Monday, October 14, 2019

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை.  (லூக்11:33)

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. 
(லூக்11:33)
-------------         ------------      -----------

"செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்."

மீட்பு பெற விசுவாசம் வேண்டும்.

விசுவாசம்தான் ஞான வாழ்வின் உயிர்.

ஆனால் உயிர்மட்டும் இருந்தால் போதுமா?

உயிர் உள்ள ஒருவன் நாள் முழுவதும் ஆடாமல், அசையாமல் படுத்திருந்தால்

அவனால் அவனுக்கும் பயனில்லை, மற்றவர்கட்கும் பயனில்லை.

அதேபோல்தான் நமது ஆன்மீக வாழ்விலும் நற்செயல்கள் இல்லாவிட்டால் விசுவாசத்தால் பயனில்லை.

"தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை மீட்க முடியுமா?"
(யாகப்.2:14)

நற்செயல் என்றால் என்ன?

இறைவனுக்காக, இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல்  நற்செயல்.

அதாவது, சுயபெருமைக்காக செய்யப்படும் செயலால் ஆன்மீகரீதியாக எந்தப் பயனும் இல்லை.

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

"நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே."   (மத்.6:2)

ஒரே செயலை ஆண்டவருக்காகச் செய்தால்
அது நற்செயல்.

நமது மகிமைக்காகச் செய்தால் அது வெறுஞ்செயல்.

நோக்கம் (Intention) செயலின் தன்மையைத் தலைகீழாக மாற்றிவிடும்.

இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல் இருவகைப்படும்.

1.இறைவன் மட்டும் பார்க்கும்படி செய்யும் செயல்.

நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். அப்பொழுது,

4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்: மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

5 "நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்:

ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர்.

அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 நீயோ செபம் செய்யும்பொழுது,

உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு,

மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.

மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்..(மத்.6:3-6)

2.இறைவனை அறியாதவர்களும் அறியச் செய்யும் செயல்.

இயேசுவின் நற்செய்தியை செயல்முறையாக (Practically)
போதிக்கும் செயல்.

நற்செய்தியை வார்த்தைகள் மூலம் வாய்வழியாக அறிவிப்பது வாய்வழி நற்செய்தி.

(Verbal Evangelisation).

நற்செய்தியை வாழ்ந்து, வாழ்க்கைமூலம், செயல் மூலம், அறிவிப்பது செயல்வழி நற்செய்தி.

(Practical Evangelisation)

"எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை."
(லூக்11:33)

"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு,

வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி,

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."
(மத்.5:16)

நமது மறைவாழ்வு (திருமறைவாழ்வு)

மறைவாழ்வாக(மறைவான வாழ்வாக)

இருக்கக்கூடாது.

மற்றவர்கள் நம்வாழ்வில் நற்செய்தியின் பிரதிபலிப்பைக் காணும்படி நாம் முன்மாதிரிகையாக வாழ வேண்டும்.

இறையன்பு, பிற அன்பு, மன்னிப்பு, கருணை உள்ளிட்ட அனைத்து நற்செய்திப் பண்புகளும் நமது  வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

நமது வாழ்வு செயல்முறை பைபிள் ஆக(Bible in action) விளங்க வேண்டும்.

நம்மைக் கிறிஸ்துஅவராகப் பார்ப்போர் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டியது

நமது வாழ்வில் தற்புகழ்ச்சிக்கோ,
சுய விளம்பரத்திற்கோ துளிகூட இடம் கொடுத்துவிடக் கூடாது.

எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்கே!

வாழ்வோம், வாழவைப்போம், இறைவனுக்காக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment