Wednesday, August 1, 2018

"வார்த்தைமனுவுருவானார்:" (அரு.1:14)

"வார்த்தைமனுவுருவானார்:"
(அரு.1:14)
*****************---**********-***
பரிசுத்த தமதிரித்துவத்தின்
இரண்டாம் ஆளாகிய இறைமகன் மனிதன் ஆனார்.

இறை தந்தை,  ஒரு ஆள், ஒரு சுபாவம், தேவசுபாவம்.

தூய ஆவி, ஒரு ஆள், ஒரு சுபாவம், தேவசுபாவம்.

இறைமகன் , ஒரு ஆள், இரண்டு சுபாவம்  (மனு உரு எடுத்தபின்),

1.தேவ சுபாவம்.
2. மனித சுபாவம்.

இயேசு மனுவுரு எடுத்தபோதும் இறைப்பண்பு
முழுவதும் அப்படியே இருந்தது.

ஆகவே இயேசு முழுமையாக கடவுள்.

Jesus is fully God.

இயேசு மனுவுரு  எடுத்தபின், பாவம் தவிர,  மற்ற எல்லா பண்புகளிலும் நம்மைப்போலவே இருந்தார்.

இயேசு முழுமையாக மனிதன்.

Jesus was fully man, with all the human attributes,  except sin.   

மாற்றம், வளர்ச்சி,  தளர்ச்சி, துன்பம், பயம், அழுகை, மகிழ்ச்சி, மரணம்  போன்ற எல்லா மனித பண்புகளையும் இயேசு ஏற்றுக்கொண்டார், நமக்காக.

இயேசுவால் தேவசுபாவத்தில் துன்பப்ப முடியாது.

துன்பப்படவேண்டும் என்பதற்காகவே மனித சுபாவத்தை ஏற்றார்.

நிறைவான இறைவன் ஏன் குறைகள் உள்ள மனித சுபாவத்தை ஏற்கவேண்டும்?

தன்னால் படைக்கப்பட்ட உலகில் வாழ்ந்துவிட்டு

நித்தியமும் தன்னோடு வாழவேண்டும் என்பதற்காக மனிதனைப் படைத்தார்.

படைக்கப்பட்டபோது மனிதன் பாவம் இன்றி இறைவனோடு அருள் உறவோடிருந்தான்.

ஆனால் பாவம் செய்தவுடன் மனிதன் இறைவனோடு கொண்டிருந்த அருள் உறவை இழந்தான்.

அதாவது நித்தியத்துக்கும் இறைவனோடு வாழக்கூடிய தகுதியை இழந்தான்.

இழந்த தகுதியை திரும்பவும் பெறவேண்டுமென்றால் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரத்தை எப்படிச் செய்வது?

இறை நீதியின்படி

மனிதன் செய்ய வேண்டிய பரிகாரம்

அளவற்றதாக இருக்க வேண்டும்.

அது முடியாத காரியம்.

ஆகவே கடவுளே,

தன் அளவற்ற அன்பின் காரணமாக, 

மனிதனாகி,

மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தைச் செய்ய

நித்திய காலமாகத் தீர்மானித்தார்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றவே

இரண்டாம் ஆளாகிய மகன் கடவுள் மனிதனானார்.

இறைமகன் மனிதனாகக் காரணமாக இருந்தது இறைவனுடைய

அளவற்ற நீதியும்,

அளவற்ற அன்பும்தான்.

நீதி பரிகாரத்தைக் கேட்டது,

அன்பு பரிகாரத்தைச் செய்தது.

இரண்டும் ஒரே இறைவனின் செயல்தான்.

இயேசு மனிதனாக இருந்ததால்

அவர் செய்த பரிகாரம்

மனித இனம் செய்த பாவத்திற்கு

மனிதனே செய்த பரிகாரமாகிறது.

அவர் கடவுளாகவும் இருந்ததால்

அவர் செய்த பரிகாரம் அளவற்ற கடவுளுக்கு ஏற்றதாகிறது.

ஆக, இறைவனது நீதியும், அன்பும் அவர் மனிதனாகக் காரணமாய் இருந்தன.

இறைவனின் நீதி தண்டிக்காது, மன்னிக்க மட்டுமே செய்யும்.

''நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை,

உலகை மீட்கவே வந்தேன்." (அரு.12:47)

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல்,

முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு

கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்" (அரு.3:16)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது

அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,

அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3:17)

நம்மை அன்பு செய்யும் இறைவனை நாமும் அன்பு செய்வோம்,

இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment