Friday, February 18, 2022

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மாற்கு. 8: 34)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(மாற்கு. 8: 34)

"தாத்தா, 'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுக்க வேண்டும்' என்று இயேசு ஏன் சொல்கிறார்?"

", ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும் என்று விரும்புவது மட்டும் வாழ்க்கை அல்ல. செய்ய வேண்டிய விதமாய்ச் செய்வதுதான் வாழ்க்கை.

படிப்பதற்காக பள்ளிக்கூடத்தில் சேர வேண்டும் என்று ஆசைப் பட்டாலே படிப்பு வந்து விடாது.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் அங்குள்ள விதிகளின்படி செயல்படாமல்,

 இஷ்டப்படி செயல்பட்டால் படிப்பு வந்துவிடாது.

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முதல்நாளிலேயே தலைமை ஆசிரியர் இதைக் கூறிவிடுவார்.

பள்ளிக்கூடத்தில் படிக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

'உங்களது சொந்த ஆசைகளை வீட்டில் விட்டு விட்டு வாருங்கள்.

இங்கு உங்கள் விருப்பப்படி அல்ல, பள்ளிக்கூடத்தின் விதிகளின் படிதான் நடக்க வேண்டும்.'

இதேயேதான் இயேசுவும் சொல்கிறார்.

'எனக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது . உங்களது சொந்த விருப்பங்களை மறந்துவிட்டு என்னுடைய விருப்பப்படிதான் செயல்பட வேண்டும்.'

என்னைப்போலவே நீங்களும் உங்களுக்கு தரப்படும் சிலுவையைச் சுமந்து வாழ வேண்டும்." என்கிறார்.

"சிலுவை ஏன் அவ்வளவு முக்கியம்?"

", இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் சிலுவை முக்கியம், ஏனென்றால் இயேசுவின் வாழ்வின் மையமே சிலுவை மரணம்தான்.

அவருடைய சிலுவை மரணத்தில்தான் நமது மீட்பும், நிலை வாழ்வும் அடங்கியிருக்கிறது.

சிலுவையின்றி மீட்பு இல்லை.

இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றாலே மீட்பின் பாதையில் நடக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

சிலுவை இல்லாமல் எப்படி மீட்பின் பாதையில் நடக்க முடியும்?

மீட்பின் பாதை என்றாலே சிலுவைப் பாதைதான்.

சிலுவை, பாடுகள், மரணம், உயிர்ப்பு, விண்ணகம்."

"இயேசு ஏன் சிலுவைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்?"


",மனுக்குலத்தின் மீது அவருக்கு இருக்கும்  அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தவே அவர் பாடுகள் நிறைந்த சிலுவைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 

 அவர்மீது நமக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தவே அவர் தேர்ந்தெடுத்த அதே பாதையை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"அவர் மரத்தினால் ஆன சிலுவையைச் சுமந்தார், அதில் அறையப்பட்டார். நாம்?"

", நமது வாழ்வின்போது நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக,

இயேசுவின் பெயரால் தாங்கிக் கொள்ளும்போது அவை சிலுவையாய் மாறிவிடுகின்றன.

இயேசுவுக்காக நம்மை நாமே மறுப்பதும்,

அதாவது நமது விருப்பங்களையும், ஆசைகளையும் தியாகம் செய்வதும் சிலுவைதான்."

"ஒரு உதாரணம் சொல்லுங்கள்."

", ரோட்டின் வழியே நடந்து செல்கிறாய். ஓரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கிறது. அது என்ன சினிமா என்று பார்க்க ஆசையாய் இருக்கிறது.

'ஆண்டவரே எனது இந்த ஆசையைத் தியாகம் செய்து எனது பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்' 

என்று ஒப்புக்கொடுக்கும் தவ முயற்சியே ஒரு சிலுவைதான்."

"அப்படியா? இதுவே ஒரு சிலுவை என்றால் தினமும் நூற்றுக் கணக்கான சிலுவைகளைச் சுமக்கலாம் போலிருக்கிறதே!"

", ஆமா, அதற்காகத்தானே தவக் காலமே வருகிறது.

பெரிய பெரிய கஷ்டங்களை மட்டுமல்ல,

நாமே வரவழைத்துக்கொண்ட சிறிய சிறிய, பொடிப்பொடி கஷ்டங்களை ஆண்டவருக்காக ஒப்புக் கொடுத்தாலே ஆண்டவருக்காக சிலுவையைச் சுமந்தது மாதிரிதான்."

"அப்போ மாணவர்கள் Study நேரத்தில அங்கே இங்கே திரும்பாமல் பாடப்புத்தகத்தைப் படித்து, அதை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் அதுவே சிலுவைன்னு சொல்லுங்க."

", கட்டாயமா. நாம் திருப்பலி நேரத்ல நமது கண்களையும், மனதையும்

 பீடத்தையும், குருவானவரையும், நற்கருணை ஆண்டவரையும் விட்டு வேறு எங்கும் திருப்பாமல் இருந்தால் அதுவே நமக்கு பெரிய சிலுவை."

"நாம் உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும் ஆண்டவரது பிரசன்னத்திலேயே வாழ்ந்தால் நமது வாழ்வே ஒரு பெரிய சிலுவையாக மாறிவிடும்."

", Sure. இறைப் பிரசன்னத்தில் வாழ்ந்து உலகிலேயே விண்ணக பேரின்பத்தை ருசித்துப் பார்ப்போம்!

Let us have a pretaste of Heaven by living in the presence of God now itself!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment