Wednesday, February 16, 2022

"பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை" (மாற்கு. 8:15)

"பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை"
 (மாற்கு. 8:15)

"புளிப்புமாவுன்னா என்ன தாத்தா?" 

".உங்கள் வீட்ல பால் இருக்கா?"

"இரண்டு பால் மாடு இருக்கு. பாலுக்குப் பஞ்சமே இல்லை."

", தயிர், மோர் இருக்கா?"

"பால் இருக்கும்போது தயிர், மோர் இல்லாமயிருக்குமா?"

", பால மாட்லயிருந்து பசுவிடமிருந்து கரப்பீங்க. தயிர  எதிலயிருந்து கரப்பீங்க?"

"தயிர கரக்க மாட்டோம். கொதிக்க வைத்து ஆறிய பாலில் இரவு கொஞ்சம் உரமோர் கலந்தால் காலைக்குள் அது தயிராகி விடும்."

",உரமோர்னா என்ன?"

"கொஞ்சம் புளிப்பாக இருக்கும் மோர். அதைப் பாலோடு  சேர்த்தால் அது  புளிப்பு இல்லாத பாலையும் புளிப்புள்ள தயிராக மாற்றி விடும்."

", அதாவது புளிப்பு இல்லாத பால் புளிப்பான மோரோடு சேர்ந்தால், அதுவும் புளிப்பாகி விடும், அப்படித்தானே?"

"அப்படியேதான்."

",அதேபோல புளிப்பான கொஞ்சம் மாவை புளிப்பு இல்லாத மாவோடு சேர்த்தால்

புளிப்பு இல்லாத மாவும் புளிப்பான மாவாக மாறிவிடும்."

"பரிசேயருடைய புளிப்பு மாவுன்னா என்ன, தாத்தா?"

', ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த யூத குலப் பெரியவர்கள், சட்டம் படித்தவர்கள், யூத மக்களை வழி நடத்தியவர்கள்.

ஆனால் தாங்களும் ஆண்டவரின்  நற்செய்திப்படி வாழாமல், மக்களையும் நற்செய்திப்படி வழிநடத்தாமல்,

சட்டத்தின் கருத்திற்கு அல்லாமல், எழுத்திற்கு மட்டும்
(Only to the letter of the law, not to its spirit) முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

சட்டத்தை அனுசரித்தார்கள், வாழ வில்லை.

அவர்கள் வெளி வேடக்காரர்களாக (Hypocrites) வாழ்ந்து வந்தார்கள்.

 ஆண்டவரைச் சிலுவையில் அறைந்து கொல்லக்கூடிய அளவுக்கு அவர் மேல் அவர்களுக்கு வெறுப்பு இருந்தது.

அவர்களிடமிருந்த வெளி வேடக்காரத்தன்மைதான்
(Hypocrisy) அவர்களின் புளிப்பு மாவு.

எப்படி புளிப்பு மாவு தான் சேர்ந்த புளிக்காத மாவையும் புளிப்புள்ளது ஆக்கிவிடுகிறதோ,
 
அப்படியே பரிசேயர்களின் உறவில் இருப்பவர்களை அவர்களின் வெளி வேடக்காரத்தன்மை தொற்றிக் கொள்ளும்.

எல்லா துர்க்குணங்களுமே புளிப்பு மாவின் தன்மை உடையவைதான்.

கெட்டவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை அவர்களின் கெட்ட குணங்கள் தொற்றிக் கொள்ளும்.

இதுகுறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படிதான் .நமது ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குப் புத்திமதி கூறினார்.

அப்போதுதான் அவர்கள் தங்களிடம் போதிய அப்பமில்லையே என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் புத்திமதியை நாம் ஏற்றுக் கொள்வோம்.

ஆண்டவரின்  செயல் முறையையும் ஏற்றுக் கொள்வோம்.

அவரும் பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார்,

அவர்களை மன்னிப்பதற்காக, திருத்துவதற்காக.

பரிசேயர்களையும் தேடித்தான் உலகிற்கு வந்தார்.

ஆனால் அவர்கள் அவரை விரும்பவில்லை, திருந்தவும் விரும்பவில்லை.

ஆனால் மன்னிப்புப் பெறவும், திருந்தவும் விரும்பிய பாவிகள் அவர் சென்ற இடமெல்லாம் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

அவரது நற்செய்தியைக் கேட்டார்கள்.  அவரை விசுவசித்தார்கள். பாவமன்னிப்பும், நற்சுகமும் பெற்றார்கள்.

பரிசேயர்களும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்,

 ஆனால் அவரைக் கேள்விகள் கேட்கவும், அவரைக் கொல்ல வழி தேடவுமேசென்றார்கள்.

ஆண்டவர் சாதாரண, படிக்காத, பாவிகளை நேசித்தது போலவே

 படித்த, ஆனால் பாவிகளாக இருந்தாலும் தங்களை உத்தமர்கள் போல காட்டி வெளிவேடக்காரர்களாய் வாழ்ந்த பரிசேயர்களையும் நேசித்தார்.

 நாமும் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

 ஆண்டவரைப் போலவே அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

  ஆண்டவர்  'புளிப்பு மாவாகக்' கருதும்  குற்றம் குறைகள் எல்லோரிடமும் இருக்கலாம்.

நாம் நற்செய்தி அறிவிக்க ஆரம்பிக்கும் முன்னே  நம்மிடம் உள்ள குற்றம் குறைகளைக் கண்டுபிடித்து அவைகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் அறிவிக்கும் நற்செய்தியை கேட்பவர்கள் அதை கவனிக்க மாட்டார்கள் 

நமது குற்றம் குறைகளை மட்டுமே கவனிப்பார்கள்.

நாமும் நற்செய்தியை  அல்ல, குற்றம் குறைகளையே பரப்புபவர்களாக ஆகிவிடுவோம்.

எதிர்த் தரப்பில் உள்ளவர்களின் குற்றம், குறைகளை நாம் பற்றிக்கொண்டு வந்து விடக் கூடாது.

நாம் நல்ல முறையில் நற்செய்தியை அறிவித்தால்
எதிர்த் தரப்பில் உள்ளவர்கள் நற்செய்தியை உள்வாங்கி, தமது குற்றம், குறைகளைத் திருத்திக் கொள்வர்.

நாம் நற்செய்திப்படி வாழ்ந்தால்,

 அதாவது பரிசுத்தமாக வாழ்ந்தால்,

நமது வாழ்க்கையே நற்செய்தியைப் பரப்பும்.

ஆண்டவர் குறிப்பிடும் புளிப்பு மாவைப் பற்றி எச்சரிக்கையாகவே இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment