Monday, February 21, 2022

வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம்.

வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம்.


"அண்ணாச்சி, கொஞ்சம் நில்லுங்க, உங்ககூட கொஞ்சம் பேசணும்."

"எவ்வளவு நேரம்?"

"நான் கேட்கப் போகிறது ஒரு சின்ன சந்தேகம். நேரம் உங்கள் பதிலைப் பொறுத்தது."

"அப்போ உட்கார்ந்தே பேசுவோம். உட்கார். இப்போ கேள்"

"கடவுள் நம்மை வாழ்வதற்காகத்தானே படைத்தார்."

", அதில் என்ன சந்தேகம்?"

"வாழ்வதற்காக படைத்தால் ஏன் இயேசு,

'உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான்' என்று சொல்கிறார்?"

"இயேசு கூறிய முழு வசனத்தையும் சொல்லு."


''தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். 

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்."
(மாற்கு. 8:35 )

", அதற்கு முந்திய வசனத்தில் இயேசு என்ன கூறுகிறார்?"


"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." என்கிறார்.

", இப்போ கவனி.

இயேசுவைப் பின்செல்ல விரும்புகிறவன்,

அதாவது அவரது நற்செய்தியை வாழ்வதன் மூலம் அவரது சீடனாக வாழ விரும்புகிறவன்,

இயேசுவைப் போலவே தன் சிலுவையை சுமந்து வரவேண்டும்.

இயேசு சிலுவையைச் சுமந்தது மட்டுமல்ல, அதில் மரணமும் அடைந்தார்.

இயேசுவைப் போல சிலுவையைச் சுமப்பவர்கள் அவரைப் போலவே அதில் மரணம் அடையவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிலுவையினால் ஏற்படும் மரணத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விருப்புகிறவனால்,

நித்திய மரணத்திலிருந்து தன்னைப் பாதுக்காக்க முடியாது.

(தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான்.)

நாம் சிலுவையைச் சுமப்பது நற்செய்தியின் படி வாழ்வதற்காகத்தான்.

நற்செய்தியின் படி வாழ்வதற்காக இவ்வுலகில் மரணிப்பவன் நித்தியத்துக்கும் வாழ்வான்.

(என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.)

இப்போது புரிகிறதா?"

"புரிகிறது. கடவுள் நம்மை வாழ்வதற்காகத்தான் படைத்தார்.

இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல,

மறுவுலகில் வாழ்வதற்காக."


", இயேசுவின் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வாழ்வது என்றாலே

சிலுவையைச் சுமந்து வாழ்வதுதான்.

சிலுவையைச் சுமந்து வாழ்வது
என்றாலே இவ்வுலக இன்பங்களுக்கு மரணிப்பதுதான்.


இவ்வுலக இன்பங்களுக்கு மரணிப்பதுதான் மறுவுலக நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்."

"நீங்கள் இதுவரை சொன்னதிலிருந்து நமது ஆன்மீக வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கருத்துக்களாக நான் புரிந்து கொண்டது எவை என்று சொல்லட்டுமா."

",சொல்லு பார்ப்போம்."

"1.இயேசு போதித்த நற்செய்தி அவரது சிலுவை மரணத்தைப் பற்றிய நற்செய்திதான்.

அதாவது நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று மீட்பு அடைவதற்காக 

 பாவப் பரிகாரப் பலியாக இயேசு தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததைப் பற்றிய நற்செய்தி.

2. இயேசு செய்த 
பாவப் பரிகாரத்தின் பலனை நாம் அடைய வேண்டுமென்றால் 

நாமும் அவரைப் போலவே சிலுவைப் பாதையில், நடந்து மரணம் அடைய வேண்டும்.

சிலுவைப் பாதைதான் நமது மீட்புக்கான பாதை. 

சிலுவைப் பாதையை ஏற்றுக் கொள்வோர் மீட்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


சிலுவைப் பாதையை ஏற்றுக் கொள்ளாதோர் மீட்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

3.சிலுவைப் பாதையில் நடந்தால்தான் மீட்புப் பெற முடியும் என்பதால்

 நாம் சுமப்பதற்கான சிலுவைகள் வரும்போது நாம் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

4. தவக்காலம் நெருங்குகிறது.
மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

சரியா?"

", Super சரி!"

லூர்து செல்வம்.

1 comment:

  1. Slot Machines Near Me - Mapyro
    Find 원주 출장마사지 Casino Near 순천 출장샵 Me in 충청남도 출장안마 Mapyro and other Casino Near Me in 안성 출장마사지 November 2021. Find your location now and start playing! Find the best place 대전광역 출장마사지 to play!

    ReplyDelete