Wednesday, October 23, 2019

எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.

எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.
---------------------------------------------------


 "Good morning!"

..."Good morning! Welcome again!"

 "உற்சாகமா இருக்கிறது மாதிரி தெரியுது!"

"Special ஆ ஒன்றும் இல்லை.
நீங்கள்தான் உற்சாகமா இருக்கிறது மாதிரி தெரியுது!"
 
"எதை வைத்துச் சொல்றீங்க?"

..."நீங்க சொன்ன வாக்கியத்திலேயே உற்சாகம் இருக்கே! உட்காருங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னால கோபமா எங்கிட்ட வந்தீங்க, ஞாபகம் இருக்கா?"

"நான் வந்தது எனக்கே மறக்குமா? 

உங்க மேல கோபம் இல்ல, 
கடவுள் மேலதான் கோபம்!"

..."பார்த்தீங்களா,அன்றைக்கே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கு!"

"இன்றைக்கு இருக்கு. அன்றைக்கு இல்லை.''


"உங்க பேரன் மேல உங்களுக்குக் கோபமா?"

ஹலோ! என் பையனுக்கே பத்து வயசுதான் ஆகுது. இல்லாத பேரன்மேல எப்படிக் கோபம் வரும்?"

..."உங்க கருத்துப்படி இல்லாத கடவுள் மேல எப்படிக் கோபம் வந்தது?"


"தெரியல. ஆனால் ஒண்ணு புரியுது, உங்களவிட நான்தான் கடவுள் பெயரை அதிகம் உச்சத்திருப்பேன்!"

..."உங்கள கோப நிலையிலும் இங்கு அனுப்பி வைத்தது எது தெரியுமா?"

"எது?"

"எந்தக் கடவுளை இல்லை என்றீர்களோ அந்தக் கடவுளின் அருள்!"

"நேற்றே அடிக்கடி 'அருள்' என்றீர்கள். இன்று  அதுதான் என்னை அனுப்பிவைத்தது என்கிறீர்கள். புரியவில்லை."

..."எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.

நீங்கள் கடவுளை நம்ப ஆரம்பித்தது ஒரு நல்ல காரியம்.

அது கடவுளுடைய உதவியால்தான் நடந்தது. 


கடவுளுடைய உதவியைத்தான் அருள் (Grace of God) என்கிறோம்.

இறைவனுடைய அருள் நற்காரியம் செய்யத் தூண்டும், செய்யும்போதும், செயல் முடியுமட்டும் உதவியாய் இருக்கும்.

இந்த அருளை 'உதவி வரப்பிரசாதம்' (Actual grace) என்போம்.

'உதவி வரப்பிரசாதம்' இல்லாமல் ஆன்மீகவாழ்வில் ஒரு நற்காரியமும் செய்யமுடியாது.

நாம் கேளாமல்கூட ஆண்டவர் இந்த அருளைத் தருகிறார்.

ஆயினும் இதை அதிகமாகப் பெற ஆண்டவரிடம் அடிக்கடி வேண்டவேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு இந்த அருளை அதிகமாகப் பெறுகிறோமோ

அவ்வளவுக்கவ்வளவு அதிக நற்செயல்கள் புரிவோம்.

அதிக நற்செயல்கள் புரிந்தால் இறைவனோடு நெருக்கமும்
அதிகமாகும்,

விண்ணுலகில் சம்பாவனையும் அதிகமாகும்."

"கடவுள் எல்லோருக்கும் இந்த அருளைத் தருகிறார் என்று
நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் அருளோடு ஒதுழைப்பதுபோல் தெரியலிய!''

..."உண்மைதான். அம்மா தரும்போது சாப்பிட்டால்தானே வயிறு நிறையும்.

உதாரணத்திற்கு ,பசியால்  வாடிக்கொண்டிருக்கும் ஒரு ஏழையைப் பார்க்கிறோம்.

இறைவனின் அருளின் தூண்டுதலால் அவனுக்கு உணவு கொடுக்கும்படி மனது சொல்கிறது.

 அந்தத் தூண்டுதலை ஏற்று, அதன்படி நடப்போர் தாங்கள் செய்த நற்செயலுக்கான பலனைப் பெறுவர்.

இறைவன் தந்த அருளோடு ஒத்துழைத்தால் பலன், 
இன்றேல் இல்லை."

"ஒரு சந்தேகம். மனித இயல்பின்படி நாம் நமது உறவினர்கட்கோ, அல்லது நண்பர்களுக்கோதான் உதவி செய்கிறோம்.

இறைவன் தன்னோடு உறவில் உள்ளவர்கட்கு மட்டும்தான் உதவி செய்கிறாரா,  அல்லது..?"

..."நீங்கள் கேட்க வருவது புரிகிறது. மனுக்குலத்தோர் அனைவரும் இறைவனால் மட்டுமே படைக்கப் பட்டவர்கள்.

எல்லோருமே இறைவனின் பிள்ளைகள்.

எல்லோருமே இறை உறவில் வாழ்ந்து விண்ணகம் வர அழைக்கப்பட்டவர்கள்.

கடவுள் மனிதனாகப் பிறந்தது, 
பாடுபட்டு தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக் கொடுத்தது மனுக்குலம் முழுவதன் பாவங்களின்
பரிகாரத்திற்காகத்தான்.

எல்லா மனிதருமே பாவ நிலையில்தான் பிறக்கிறார்கள்.

எல்லோருமே இரட்சிக்கப்பட வேண்டும்.

இறையுறவோடு இருப்பவர்கள்தான் இரட்சிக்கப்பட முடியும்.


பாவநிலையில்  பரிசுத்தரான கடவுளோடு உறவுகொள்ள முடியாது.

பாவ நிலையில் பிறந்த மனிதன் அந்நிலை நீங்கி பரிசுத்தமாவதற்கு ஞானஸ்நானம்  பெறவேண்டும்.

ஞானஸ்நானத்தின்போது நமது பாவநிலைநீங்கி பரிசுத்தமடைய. இறைவனால் நமக்குத் தரப்படும் இறை அருள் 'தேவஇஸ்டப்பிரசாதம்' 
(Sanctifying grace).


நம்மிடம் தேவஇஸ்டப்பிரசாதம் என்ற அருள் இருக்கும்போதுதான் நாம் இறை உறவில் இருக்கிறோம்.

இறை உறவில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நற்செயல்  செய்ய முடியும்."

"நான் இப்போது கடவுளை நம்புகிறேன்.

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தபோது நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறேன்.

அவையெல்லாம் நல்ல செயல்கள் இல்லையா?"

..."ஒரு சின்ன கேள்வி. நீங்க எது வரை படிச்சிருக்கீங்க?"

"B.A. B.Ed."

..."அதனால உங்களுக்கு என்ன பயன்?"

"அதனாலதான் ஆசிரியர் வேலை கிடைச்சுது."

"நான் பள்ளிக் கூடத்துக்கே போகல.

வீட்டில இருந்து எழுத வாசிக்கப் படிச்சிருக்கேன்

நீங்க தேர்வு எழுதிய வினாத் தாட்களை வாங்கி

 நானும் தேர்வு எழுதி, நானே  பேப்பர் திருத்தி, நானே மார்க் போட்டு, நானே எனக்கே Certificateம் கொடுத்திருக்கிறேன்.

உங்களை விட அதிக மார்க் போட்டிருக்கிறேன்.

என்னுடைய Certificateஅ எடுத்துக்கிட்டு நீங்க வேலை பார்க்கிற பள்ளிக்கே வந்து வேலை கேட்கிறேன். 

வேலை தருவாங்களா?"

"தரமாட்டாங்க.'

"Your certificate is not valid.
அரசு மூலமாக தேர்வு எழுதி, 
அரசு கொடுக்கிற சான்றிதழ்தான் செல்லும்.

எவ்வளவு நன்றாக எழுதியிருந்தாலும்,

நீங்களாகவே எழுதிய சான்றிதழ் செல்லாது."

..."அதே மாதிரிதான். 

1.திருமுழுக்கு மூலமாகப் பெற்ற

தேவ இஸ்டப்பிரசாத நிலையில்,

 2.இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல்தான் நற்செயல்.

இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் அது நற்செயல் அல்ல, வெறுஞ்செயல்தான்.

ஆன்மீக வாழ்வின் துவக்கமும்

ஓட்டமும்

நோக்கமும்

இறைவனோடு உள்ள உறவுதான்."

"நீங்கள் சொல்வது நன்கு புரிகிறது.

கத்தோலிக்கத் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்று,

கத்தோலிக்கத் திருச்சபையில்
வாழ்ந்து,

 கத்தோலிக்கத் திருச்சபையில் மரிப்பவர்கள் மீட்பு அடைவார்கள் என்று நீங்கள்  சொல்வது தெளிவாகப் புரிகிறது.

ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையில் இல்லாதவகளின் கதி என்ன என்ற கேள்விதான் மனதுக்கு உறுத்தலாக இருக்கிறது."

..."கடவுள் எல்லாம் வல்லவர்.

 எல்லா மக்களையும் படைத்தவர்.  

எல்லோரையும் படைத்தது ஒரே
நோக்கத்திற்காகத்தான்.

அவருடைய வழிமுறைகள் அதிசயமானவை.

மீட்பு கடவுளுக்கும் அவர் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் இடையே உள்ள விசயம்.

ஒவ்வொரு மனிதனையும் மீட்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அவர் செய்வார்.

கிறிஸ்து தன் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கத் தன் சீடர்களுக்குக் கட்டளை இட்டார்.

ஆனாலும்,  நற்செய்தியை அறியாத மக்களைக் கடவுள் கைவிடமாட்டார். ஏனெனில் அது அவர்களுடைய தவறு இல்லை.

அத்தகைய மக்கள் கடவுளால் அவர்கட்கு அளிக்கப் பட்டிருக்கிற மனசாட்சிப்படி நடந்தால் மீட்பு அடைவாகள்.


"Those who, through no fault of their own, do not know the Gospel of Christ or his Church,

 but who nevertheless seek God with a sincere heart, and, moved by grace, try in their actions to do his will as they know it

 through the dictates of their conscience—those too may achieve eternal salvation. (CCC 847)

நீங்கள் கடவுளை ஏற்றுக் கொண்டுவிட்ட படியால்

அந்த. உறுத்தல் உங்ளுக்கு வேண்டாம்.''


"அப்படியானால் நான் பெறவேண்டியது ஞானஸ்நானம்.  அதற்கு வேண்டிய ஆயத்தம் செய்வோம்."

..."இயேசுவே, உமக்கு நன்றி."

லூர்து செல்வம். 



No comments:

Post a Comment