Sunday, April 21, 2019

How  is God everywhere?

How  is God everywhere?
-***************************

God created the universe from nothing.

By universe we refer to the vast space with the millions of stars with their planets which are within it.

We cannot even imagine the vastness of the space.

Light travels at a speed of 1,86,000 miles per second.

Scientists say that the light rays of some stars have not yet reached our planet though they are travelling at this speed right from the time of their creation millions of years ago!

Can we just imagine the distance between them and our planet?

They are innumerable million folds of light years from our planet.

 One light year is equal to 1,86,000 x 60 x 60 x 24 x 365 miles!

Just imagine the size of the universe created by God!

Where is God?

God is everywhere.

The question and answer belong to a human language.

Man is living in the material universe created by God.

Though he is a combination of matter and spirit (body and soul) his language is related to matter as he has to deal with material things all his life.

The trouble is, he has to use the same material language even when he speaks about spirituality.

This is the cause of the confusion in our understanding things spiritual.

We use the question word ‘where’ when we expect an answer referring to a material place.

“Where are you living?”

“I am living in Pavoorchatram.”

“Where is the book I gave you?”

“It is on my table.”

We use the same ‘where’ when expect an answer referring to spiritual things.

“Where is God?”

“Where is heaven?”

“Where will we go after death?”

Just as ‘where’,

‘everywhere’ too refer to a material place.

By ‘everywhere’ we refer to the whole universe.

“God is everywhere’’ means that God is in all the places in the vast universe.

How is God everywhere?

Having no other go but to use a material language to describe things Divine,

we must be very careful in understanding what is described.

When we say ‘everywhere’ what comes to our mind is the material universe with its vast space with the million folds of stars in it.

True, God is everywhere in the universe covering a circumference of trillion folds of square miles! 

The same God, who is within and around us, is also in a star which is many trillion light years away from us.

But, how?

The universe we are talking of is a material thing.

But God is a spirit.

 Spirit cannot occupy a matter.

In fact a spirit needs no space for its existence.

We know that it was God who created the space.

God exists from all eternity when space was only an idea in His mind as we too were.

Then how is He in the material universe?

His being ‘everywhere’ is purely spiritual, not material.

God is everywhere by His

Power,
knowledge,
Love,
being the primary cause.

To be a little more clear,

1.By His power,

that is,

The universe was created by His power and is maintained by His power.

It is the universal spiritual presence of the almighty power of God

that is maintaining the whole universe.

2. By His knowledge,

that is,

He knows it through and through,

He knows it from all eternity,

Each and every material particle of the whole universe is in His eternal memory.

If God forgets the universe for  a single fraction of a second,

which will never happen,

it will return to the nothingness whence  it came by God's power.

Now it is quite safe in the eternal memory of God.

3. By His Love.

God loves His creation.

Whatever damage man may have done to His creation by his sin, God's love is unchangeable.

He still loves it and will love it.

It is due to His unlimited love that the human race is still alive in spite of its innumerable sins against Him.

4.By His being the primary cause of everything.

No cause, no effect.

God is the primary cause of whatever happens the universe.

Not even a single atom can move without God willing it.

God is a spirit.

It is His spiritual presence that is activating the universe.

God created us in His image.

Our spiritual soul is activating our material body.

Lourdu Selvam.

Friday, April 19, 2019

யாருக்காக வாழ வேண்டும்?

யாருக்காக வாழ வேண்டும்? https://lrdselvam.blogspot.com/2019/04/blog-post_19.html

யாருக்காக வாழ வேண்டும்?
******************************

இயேசு சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்.

நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று சொன்னவர்,

சொன்னதோடு நிற்கவில்லை, அப்படியே வாழ்ந்து காண்பித்தார்.

இது நன்கு புரியவேண்டுமானால், நமக்கு ஏற்கனவே தெரிந்த சில உண்மைகளை நினைவிற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இயேசு  சொன்னதும், செய்ததும் நமக்குப் புரியும்.

நினைவில் கொள்ளவேண்டிய அடிப்படை உண்மைகள்:

1.ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

2.மூன்று ஆட்களும் ஒருவருக்கொருவர் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள் அல்ல. அளவற்றவர்கள்

3.மூவருக்கும்  ஒரே தேவசுபாவம், ஆகவே மூவரும் ஒரே கடவுள். மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்.

4.மனித அவதாரம் எடுத்தது இரண்டாம் ஆளாகிய மகன் மட்டும்தான்.

5.கடவுள் நித்தியர், அதாவது துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

6.கடவுளுடைய எல்லா பண்புகளும் அளவுகடந்தவை.

7.அவருடைய திட்டங்கள் யாவும் நித்தியமானவை.

8.கடவுள் அரூபி, ஆகவே அவர் இருக்க இடம் (material place) தேவை இல்லை.

அவர் எங்கும் இருக்கிறார் என்றால், நம்மைப் போல இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கவில்லை.

தனது பண்புகளால் எங்கும் இருக்கிறார்.

9. அவர் நிறைவு (Perfect) உள்ளவராய் இருப்பதால் அவர் மாறாதவர்.

இறைமகன் மனிதனாய்ப் பிறந்தது நம்மை இரட்சிப்பதற்காக.

அவர் மனிதனாய்ப் பிறந்து உலகை இரட்சிக்க வேண்டுமென்பது பரிசுத்த தமதிரித்துவத்தின் சித்தம்.

தமதிரித்துவத்தின் சித்தத்தை நிறைவேற்றவே மகன் மனிதன் ஆனார்.

இரட்சண்யம் அடைய நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவரே வாழ்ந்து காட்டினார்.

இரட்சண்யம் பெற முதலில் இவ்வுலக பற்று இருக்கக்கூடாது.

இவ்வுலகைப் படைத்து, பராமரித்துவரும் அவரே,

உலகப்பற்று அற்றவராக இருந்தார்.

அதனால்தான் வள்ளுவர்,

"பற்றுக பற்றற்றான்  பற்றினை பற்று விடற்கு."

என்றார்.

தனது பற்றற்ற குணத்தை நமக்கு எடுத்துக்காட்டத்தான்

முழு உலகிற்கும் சொந்தக்காரரான அவரே,

பிறக்கக்கூட இடம் கிடைக்காமல், ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழைத்தாயிடம் பிறக்கிறார்.

"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"(லூக்.9:58)

என்று அவரே சொல்லக்கூடிய அளவுக்கு வசதி இன்றி வாழ்ந்தார். (அவரது பிரதிநிதிகள் இதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்)

அடக்கம் செய்யப்படக்கூட இடம் இல்லாமல் அடுத்தவருக்காக வெட்டப்பட்ட கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

இது அவரே போட்டுக்கொண்ட
திட்டம்.

இது மட்டுமல்ல அவரது வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், அவரது மரணம் உட்பட, அவரே போட்டுக்கொண்ட
திட்டம்தான்.

அளவற்ற தன்மையில்  தந்தைக்கும்,பரிசுத்த ஆவியானவருக்கும்  நிகரான அவர்,

"தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."

இயேசு நற்செய்தி அறிவிக்கும்போது  தான் தன் தந்தைக்கு நிகர் ஆனவராயிருந்தும்

தன்னையே தாழ்த்தி தந்தையை முன்னிலைப்படுத்திப் பேசினார் என்பதை விளக்க ஒரு  சில வசனங்கள்:

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள

'என் தந்தையின் விருப்பப்படி'

நடப்பவனே சேருவான்."
(மத்.7:21)

"ஆம்,

'என் தந்தையின் விருப்பம் இதுவே:' (அரு.6:40)

"நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள

'உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.

மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்." (மத்.6:6)

"தந்தாய்,

நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன்" (அரு.17:24)

"உங்கள் வானகத் தந்தை

அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ?"
(மத்.6:26)

"அவற்றை எனக்களித்த

என் தந்தை அனைவரிலும் பெரியவர்:

என் தந்தையின் கையிலிருந்து

. எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது."(அரு.10:29)

"ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்:

என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்:

நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்."
(அரு.14:23)

அவர் நற்செய்தி அறிவிக்கும் போதெல்லாம் தன் தந்தையை

முன்னிலைப்படுத்தியே  எப்போதும் பேசினார்.

தந்தையின் சித்தம் இயேசுவின் சித்தம்தான்.

ஆனால், 'என் சித்தத்தை நிறைவேற்ற வந்தேன்' என்று ஒருபோதும் சொன்னதில்லை.

      "என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு.6:38)

என்றுதான் சொன்னார்.

இதனால் இயேசு எந்த விதத்திலும் தந்தையைவிட குறைந்தவர் என்று அர்த்தம் அல்ல.

"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."

அவரது  மனத்தாழ்ச்சியே அவரை இவ்வாறு பேசவைக்கிறது.

நாம் மனத்தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு
முன்னுதாரணமாக

சர்வ வல்லபரே தன்னையே தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்து மனிதனாய்ப் பிறந்தது நம்மை இரட்சிபதற்கு.

நாம் மனிதனாய் வாழ்வது இரட்சண்யம் அடைவதற்கு.

நமது இரட்சண்ப் பாதை நாம் வாழும் திருச்சபை.

"நானே வழி" என்று கூறிய இயேசுவின் ஞான சரீரம்தான் (Mystical body) திருச்சபை.

நமக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும்போதுகூட தன்னை முன்னிறுத்தாமல் "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" என்றுதான் செபிக்கச் சொன்னார்.

அவரது வழி செல்லும் நாம் நம்மை முன்னிறுத்தி செயல்புரிகிறோமா?

அல்லது இறைவனை முன்னிறுத்தி செயல்புரிகிறோமா?

என்று சிந்திப்போம்.

வழக்கமாக நமது ஆசைகளை முன்னிறுத்தி

அவற்றை நிறைவேற்றவே இறைவனின் உதவியைக் கேட்போம்.

"நான் குருவானவராக ஆசைப்படுகிறேன்,  ஆண்டவரே உதவி செய்யும்.

நான் ஆசிரியர் ஆக விரும்புகிறேன், ஆண்டவரே உதவி செய்யும்.

நான் திருமணம் செய்ய விரும்புகிறேன், ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துத்தாரும்."

இப்படி நமக்கு வேண்டியதற்ககாகவே வேண்டும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டுவிட்டது.

இறைவனைத் தியானித்து,  அவரது சித்தத்தை அறிந்து,

"இறைவா, என் ஆசை அல்ல, உமது சித்தமே என்னில் நிறைவேரட்டும்" நிறைவேரட்டும் என்று

எத்தனை பேர் செபிக்கிறோம்?

நமது ஞானவாழ்வில்கூட நமது ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனை கேட்டு

அவர் சொற்படி எத்தனை பேர் நடக்கிறோம்?

நமது நலனைவிட தாய்த் திருச்சபையின் நலனை முன்னிறுத்தி எத்தனை பேர் செயல்படுகிறோம்?

பிறருக்காக மட்டும் எத்தனை பேர் வாழ்கிறோம்?

நாம் இரட்சண்யம் அடைய

1.இறைவனை நேசிக்க வேண்டும்.

2.அயலானை நேசிக்க வேண்டும்.

தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்கு கட்டளை தேவை இல்லை, மனித இயல்பில் உள்ளது.

இறைவனுக்காகவும், அயலானுக்காகவும் தன்னைத் தியாக செய்யலாம்.

ஆனால் தன் நலத்திற்காக இறைவனையும், அயலானையும் தியாகம் செய்யக்கூடாது.

ஆக, இரட்சண்யம் அடைய இறைவனையும், அயலானையும் முன்னிறுத்திதான் செயல்படவேண்டும்.

தன்னை முன்னிறுத்தினால் இறையன்பும், பிறரன்பும் அடிபட்டுப்போகும்.

இதனால்தான் இயேசு தன் தந்தையை முன்னிறுத்தி நற்செய்தி அறிவித்தார்,

நமக்காகப் பாடுபட்டு மரித்தார்.

தன்னைத் தியாகம் செய்தார்.

தந்தைக்கு நிகரான, தந்தையோடு ஒன்றான சர்வ வல்லபம் உள்ள இறைமகனே

நமது இரட்சண்யத்துக்காக

தன்னையே தாழ்த்தி

தந்தையை முன்னிறுத்தி செயல்பட்டிருப்பதால்,

அவரது சீடர்களாகிய நாம்

நமது எல்லா செயல்களிலும்

நமது விண்ணகத் தந்தையை முன்னிறுத்தி, அவரது அதிமிக மகிமைக்காக அவரை நேசிப்பதோடு

நமது அயலானையும் நேசிக்கவேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் சேவையாக மாற வேண்டும்.

சுருக்கமாக

இரட்சண்யம் அடைய

நாம்

நமக்காக அல்ல

இறைவனுக்காகவும்

அயலானுக்காகவும்

வாழவேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, April 16, 2019

உங்களுக்கு விசுவாசமில்லையா?

உங்களுக்கு விசுவாசமில்லையா?
***********************

சீடர்கள்   இயேசுவைப்  படகில் அழைத்துச் சென்றனர்.

அவருடன் வேறு படகுகளும் சென்றன.

அப்போது பெரிய புயல் காற்று உண்டாயிற்று.

அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.

இயேசு பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்.

அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.

அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இரையாதே, சும்மாயிரு" என்றார்.  

காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

"He rose up and checked the wind, and said to the sea, Peace, be still. And the wind dropped, and there was deep calm."

பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசம் இல்லையா?" என்றார்.

உலகில் நடப்பதெல்லாம் இறைவனுடைய நித்திய திட்டப்படிதான் நடக்கின்றன.

தற்செயலாக எதுவும் நடப்பதில்லை.

காரண காரியத் தொடர்போடு கடவுள் ஒவ்வொரு செயலையும் நடத்துவிக்கிறார்.

மாற்கு குறிப்பிடுகிற படகுப் பயணத்தில்

சீடர்களின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காகவே ஒரு புயற்காற்றை உருவாக்கிவிட்டு

இயேசு நிம்மதியாகத் தூங்குகிறார்.

அலைகள் படகின்மேல் மோதியதால்  நீர்  படகிற்குள் வந்து படகை நிரப்ப ஆரம்பித்தது.

சீடர்களின் விசுவாசம் ஆழமானதாக இருந்திருந்தால் 'இயேசு நம்மோடிருக்கிகிறார், நமக்கு புயலாலும் அலைகளாலும் எந்த ஆபத்தும் வராது' என்று

அமைதியாய், புயலை இரசித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களோ விசுவாச பற்றாக்குறை காரணமாக

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்று அலற ஆரம்பித்தனர்.

இயேசு எழுந்து புயலை அடக்கிவிட்டு,

அவர்களின் விசுவாசக்குறைவுக்காக அவர்களைக் கண்டித்தார்.


இயேசுவை யூத குருக்கள் கைது செய்யும் வரை அவரோடு இருந்த அவருடைய சீடர்கள்,

கைது செய்தவுடன்

'அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.'

எவ்வளவு விசுவாசம்!

சீடர்களைக் காப்பாற்றுவதற்காக இயேசு,

"என்னை நீங்கள் தேடிவந்திருந்தால் இவர்களைப் போகவிடுங்கள்"

என்று சொன்னது உண்மைதான்.

ஆனால் அவர்மீது ஆழமான விசுவாசம் உள்ள சீடர்களாய் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

"எங்களால் எங்கள் ஆண்டவரை விட்டு பிரிந்திருக்க முடியாது. கைது செய்வதானால் எங்களையும் சேர்த்து கைது செய்யுங்கள்." என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

சொல்லவில்லையே!

இராயப்பர் 'தொலைவில்' அவரைப் பின்தொடர்ந்தார்.

பின்தொடர்ந்து ஒன்றும் சாதிக்கவில்லை.

இயேசுவை மும்முறை மறுதலித்தார்!

இயேசு சிலுவையில் தொங்கும்போது

சீடர்களில் அருளப்பர் மட்டும்தான் சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தார்.

படகுப் பயணத்தின்போது இயேசு சீடர்களின் அருகில் இருந்தார்.  ஆனால் தூங்கிக் கொண்டிருந்தார்.

பாடுகளின்போது ஆண்டவர் விழித்திருந்தார். ஆனால் சீடர்கள் அருகே இல்லை.

நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.

நமது நிலை என்ன?

நமது விசுவாசம் எந்த நிலையில் உள்ளது?

படகுப் பயணதின்போது இயேசு சீடருடன் இருந்தது போலவே இப்போதும் நம்மோடும் இருக்கிறார்.

நாம் அதை உணர்கிறோமா?

அன்று சீடர்களின் பார்வையில் இருந்தார்.

இப்போது நமது ஊனக்கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் அவர் நம்மோடு இருக்கிறார்.

அவரை நமது விசுவாசக்கண்ணால்  பார்த்து,  அந்த உணர்வோடு நாம் வாழ்கின்றோமா?

அவரை மறந்து வாழ்ந்தால்,

பாடுகளின்போது அவரது சீடர்கள் ஓடிப்போனதுபோல

நாமும் ஓடிவந்துவிட்டோம் என்று அர்த்தம்.

நமக்குள் ஒரு பழக்கம் இருக்கிறது.

துன்பவேளையிலும், ஆபத்து வேளையிலும், நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலும் கடவுளைத் தேடுவது.

பிரச்சினை தீர்ந்ததும் மறந்துவிடுவது.

படகுப்பயண சீடர்கள்கூட புயல் அடித்திராவிட்டால் ஆண்டவரை எழுப்பியிருக்க மாட்டார்கள்.

நம்மை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள்

நாம் அவரை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்
அவ்வப்போது சிலுவைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" (1தெசெ..5:18) என்ற புனித சின்னப்பரின் அறிவுரைக்கேற்ப

நம் வாழ்வில் சிலுவையைச் சுமக்க நேர்ந்தாலும்,

மகிழ்ச்சி பொங்கினாலும்

இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

ஏனைனில் எல்லா நிலைகளிலும் நம்மைப் பராமரித்து வழி நடத்துபவர் அவரே.

அவர் திட்டமிட்டு நம்மில் செயல்படுத்தும் ஒவ்வொரு நிகழ்வும் நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு உதவி செய்வதாகத்தான் இருக்கும்.

நமது ஒவ்வொரு அசைவிலும் ஆண்டவர் இருப்பதால்

நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும்

அவரது நினைவோடுதான் வாழவேண்டும்.

நாளின் ஒவ்வொரு செயலையும்

"தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்"

ஆரம்பித்து, முடித்தால்

செயல் முழுவதும் கடவுளின் சன்னிதியில்  நடைபெறும்.

சில சமயங்களில் இயேசு படகில் தூங்கிக்கொண்டிருந்தது போல

நமது உள்ளத்தின் ஒரு ஓரத்தில்' தூங்குவது போல' அமைதியாக உட்கார்ந்திருக்கலாம்.

ஆனால் தூங்கமாட்டார்.

நாம் இருட்டினில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆனால் இயேசுவின்மேல் கொண்டுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும்.

நம் இயேசு நம்மைவிட்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலகமாட்டார்.

நாம் எந்தச் சூழ்நிலையிலும் அவரை மறந்துவிடக்கூடாது.

அடிக்கடி திருப்பலி காண்பது,

நற்கருணை உட்கொள்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம்

நற்கருணை நாதரைச் சந்திப்பது
போன்றவவை 

நாம் எப்போதும் இயேசுவோடு வாழ உதவியாய் இருக்கும்.

இயேசுவின் பாடுகளின்போது அவரது சீடர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள்.

ஆயினும் அவர்கள்மேல் இயேசு கோபம் கொள்ளவில்லை.

அவரது மரணத்துடன் பாடுகள் முடிவடைந்தன.

அடக்கம் செய்யப்பட்ட அவருடைய உடலுக்கு எந்தவித வேதனையும் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்த அவரது ஆன்மா

நல்ல மரணம் அடைந்து இரட்சண்யத்துக்காக காத்துக்கொண்டிருந்த

பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களிடம் அவர்கள் இரட்சிக்கப்பட்ட செய்தியை அறிவித்து

அவர்களைத் தந்தையிடம் அழைத்துச் செல்ல சென்றது.

மீட்கப்பட்ட நல்ல கள்ளனும் இயேசுவுடன் விண்ணகம் சென்றான்.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்"

என்று இயேசு கொடுத்த வாக்குறுதிக்கேற்ப, அன்றே அவன் சென்றுவிட்டான்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு தன் சீடர்ளைச் சந்தித்தார்.

தன்னை விட்டு ஓடிப்போனதற்காக அவர்ளைக் கடிந்துகொள்ளவில்லை.

மாறாக "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக." என்று வாழ்த்தினார்!

என்னே இயேசுவின் அன்பு!

நமக்கும் இயேசு சமாதான வாழ்த்தைத்தான் கூறுகிறார்.

அந்த வாழ்த்தே நம்மை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லும்.

இவ்வுலகில் அவரை விசுவாசக் கண்ணால் பார்த்த நாம்

அவரை நேருக்கு நேர் பார்ப்போம்!

இவ்வுலகில் விசுவாசம் மிக முக்கியம்.

விசுவசிப்போம்,

அதன்படி நடப்போம்,

விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

Monday, April 15, 2019

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

******************************

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது

உடல்வேதனையோடு மனவேதனையும் தாங்கமாட்டாமல் அவர் கூறிய,

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

என்ற வார்த்தைகள் நமக்குக் கண்ணீரை வரவழைப்பதோடு,

சில சிந்தனைகளையும் எழுப்புகின்றன.

அவர்தான் கடவுள்.

அவர்'தான்' என்றேன், ஏனெனில் அவர்  பிதாவோடும், பரிசுத்த ஆவியயோடும்  ஒரே கடவுளானவர்.

கடவுளைப் பிரிக்கமுடியாது.

அவரே பிரிக்கமுடியாத கடவுளாக இருக்கும்போது ஏன்

"என் கடவுளே" என்று தன்னையே அழைக்கவேண்டும்?

அவரே அவரைக் கைவிட்டு விட்டாரா?

"ஏன் என்னைக் கைவிட்டீர் ?"  என்றால்,  அவர்மேலேயே  நம்பிக்கை போய்விட்டதா?

இது போன்ற கேள்விகள் எழும்.

எழவேண்டும், அப்போதுதான் அவற்றுக்கு விடைகாண முயல்வோம்.

கேள்வியே எழாவிட்டால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்று அர்த்தம்.

மனிதனைப் படைத்த அதே கடவுள்தான்

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாய்ப் பிறக்கத் திட்டமிடுகிறார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் (பாவம் தவிர) திட்டமிடும் அவர்,

அவர் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும் திட்டமிடாதிருப்பாரா?

பாவத்தாலேயே புவிக்குள் புகுந்த துன்பத்தைப் பாவப்பரிகாரம் செய்யும் கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.

அதாவது,  பாவம் தான் புகுத்திய துன்பத்தாலேயே அழியத் திட்டமிட்டார்.

தனது உடல் மரணத்தாலேயே நமது ஆன்மீக மரணத்தை வெல்ல திட்டமிட்டார்.

பாவத்தின் சம்பளமான மரணத்தை மோட்சத்தின் வாசலாக மாற்ற திட்டமிட்டார்.

பாவத்தின் காரணங்களில் ஒன்றான நமது பலகீனத்தை அழித்திட பலகீனத்தையே கருவியாக பயன்படுத்தத் திட்டமிட்டார்.

சுருக்கமாகச் சொன்னால் முள்ளை முள்ளாலேயே எடுக்கத் திட்டமிட்டார்.

சர்வ சக்தி வாய்ந்த கடவுள்,  மிகவும் பலகீனமானமான மனிதனாய்ப் பிறந்தார்..

இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால்

நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற

அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொண்ட பலகீனத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பது புரியும்.

பயம் அவர் அவராகவே ஏற்றுக்கொண்ட பலகீனம்.

பாடுகளின் ஆரம்பத்தில் பூங்காவனத்தில் பிதாவைநோக்கி செபிக்கும்போது,

தானே மனமுவந்து படப்போகிற பாடுகளின் வேதனை அவரை மிகவும் பயமுறுத்தியது.

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."

பயமாகிய பலகீனத்தை ஏற்றுக் கொண்டிருந்ததே இப்படிச் செபித்திருப்பதற்குக் காணம்.

அவர் கடவுள். அவரால் எல்லாம் கூடும்.

மனிதனாய்ப் பிறக்காமலேயே மனித பாவப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டிருக்க அவரால் கூடும்.

ஆனாலும் மனிதன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகவே,

தன் அன்பை மனிதனுக்குப் புரியவைக்கவே மனிதன் ஆனார்.

ஒரு Analogy.

மகன் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான்.

கிராமத்தில் வாழும் தந்தை மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும்.

பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு,

வீட்டில் மகனுக்கென்றே செய்த பண்டவகைககளையும் எடுத்துக்கொண்டு,

இரவு முழுவதும் தூங்காமல் பஸ் பிரயாணம் செய்து,

சென்னைக்குச் சென்று

மகனைப் பார்க்கிறார்.

மகன் கேட்கிறான்,  "எதற்கு அப்பா இவ்வளவு சங்கடம்?

Bankல என் Account க்கு பணத்தை Transfer பண்ணிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான.

ஏன் தூக்கத்தக் கெடுத்து அலைஞ்சீங்க?" என்றான்.

அப்பா சொன்னார்,

" Bank ல பணத்தைப் போடலாம்.

என் அன்பைப் போடமுடியுமா? அம்மா செய்த பண்டத்தைப் போட முடியுமா?

மகனைப் பார்க்கும்போது கிடைக்கும் இன்பம் Bank ல பணத்தைப் போடும்போது கிடைக்குமா? "

இதேபோலதான் பாடுகள் படாமலேயே பாவங்களுக்குத் தீர்வு காண கடவுளால் முடியும்.

அது அவரது வல்லமையைக் காட்டும்.

ஆனால் கடவுள் அன்பை அல்லவா காட்ட விரும்பினார்!

"இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."
என்று ஒரு வார்த்தை அவரே நினைத்திருந்தாலே அது அகன்றிருக்கும்!

ஏனெனில் பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் அவர் ஒரே கடவுள்.

ஆனால் துன்பக் கலத்தை நீக்குவது அவர் திட்டமல்ல.

பாடுபட்டு மரிக்கவேண்டும் என்பதுதான் அவரது நித்திய காலத்திட்டம்.

பின் ஏன் அப்படி செபித்தார்?

மனித பலகீனமான பயத்தை பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து

நமது பயத்தை நீக்கி நம்மைத் தைரியப்படுத்துவதற்காக.

நமது ஆன்மீகப் பயணத்தில் பயம் வந்தால்,

"மகனே/மகளே, கவலைப்படாதே. எனக்கே பயம் வந்தது, உனக்காக நானே ஏற்றுக்கொண்ட பயம்,

உனக்கு முன்னுதாரணம் காட்ட.

அதை எப்படி அகற்றினேன்?

"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்"

என் பிதாவிடம் செபித்தேன், உனக்கு முன்மாதிரியாகத்தான்.

நீயும் உன் பயத்தைத் தந்தையிடம் ஒப்புவித்துவிட்டு,

"அப்பா, உம் சித்தப்படியே ஆகட்டும்.  நீர் என்னுள் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? "

என்று செபி.

நான் உன் நிலைக்கு இறங்கிவந்து,

பாவமே செய்யமுடியாத நான் உன் பாவமூட்டையைச் சுமந்தது  ஞாபகம் இல்லை?

நான் நினைத்திருந்தால் என்னைக் கைது செய்ய வந்தவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கலாம்.

ஆனால் உனது பாவங்களுக்குப் பரிகாரமாக,

என்அளவற்ற அன்பை உனக்குப் புரியவைக்க

என்னையே அவர்கள் கையில் ஒப்படைத்தேன்.

லூசிபெரும், அவனது கோடிக்கணக்கான சகாக்களும் என்னை எதிர்த்துப் பாவம் செய்தமையால் என்னை நித்தியதுக்கும் இழந்தனர்.

உனக்கும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக,

நீ செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் பரிகாரமாக,

உன் பாவத்திற்கு உதவிய உனது ஒவ்வொரு உறுப்புக்கும் கொடுக்கவேண்டிய தண்டனையை

என்னுடைய ஒவ்வொரு உறுப்புக்கும் கொடுக்கச் செய்தேன்.

எனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் அடிவாங்காத உறுப்பே கிடையாது.

அதற்காகத்தான் என்னைக் கற்றூணில் கட்டிவைத்து அடிக்கவிட்டேன்.

மூளையின் உதவியோடு உன் சிந்தனையாலும்,

கண்களின் உதவியோடு உன் பார்வையாலும்,

காதுகளின் உதவியோடு உன் கேள்வியாலும்,

மூக்கின் உதவியால் உன் நுகர்ச்சியாலும்,

வாயின் உதவியோடு உன் பேச்சாலும்,  பேருண்டியாலும்

செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக முண்முடி சூட்டவைத்தேன்.

முள்முடியைத் தலையில் வைத்து சுத்தியலால் அடிக்கும்போது முட்கள் தலைக்குள் ஆழமாக இறங்கி,

தாங்கவொண்ணாணா வலியைக் கொடுக்கவைத்து

தலையுறுப்புகளால் நீ செய்த பாவங்களுக்கு நான் பரிகாரம் செய்தேன்.

நீ தற்பெருமையால் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக

எனக்கு அரசவேடமிட்டு அவமானப்படுத்த அனுமதித்தேன்.

உனது கனமான பாவமூட்டையை சிலுவை வடிவில் கல்வாரி வரை சுமந்தேன்

நீ அடிக்கடி பாவத்தில் விழுந்தாலும்

சோர்ந்துவிடாமல் எழுந்து

விண்ணகப் பயணத்தைத் தொடரவேண்டும்
என்பதற்காக

நானே மூன்று முறை சிலுவையோடு விழுந்து எழுந்தேன்.

வண்டி இழுக்கும்போது விழுந்த மாட்டை எழுப்ப வண்டிக்காரன் தார்க்கம்பால் குத்தி, சாட்டையால் அடிப்பதைப் பார்த்திருக்கிறாயா?

அதைவிட மோசமாக என்னைக் கசையால் அடிக்கச் சம்மதித்தேன்.

எல்லாம் உனக்காக.

என்னைச் சிலுவையில் ஆணிகளால் அறையும்போதும்,

சிலுவையில் தொங்கும்போதும்
நான் என்ன வேதனை அனுபவித்திருப்பேன்  என்று எண்ணிப்பார்.

ஒரு முக்கியமான விசயத்தை மறந்திருக்கமாட்டாய் என நம்புகிறேன்.

நான் இரண்டாம் ஆளாகிய,
இறைமகன்.

பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளானவன்.

தேவ சுபாவத்தில் பாடு பட முடியாது.

மனித சுபாவத்தில் பாடுபட்டேன்.

பலகீனமான மனித சுபாவத்தில் பாடுபட்டேன்.

உனக்கே தெரியும் சாதாரண, பலகீனமான மனிதனுக்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத வேதனை வரும்போது நம்பிக்கையை இழக்க சோதனை வரும்.

இச்சோதனையில் மனிதன் வெல்லவேண்டுமென்றால்,

என் மனித சுபாவத்தை அந்த அளவுக்கு பலகீனமானதாக்கி,

நம்பிக்கைக்கு எதிரான சோதனைக்கு அனுமதி கொடுத்து அதை வென்று

மனிதனுக்கு  அத்தகைய சோதனை வரும்போது நம்பிக்கையை இழக்காதிருக்க ஆன்மீக பலம் பெறச் செய்ய வேண்டும்.

நான் மெய்யாகவே மனிதன் என்பதற்கு,

அதிலும்,

பாவம் தவிர,

எல்லா மனித பலகீனங்களோடும் மனிதன் ஆனேன் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட சோதனைகளே அத்தாட்சி.

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

என்ற என் வார்த்தைகள் நான் அனுபவித்த வேதனையின் அளவையும்,

நான் திட்டமிட்டே ஏற்றுக்கொண்ட மனித பலகீனத்தையும்

விளக்குகின்றன.

நான் உடல் மரணத்தின் உதவியால் மனிதனின் ஆன்மீக மரணத்தை வென்றது போல்,

எனது மனித பலகீனத்தின் உதவியால்

மனிதனின்ஆன்மீக பலகீனத்தை வென்றேன்."

இவை இயேசுவின் ஆறுதல் வார்த்தைகள்.


நாம் இங்கே மற்றொரு உண்மையையும் ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

மனிதனுக்கு இருக்க வேண்டிய தேவ சம்பந்தமான புண்ணியங்கள் மூன்று.

1.விசுவாசம் - கடவுளை இப்போது காணமுடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது.

2.நம்பிக்கை- இறைவன் நம்மை இரட்சிப்பார்,  கைவிடமாட்டார் என்று உறுதியாக நம்புவது.

3.இறைவனை நேசிப்பது.

மனிதன் இரட்சண்யம் பெற இந்த முன்று புண்ணியங்களும் அவசியம்.

ஆனால் மோட்சத்தில் உள்ளவர்கட்கு    விசுவாசம்     
தேவை இல்லை, ஏனெனில் இறைவனை முகமுகமாய்த்  தரிசிக்கிறார்கள்.     

நம்பிக்கை தேவை இல்லை, நம்பியதைப் பெற்றுவிட்டார்கள்.

அவர்களிடம் இருப்பது நேசம் மட்டும்தான்.         

கடவுளைப் பொறுத்த மட்டில் நேசமே உருவானவர்.

இயேசு கடவுள்.

மனித சுபாவத்தில் பாடுபட்ட தேவ ஆள்.

நமது பலகீனத்தைப் போக்க   அதையே கருவியாக எடுத்துக் கொண்டவர்.

அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்,

உறுதியாக நம்புவோம்.

லூர்து செல்வம்.