்டும்."

"நீங்கள் முதலில் ஞாபகத்தில் பதிக்கவேண்டியது

கிறிஸ்து எந்தப் பணிக்காக உலகிற்கு வந்தாரோ 

அதே பணிக்காகத்தான் நீங்கள் குருவாகியிருக்கிறீர்கள்.

ஆன்மாக்கள் இரட்சண்யம், நற்செய்தி அறிவிப்பு

பணிக்காகமட்டுமே திருநிலைப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு முன்மாதிரிகையாக வாழ்ந்த நம் ஆண்டவர்

பொது வாழ்வில் நுழையுமுன் தன்னைப் பசாசு சோதிக்க அனுமதிக்கிறார்.

தன்னைப் பின்பற்றி பொது வாழ்வில் நுழைவோர் எப்படியெல்லாம் பசாசினால் சோதிக்கப்படுவர்,

சோதனைகளை எவ்வாறு வெல்லவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவே கடவுளாகிய அவரே தான் சோதிக்கப்ப அனுமதிதத்தார்.

முதல் சோதனை உணவைப் பற்றியது.

இரண்டாவது சோதனை உலக அதிகாரத்தையும்,  மகிமையையும் பற்றியது.

மூன்றாவது சோதனை வீண் சாதனைகள் பற்றியது.

(இங்கிருந்து கீழேகுதியும்.)

நாம் குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்திருப்பது

உணவு போன்ற வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்கோ,

அதிகாரம் செலுத்தி மகிமை அடைவதற்கோ,

ஆன்மீக வாழ்வுக்கு உதவாத சாதனைகளை நிகழ்த்துவதற்கோ அல்ல.

ஆன்மீக உணவாகிய இறை வார்த்தையை சொல்லாலும், செயலாலும் எல்லோருக்கும் கொடுத்தல்,

அதிகாரப் பிரயோகத்திற்காக அல்லாமல் இறைவனுடைய மகிமைக்காக மட்டுமே உழைத்தல்,

சாதனைகளை நடத்த அல்ல, பணி புரியவே உழைத்தல்

ஆகியவற்றிகாக மட்டுமே நாம் அனுப்பப் படுகிறோம்."

"ஆனால் பங்கு தளப்பணியில் பள்ளிக்கூட நிர்வாகம், பங்கு நில நிர்வாகம், வரவு செலவு நிர்வாம் போன்ற ஆயிரம் பணிகள் சுமத்தப்படுகின்றனவே."

"உண்மைதான். இது கடலில் நீந்திக்கொண்டிருப்பவன் ஒரு பாறாங்கல்லை வைத்திருப்பது மாதிரி. 

நீந்துவதைவிட பாறாங்கல் பாரத்தால் மூழ்கிப் போகாதிருப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கஸ்டப்பட்டுதான் கரை சேர வேண்டும்.

நமது பணி ஆன்மீகப்பணி மட்டுமே.

நமது உதவியால் எத்தனை ஆத்துமங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளன என்பதுதான் முக்கியமே தவிர,

எவ்வளவு பண வசூல் செய்து, எத்தனை கட்டடங்கள் கட்டியிருக்கிறோம் என்பது அல்ல.

பங்குக் குருவின் பணி தன்னிடம் ஒப்பிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவதுதான்.

இந்த பணி குருக்கள் அல்லாதவர்களால் செய்யபப்பட முடியாது.

இயேசு உயிர்த்தவுடன் தனது சீடர்களுக்குக் கொடுத்த முதல் பணி,

"யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை அவர்கட்கு மன்னிக்கப்படும்."

என்பதுதான்.

பாவமன்னிப்பு பெற்றால் மட்டுமே இரட்சண்யம் உண்டு.

நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுடைய பாவங்களை மன்னிப்பது நமது தலையாய கடமை.

திருப்பலி பீடத்தில் நமது பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவசங்கீத்தனத் தொட்டியிலும்.(Confessional)

முதலில் பாவசங்கீத்தனத் தொட்டியில் அமர்ந்து விட்டு அப்புறம் பலிபீடத்திற்குச் சென்றால்

மக்கள் பாவசங்கீத்தனம் செய்துவிட்டு திருப்பலிக்கு வரும் பழக்கத்திற்குத் திரும்புவார்ள்."

"உண்மைதான் சுவாமி. இதை நான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன். உறுதியாகக் கடைப்பிடிப்பேன்."

"இன்னொரு முக்கியமான விசயம்.

நாம் ஆபீசில் வேலை பார்க்கும் பணியாளர் அல்ல, பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் அல்ல.

அவர்கள் பணிக்குச் செல்லும்போது அதற்குரிய ஆடை (uniform) அணிந்தால் போதும்.

நாம் கிறிஸ்துவின் பிரதிநிதிகள். ஆன்மீகப் பணியார்கள்.

நாம் மக்கள் முன் வரும்போது நாம் 'குரு' என்ற அடையாளம் (identity) நம்மிடம் இருக்கவேண்டும்.

நமது ஆன்மீகப் பணி மற்றவர்கட்கு எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.

குருவானவரைத் தேடி பாவசங்கீத்தனம், அவஸ்தை போன்ற அவசரத் தேவைகட்காக யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் தேடி வரலாம்.

நாம் நமது Identity dress இல்லாதிருந்து

நம்மைப் பார்த்தும் குரு என்று கண்டுபிடிக்க முடியாததால் அவர்களது ஆன்மீகத்தேவைகள் நிறைவேறாமல்போனால் நாம்தான் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தீர்கள் என்றால் புரியும் நமது அங்கி நமது ஆன்மாவுக்கும் பாதுகாப்பு என்று.

அது மட்டுமல்ல

இன்று பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதற்கு

குருக்கள் அங்கியின்றி பொது இடங்களுக்கு வருவதும் ஒரு காரணம்.

கொஞ்சம் சிந்தித்தால் இது புரியும்.

உடை விசயத்தில் நான் கூறிய கருத்துக்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இறைவனது ஆசீர் என்றும் உங்களோடு இருக்கும்."

"Thank you, dear Father."

லூர்து செல்வம்.

Sunday, May 19, 2019

வார்த்தையை வாழ்வாக்குவோம்

வார்த்தையை வாழ்வாக்குவோம்
***********************************

உடல் பலம் பெற சத்தான உணவு சாப்பிடவேண்டும்.

சாப்பிட்ட உணவு சீரணமாகி, அதிலுள்ள சத்து நமது உடலோடு கலக்கவேண்டும்.

சீரணமாகாவிட்டால் சத்து உடலோடு கலக்காதது மட்டுமல்ல வயிற்றுவலிதான் ஏற்படும்.

சத்தான உணவைச் சாப்பிட்டதனால் எந்த பயனும்  ஏற்படாதது மட்டுமல்ல எதிர்விளைவுகள் ஏற்படும்.

வார்த்தையான இறைமகனின் வார்த்தை நமது ஆன்மீக உணவு.

பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது இறைவனின் வார்த்தையைத்தான் வாசிக்கிறோம்.

வேதாகமத்தை வாசிப்பதற்கும், மற்ற புத்தகங்களை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மற்ற நூல்களை அறிவை வளர்ப்பதற்காகவோ அல்லது வெறும் பொழுது போக்கிற்காகதான் வாசிப்போம்.

ஆனால் வேதாகமத்தை வாசிப்பதன்  நோக்கம் அதை நமது வாழ்வாக்குவது.

வேதாகம அறிவு வளர்வதும் உண்மைதான்.

ஆனால் வார்த்தை சீரணமாகாமல் அதாவது நமது வாழ்வாக மாறாதிருந்தால்

சீரணமாகாத இவ்வுலக உணவினால் நமது உடலுக்கு ஏற்பட்ட அதைகதி

நமது ஆன்மாவிற்கும் ஏற்படும்.

அதாவது வாழ்வாகாத அறிவு நிறைய சேர்ந்து கர்வத்தில் முடியும்.

வாழ்வாகும் வார்த்தையால் தலையாய புண்ணியமாகிய தாழ்ச்சி ஏற்படும்.

லூசிபரது அறிவு கர்வத்தில்(Pride) முடிந்ததுபோல

வாழ்வாகாத வேதாகம அறிவும் கர்வத்தில், தலைக்கனத்திதான் முடியும்.

ஆகவே

வார்த்தையானவரின் வார்த்தையை

வாசிப்போம்,

யோசிப்போம்,

விசுவசிப்போம்,

வாழ்வாக்குவோம்,

நிலைவாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, May 18, 2019

தற்செயலா? அப்படி ஒன்றும் இல்லை.

தற்செயலா? அப்படி ஒன்றும் இல்லை.

*************-******---********

"ஏங்க, கதையக் கேட்டீங்களா?"

.."கேட்கலிய! "

."நீங்க கேட்கலங்கிறது எனக்குத் தெரியும். இப்போதானே சொல்லப்போறேன்."

.."பிறகு எதுக்கடி 'கேட்டீங்களா'ன்னு ஒரு கேள்வி?"

."அது கேள்வி இல்ல. கேளுங்கன்னு அர்த்தம்.

காலையில எங்க போகிறதா சொல்லிட்டுப் போனேன்?"

.."அண்ணாச்சிமார் வீட்டுக்குப் போய்ட்டு வரப்போறதா சொல்லிட்டுப் போன."

."ஆனா அங்க போகல."

.."நல்லதா போச்சி."

."ஏன் அப்படிச் சொல்றீங்க?  உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்."

.."நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலியே!  'எல்லாம் நன்மைக்கே'ன்னு  பெரியவங்க சொல்லிருக்காங்க."

."கரெக்டா சொன்னீங்க. 

நான் Bus standக்குள்ள நுழையும்போது ஆவுடையானூர் Bus வெளியேறிக்    கொண்டிருந்தது.

கையைக் காட்டினேன்.

Bus நிக்கல.

நான் ஒரு நிமிசம் பிந்திப் போனதினால

Busஅ Miss பண்ணிட்டேன்."

.."அதுவும் நன்மைக்கே."

."கரெக்ட்ங்க. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

.."இத நான் கண்டுபிடிக்கல.

கடவுள் நல்லவர்.

சர்வத்தையும் வழிநடத்துபவர் அவர்.

அவர் அனுமதி இன்றி எதுவும் நடக்காது.

நல்லவர் அனுமதியோடு நடக்கும் எல்லாம் நன்மைக்கே!"

."பாவம் கூடவா?"

.."ஆமா."

.."ஹலோ Husband!  Sin is an evil!
பாவம் தீமையானது.

ஒவ்வொரு நாளும் எத்தனை முறை தந்தையை நோக்கி,

'தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்'ன்னு  செபம் சொல்றீங்க.

அதுக்கு

'பாவத்திலிருந்து எங்களை இரட்சித்தருளும்'னுதான் அர்த்தம்.

பாவம் நல்லதுன்னு சொன்னா பாவம்."

.."ஹலோ Wife!

பாவம் நல்லதுன்னு நான் சொல்லவே இல்லையே!

Sin is an evil. அது கடவுளுக்கும் தெரியும்.

பாவம் மட்டும்தான் தீமையானது! 

'எல்லாம் நன்மைக்கே!'ன்னுதான் சொன்னேன்.

அதாவது தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கடவுளால் முடியும்.

God can bring out greater good from evil! "

."அதென்ன greater good?"

.."முந்திய நிலையைவிட

பிந்திய நிலை  சிறப்பாய் இருந்தால்,

முந்திய நிலை Good, 

பிந்திய நிலை greater good.

நமது முதல் முதல் பெற்றோர் பாவம் செய்யுமுன் அவர்களது நிலை சிறப்பானது.(Good)

அவர்கள் பாவம் செய்தவுடன் இறைவனின் உறவை இழந்தார்கள்.

ஆனால் அளவற்ற அன்புள்ள தேவன் அவர்களைக் கைவிடவில்லை.

பாவப் பரிகாரம் செய்வதற்காக

பாவம் செய்த மனுக்குலத்திலேயே இறைவன் மனிதனாய்ப் பிறக்கிறார்.

இறைமகனையே தன்மகனாகப்  (மனுமகனாகப்)பெறும் பாக்கியத்தை மனிதன் பெறுகிறான்.

இப்போது அவன் நிலை greater good."

."புரிகிறது மாதிரி தெரிகிறது, புரியாதது மாதிரியும் தெரிகிறது.

goodனது greater good ஆக பாவம் உதவினால் அது நல்லது என்கிறீர்களா?"

." பாவம்  தீமைதான்.

அதிலிருந்து இறைவன் நன்மையை வரவழைக்கிறார்.

ஒரு உதாரணம் கூறுகிறேன்.

ஒரு பையன் சைக்கிளில் போகும்போது விபத்து நடந்து சாகும் தருவாயில் இருக்கிறான்.

ஒரு பெரியவர் அவனைக் காப்பாற்றுகிறார்.
அவன் நல்ல சுகம் அடைகிறான்.

அவனை அவருக்குப் பிடித்து விட்டது.

தன்  மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.

இப்போ கவனி. விபத்து நல்லதா? கெட்டதா? "

."கெட்டது."

."இப்ப கூர்ந்து கவனி.

அந்தப் பெரியவர்

கெட்டதாகிய விபத்தை,

அந்தப் பையனின் திருமணமாகிய

நல்ல காரியத்துக்குப் பயன்டுத்திக்கொண்டார்.

ஆனால் விபத்து கெட்டதுதான்.

அதேபோல்தான் பாவம் தீமையானதுதான்.

நமது நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி கடவுளுக்கு எதிராக நாம் செய்யும் செயல்.

பாவம் கடவுளுக்குப் பிடிக்காது, ஆயினும் அவரே தந்த சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

ஆகவே நாம் பாவம் செய்யும்போது அவர் தடுப்பதில்லை,  அதைத்தான் அனுமதிக்கிறார் என்கிறோம்.

கடவுளுக்கு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

தனது  அளவுகடந்த ஞானத்தினால் நாம் நமது சுதந்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவோம் என்பதை நித்தியகாலமாக முன்னறிந்த கடவுள்

அதன் அடிப்படையிலும்,

தனது சித்தத்தின் அடிப்படையிலும்

ஒவ்வொருவருடைய  வாழ்வுக்குமான நித்திய திட்டத்தை வகுக்கிறார்.

என்றும் மாறாத கடவுள் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் தன் திட்டப்படியே செயலாற்றுவதால்

நம் வாழ்வின் எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடைபெறுவதில்லை.

'தற்செயலா உன்னைப் பார்த்தேன், அல்லது நான் நான் நினைத்தது நடந்திருக்காது',

'தற்செயலா வீட்டிலிருந்து வெளியே வந்தேன், வெளியே வந்த மறுவினாடி வீட்டிற்குள் விபத்து, நல்ல வேளை பிழைத்தேன்',

'தற்செயலா என் நண்பரைப் பார்த்தேன்,அவர் உதவியால் கல்லூரியில் Seat கிடைத்தது',

இதே மாதிரியான தற்செயல் நிகழ்ச்சிகள்பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் எதுவும் தற்செயல் கிடையாது, எல்லாம் இறைவனது செயல்.

ஆகவே என்ன நடந்தாலும் இறைவனுக்கு நன்றிகூற வேண்டும்.

ஆமா, ஆவுடையானூர் பஸ்ஸை விட்டதினாலே என்ன நடந்தது? "

."பஸ்ஸை விட்டு விட்டு மேற்கே பார்த்தேன்.

ஆவுடையானூரிலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து மூவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்."

.."வீட்டுக்குக் கூட்டிவரல? "

." கடைக்குப் போய்ட்டு வருகிறோம் என்றார்கள்.

அதோ பாருங்கள், வந்து விட்டார்கள்."

லூர்து செல்வம்.

Thursday, May 16, 2019

சோதனை மேல் சோதனை.

சோதனை மேல் சோதனை.
*************************
"ஏங்க இங்க வாங்க!"

"என்ன விசயம், சொல்லு."

"இது சொல்லக்கூடிய விசயம் இல்ல.பார்க்க வேண்டிய விசயம். "

"புது ட்ரெஸ் போட்டிருக்கியா?"

"ஏங்க, யாராவது சமையலறைக்குப் போகிறதுக்காக புது ட்ரெஸ் போடுவாங்களா?

வந்து பாருங்க."

"இதோ வந்துவிட்டேன் ...ஏண்டி, என்ன இது?

பூரி, கிழங்கு?

இன்று காலையில்தான் ஒரு வாரத்திற்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்தேன்.

முதல் நாளே தீர்மானம் அவுட்டா? "

"ஏங்க, உங்களுக்கான உணவைத் தயாரிக்கிறது நான்.

எனக்குதான் தெரியும் உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு.

எங்கிட்ட சொல்லாம எப்படித் தீர்மானம் எடுத்தீங்க?

சரி, போய்க் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்."

(குளித்த பிறகு)

"ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? "

"பூரியக் காணல, உப்புமா இருக்கு? "

"உங்கத் தீர்மானம்! அதுதான் பூரி ஓடிப்போச்சி. "

"பரவாயில்லை. எங்க ஓடிப்போச்சின்னு கேட்கமாட்டேன்.

நல்ல வேளை சோதனையிலிருந்து தப்பிச்சேன்."

"நீங்க எங்க தப்பிச்சீங்க?  நான் தப்பிக்கவச்சேன்."

"என் செல்வம்னா செல்வந்தான்.

ஆமா, பூரி எங்க போச்சி?"

"இங்க பாருங்க, ஒரு சோதனையிலிருந்து தப்பிச்சபின் அத அப்படியே மறந்துவிடணும், அத நோண்டிக்கிட்டே இருக்கக்கூடாது.

ஒரு கதை தெரியுமா? ஒருவன் ஒரு ஒற்றையடிப்பாதை வழியே போய்க் கொண்டிருந்தான்.
பாதை ஓரமா ஒரு பாம்பைக் கண்டான்.

பயந்து வேகமாக ஓடித் தப்பித்தான்.

கொஞ்ச தூரம் போனபின், தப்பித்ததற்கு மகிழ்ந்தாலும்,

அந்தப் பாம்பு அங்கேதான் கிடக்கிறதா, அல்லது போய்விட்டதா என்று பார்க்கவேண்டும் போலிருந்தது.

திரும்பவும் அதைத் தேடி வந்தபோது தெரியாமல் கால் அதன்மேல் பட,  அது கொத்திவிட்டது!

சோதனையிலிருந்து தப்பித்துவிட்டால் 

கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு நமது வேலையைப் பார்க்க வேண்டும்.

எப்படித் தப்பித்தோம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆறாம், ஒன்பதாம் கட்டளைகளுக்கு எதிரான சோதனைகட்கு இது மிகவும் பொருந்தும்."

"சரி, சோதனையைப் பற்றி ஒரு குட்டி ஆராய்ச்சி பண்ணுவோமா? "

"அதென்ன குட்டி ஆராய்ச்சி?"

"நீண்ட ஆராய்ச்சி செய்ய நமக்கு அறிவும், நேரமும் பற்றாது.

நமது குறுகிய அனுபவத்தை அடிப்படையாக வைத்து கொஞ்ச நேரம் பேசுவோம்."

"சரி. சோதனைன்னா என்ன? சொல்லுங்க."

.."எனக்குத் தெரிந்தவரை சோதனை என்பது ஒரு எதிர்மறைக் கவர்ச்சி.

அதாவது செய்யக் கூடாததை செய்யத் தூண்டும் கவர்ச்சி.

ஆண்டவர் நம் முதல் பெற்றோருக்கு 'ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது' என்று கட்டளை இட்டிருந்தார்.

ஆனால், சாத்தான் விலக்கப்பட்ட கனியை சாப்பிடும்படி, கவர்ச்சிகரமான பொய்யைச் சொல்லிச் சோதிக்கிறான்.

சோதனைக்குச் சம்மதிக்கா திருந்திருந்தால் ஏவாள் புண்ணியம் செய்திருப்பாள்.

சம்மதித்ததால் பாவம் செய்தாள்."

."இந்த முதல் சோதனையிலிருது ஒரு உண்மை விளங்குகிறது.

ஒரு பக்கம் கடவுள்,

மறு பக்கம் சாத்தான்.

நடுவில் மனிதன்.

கடவுள் மனிதனைத் தனக்காகப் படைத்தார்.

சாத்தான் கடவுளுக்குச் சொந்தமான மனிதனை அபகரிக்க முயல்கிறான்.

கடவுள் மனிதனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

மனிதன் தன் முழுச்சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இறைவனின் அருள்வரத்தை ஏற்று,

சாத்தானை ஏறிட்டுப் பார்க்காமல்

இறைவனிடம் செல்லவேண்டும்.

ஆனால் மனிதருள் சிலர் சாத்தானின் கவர்ச்சிகரமான சோதனையை வெல்லமுடியாமல் அவன்பக்கமே சாய்ந்துவிடுகிறார்கள்."

.."இறைவனுக்கு எதிராக நம்மைச் சோதிப்பவன் சாத்தான்.

சாத்தானை ஏன் இறைவன் படைத்தார்?"

."இறைவன் சம்மனசுக்களைத்தான் படைத்தார்.

சம்மனசுக்களின் தலைவராக இருந்தவர் லூசிபெர்.

லூசிபெர் தனது தற்பெருமை (Pride) காரணமாக இறைவனை எதிர்த்ததால் சாத்தானாக மாறினான்.

மனுக்குலம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அவனது ஒரே வேலை இறைவனுக்கு எதிராக மனிதனைச் சோதிப்பதுதான்.

இறைவன் மனிதனாய்ப் பிறந்தபோது அவரையே மூன்று முறைச் சோதித்தான்.

இயேசுவையே சோதித்தவன் நம்மைச் சோதிக்காமல் விடுவானா?

இயேசு அவனை வென்றதுபோல,  நாமும் அவனை இயேசுவின்
துணையுடன் வெல்லவேண்டும்."

.."இயேசு சர்வவல்லபர்.

அவரால் எல்லாம் முடியும்.

அவர் நினைத்தால் சாத்தானை நம்மை நெருங்க விடாமல் தடுக்கமுடியும்.

சோதனைகளே வராமல் நம்மைக் காப்பாற்ற முடியும்.

அவர் ஏன் சாத்தானைத்
தடுக்காமல் இருக்கிறார்?"

."இதற்கான பதிலை நீங்களே சொல்லுங்கள்."

.." 'இறைவன்தான் சர்வஞானம் உள்ளவராச்சே,

அவருக்குதான் மனிதன் பாவம் செய்வான் தெரியுமே,

பின் ஏன் மனிதனைப் படைத்தார்?'

என்றுகூட கேட்கத்தோன்றும்.

ஆனால்,

இறைவன் சர்வ வல்லபர்,
அளவற்ற ஞானமுள்ளவர்

என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம்

நாம் அளவுள்ளவர்கள் என்பதையும்,

அளவுள்ள நம்மால் அளவற்ற இறைவனின் திட்டங்களைக் கண்டுபிடிக்க முடியாது

என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல

இறைவன்  அளவற்ற நன்மைத்தனம் உள்ளவர் என்பதை விசுவசிக்கும் நாம்

இறைவன் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் நமது நன்மைக்காக மட்டுமே செய்கிறார் என்றும் விசுவசிக்க வேண்டும்.

ஆகவே இறைவனின் திட்டத்தை ஆராய்வதை விட்டு விட்டு,

இறைவன் சோதனைகளை அனுமதிப்பதால்  நமது வாழ்வில் என்னென்ன நன்மைகள்  ஏற்பட்டுள்ளன என்பதை நான் கூறுகிறேன்."

."கொஞ்சம் பொறுங்கள்.

Ladies first.

நான் ஆரம்பிக்கிறேன்.

இயேசு நாம் தந்தையை நோக்கி செபிக்கக் கற்றுத்தந்த செபத்தில்

'எங்களை சோதனையில் விழ விடாதேயும்'

என்று செபிக்கக் கற்றுத்தந்திருகிறார்.

ஏன்?

'எங்களுக்கு  சோதனையே வரவிடாதேயும்'

என்று செபித்தால் தப்பா? "

.."அவர் நம் தந்தை.

நம் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்.

தந்தையிடம் பிள்ளை எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.

'நான் உடனடியாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக உதவியருளும்' என்று கேட்டால்கூட தப்பில்லை.

அது அவரது சித்தமாய் இருந்தால் அவர் அதை நிறைவேற்றக்கூட செய்யலாம்.

ஏன் சிரிக்கிற. கேட்கலாம்னுதான் சொன்னேன். கேட்கச் சொல்லல.

ஆனால் நாம் எதைக்கேட்டாலும், நமக்கு நன்மையானதைத்தான் தருவார்.

என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்,

நமது நன்மைக்காகத்தான் இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்."

."என்னது? நமது நன்மைக்காகவா? புரியவில்லை."

.."உன் பிள்ளைகள் ஏன் உன்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்? "

."தாயின் உதவி இன்றி பிள்ளைகளால் வளர முடியாது.

அதனால்தான் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் இன்னும் மற்றத் தேவைகட்காக பிள்ளைகள் பெற்றோரைச் சுற்றி வந்துதானே ஆக வேண்டும்."

.."Suppose, உன் உதவியின்றி அவர்களுக்கு நீ குறிப்பிட்டவை எல்லாம் கிடைத்துவிட்டால்?"

."யோசிக்க வேண்டிய விசயம்தான்."

.."யோசிக்கவே வேண்டாம். உன்னைச் சுற்றமாட்டார்கள்.

நீ பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைக்கு நீ பால் கொடுக்காமல் ஆயா பால் கொடுத்தால், பிள்ளை உன்னைத் தேடாது. ஆயாவைத்தான் தேடும்.

இறைவன் நம்மைத் தனக்காகத்தான் படைத்தார்.

அவரை அறிந்து,

அவரை அன்பு செய்து,

அவருக்காகவே வாழ்ந்து,

அவரை அடைந்து,

நித்தியமும் அவரோடு வாழவே

நம்மைப்படைத்தார். 

ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும்

அவரது சந்நிதியில்,

அவரது நினைப்பில்,

அவரோடு பேசிக்கொண்டு,

அவருக்காகவே வாழவேண்டும்  என்பதுதான் அவரது ஆசை.

'அவரின்றி நாம் ஒன்றுமே இல்லை,

அவரோடு நமக்கு எல்லாம்  முடியும்'

என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும் என்பது அவர் விருப்பம்.

குழந்தை தான் பயப்படுகிற பொருள் எதையும் கண்டால் தாயை இறுகப் பற்றிக்கொள்ளும்.

நமது ஆன்மீக வாழ்விலும் நம்மைப் பாவத்தில் விழத்தாட்டத் துடிக்கும் சோதனைகள் வரும்போது நாம் இறைவனை இறைவனை இறுகப்பற்றிக் கொள்வோம்.

'நான் உம்மை இறுகப்பற்றிக் கொண்டேன், அப்பா, நான் சோதனையில் விழுந்து விடாதபடி  என்னைக் காப்போற்றும்'

என வேண்டுவோம்.

'எங்களை சோதனையில் விழவிடாதேயும்'

என்று ஒவ்வொரு நாளும் பலமுறை வேண்டும்போது

இறைவன் சோதனைகளுக்கு எதிரான சக்தி தரும் அருள்வரங்களால் நம்மை நிரப்புகிறார்.

சோதனைகள் வராமலிருக்கும்போதே நாம் இந்த செபத்தைச் சொன்னால் சாத்தான் நம்மை நெருங்கவே பயப்படுவான்.

சோதனைகள் வராமலிருக்கும்போது நாம் இச்செபத்தை மறந்தால்,

நமக்கு ஞாபகமூட்டவே இறைவன் சோதனையை அனுமதிப்பார்.

அதனால்தான் சொன்னேன்,

'நமது நன்மைக்காகத்தான் இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்' என்று.

புரிகிறதா?"

."புரிகிறது. ஆனால் புரியவில்லை."

.."நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.

கொஞ்சம் புரியும்படி சொல்லு."

."இறைவன், 

அவரோடு  நாம் 24 மணி நேரமும் செபத்தால் இணைந்து வாழவேண்டும் என்று விரும்புகிறார் என்று

நீங்கள் சொல்ல விரும்புகிறீகள் என்பது புரிகிறது.

ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் இவ்வுலக காரியங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

24 மணி நேரமும் எப்படி செபிப்பது என்று புரியவில்லை."

.."கடவுள் எங்கு இருக்கிறார்?"

."எங்கும் இருக்கிறார்."

.."நீ எங்கே இருக்கிறாய்? "

."நான் கடவுளுக்குள்தான் இருக்கிறேன்."

.."அதை நீ உணர்கிறாயா?"

."உணர்கிறேன்."

.."அதுதான் செபம்.

நாம் இறைவனின் சந்நிதியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ்வதுதான்  செபம்.

சோதனை வரும்போது இறைவன் நம்மோடுதான் இருக்கிறார் என்பதை நாம் நினைத்தாலே சாத்தான் நடுநடுங்கும், சோதனை பறந்துவிடும்."

."ஏங்க, இது உங்களுக்கே நல்லா இருக்கா?"

.."எது? சோதனை பறந்துவிடுவதா"

."Ladies first ன்னு சொன்னேன்.
சரின்னு சொல்லிவிட்டு, இரண்டு வார்த்தை பேசுமுன்னே நீங்களே பேச ஆரம்பிச்சிட்டீங்க!"

.."நான் ஒண்ணும் பேசல.

நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்."

."அதுவும் சரிதான். அப்போ இன்னொரு கேள்வி. சோதனைக்கு சாத்தான் மட்டும்தான் காரணமா? "

.."சரியான கேள்வி.

ஒரு ஊர்ல ஆறு ஒண்ணு இருந்தது.  அதுல எப்போதும் தண்ணீர் நிறைய ஓடும்.     ஆற்றுக்குள் யாரும் இறங்கக்கூடாது,   ஆற்றைக் கடக்க பாலத்தைத்தான் பயன்படுத்தணும்கிறது  ஊர் விதி.   ஒரு ஆள் விதியைப்பற்றிக் கவலைப் படாமல் ஆற்றில் இறங்கினான்.  ஆற்றோடு போய்விட்டான்.

அவனது முடிவுக்குக் காரணம் அவனா? ஆறா? "

."ஆறு என்னங்க செய்யும்? அதன் வேலையே ஓடுவதுதான, அதற்குள் இறங்கிய ஆள்மேலதான் தப்பு."

.."கரெக்ட். அதேபோல்தான் சோதனை விசயத்திலும்.

சாத்தானின் வேலையே சோதிப்பதுதான்.

அநேக சமயங்களில நாம்தான் சோதனையைத் தேடிப்போறோம்.

மோசமான சினிமாக்கள், சீரியல்கள் போன்றவற்றை அடிக்கடி பார்த்துவிட்டு,

'எனக்கு கெட்ட எண்ணணங்களா வருது, அசுசியான ஆசைகளா வருது. சோதனைத் தாங்க முடியல'ன்னு  சொன்னா எப்படி?

சினிமாக்கள்,  சீரியல்கள்,  செல்போன்கள்,  மதுக்கடைகள் போன்றவை வருவோர் கால்களை வாரிவிடுவதற்கு சாத்தான் காத்துக்கிடக்கும் இடங்கள்.

நாம் அவைகளிடம் போகாதிருந்தால்

கெட்ட எண்ணங்கள், ஆசைகளுக்கு எப்படி சோதனை வரும்?

வழியே போற ஓணானப் பிடிச்சி பாக்கட்ல போட்டுக்கிட்டு 'ஐயோ!  குத்துதே, குடையுதே'ன்னு சொன்னா எப்படி?

நாமாகவே பாவ சந்தர்ப்பங்களைத் தேடிப்போய்விட்டு

'எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்' என்று கடவுளைக் கேலிபண்ணுவது போலாகும்.

வேண்டுமென்றே நாற்றம்பிடித்த பீங்காட்டில் போய் நின்று கொண்டு,

'ஆண்டவரே, இந்த துர்நாற்றத்திலிருந்து காப்பாற்றும்'
என்று வேண்டினால் எப்படி?

மருந்துமட்டும் நோயைக் குணமாக்காது.

மருந்தை ஒழுங்காகச் சாப்பிட்டால்தான் நோய் குணமாகும்.

சேரக்கூடாத நண்பர்கள்,

வாசிக்கக்கூடாத புத்தகங்கள்,

சாப்பிடக்கூடாத உணவுக்கடைகள்

இன்னும் இவை போன்ற பாவ சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நாம் அவற்றைத் தவிர்க்க வேண்டும்."

."புனிதமான இடங்களுக்கு பாவ சந்தர்ப்பங்களைக் கொண்டு வருகிற ஆட்களைப் பற்றி? "

.."கோவில் புனிதமான இடம்.

திவ்ய பலிபூசைக்கு வரும் சிலர்

தங்கள் அழகை விளம்பரப்படுத்த வந்திருப்பது போல

Indecent ஆக dress அணிந்து வருவது மகா பெரிய தப்பு.

கோவிலுக்கு வந்து அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் பீடத்தைப் பார்ப்பார்களா? அவர்கள் அழகை ரசிப்பார்களா?

ஆலயத்துக்கு வரும்போது மற்றவர்கட்கு இடைஞ்சல் இல்லாத வகையில் கௌரவமாக உடையணிய வேண்டும்.

'Dress எங்கள் சொந்த விசயம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை'

என்று தத்துவம் பேசக்கூடாது."

."நான் ஒரு தத்துவம் சொல்லட்டுமா?

வியாதிகள் அதிகமாக இருப்பவர்கள்தான் அடிக்கடி டாக்டரைத் தேடுவார்கள்.

மந்தமான மூளையுள்ள மாணவர்கள்தான் அதிகமாக ஆசிரியர்களைத் தேடுவார்கள்.

சக்தி குறைவானவர்கள்தான் அடிக்கடி டானிக் சாப்பிடுவார்கள்.

சோதனைகள் அதிகம் வருபவர்களே ஆண்டவரை  அதிகம் தேடுவார்கள்.

சோதனைகள் பாவமல்ல, அவற்றைக் கண்டு பயப்படவேண்டாம்.

சோதனைகளைத் தேடிப் போக வேண்டாம்.

வரும்போது ஒரு கை பார்த்துவிடுவோம்!

தந்தை நம்மோடு!"

லூர்து செல்வம்.