Friday, February 25, 2022

''ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."(மாற்கு. 9:50)

''ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."
(மாற்கு. 9:50)

"தாத்தா!"

"என்னடே? சந்தேகங்கள் ஊறிக்கிட்டே இருக்கா?"

"உங்களைக் கூப்பிட்டால் சந்தேகம் என்றுதான் அர்த்தமா?"

", என்ன விசயம்? சொல்லு."

"ஆண்டவர் ஒரு வசனத்தை உப்பிலே ஆரம்பித்து, சமாதானத்தில் முடிக்கிறாரு.
உப்புக்கும் சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம்?"

".உப்பைப் பற்றி என்ன சொல்கிறார்?"

" "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்?" என்று கேட்கிறார்.

அப்புறம் "உங்களுக்குள் உப்பு இருக்கட்டும்." என்கிறார்."

",அப்புறம் "ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்." என்கிறார். அப்படித்தானே?"

"ஆமா.இப்ப விளக்குங்கள்."

". உப்பை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்?"

"உணவோடு சேர்த்து சாப்பிடவும், உணவுப் பொருட்களைக் கெடாமல் பக்குவப் படுத்தவும் பயன்படுத்துகிறோம்."

", சீனி இனிப்பாக இருப்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்.

உப்பு எப்படி இருப்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்?"

"உவர்ப்பாக இருப்பதால்,"

".Suppose, சீனி இனிப்பாக இல்லை, மண்ணுபோல இருக்கு, அதை என்ன பண்ணுவ?"

"மண்ணுக்குள்ளதான் போடுவேன்."

", உட்பு தன் உவர்ப்புத் தன்மையை இழந்து விட்டது.
அதை என்ன பண்ணுவ?"

"நிச்சயமாக சாப்பாட்டுக்குள்ள போடமாட்டேன்."

".ஏன்?"

"உடுக்க முடியாத வேட்டியை என்ன பண்ணுவீங்க?"

", உடுக்க மாட்டேன்."

"அதேமாதிரிதான். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்க கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள்!" 

", கெட்டுப்போன உப்பு ஒன்றுக்கும் உதவாது."

"அது எனக்கும் தெரியும். ஏன் ஆண்டவர் "உங்களுக்குள் உப்பு இருக்கட்டும்." என்கிறார்?

அப்புறம் உப்பைப் பற்றி பேசாமல் "ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்." என்கிறார்.

உப்புக்கும், சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். அதுக்குப் பதில் சொல்லுங்கள்."

", சாப்பாட்டுக்கு உப்புபோல உங்களுக்கு சமாதானம் என்கிறார்.

தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாததை விளக்குவது ஆண்டவருடைய வழக்கம்.

அதனால்தான் அவருடைய போதனையில் உவமைகள் நிறைய இருக்கும்.

"சாப்பாட்டுக்கு உப்புபோல உங்களுக்கு சமாதானம்" என்று ஆண்டவர் சொல்கிறார்.

உனக்கு உப்பைப் பற்றி தெரியும். அதைப்போல சமாதானம் என்று சொன்னதைக் கேட்டவுடன் சமாதானத்தைப் பற்றி என்ன தோன்றுகிறது?"

"சாப்பாடு ருசியா இருக்கணும்னா உப்புப் போட்டுச் சாப்பிட வேண்டும்.

நமது வாழ்க்கை இனிமையா இருக்கணும்னா நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்க வேண்டும்."

", இன்னா சரியாச் சொல்லிட்டிய,

 அப்போ எனக்கு விடை தெரியுமான்னு test பண்றதுக்காக என்னிடம் கேள்வி கேட்டிருக்க, அப்படித்தானே?"

"தாத்தா, சமாதானத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீங்கன்னு பார்த்தேன்."

", கிறிஸ்து பிறந்த அன்று வான தூதர்கள் சமாதானம் பற்றிப் பாடிய பாடல் வரி ஞாபகம் இருக்கிறதா?"

"பூவுலகில் நன்மனதோர்க்குச் சமாதானமும் உண்டாகுக."

", Correct. அப்போ யார்ட்ட சமாதானம் இருக்கும்?"

"நல்ல மனது உள்ளவர்களிடம்."

", அதாவது?"

"மனதில் நல்லதையே நினைப்பவர்களிடம்.

நல்லதையே நினைப்பவர்கள்
நல்லதையே பேசுவார்கள்,
நல்லதையே செய்வார்கள்.

நல்லதையே நினைப்பவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.

 யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார்கள்.

எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

எல்லோருக்கும் நல்ல மனம் இருந்தால் மக்களிடையே சமாதானம் வளரும்,

 சண்டை சச்சரவுகள் ஏற்படாது.

 சமாதானம் நிறைந்த வாழ்க்கை இனிமையாக இருக்கும்."

",உலகில் சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்க காரணம் என்ன?"

"யாரிடமும் நல்ல மனது இல்லை."

".இன்று ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் போர் நடக்கக் காரணம் என்ன?"

"அவற்றை ஆள்பவர்களிடம் நல்ல மனது இல்லை."

",இப்போது ஏன் ஆண்டவர் சமாதானத்தை உப்புக்கு ஒப்பிட்டார் என்பது புரிகிறதா?"

"உப்பு தான் சேர்ந்த உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதைக் கெடாமல் பாதுகாக்கும்.

சமாதானம் தான் இருக்கும் மக்களின் வாழ்க்கையை இனிமையாக்குவதோடு

, அது கெட்டுப்போகாதபடி பாதுகாக்கும்."

", இப்போ புரிகிறதா?"

" புரிகிறது. எங்கே உப்பு இருக்கிறதோ அங்கே உணவு ருசியாக இருக்கும்.

எங்கே சமாதானம் இருக்கிறதோ, அங்கே வாழ்க்கே இனிமையாக இருக்கும்."

",ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment