Monday, February 7, 2022

நமது வாழ்வின் நோக்கம்.

நமது வாழ்வின் நோக்கம்.


"தாத்தா!  எங்கு பார்த்தாலும் கட்டாய மதமாற்றம் பற்றியே பேசுகிறார்களே, அப்படின்னா என்ன, தாத்தா?"

"பேசுகின்றவர்களுக்கே அது என்ன என்று தெரியாது."

"பொருள் தெரியாமலா பேசுகின்றார்கள்?"

",ஆமா. பொருள் தெரிந்திருந்தால் வேறொன்றும் தெரிந்திருக்கும். கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்ய மாட்டார்கள் என்ற உண்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்."

"நாம் அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே !"

"உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள்!

அவர்களுடைய ஒரே நோக்கம் கிறிஸ்தவத்தை இந்தியாவை விட்டு ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்."

"அவர்களை விடுங்கள். என்னிடம் விளக்குங்கள்."

"கிறிஸ்தவப் போதனைப்படி இறைவன் மனிதனை முழுமையான சுதந்தரத்தோடு படைத்தார்.

அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் மனிதன் அவற்றை முழுமனச் சுதந்தரத்தோடு ஏற்று அனுசரிக்க வேண்டும்.

ஆகவே சுதந்திரமாக மனிதன் கட்டளைகளை மீறும்போது தடுக்கவில்லை.

சுதந்திரமாக அவன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தானே மனிதனாகப் பிறந்து, பாடுபட்டு மரித்தாரேயொழிய,

 மனிதன் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படவேயில்லை.

அவர் நற்செய்தி அறிவிக்கும்போது அதை மக்கள் முழு மனச் சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்பினார்.

மக்களை கட்டாயப்படுத்த விரும்பியிருந்தால் அவர் அரசராக பிறந்து, நற்செய்தியை நாட்டின் சட்டமாக்கி, ராணுவத்தை கொண்டு அதை அமுல்படித்தியிருப்பார்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லையே!

கிறிஸ்துவின் நற்செய்தி முழுக்க முழுக்க ஆன்மீகமானது.

முழு மன சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

 என்பது அவரது அப்போஸ்தலர்களுக்கு அவர் கொடுத்த கட்டளை.

அவர்களும் தங்களது உயிரை கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்,

 அதற்காக வேறு யாருடைய உயிரையும் வாங்கவில்லை.

இப்போதும் கத்தோலிக்க திருச்சபை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

நாம் கிறிஸ்துவின் சொற்படி நற்செய்தியை அறிவிக்கிறோம்.

ஏற்றுக்கொள்ள மனது உள்ளவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதில் கட்டாய மதமாற்றம் எங்கே இருக்கிறது?

மதம் மாறுபவர்கள் அவர்கள் மனம் மாறுவதன் அடிப்படையில்தான். கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல."

"கிறிஸ்தவ மிசனரிகள் மக்களுக்கு கிறில்துவை அளிக்கதான் இந்தியாவுக்கு வந்தார்கள், இதை மறுக்க  முடியாது.

அப்படியானால் அதற்காகத்தானே பள்ளி கூடங்களை நிறுவியிருப்பார்கள்?"

",கிறிஸ்தவ மிசனரிகள் செய்த ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவை மக்களுக்கு அளிப்பதற்காகத்தான் என்பதை மறுக்கக்கூடாது.

அவர்கள் செய்தது இறைவன் அவர்களுக்கு கொடுத்த பணியை.

ஆனால் மக்களாகவே கிறிஸ்துவை முழு மன சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல.

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மக்களுக்கு இறையன்பு, 
பிறரன்பு, 
மன்னிப்பு, 
தீமைக்கு நன்மை செய்தல், 
தியாகம் 
போன்ற கிறிஸ்தவ மதிப்பீடுகளை (Christian values) மக்களுக்குக் கொடுத்தன.

அது கிறிஸ்துவை மக்கள் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

ஆனால் பள்ளிக்கூடங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

கட்டாயப்படுத்தியிருந்தால் அங்கு படித்தோர் யாவரும் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க வேண்டுமே.

ஏற்றுக்கொண்டோர் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனாலும் கிறிஸ்தவ மதிப்பீடுகள்  மக்களை மக்களாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.  

நம் நாட்டு மக்களின் அறிவார்ந்த நாகரீக வாழ்வுக்கும், மக்களின் தரமான வாழ்க்கைக்கும் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள்தான் காரணம்.

இறைவன் எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் காப்பாற்றிக் கொண்டு வருவது போல,

அவருடைய திருச்சபையும் எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கல்வி அறிவு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து இனத்தவரும், அனைத்து மதத்தவரும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களால் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும், நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமே கிறிஸ்துவை அனைவருக்கும் அளிப்பதுதான் என்பதை நாம் மறுக்க முடியாது.

மறுத்தால் நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்கள் அல்ல."

"நானே உலகின் ஒளி" என்று கூறிய இயேசு,

நம்மைப் பார்த்து  "உலகிற்கு ஒளி நீங்கள்" என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால்  "நான் செய்ததையே நீங்களும் செய்யுங்கள்" என்றுதானே அர்த்தம்.

அவர் தன்னையே உலகிற்கு அளிக்க வந்தார்.

அப்படியானால்,

நமது பணியும் அவரை உலகிற்கு அளிப்பதுதானே!"

", Exactly! நாம் வாழ்வதே அதற்காகத்தான்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment