Saturday, May 25, 2019

எதிர் முனைகளின் கவர்ச்சி. Attraction of opposite poles.

எதிர் முனைகளின் கவர்ச்சி.
Attraction of opposite poles.
***********************************

"செல்வம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்."

"கணவன் மனைவிக்குள் நன்றி சொல்லக்கூடாது என்பார்கள். ஆகவேதான் சொல்லவில்லை.

அறிவியலில் 'எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன'

(Opposite poles attract each other)

என்ற விதி ஒன்று உண்டு.

இறப்பும், பிறப்பும் எதிர்முனைகள்.

இவ்விரண்டு முனைகளும் ஒன்றையொன்று ஈர்க்கும் புள்ளியில்தான்

இவ்வுலக வாழ்வு முடிந்து மறுவுலக வாழ்வு  ஆரம்பமாகிறது.

இறப்பு இறந்து  பிறப்பு பிறக்கிறது."

.."தன்னுயிர் ஈந்து மன்னுயிர் மீட்ட நம்பெருமான் இயேசு,

தன் மரணத்தால் நம் மரணத்தை வென்றார்.

இவ்வெற்றியின் விளைவாகத்தான்

இறவா வரத்தோடு நிலை வாழ்விற்குள் பிறந்திருக்கிறாய்.

22-05-19தோடு உனக்கு விண்ணுலகில் ஒரு வயது ஆகியிருக்கிறது.

மீண்டும் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.

இவ்வுலகு 'எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன'

என்ற விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

விண்ணுலகு எப்படி?"

." உலகம் சடப்பொருள், சடப்பொருளுக்குறிய விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

விண்ணுலகை 'உலகு' என்று மண்ணுலக மொழியால் அழைத்தாலும்

மண்ணுலக மொழியால் விண்ணுலகை விளக்கமுடியாது.

Heaven is a spiritual world. We cannot explain it exactly with a material language.

விண்ணுலகம் ஒரு இடமல்ல.
வாழ்க்கை நிலை. (State of life.)

இறைவனின் அன்புதான் மோட்சம்.

இறைவனோடு இணைந்து இறையன்பை நித்தியகாலம் அனுபவிப்பதுதான் மோட்சம்.

மனிதமொழியில் நித்தியமும், அநித்தியமும் எதிர்ப்பதங்கள்,

ஆனால்

விண்ணுலகில்

அநித்தியம் நித்தியத்தோடு சங்கமித்துவிடுகிறது.

அதாவது உலகில் அநித்திய வாழ்வுள்ள மனிதன்  விண்ணுலகில் நித்திய இறைவனோடு ஐக்கியமாகிவிடுகிறான்.

அளவும் அளவின்மையும் எதிர்ப்பதங்கள்.

ஆனால் உலகில் அளவுள்ள மனிதன் விண்ணுலகில் அளவற்ற இறைவனோடு ஐக்கியமாகிவிடுகிறான்.

எதிர்முனைகள், எதிர்ப்பதங்கள் உலகின் மொழியியல் கருத்துக்கள்.

விண்ணுலகில் உலகின் மொழிக்கு வேலை இல்லை.

வேறு வழி இல்லாமல் விண்ணுலகை உலக மொழியால் விபரிக்கிறோம்.

புரிந்துகொள்ளக்கூடிய விதமாய்ப் புரிந்து கொள்ளவேண்டும்"

.."கடவுள் எங்கும் இருக்கிறார். அவரோடு ஐக்கியமான விண்ணுலகவாசிகள் எங்கும் இருக்கிறார்களா? "

."உலக மொழியில் 'எங்கும்' என்ற சொல்லுக்கு 'சடப்பொருள்' (Material) அர்த்தம்தான் உள்ளது.

இறைவன் சடப்பொருள் அல்ல,  ஆவி.

  'கடவுள் எங்கும் இருக்கிறார்.'   என்பதை உலகியல் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.

உலகில் சடப்பொருட்கள் 'இடத்தில்' (Space) உள்ளன.

ஆவிக்கு இடம் தேவை இல்லை.

Spirit does not occupy space.

கடவுள் உலகியல் அர்த்தத்தில் எங்கும் இல்லை.

அதாவது இடத்தை அடைத்துக்    
(occupy) கொண்டிருக்கவில்லை.

தனது வல்லமையால், ஞானத்தினால், காரணத்தினால் எங்கும் இருக்கிறார்.

'எங்கும்'  என்ற வார்த்தையால் இந்த பிரபஞ்சம் (Universe) முழுவதையும்குறிப்பிடுகிறோம்.

'கடவுள் எங்கும் இருக்கிறார்' என்று சொல்லும்போது

இப்பிரபஞ்சம் முழுவதும், அதன் ஒவ்வொரு அணுவும் அவருடைய வல்லமையால் இயங்குகிறது,

அதைப்பற்றி  சர்வ ஞானம் உள்ளவர் அவர்,

அதன் ஒவ்வொரு அசைவுக்கும் முழுமுதற்காரணர் அவர்தான்'

என்று சொல்லுகிறோம்.

அவரால் படைக்கப்பட்ட எல்லா பொருட்களும், மனிதர் உட்பட, அளவுள்ளவை.

விண்ணுலகவாசிகளும் அளவுள்ளவர்களே.

அளவுள்ள அவர்களால் எப்படி எங்கும் இருக்கமுடியும்?

கடவுள் எங்கும் இருக்கிறார். விண்ணுலகவாசிகள் அவரோடு ஐக்கியமாக (United) உள்ளார்கள்.

'எங்கும் இருப்பது' கடவுளுக்கு மட்டும்தான் பொருந்தும்.

படைக்கப்பட்ட யாருக்கும் பொருந்தாது.

விண்ணகத்தில் நாம் 

சர்வ வல்லப, சர்வ ஞானமுள்ள, ஆதிகாரண கடவுளோடு ஐக்கியம் ஆகி,

அவரோடு பேரின்பம் அனுபவிக்கலாம்.

ஆனால் நாம் சர்வ வல்லபர்கள் ஆக முடியுமா?

சர்வ ஞானமுள்ளவர்கள் ஆகமுடியுமா? 

ஆதிகாரணர்கள் ஆகமுடியுமா?

அப்பண்புகளால் எங்கும் உள்ளவர்கள் ஆக முடியுமா?

அளவற்ற கடவுளோடு ஐக்கியமானாலும் நாம்
அளவுள்ளவர்கள்தான்."

."புனிதர்கள் எங்கும் இல்லாவிட்டால் எப்படி உலகெங்கிலுமுள்ள மக்களின் செபத்தைக் கேட்கமுடிகிறது?"

."ஏனெனில் எங்கும் உள்ள இறைவனோடு ஐக்கியமாயிருக்கிறார்கள்.

விண்ணகம் ஒரு வாழ்க்கைநிலை, இடம் அல்ல.

ஆகவே இங்கே 'தூரம்' என்ற கருத்தே கிடையாது.

There is no concept of 'distance'
in heaven.

  இந்தியாவிலுள்ள பாவூர்சத்திரத்திகும், அமெரிக்காவிலுள்ள ஆஸ்டினுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமிருக்கலாம்.

ஆனால் இரண்டு இடங்களும் கடவுளின் அளவற்ற ஞானத்திற்குள்தான் உள்ளன.

மோட்சத்தில் உலகக் கருத்துக்களான நேரம், தூரம் எதுவும் கிடையாது.

ஆகவே உங்களையும், பேத்தியையும் ஒருசேரப் பார்க்கமுடிகிறது.

இருவரும் கடவுளின் சர்வ ஞானத்திற்குள் இருப்பதால்
அவரோடு ஐக்கியமாயுள்ள என்னால் இருவரையும் உலகக்கணக்குப்படி ஒரே நேரத்தில் பார்க்கமுடிகிறது.

'உலகக்கணக்குப்படி' என்றேன்.
ஏனெனில் இங்கே அந்தக் கணக்கெல்லாம் கிடையாது."

.."இன்னும் நிறைய கேட்கவேண்டியிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.

விண்ணகத்தில் ஒரு வயதுக் குழந்தையே மீண்டும்

'அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment