Tuesday, May 7, 2019

மனிதர்கள் மனிதர்களாய் வாழவேண்டுமா? புனிதர்களாய் வாழவேண்டுமா?

மனிதர்கள் மனிதர்களாய் வாழவேண்டுமா?

புனிதர்களாய் வாழவேண்டுமா?
*******************************

பழைய T. V ஒன்று விலைக்கு வந்தது.

பார்க்க அழகாய் இருந்தது. வாங்கிவிட்டேன்.

என் பேரன் வந்து T. V ஐ on பண்ணினான்.

உள்ளே வெளிச்ம் நன்றாய்த் தெரிந்தது,

ஆனால்
படம் எதுவும் தெரியவில்லை.

ரொம்ப நேரம் முயன்று பார்த்துவிட்டு

T. Vயா இது கூறிவிட்டுப் போய்விட்டான்.

ரிப்பேர் பார்ப்பவனிடம் கொண்டு போன பின்தான் தெரிந்தது

உள்ளே Picture tubeஏ இல்லை என்று!

பார்ப்பதற்குT. V,

ஆனால்,  T. Vயே இல்லை!

இதே போல்தான்
எழுதாத பேனாக்கள், 
எரியாத பல்புகள்,
ஓடாத கார்கள்,
தெரியாத கண்ணாடிகள், படிக்காத மாணவர்கள்.... சொல்லிக் கொண்டே போகலாம், முடிவில்லாமல்!

எது எதுக்காக உண்டாக்கப் பட்டதோ,

அது அதைச் செய்யாவிட்டால்

அது அது அல்ல! 

எழுதுவதற்காக செய்யபட்ட பேனாவினால் எழுதமுடியாவிட்டால் அது பேனா அல்ல.

எப்படி வாழவேண்டும் என்று மனிதன் படைக்கப்பட்டானோ

அப்படி வாழாவிட்டால் அவன் மனிதனே அல்ல!

எப்படி வாழவேண்டும் என்று மனிதன் படைக்கப்பட்டான்?

புனிதனாய் வாழவேண்டும் என்று படைக்கப்பட்டான்.

புனிதனாய் வாழ்பவனே மனிதன்.

அதாவது  மனிதன் என்ற சொல்லின் பொருள் புனிதன் என்று சொல்லும் அளவிற்கு வாழவேண்டும்.

புனிதம் இல்லாமல் ஒருவன் வாழ்ந்தால், பெயருக்கு அவன் மனிதனாய் இருக்கலாம்,

உண்மையில் அப்பெயருக்குப் பொருத்தம் இல்லாதவன்.

Picture tube இல்லாத T. V, பார்வைக்கு மட்டும்தான் T. V!

'புனிதனாய் வாழவேண்டும்' என்றால் என்றால் என்ன பொருள்?

இறையன்பிலும், பிறர் அன்பிலும் வாழவேண்டும்.

புனிதராய் வாழ இறையன்பும் பிறர்அன்பும் பிரிக்க முடியாதவை.

இறையன்பு இல்லாதவனிடம் பிறர் அன்பு இருந்தும் பயனில்லை.

ஏனெனில் பிறர் அன்புக்கு இறை அன்புதான் உயிர்.

இறை நம்பிக்கையே இல்லாதவர்கள்  'மனிதம்,மனித நேயம்' என்ற சொற்களைப் பயன் படுத்துகிறார்கள்.

அவர்கட்குக் கடவுள் கிடையாதாம், மனிதனை மனிதன் என்பதற்காக மட்டும் நேசிக்க வேண்டுமாம்!

எந்த செயலுக்கும் ஒரு நோக்கம் (Purpose) இருக்கவேண்டும்.

சாப்பிடுவதற்கு ஒரு நோக்கம் உண்டு,

சாப்பிடுவதெற்கென்றே சாப்பிடுபவன் தின்னிமாடன்!

இவ்வுலகில் நாம் வாழ்வதன் நோக்கம்,

  இறைவன் திட்டப்படி வாழ்ந்துவிட்டு

வாழ்க்கைக்குறிய சம்பாவனையைப் பெறுவதற்காக

அவரிடமே போய்ச் சேர்வதுதான்.

இந்த உயரிய நோக்கம் இன்றி,

'இந்த உலகில் வாழ்வது இங்கு வாழ்வதற்காகத்தான்,

மறு உலகிற்குப்போவதற்காக அல்ல

என்று கூறுவது,

'இரயிலில் பயணிப்பது

பயணிப்பதற்காக மட்டும்தான்,

எந்த ஊருக்கும் போவதற்கல்ல'

என்று கூறுவதற்குச் சமம்.

பிறரை நேசிப்பது பிறருக்காகவோ, நமக்காகவோ அல்ல,

இறைவனுக்காக.

நமக்கு உயிர் இறைவனே, இறைவனுக்காக அன்றி செய்யும் எதுவும் உயிர் அற்ற செயல்.

படம் தெரியாத T. Vக்கும்,

எழுதாத பேனாவுக்கும் சமம்!

அச்செயல் நமது நோக்கத்தை அடைய எந்த விதத்திலும் உதவாது.

இறைவனுக்காக ஒரு சிறுவனுக்கு நாம் கொடுக்கும் ஒரு தம்ளர் தண்ணீரின் பொருட்டு நமக்கு மறு உலகில் சம்பாவனை உண்டு.

ஆனால் இறைவனுக்காக அல்லாமல் நமது பெருமைக்காக நமது சொத்தை முழுவதும் ஏழைகளுக்குக் கொடுத்தால்கூட நமக்கு விண்ணுலகில் எந்த பயனும் இல்லை.

இறைநேயம் இல்லாமல் மனிதநேயம் இல்லை.

நமது வாழ்வு

இறைவனை மையமாகக் கொண்டிருக்கவேண்ண்டும்,

மனிதனை அல்ல.

இறைவனுக்காக வாழாத எவனும் மனிதன் அல்ல. மனிதன் என்ற பெயரில் வாழும் வெற்றுடம்பு.

இறைவனுக்காக, இறையன்பில் பிறரன்போடு வாழ்பவனே மனிதன்,

அவன்தான் புனிதன்.

லூர்து செல்வம்.

Monday, May 6, 2019

நாம் புனிதர்களாக வேண்டுமா?

நாம் புனிதர்களாக வேண்டுமா?
***********************

எதிர்க் குணங்களுள்ள இரு பொருட்களின் இணைப்புதான் மனிதன்.

ஏற்கனவே இறைவனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது நம் உடல்.

ஒவ்வொரு உடல் உருவாகும்போதும்

ஆன்மா இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டு

உடலோடு இணைக்கபப்படுகிறது.

விண், மண் ஆகியவற்றின் இணைப்புதான் மனிதன்.

ஆகவேதான் அவனுடைய சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் விண்ணகச் சார்பும், மண்ணகச் சார்பும் கலந்துள்ளன.

எச்சார்பின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அவன் ஆன்மீகவாதியா, உலகியல்வாதியா என்பதைத் தீர்மானிக்கலாம்.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவை விண்ணை நோக்கியவையா, மண்ணை நோக்கியவையா என்பதை வைத்து

நாம் கடவுளுக்காக வாழ்கின்றோமா, உலகுக்காக வாழ்கிறோமா என்பதை அறியலாம்.

கடவுளுக்காக வாழ்வோருடைய கண்ணோக்கில் ஆன்மீகம் இருக்கும்.

உலகிற்காக வாழ்வோருடைய கண்ணோக்கில் உலோகாதயம் (Worldliness)இருக்கும்.

உதாரணத்திற்கு, துன்பங்களை எடுத்துக்கொள்வோம்.

நமக்கு வரும் துன்பங்களை உலகரீதியாக நோக்கினால்,

அவை கஸ்டங்கள்,

உடற்சுகத்துக்கு எதிரானவை,

வேண்டாதவை,

நீக்கப்படவேண்டியவை,

தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள்.

உலகியல் நோக்குள்ள யாரும் துன்பங்களை விரும்புவதில்லை.

அவை வந்தவுடன் அவற்றிலிருந்து விடுபடவே வழி தேடுவார்கள்.

நோய்நொடி வந்தால் டாக்டர்களிடம் போவார்கள்.

டாக்டர்களால் சுகமாக்க முடியாவிட்டால் கடவுளிடம் வருவார்கள்.

எப்படியாவது துன்பம் நீங்க வேண்டும். அதைப்பார்த்தாலே பயம்!

அதே துன்பத்தை ஆன்மீகக் கண்ணோகில் பார்ப்பவர்களது நடவடிக்கை உலகியல் கண்ணோக்கினருக்கு

நேர்மாறாக இருக்கும்.

ஆன்மீகவாதிகள் அழிந்துபோகக்கூடிய உடற்சுகத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

உடலை அல்லது உலகைச் சார்ந்த கஸ்டங்களை ஆன்மீக நலனுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

பட்டணத்தில் உத்தியோகம் பார்ப்பவன்

வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களை அள்ளி

தெருக்கோடியிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நிம்மதியாய் இருப்பான்.

ஆனால்,

கிராமத்து விபசாயி கழிவுப் பொருட்களை எருக்குழியில் போட்டு, 

அவை மக்கியபின் அவற்றை அள்ளி

வயலில் தான் செய்யும் பயிருக்கு உரமாக,

அதாவது,  உணவாகப் போடுவான்.

பட்டணத்தானுக்கு கழிவுப்பொருள் கழிக்கப்பட வேண்டிய பொருள்.

கிராமத்தானுக்குக் கழிவுப்பொருள் உணவாக மாற்றப்பட வேண்டிய பொருள்.

அதேபோல் உலகவாதி துன்பத்தை ஏதோ சாபமாக நினைத்து அதிலிருந்து தப்பிக்க முயல்வான்.

ஆனால் ஆன்மீகவாதி அதை ஒரு வரமாக எண்ணி, அதைத் தன் ஆன்ம நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.

நமக்கு வழியும், ஒளியும், உயிருமாய் இருப்பவர் நமது இரட்சகராம் இயேசு.

இயேசுவின் வழி அதாவது பாதை சிலுவைப்பாதை.

இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு போகும்போது

நாமும் சிலுவையைச் சுமந்துகொண்டு

அவர்பின்னால் போனால்தான்

நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள்.

நமக்கு வரும் துன்பங்கள் நாம் சுமப்பதற்கென்றே

இயேசுவால் தரப்பட்டவை.

இயேசு எந்தக் கருத்துடன் சிலுவையைச் சுமந்தாரோ அதே கருத்துடன் நாமும் சுமக்க வேண்டும்.

நமது  பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக நமது சிலுவையை அதாவது துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு சிலுவையை அனுப்புகிறார் என்றால்,

அவர் நம்மைப் புனிதப்படுத்த, புனிதர்களாய் மாற்ற விரும்புகிறார் என்று அர்த்தம்.

பாவத்தின் விளைவாகத்தான் துன்பம் உலகத்திற்குள் நுழைந்தது, உண்மை,

ஆனால்,

அதே துன்பத்தை ஆயுதமாகக் கொண்டுதான் இயேசு பாவத்தை அழித்தார்.

துன்பத்தில் இருவகை உண்டு.

ஒன்று நமது உடல் சம்ந்தப்பட்ட நோய்கள்.

அடுத்தது நமது மனது சம்பந்தப்பட்ட, நாம் விரும்பாத நிகழ்வுகள்.

நோய்கள்கூட நாம் விரும்பாத நிகழ்வுகள்தான்.

ஆனால் உடல் வேதனை பிரதானமாக இருக்கும்.

மனது சம்பத்தப்பட்டவைகளில் மனவேதனை பிரதானமாக இருக்கும்.

கஸ்டப்பட்டு படித்து தேர்வுக்குப் போவோம்.

வினாத்தாள் நமது எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும்.

விளைவு?

மதிப்பெண்கள் குறையும்.

மனதிற்கு வேதனையாக இருக்கும்.

நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்காது.

ஏதோ ஒரு வேலை கிடைக்கும்.

இதுவும் சிலுவைதான்.

ஆனால் அதுவே இறைவனுடைய திட்டமாயிருக்கும்.

இறைவனது திட்டம் நமது நன்மையைக் கருத்தில் கொண்டதாகத்தான் இருக்கும்.

ஆகவே சிலுவையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பங்கள் (சிலுவைகள்) வரும்போது அவற்றை நீக்க இறைவனிடம் வேண்டலாமா?

தாராளமாக வேண்டலாம்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்திலேயே

அநேகர் தங்கள் நோய் நீங்க அவரிடமே வேண்டியிருக்கிறார்கள்
என்பதும்,

அவரும் குணமளித்திருக்கிறார் என்பதும்

எல்லோருக்கும்  தெரியுமே!

நாமும் சிலுவை நமது சக்திக்கு மீறியதாக நமக்குத் தோன்றினால்

சிலுவையை நீக்க இறைவனிடம் வேண்டலாம்.

இதிலும் இயேசுவின் மனப்பக்குவம் வேண்டும்.

அவரே பிதாவிடம் வேண்டினாரே:

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று.

நமது செபமும் இது போன்றுதான் இருக்க வேண்டும்.

" உமக்கு விருப்பமானால் என் துன்பத்தை நீக்கும்."

இறைவன் நமது சக்தியை  மீறிய சிலுவையைத் தரமாட்டார்.

நமது பயத்தின் காரணமாக சக்தியை மீறியதாகத் தோன்றும்.

அப்பா நமது செலவுக்குப் பத்தாயிரம் ரூபாய் தருகிறார்.

நாம் "இவ்வளவு வேண்டாம்பா, ஆயிரம் ரூபாய் போதும்" என்கிறோம்.

நாம் குறைந்த பணம் பெற்றால் குறைவாகத்தான் செலவழிக்க முடியும்.

நாம் இவ்வுலகில் சுமக்கும் சிலுவைக்கு ஏற்றபடிதான் மோட்ச பேரின்பத்தின் அளவு இருக்கும்.

நமக்கு அதிக சம்பாவனை வேண்டுமா, குறைவாகப் போதுமா என்று நாம்தான் தீர்மானிக்க  வேண்டும்.

நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கவேண்டிய கால அளவையும் தீர்மானிப்பது

நாம் இப்போது சுமக்கும் சிலுவையின் அளவுதான்.

இதை எல்லாம் மனதிற்கொண்டுதான்

புனிதர்கள் இவ்வுலகில் அதிகமான சிலுவைகளை மகிழ்ச்சியுடன் சுமந்தார்கள்.

நாம் புனிதர்களாக வேண்டுமா?

நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Saturday, May 4, 2019

உள்ளத்தில் உறையும் உறவுகள்.

உள்ளத்தில் உறையும் உறவுகள்.
*********************************

"ஏங்க, ரொம்ப கவலையாய் இருக்கீங்க? இன்னும் Tea வரலியேங்கிற கவலையா? கொஞ்சம் வேலையாய் இருந்து விட்டேன். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.
Special tea யோடு வருகிறேன்."

"இங்கே வா. teaயெல்லாம் ஒன்றும் வேண்டாம். கொஞ்சம் பேசணும், உட்கார்."

"என்னங்க ஒரு மாதிரி பேசரீங்க?"

"நம்மை நேசிக்கிறவர்கள்,

நம்மால் நேசிக்கப்படுகிறவர்கள்,

அன்புக் கயிற்றால் இறுக்கப் பிணைக்கப்  பட்டிருப்பவர்கள்

ஆகியோரைத் திடீரென்று மரணம் அள்ளிக்கொண்டு போய்விடுகிறது.

நம்மால் அவர்களை மறக்கமுடியவில்லை.

அன்பு அழியாதுன்னு சொல்வார்கள்.

அன்பர்கள்? "

"இங்கே பாருங்கள், அன்பர்ளும் அழியமாட்டார்கள்.

மரணத்தினால் அன்பர்களையும்,  அவர்களிடையே நிலவும் அன்பையும் பிரிக்க முடியாது.

நமக்குப் பிரியமானவர்கள் மரணத்தினால் நம்மை விட்டுப் பிரிந்துசென்றாலும்

விண்ணகத்திலும் நம்மை அன்பு செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

விண்ணகம் அன்பின் (கடவுளின்) இருப்பிடம்.

தண்ணீருக்குள் இருப்பவர்களால் நனையாமல் இருக்கமுடியுமா?

அன்பகத்தில்  இருப்பவர்களால் நம்மை அன்பு செய்யாமல் இருக்க முடியுமா?

அவர்கள் விண்ணகத்தில் இருக்கிறார்கள் என்றாலே

நம்மோடு, நமக்குள் இருக்கிறார்கள்  என்றுதான் பொருள்."

"எப்படி?"

"விண்ணகத்தில் இருக்கிறவர்கள் கடவுளுக்குள் இருக்கிறார்கள்.

கடவுள் நம்முள் இருக்கிறார்.

ஆகவே,

அவர்களும் நம்முள், நமது அரவணைப்பில்தான் இருக்கிறார்கள்.

நமது உள்ளத்தில்,  நமது உணர்வுகளோடு கலந்திருப்பதால்,

நாம் அவர்களோடு நம் எண்ணங்களால் பேசலாம்.

நமக்குள் அவர்கள் இருப்பதை உணரும்போது

நாமும் விண்ணக வாழ்வின் முன்சுவையை (Pretaste) அனுபவிக்கிறோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவர்கள் நமக்கு உதவுவதை உணர்கிறோம்.

ஒவ்வொரு வினாடியும் அவர்கள் இறைவனிடம் நமக்காகப் பரிந்து பேசுவதை உணர்கிறோம்.

இறைவன் நமது தந்தையாகையால் நாமே அவருடன் நேரடியாகப் பேசுகிறோம்.

"விண்ணில் வாழும் எங்கள் தந்தையே" என்று அவரை அழைத்து அவரோடு பேச

இறைமகனே நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்.

அதோடு நமக்குப் பிரியமானவர்களும் நமக்காக அவரோடு பேசுகின்றார்கள்.

இதனால் அவரோடு நமக்குள்ள குடும்ப (தந்தை மகன்)  உறவு நெருக்கமாகிறது.

அவர்கள் நம்மைவிட இறைவனோடு அதிக நெருக்கம் உள்ளவர்களாக இருப்பதால்,

அந்நெருக்கத்தை

அவர்களது அன்பர்களாகிய நமக்காகப்பயன்டுத்தி

நமக்கு வேண்டிய ஆன்ம, சரீர நலன்களைப் பெற்றுத்தருகிறார்கள்.

இவ்வுலக வாழ்வைவிட்டுப் பிரிந்து சென்றாலும் ஆன்மீகரீதியில் அவர்கள் நம்மோடு இருப்பதால்,

அவர்களோடு நமது ஆன்மீக வாழ்வுபற்றி உரையாடி,

நமக்கான ஆன்மீக நலன்களை இறைவனிடமிருந்து பெற்றுத்தர அவர்களிடம் நாம் கேட்கவேண்டும்.

திருச்சபையால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல,

இறைவனோடு விண்ணகத்தில் வாழும் நமது அன்புக்கு உரியவர்களும் புனிதர்கள்தான்.

விண்ணில் இறைவனோடு வாழும் அனைவரும் புனிதர்கள்தான்.

One analogy :

மிக ஆழமான பள்ளத்தில் நிறையபேர் விழுந்துகிடக்கிறார்கள்.

மேலே தன்தரையிலிருந்து சிலர் பலமான வடத்தை மேலேயிருந்து கீழே தொங்கவிட்டு அதன் மூலம் ஒவ்வொருவராக மேலே இழுத்துக் காப்பாற்றுகிறார்கள்.

காப்பாற்றப்பட்டவர்கள் 'நாம் பிழைத்தது போதும்' என்று சென்றுவிடாமல்,

காப்பாற்றிக் கொண்டிருக்கும் மற்றவர்களோடு இணைந்து,

கயிற்றை இழுத்து கீழிருப்பவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

இப்பணி எல்லோரும் காப்பாற்றப்படும் வரை தொடரும்.

அதேபோல,

உலகமாகிய மாபெரும் பள்ளத்திலிருந்து மோட்சமாகிய தன்தரைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அன்பு  செய்யும் ஒருவர் ஒரு நாள் நம்மைவிட்டுப் பிரிந்து மோட்சத்திற்குச் சென்றுவிட்டார்.

அங்கிருந்துகொண்டு நாமும் மோட்சம் செல்ல உதவிக்கொண்டிருப்பார்.

மோட்சம் அன்பின் இருப்பிடம்.

அன்பின் ஒரே பணி அன்பு செய்வதுதான்.

அன்பு செய்வது வெறும் உணர்வினால் மட்டுமல்ல, செயலளவிலும்கூட.

மோட்சவாசிகள் இறைவனையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்புசெய்கின்னர்.

உலகில் விண்ணகப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் நம்மை அன்பு செய்வதோடு,

நமது விண்ணணகப் பயணத்தில் உதவியும் செய்கின்றனர்.

நமக்கு உதவ சதா இறைவனிடம் வேண்டுகின்றனர்.

அவர்கள் நமக்கு முன்னால் இறைவனிடம்  சென்றதே

நாமும் இறைவனை அடைய

தங்கள் செபத்தின் மூலம்

நமக்கு உதவுவதற்காகத்தான்.

ஆகவே நாம் நம் உள்ளத்தில் உறையும் உறவுகளோடு உறவாடுவோம்.

அவர்களின் உதவியோடு உன்னத தேவனின் பாதம் சேருவோம்.

உறவுகள் உலகைவிட்டுப் போயிருக்கலாம்,

ஆனால் நம்மை  விட்டுப் போகவில்லை.

ஆகையால் கவலை வேண்டாம்.

அவர்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள்.

தங்கள் அன்புடன் இறைவன் அன்பையும் கலந்து நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்புக்கு முடிவில்லை."

"என் செல்வம் என்றால் என் செல்வம்தான்!

இப்போ Tea கொண்டு வா."

"இதோ வருகிறேன்."

லூர்து செல்வம்.

Friday, May 3, 2019

"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்."

"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்."
***********--*****************

"ஏங்க, சிக்கலான கேள்வி  கேட்டா பதில் சொல்லுவீங்களா?

"நீ சொல்லுறதப் பார்த்தா நீயே ஒரு சாதாரணக் கேள்வியை, உட்கார்ந்து கஸ்டப்பட்டு சிக்கலாக்கியிருக்கிறதுபோல் தெரிகிறது.

சரி கேளு, தெரிஞ்சா பதில் சொல்லப்போறேன்."

"தெரியாட்டா?"

"தெரியாவிட்டாலும் பதில் சொல்லுவேன், தெரியாதுன்னு."

"எப்போதாவது தந்தையாகிய கடவுளை உங்கள் ஊனக் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?"

"இதுதான் சிக்கலான கேள்வியா?

எப்போதாது இல்லை, தினமும் பார்க்கிறேனே! தந்தையை மட்டுமா, பரிசுத்த ஆவியையும் பார்க்கிறேனே!"

"அதெப்படீங்க முடியும்? உங்களது கண் சடப் பொருள், ஊனக்கண், கடவுள் ஆவி.

ஊனக்கண்ணால் ஆவியை எப்படீங்க பார்க்க முடியும்?"

"இந்தக் கேள்விய நீ முதல் முதல்ல கேட்கல.

பிலிப்பு கேள்வியக் கொஞ்சம் மாற்றி,

"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்."

என்றார்.

  நீ 'நீங்கள் பார்த்தீங்களான்னு' கேட்ட.

பிலிப்பு 'நாங்கள் பார்க்கணும், காட்டும்'னு கேட்கிறார்.

ஆண்டவருடைய பதில் இருவருக்கும் பொருந்தும்.

ஆண்டவர் சொன்னார்,

"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். 

........நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா ? 
(அரு.14:9,10)

அதாவது,

'நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதால், என்னைக் காண்கின்றவன், என் தந்தையைக் காண்கிறான்' என்கிறார்.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி மூன்று ஆட்களும்  ஒரே கடவுள்.

இயேசு கடவுள்.

ஆகவே, இயேசுவைப் பார்க்கும்போது கடவுளைத்தான் பார்க்கிறோம்.

கடவுள் ஒருவர்தான்.

ஒருவர்தான் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

இயேசு  இரண்டாம் ஆள்.

இரண்டாம்ஆள் முதல் ஆளுக்குள் இருக்கிறார்.

முதல் ஆள் இரண்டாம் ஆளுக்குள் இருக்கிறார்.

( நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?)

ஆகவே இரண்டாம் ஆளாகிய இறைமகனைப் பார்க்கும்போது முதல் ஆளாகிய தந்தையையும் பார்க்கிறோம்.

புரிகிறதா?"

"நீங்கள் சொல்வது இயேசுவோடு  வாழ்ந்தவர்கட்குப் பொருந்தும்.

இயேசு விண்ணகம் எய்தி 1986 ஆண்டுகளுக்குப்பின் வாழும் நமக்கு எப்படிப் பொருந்தும்? "

"ஆண்டருடைய செம்மறிக்குட்டி'  யார்?"

"இயேசு."

"இதோ 'ஆண்டருடைய செம்மறிக்குட்டி' என்கிற வாக்கியத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கியா?"

"இதென்ன கேள்வி?

ஒவ்வொரு நாளும் திருவிருந்துக்கு முன் குருவானவர்
இயேசுவைக் கையில் எடுத்து இதோ   'ஆண்டருடைய செம்மறிக்குட்டி' என்கிறார்.

இதுகூடத் தெரியாத மடச்சியா நான்?"

அப்போ தினமும் நீ இயேசுவைப் பார்க்கிற! "

"பார்க்கிறது மட்டுமல்ல, அவரைத்தானே ஆன்மீக உணவாக தினமும் உண்கிறேன்!"

"அப்போ நீ தினமும் இயேசுவைப்  பார்க்கிற."

"ஆமா."!

"அப்போ தந்தை இறைவனையும் பார்க்கிற!"

"ஆனால் சீடர்கள் பார்த்தது மாதிரி பார்க்கலிய. அப்பரசக் குணங்களுக்குள் இயேசுவைப் பார்க்கிறேன்."

"அப்பரசக் குணங்களுக்குள் இருப்பது

சீடர்கள் பார்த்த அதே இயேசுதான்.

நமக்காக பாடுபட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கிய அதே இயேசுதான்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசுதான்.

நடுப்பூசை எழுந்தேற்றத்தின்போது

குருவானவர் தன் திருக் கரங்களால் உயர்த்திப்பிடிப்பது அப்பத்தை அல்ல,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத்தான்.

அவரைப் பார்க்கும்போது தந்தை இறைவனையும் பார்க்கின்றோம்."

"பரிசுத்த தம திரித்துவத்தின் தேவரகசியத்தை நாம்
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே

இயேசு

"என்னைக் காண்கின்றவன், என் தந்தையைக் காண்கிறான்' என்று சொன்னார்.

இன்னொரு மிக முக்கியமான பாய்ண்ட்.

நமக்கு இரண்டு வகையான கண்கள் உள்ளன.

ஒரு வகை நமது உடலில் உள்ள ஊனக்கண்.

இன்னொரு வகை நமது ஆன்மாவிலுள்ள விசுவாசக்கண்.

நமது ஊனக்கண்ணால் அப்ப, ரசக் குணங்களை மட்டும்தான் பார்க்க முடியும்.

விசுவாசக் கண்ணால் மட்டுமே இயேசுவையும், தந்தையையும் காணமுடியும்.

அதனால்தான் இயேசு,

"நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?"

என்றார்.

"கரெக்ட். வேறு ஏதாவது சிக்கல் இருக்கிறதா? "

"மே தினப் பிரசசங்கத்தில் சாமியார் ஒரு கேள்வி கேட்டார்.

உழைப்பு ஒரு சாபமா?  ஒரு வரமா? "

"அதற்குதான் சாமியாரே பதிலை விளக்கிவிட்டாரே."

"உங்களுக்கு ஒரு Test, நீங்கள் பிரசங்கத்தைக் கவனித்தீர்களா என்பதைக் கண்டறிய."

"அறிந்து? "

"Test ல் pass செய்தால்தான் Evening Tea."

"சரி.கேளு."

"உழைப்பை சாபம் என்று அழைக்கலாமா? "

"ஆதாம் பாவம் செய்ததால் கடவுள் ஆதாமை நோக்கி,

"வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே

உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்:

நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன்" பலனை உண்பாய்."

என்றார்

இவ்வசனத்தில் கடவுள் ஆதாமை சபிக்கவில்லை.

"உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்: "
என்றார்!

சபிக்கப்பட்டிருக்கும் பூமியிலிருந்து பலனைப்பெற ஆதாம் கஸ்டப்பட்டு உழைக்கவேண்டியதாயிற்று.

கடவுள் ஆதாமை சபிக்காவிட்டாலும்,

அவன் பொருட்டுதான் அவன் வாழ்ந்த பூமியைச் சபித்தார்.
பூமி சபிக்கப்பட்டதன் விளைவுதான் உழைப்பு.

பாவத்தின் காரணமாகவே பூமி சபிக்கப்பட்டதால்,

துன்பத்தையும், மரணத்தையும்போல

உழைப்பையும் பாவத்தின் விளைவு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்."

"மார்க் கடைசியில் போடுகிறேன்.

அடுத்த கேள்வி. உழைப்பை வரம் எனலாமா?"

"தாராளமாக.

எப்படி இயேசு தன் பாடுகளாலும்,  மரணத்தாலும், உயிர்ப்பாலும் துன்பத்தையும், மரணத்தையும் ஆசீர்வாதங்களாக மாற்றினாரோ,

அதேபோல் கடினமான உழைப்பையும் வரமாக மாற்றினார்.

அதனால்தான் தன் வளர்ப்புத் தந்தையாக ஒரு தச்சரை, உழைப்பாளியைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல,

தானே 30 ஆண்டுகள் சூசையப்பர் செய்த தச்சுத் தொழிலைச் செய்து

உழைப்பை ஆசீர்வதித்தார்.

அதுமட்டுமல்ல தான் நிருவிய திருச்சபையின் முதல் தலைவராக ஒரு மீனவத் தொழிலாழியை நியமித்தார்."

"Good. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது உழைப்பை ஆண்டவரின் அதி மிக மகிமைக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஆண்டவருக்காகச் செய்தால்தான் அவரிடமிருந்து நித்திய வாழ்வைப் பரிசாகப் பெறமுடியும்."

"மார்க் போட்டாச்சா?  Testல பாஸ் பண்ணிட்டேனா? "

"Evening Tea உறுதி!"

லூர்து செல்வம்.