Sunday, December 30, 2018

2018ன் கவலை.

2018ன் கவலை.
****************************

"ஏண்டா, உன் மூஞ்சியில கொஞ்சங்கூட கவலையே இல்ல? "

"கவலையா? எதுக்கு? "

"365 நாளா நம்ம கூட இரவும் பகலும் பழகிக் கொண்டிருந்த 2018 நம்ம விட்டுப் போய்க்கிட்டிருக்கு. உனக்குக் கொஞ்சங்கூட கவலையே இல்லையா?"

"ஏண்டா, அதுதான் என்னைப்பற்றிக் கவலைப்படாம போய்க்கிட்டிருக்கு.

இந்த வருடம் மட்டுமா?

இதுவரை 25 ஆண்டுகள் கடந்து போயிருக்கின்றன.

இதுக்கெல்லாம் கவலைப் படுததாயிருந்தா நமக்கு கவலைப்படுததத் தவிர வேறு வேலையே இருக்காது."

"ஹலோ! நான்தான் 2018.

ஆமா, ஏது என்னைப் பற்றி பேச்சி  நடக்கு. என்ன விசயம்?"

"ஆமா, உன்னைப்பற்றிதான் பேசிக்கிட்டிருந்தோம்.
நீ போய்க்கிட்டிருக்கியாம். என் மூஞ்சியில கவலையே இல்லையாம். இந்தப் பொடியன் சொல்றான்."

"உண்மைதான. நீ உனக்காகவே கவலைப் பட்டதில்லை,

எனக்காக ஏன் கவலைப்படப்போகிறாய்?"

"எனக்காக நான் ஏன் கவலைப்படவேண்டும்? "

" ஏன்
கவலைப்படவேண்டுமா?

ஏன் தம்பி நான் உன்னோட ஒரு வருசம் இருந்திருக்கேன்.

உன்னிடம் வளர்ச்சிக்கான ஒரு அறிகுறியாவது இருக்கா?

வளர்ச்சிதான் இல்ல, தளர்ச்சியாவது இல்லாம இருக்கா?"

"இங்கபாரு. நீ எங்கிட்ட வரும்போது வயசு 25, இப்போ வயசு26.

அப்போ என் weight 60k.g, இப்போ70 k.g.

இது வளர்ச்சி இல்லையா?"

"இதுக்கு பேர்தான்  வளர்ச்சியா? பக்கத்து வீட்டு நாய்க்குட்டிக்குக்கூட ஒரு வயசு கூடியிருக்கு. இதுக்கு பேர் வளர்ச்சியா?

உன்னுடைய ஆத்தும வளர்ச்சிய பாரு.

போன வருசம் உங்க ஊர்த் திருவிழாவுக்கும், கிறிஸ்மசுக்கும் மட்டும்தான் கோவிலுக்கு உள்ள போய்ப் பூசை பார்த்த,

பார்த்த, கலந்துகொள்ளல.
(Attended, not participated)

இந்த வருடம் அதுவும் இல்ல."

"நன்மை வாங்க உள்ளே வந்தத நீ பார்க்கலியா?"

"ஒருநாளும் பாவசங்கீர்த்தனமே செய்யாம, முழு பாவ மூட்டையோடு வாங்கிறது நன்மை இல்லை."

"நான் எனது பாவங்கள நேரடியாகவே கடவுளிடம் சொல்லிடுவேன். எதுக்குச் சாமியாருட்ட சொல்லணும்?"

"இது, 'நான் நல்லா படிச்சிட்டேன்.எதுக்குப் பரீட்சை எழுதணும்?'னு  சொல்றது மாதிரி இருக்கு.

உண்மையான கிறிஸ்தவன் கிறிஸ்து சொன்னபடி நடப்பான்.  அவருக்கே பாடம் எடுக்கமாட்டான்.

ஒழுங்கா செபம் சொன்னாத்தானே இதெல்லாம் புரியும்."

"நான் செபமாலை சொன்னதைப் பார்த்ததில்லையா? "

"நீ செபமாலையைக் கையில வச்சிக்கிட்டு
அருள்நிறைந்த மந்திரத்த
மனப்பாடம் ஒப்பிச்சதப் பார்த்திருக்கேன்.

தியானம் செய்ததைப் பார்க்கல."

"ஏய் 2018, நீ  குற்றச்சாட்டுகள அடுக்கிக்கிட்டே போற."

"கொஞ்சம் பொறு தம்பி. நான் இன்னும் நாலு நாளில போயிடுவேன்.போனாப் போனதுதான், திரும்ப வரமாட்டேன்.

உன்னோடு இருக்குமட்டும் உன்னைத் திருத்த எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை.

போகிற போக்கிலாவது கொஞ்சம் திருத்த முயலலாமான்னு பார்த்தேன்."

"என்னைத் திருத்த அப்படி என்ன முயற்சி எடுத்தாய்?"

"கடவுள் நேரத்தைத் தருவதே நாம் திருந்துவதற்காகத்தான், வீணாக்க அல்ல.

கஷ்டங்கள்  வருவதே கடவுளை நினைப்பதற்காகத்தான்.

நீ கஷ்டங்கள் வரும்போதெல்லாம்

கடவுளைக் குறை சொல்லிக் கொண்டிருந்தாயே தவிர

திருந்தவில்லை."

"சரி, இப்போ நான் என்ன செய்ய வேண்டும்? "

"இதற்கு மேலாவது நல்ல கிறிஸ்தவனாக வாழ முயற்சி எடுக்க வேண்டும்.

அதற்காகப் புத்தாண்டுத் தீர்மானம் ஒன்று எடுக்கவேண்டும்."

"ஒன்று போதுமா?"

"நிறைய எடுத்து நிறைவேற்றாமல் போவதை ஒன்றே ஒன்று எடுத்து ஒழுங்காக நிறைவேற்றலாமே!"

"சரிப்பா, என்ன செய்யட்டும், சொல்லு."

"அடுத்து வர்ர ஆண்டுக்குள்ள சுத்தமா நுழையணும்.

நான் போறதுக்கு முன்ன ஒரு குருவானவரிடம் போய் நல்ல பாவசங்கீத்தனம் பண்ணு.

அடுத்து எடுக்கவிருக்கும் தீர்மானம் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்க உதவும்.

சர்வ வல்லமையும், அன்பும் நிறைந்த கடவுள் எங்கும் இருக்கிறார்.

உனது உள்ளத்திலும் இருக்கிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும்

உள்ளத்தில்  வாழும் கடவுளை, 

கடவுளை மட்டும்,

வேறு நினைவுக்கு இடம் கொடாமல்

நினைத்துப்பார்.

வார்த்தை எதுவும் தேவையில்லை.

நினைத்தால் மட்டும் போதும்.

'நினைத்தால் மட்டும் போதும்'

என்பது

'ஸ்விட்சை மட்டும் போடு' என்பதற்குச் சமம்.

ஸ்விட்சை மட்டும் போட்டால் போதும்,  பல்பு தொடர்ந்து வெளிச்சம் தரும்.

ஐந்து நிமிட தியானம் பகல் முழுவதும் பயன் தரும்.

நீ எதைச் செய்தாலும்

கடவுள் உன்னுடன் இருந்து

உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வரும்.

இதற்குப் பெயர்தான் கடவுள் சன்னிதானத்தில் நடப்பது.

அடுத்த ஆண்டு முழுவதும் கடவுள் சன்னிதானத்தில்  வாழ்ந்துபார். அதன் பயன்தெரியும்."

"5 நிமிடம் தியானி என்று கூறிவிட்டாய்.

மனம் தியானிக்க ஏதாவது விசயம் வேண்டாமா?

நமது மனம் உருவம் உள்ள பொருட்களையே நினைத்துப் பழகிவிட்டது.

உருவம் இல்லாத கடவுளை எப்படி நினைப்பது?"

"அம்மாவுக்கு உருவம் இருக்கிறது.

அம்மாவின் அன்புக்கு உருவமில்லை.

நீ உன் அம்மாவின் அன்பைப் பற்றி நினைத்துப்பார்ப்பதில்லை?"

"அம்மாவின் அன்புச் செயல்களை நினைத்துப் பார்த்திருக்கிறேன்."

"இறைவனுக்கு உருவமில்லை.

அவர் உன்னை உருவாக்கிய செயலுக்கு உருவம் இருக்கிறதே!

அம்மாவின் செயலிலிருக்கும் அன்பை நினைக்கக் கூடிய.
உன்னால்

ஒன்றுமில்லாமை யிலிருந்து

உன்னை உருவாக்கிய இறைவனின் அன்பை நினைத்துப் பார்க்கமுடியாதா?

நீ எத்தனையோ முறை பாவம் செய்திருந்தும்

உன்னை அழிக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறாரே

அந்த அன்பை நினைத்துப் பார்க்கமுடியாதா?

ஒவ்வொரு நாள் காலையிலும்

ஏதாவது ஒரு அன்புச் செயலை நினைத்து,

அன்பு நிறைந்த அவர்

உன் உள்ளத்தில் தங்கியிருக்கும் அன்பை

நினைத்துப் பார்க்க முடியாதா?"

" ஐயா 18,  ஒவ்வொரு நாள் காலையிலும் ஐந்து நிமிடம்

இறைவனையும், அவரது அன்பையும்

தியானிக்கத்

தீர்மானிக்கிறேன்.

போதுமா?"

"ரொம்ப சந்தோசம்.

இன்னும் நான்கு நாட்களில் மகிழ்ச்சியாய் விடை பெறுவேன்."

Good bye, 2018!
Welcome, 2019!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment