Sunday, August 26, 2018

How are we benefited by the the communion of saints?

How are we benefited by the the communion of saints?
*******************--------******-*

There may be much  internal disunity, hurt and disorder within us

as a result of our fallen nature

caused by the fall of our first parents.

We should not make much of this disunity

as after all we are members of the same family,

being children of the same Heavenly Father.

If we are individually united with Christ

the whole Christian family will automatically get united in Him,

which union will help us forgive and forget each other's faults

with Christian love. 

When we are united with Christ

we are also united with His representatives on earth,

Our Holy Father,

Bishops

and Priests

and also with Our Lady,

  St. Peter,

all the Apostles

and all the saints

who are living in Heaven.

We are also mystically united with all the Christians throughout the world

Unity is strength.

All our prayers become one united  prayer coming from  united minds

and it rises into heaven to touch the merciful heart of God.

The divne mercy embraces the whole united  Christian community

drawing it to the  heart of God in the closest union.

Individually considered our prayers may be weak as they are from our weak hearts,

but when they join hands with those of pious people and saints they become stronger in the eyes of God.

God feels extremely happy at our spiritual unity,

which is a union of souls

with different piety levels,

but with  the same desire to love and serve God,

though the degree of the desire may vary .

Our love for God cannot match with that of Our Lady for her dearest Son,

but if we catch hold of her hands in our spiritual journey to heaven,

her love for God will pass into  our heart,

making compensation  for our weak love.

The very feeling of traveling hand in hand with  our Divine Mother will enable us to feel holier.

How Much more will it be when we walk in company with  all the saints?

To understand this concept more clearly, we can cite one human example.

Suppose an ordinary citizen goes to a minister's house with a V.I.P,

won't he be served with the same quality tea that the V.I.P is served with?

That is how we are benefited by the communion of saints.

To be benefited fully we should keep in mind the following :

We should accept ourselves as members of the one Body of Christ.

We must  understand that we are called to share in the unity that comes from our union with Him.

We must love Jesus with our whole mind, heart, soul and strength.

We must love others with the same degree with which we love ourselves.

We must reflect upon the effect that our love of God has on our relationship with others.

Our love for God must make us realize that God loves all the members of the spiritual body with the same love that He has for us.

We must realize  the deep bond of unity that is established because of   God's love for all of us and our love for God and others.  

Unity  is a  blessing tht flows from  the love and mercy of God.

Let us enjoy the blessings that flow from the union of saints.

Lourdu Selvam.

நான் யார்?

நான் யார்?
****************-*****-*----******

"ஹலோ! என்னத்தப்போட்டு உருட்டிக்கொண்டிருக்கீங்க?"

"ஒண்ணையும் உருட்டல. என்னுடைய பேனாவைக் காணல. தேடிக்கிட்டிருக்கேன்."

"என்னுடைய பேனாவையா?"

"இல்ல. என்னுடைய பேனாவை."

"நானும் அதத்தானே சொல்றேன."

"நீ எதையும் சொல்லு.

பேச நேரமில்லை.

நான்......இதோ எடுத்திட்டேன்.  இப்ப ரெடி."

"எதுக்கு?"

"பேசத்தான். 
வாங்க, உட்காருங்க."

"உட்காருவது இருக்கட்டும். முதல்ல சொல்லுங்க. இது யாருடைய நாற்காலி? "

"முதல்ல என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

இது யாருடைய வீடு?"

"அதுகூட மறந்துபோய்ச்சா?  உங்களுடைய வீடு."

"இல்ல. என்னுடைய வீடு."

"ஆமா, வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய, என்னுடையன்னு சொல்றீங்கள.

யாருங்க அந்த 'என்'?"

"நீங்க ஊனக்கண்ணால 'என்'னப் பார்க்க முடியாதுங்க."

"என்னது? உங்கள.."

"உங்களல்ல. என்ன."

"இப்போ உங்களுக்கு என்னாச்சி? "

"ஒண்ணும் ஆகல.

நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

நாம எல்லோருமே அடிக்கடி 'நான்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துறோமே, அது யாரைக் குறிக்கும்? "

"It is 'First person, singular. It refers to the speaker."

"Hello! நான் இலக்கணக்குறிப்புக் கேட்கல.

நான் யார்"

"நீங்க ..."

"நீங்கல்ல. 'நான்' யார்?"

"உங்க கேள்வியே புரியல. பதில எங்கே போய்த் தேடுவேன்? நீங்களே தேடிச்சொல்லுங்க."

"கடவுள் மனிதனைப் படைக்கும்போது

முதலில் 'களிமண்ணால் மனிதனை உருவாக்கினார்'.

பின்பு 'அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.'

களிமண் + உயிர்மூச்சு = மனிதன்.

மனிதனை  மனிதனாக்கியது களிமண்ணா?  உயிர்மூச்சா?"

"உயிர்மூச்சுதான்.அது இல்லாவிட்டால் களிமண்தான் இருந்திருக்கும்."

"உயிர் மூச்சு நமது ஆன்மா.

களிமண் நமது உடல்.

இரண்டும் இணைந்தது மனிதன்.

இந்த அமைப்பில் சிந்திக்கும் திறன் பெற்றது ஆன்மாவா? உடலா? "

"களிமண் எப்படி சிந்திக்கும்?

ஆன்மாதான் சிந்திக்கும்."

"தன்னை 'நான்' என்று உணர்வது ஆன்மாவா? உடலா? "

"ஆன்மாதான்."

''அப்படியானால் 'நான்' யார்?"

"நமது ஆன்மாதான்.

ஆனால், உடல்தானே தன் வாய்மூலம் அதைச் சொல்கிறது."

"ஆன்மா சிந்தித்ததை

சொல்லவும்,

செயல்படுத்துவதற்கும்தான்

உடல் படைக்கப்பட்டு  ஆன்மாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நமது உடல் hardware.

ஆன்மா software.

Software, hardwareமூலம் செயல்புரிகிறது."

"அதாவது உடலை இயக்குவது ஆன்மா.

ஆன்மா உடலைவிட்டு பிரிந்துவிட்டால் உடல் களிமண் மட்டும்தான்.

ஆன்மா அழியாது."

"ஆன்மா இறைவனை நோக்கிய தனது வாழ்விற்கு,

அதாவது, ஆன்மீக வாழ்வுக்கு,

உதவியாக தன்வசம் ஒப்படைக்கப்பட்ட உடலைப் பயன்படுத்தி

நித்திய பேரின்ப வாழ்வை அடையவேண்டும்.

இறைவனை அன்புசெய்து,

அவ்வன்பை இறைப்பணியிலும்,

இறைவனுக்காக பிறர்பணியிலும்

ஒளிரச்செய்ய

உடலைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.

மாறாக,

உடல் தேடும் சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றும் கருவியாக

தான்செயல்படக்கூடாது.

ஆன்மாவிற்கு சேவை செய்யதான் உடல் படைக்கப்பட்டது.

உடலுக்கு சேவை ஆன்மா படைக்கப்படவில்லை.

இறைவனுக்கு சேவை செய்யவே படைக்கப்பட்டது

ஆன்மாவிற்கு தூய தமிழ் வார்த்தையைத் தேடும் பணியை விட்டு விட்டு

அதைக் காப்பாற்றும் பணியில் இறங்குவோம்."

லூர்து செல்வம்.

Friday, August 24, 2018

புதிய மொழிபெயர்ப்பின் விளைவாக இப்படியும் நடக்கலாம்.

புதிய மொழிபெயர்ப்பின் விளைவாக  இப்படியும் நடக்கலாம்.
*************--**-***************

தூய தமிழ் மொழிபெயர்ப்பின் காரணமாக இப்படியும் நடக்கலாம்.

"காலம் போகிற போக்கைப் பார்த்தால்,

நாம் இயேசுவுக்காக  உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்."

"ஹலோ! நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய்?

இப்போது இந்த விசயத்தில் திருச்சபையின் போதனை மாறிவிட்டது தெரியாதா?"

"என்ன உளருகிறாய்?"

"நான் ஒன்றும் உளரவில்லை. நீ பைபிளே வாசிப்பதில்லை என நினைக்கிறேன்."

"இது குறித்து பைபிள் என்ன சொல்கிறது?"

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்

தம் வாழ்வையே இழப்பாரெனில்

அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?"

இதை நீ வாசித்ததில்லையா?"

"இதற்கு விளக்கம் கொடு."

" 'தம் வாழ்வையே இழப்பாரெனில்'

என்றால் 'செத்துப்போனால்'

என்று அருத்தம்.

'ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொண்டாலும் அவர் செத்துப்போனால் அவருக்கு என்ன பயன்?' என்பது பொருள்.

அதாவது எக்காரணத்தை முன்னிட்டும் உயிரை விட்டுவிடக்கூடாது."

"அப்போ உன் முடிவு?"

"எக்காரணத்தை முன்னிட்டும் என் உயிரை விட மாட்டேன்.

வேதத்திற்காக உயிரை இழப்பவர்கள் பைபிளுக்கு விரோதிகள்."

"அப்போ வேதசாட்சிகள்?"

"அது அந்தக்காலம்.  எத்தனை மாற்றங்களைச் சந்தித்திருக்கிறோம்?"

தூய தமிழுக்கு  ஆசைப்பட்டு 'ஆன்மா'வை 'வாழ்வாக'மாற்றியதன் விளைவைப் பார்த்தீர்களா?

இப்போது எனக்கொரு சந்தேகம் வருகிறது.

ஆன்மாவை வாழ்வாக மாற்ற மொழி ஆர்வத்தைவிட வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ எனச் சந்தேகம்  வருகிறது.

ஏனெனில் திருப்பலி செபங்களில் 'ஆன்மா' சேர்க்கப்பட்டுள்ளது

'உம் ஆன்மாவோடும் இருப்பாராக.'

வேறொரு காரணம் இருந்தால்

அது தவறான காரணமாகத்தான் இருக்கும்.

ஆபத்தான காரணமாகவும் இருக்கும்.

குருக்கள் யாராவது  இவ்வரிகளை வாசிக்க நேர்ந்தால்

விளக்கம் தாருங்களேன்.

லூர்து செல்வம்.

Wednesday, August 22, 2018

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''
-*****-*****-**--*********-------***

"ஹலோ! என்ன ஆச்சி? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? "

"நம்ம சாமியார் சுத்த மோசம்.''

"ஏன்? என்னாச்சி?

சாமியார் மேல என்ன கோபம்?

நல்லாத்தான இருந்தீங்க."

''நல்லாத்தான் இருக்கோம்."

"பிறகு என்ன கோபம்?

நேற்று ஞாயிறு பூசைக்குப் பிந்தி வந்தீயே, அதுக்குச் சத்தம் போட்டாரா? "

"இல்ல.''

" 'ஏண்டா திவ்யநற்கருணை முன்பு முழந்தாள்படியிடுத'ன்னு கேட்டாரா?"

"இல்ல. அவரே முழந்தாள்படியிட்டுதான் வணங்குவார்."

''அங்கி இல்லாம busல போனாரா?"

"அதுல்லாம் இல்ல. அவர் roomலகூட அங்கியோடுதான இருப்பார்."

"பிறகு என்னதான் பிரச்சனை? "

"நேற்று எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் தந்தார்."

"இதுக்கா அவர்மேல கோபம்?

இது சந்தோசப்பட வேண்டிய விசயமுல்லா.  அதுக்கு ஏன் கோபம்?"

"ரூபா எதுக்கண்ணே?"

"செலவழிக்கதான்."

"அவர் தந்த ரூபாயைச் செலவழிச்சிட்டேன். அதுக்கு என்மேல் கோபப்படுறார்.
இது நியாயமா?"

"நீ சொல்றது ஒண்ணும் புரியல."

"என்ன புரியல. தமிழிலதானே சொல்லுதேன். உங்களுக்கு தமிழ் தெரியாதா?"

"உங்கிட்ட எதுக்கு பத்தாயிரம் ரூபாய் தந்தாரு?"

"ரூபாய் எதுக்கு தருவாங்க?  செலவழிக்கதான்."

"இன்ன செலவுக்குன்னு சொல்லியிருப்பாருல்ல."

"சொன்னாரு. ஒரு listஏ தந்தாரு."

"என்ன list?"

"இந்தா பாரு."

"இது நம்ம கோவிலுக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் மாதிரி தெரியுது."

"மாதிரி என்ன மாதிரி, அதேதான்."

"அப்போ இந்த லிஸ்ட்ல உள்ள பொருட்கள் வாங்கதான் சாமியார் பத்தாயிரம் தந்தார்."

"ஆமா."

"வாங்கினதுல என்ன பிரச்சனை?"

"வாங்காததுதான் பிரச்சினை."

"அப்போ நீ ஒரு பொருளும் வாங்கல!''

"வாங்கினேன். இந்த லிஸ்ட்ல உள்ள ஒரு பொருளும் வாங்கல."

"ஏன்? "

"டிப்போ பூட்டி இருந்தது."

"வேறு என்னதான் வாங்கின?"

"இதோ பார்.  நல்லா இருக்குல்ல?"

"அப்போ கோவிலுக்குப் பொருட்கள் வாங்க தந்த ரூபாய்க்கு உனக்கு Smart phone. வாங்கியிருக்க!"

"ஆமா. டிப்போ திறக்கல. அதனால் கோவில் பொருட்கள் வாங்கல.

அதுக்கு கோபமா சப்தம் போடறாறு."

"சாமியாராவது சப்தம் மட்டும் போட்டாரு. 

நானா இருந்தால்
பிரம்பாலே வெளுத்திருப்பேன்."

"நீங்க பழைய ஞாபகத்தில பேசரீங்க. நீங்க ரிட்டயர்ட் ஆகி 21வருசம் ஆகுது.

பிரம்பத் தூக்குகிற சக்தி உங்களுக்குக் கிடையாது. "

"உலகத்தில முக்கால்வாசிப்பேர் உன்னப்போலதான் இருக்காங்க."

"என்னப்போல Smart phone வாங்கராங்களோ?"

"Smart phoneலேயே நில்லுங்க.

கொஞ்சம் இறங்கி வந்து நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.''

"இது வரை அதைத்தானே செஞ்சிட்டிருக்கேன்."

"சரி. தொடர்ந்து செய்யுங்க. 

கடவுள் ஏன் உலகைப் படைத்துவிட்டு கடைசியில் மனிதனைப் படைத்தார்?"

"உணவு தயாரான பின்புதானே ஆட்கள் பந்தியில் அமர முடியும்.

அதேமாதிரிதான், மனிதன் பயன்படுத்துவதற்குத்தானே உலகம் படைக்கப்பட்டது.

அதனால்தான் கடவுள் உலகைப் படைத்தபின் மனிதனைப் படைத்தார்."

" விசுவாச அடிப்படையில் மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டான்?"

"இறைவனை அறிந்து,

நேசித்து,

அவருக்கு ஊழியம் செய்து,

அவரோடு என்றென்றும் வாழ படைக்கப்பட்டான்."

"அப்போ உலகைப் பயன்படுத்த படைக்கப்படவில்லை? "

"நீங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு அருவியில் குளிப்பற்காகச் செல்கிறீர்கள்.

தூரம் காரணமாக நடக்க முடியாதகையால் பஸ்ஸில் செல்கிறீர்கள்.

குற்றாலம் செல்ல பஸ் பயன்படுகிறது.

நோக்கம் அருவியில் குளிப்பு.

உதவுவது பஸ்.

'பஸ்ஸில் ஏறுவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டேன்' என்றா சொல்வீர்கள்?

அதேபோல்தான் இறைவனை அறிந்து, நேசித்து, சேவை செய்ய உலகம் உதவுகிறது.

அப்படி உதவுவதற்காகவே உலகம் முதலில்  படைக்கப்பட்டது,

பிரயாணம் செய்யவே பஸ் உண்டாக்கப்பட்டதுபோல."

"Very good.

இப்போ ஒரு கேள்வி.

பஸ்ஸில் ஏறிய நான்

அதன் வசதியில் மயங்கி

குற்றாலத்திற்குப் போகாமலிருந்தால்

என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?"

"முட்டாள் என்று நினைப்பேன்."

"இப்போ உங்களைப்பற்றி என்ன நினைக்கட்டும்? "

"என்னைப்பற்றியா?  நான் என்ன செய்தேன்?"

"என்ன செய்தேனா? 

எதை வாங்க சாமியார் பணம் கொடுத்தாரோ அதை வாங்காமல்

அதைக்கொண்டு Smart phone வாங்கியிருக்கீங்களே!"

"ஆமா, என்ன.

நான் முட்டாள்தான்.

ஆனால் சாமியார்  என்னை அப்படி அழைக்கவில்லை.

அவர் நல்ல சாமியார்."

"தவற்றிலிருந்தும் பாடம் கற்கலாம்.

உன் தவற்றிலிருந்து என்ன பாடம் கற்கிறாய்?"

"இறைவனுக்கும்,நம் அயலானுக்கும் சேவை செய்யவே

இவ்வுலகம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது,

சுய இன்பத்திற்காக அல்ல.

இறைவனையும், அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவனது கட்டளை.

இந்நேசத்தைச் செயலில் காட்டவே,

அதாவது, நற்செயல்கள் செய்யவே  இவ்வுலகும் அதிலுள்ள பொருட்களும் தரப்பட்டுள்ளன.

நிலையற்ற இவ்வுலகப் பொருட்களைக் கொண்டு

நிலையான பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்

அவற்றைக்கொண்டு மற்றவர்கட்கு உதவுவதன்மூலம்."

"Very good. முதலில் சாமியார் தந்த லிஸ்ட்ல உள்ள பொருட்களை வாங்கு.

அப்புறம் அவரிடம் போ."

"Thank you."

லூர்து செல்வம்.

Monday, August 20, 2018

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.''

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.''
*****-*****-**********-----********

"ஹலோ! பாக்கியம்! எப்படி இருக்கீங்க? "

"ஒரே Tension ஆ இருக்கேன்."

"காரணம்?"

"நான் வாசித்த ஒரு கட்டுரை,

அது என்னைக் குழப்பிவிட்டது. நீங்க சொல்லுங்க.

'பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.' என்று இயேசு ஏன் சொன்னார்? "

"சொல்லுகிறேன்.  முதலில் உங்கள் Tension னுக்கான காரணத்தைச் சொல்லுங்க. "

"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்.'' என்ற வார்த்தைகளுக்கு ஒரு கட்டுரையாளர் கொடுத்த விளக்கம் என்னைக் குழப்பிவிட்டது."

"என்ன விளக்கம் கொடுத்தார்?"

"அது போகட்டும். நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறுங்கள்."

"உலகிலுள்ள மொத்த மனித இனத்தையும் இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.

1.உலகிற்கு ஊழியம் செய்வோர்.

2.இறைவனுக்கு ஊழியம் செய்வோர்.

யாருக்கு ஊழியம் புரிகிறோமோ அவர்மேல்தான் நமக்கு அதிகம் பற்று இருக்கும்.

பணம், சொத்து, பொருட்கள் போன்ற உலகைச் சார்ந்த பொருட்கள்மேல் அதிகம் பற்று உள்ளோரிடம்

'உலகம் வேண்டுமா?  இறைவன் வேண்டுமா?

என்று கேட்டால், 

உலகைத்தான் தேர்ந்தெடுப்பர்.

இதே கேள்வியை இறையடியார்களிடம் கேட்டால், 'இறைவன்தான் வேண்டும்' என்பார்கள்.

இப்போது புரிந்திருக்கும் விண்ணரசில் யார் நுழைவர் என்று."

"அது புரிகிறது.

என் கேள்வி அது அல்ல.

'பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.'

என்றால் என்ன பொருள்? "

"நீங்கள் 'பணக்காரன்'என்ற சொல்லைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள்.  

இயேசு அவரிடம் வந்த வாலிபனை நோக்கி,

'நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.'

என்றபோது அவன் என்ன செய்தான்? '

"வருத்தத்துடன் சென்றான்."

"ஏன்  வருத்தத்துடன் சென்றான்? "

"அவனுடைய உடமைகள் மீது அவனுக்குப் பற்று அதிகம்.

அவற்றைப் பிரிய அவனுக்கு மனமில்லை.

பணத்தின்மீது பற்று உள்ளவன்தான் பணக்காரன்.

எவ்வளவு பணம் இருந்தாலும்  அதன் மீது பற்று இல்லாதவன் 'எளியமனத்தவன்'.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

நாம் இவ்வுலகில்தான் படைக்கப்பட்டோம்,

இவ்வுலகில்தான் வாழ்கிறோம்.

ஆனால் இவ்வுலகிற்காக வாழாமல்

இறைவனுக்காக வாழ்ந்தால்

விண்ணரசு நம்முடையதே."

"அதாவது பணக்காரன் என்றால்  'பணத்தின்மீது பற்றுள்ளவன்' என்று பொருள். சரிதானே? "

"கரெக்ட்."

"இயேசுவின் சீடர்கள் ஏன்,

'அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?'

என்றார்கள்?"

"சீடர்கள் Training periodல் உள்ளவர்கள்தானே.

உங்களுக்கு வந்த குழப்பம் அவர்கட்கும் வந்திருக்கும்.

அதுதான் விளக்கம் கேட்கிறார்கள்."

"இயேசுவின் விளக்கத்தை விளக்குங்களேன்."

"இயேசு,

'மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்'

என்கிறார்.

மனிதர்களிடம் ஏராளமான பணம் வரும்போது  அதன்மீது  பற்று ஏற்படுவது இயல்பு.

ஒரு பழத்திற்கு ஆசைப்பட்டு இறைவனது கட்டளையை மீறிய ஒரு அம்மாவின் பிள்ளைகள்தானே
நாம்! 

நமது சுபாவத்திற்கு 'Fallen nature' என்று பெயர் வைத்திருக்கிறோம்.

நமது Fallen nature படி உலகின்மீதுள்ள பற்றை நீக்குவது கடினம்தான்.

ஆனால் கடவுளால் எல்லாம் முடியும்."

"இந்த வாக்கியத்துக்குதான் பொருள் புரியவில்லை."

"உங்களால் ஒரு முக்கியமான காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால்,  என்ன செய்வீர்கள்?"

"செய்யமுடிந்தவர்கள் உதவியை நாடுவேன்."

"இதோ புரிந்துகொண்டீர்களே!

நமக்குக் கடினமாக இருந்தால்

எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடவேண்டும்.

அவரால் எல்லாம் முடியும்.

அவர் தமது வல்லமை மிக்க அருளால்

நமது உலகப்பற்றை நீக்கி

நம்மை இறைப்பற்றால் நிறப்புவார்.

ஆனால் நாம் அவரை நாடி உதவி கேட்கவேண்டும்."

"இப்போ புரிகிறது.

'கேளுங்கள் தரப்படும்'

என்று சொல்லியிருக்காரே."

கேட்போமாக!

லூர்து செல்வம்.
  

தாயைப்போல பிள்ளை!

"தாயைப்போல பிள்ளை."
***************************-*****

இறைமகன் இயேசுவின் தாயை நம் தாயாக ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் மூலம் இறைமகனை நமது சசோதரனாக ஏற்றுக்கொள்கிறோம்.

இயேசுவே தன் தந்தையை நமது தந்தையென அழைக்க நமக்கு உரிமை தந்திருக்கிறார்.

ஆகவே நாம் இறைவனின் ஆன்மீகக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில் நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

We belong to a royal family.

நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பெருமை பாராட்டிக்கொண்டால் மட்டும் போதாது.

நமது வாழ்விலும் நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்.

'தாயைப்போல பிள்ளை' என்பார்கள்.

நமது வாழ்விலும் நாம் விண்ணக அரசியின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்கவேண்டும்.

"தினமும் மாதாவை நோக்கி வேண்டுவதாலோ,

செபமாலை சொல்வதாலோ,

மாதாவின் திருத்தலங்களுக்குச்  செல்வதாலோ, 

மாதாவுக்கு விமரிசையாக விழா எடுப்பதாலோ

நாம் மாதாவின் பிள்ளைகள் ஆகிவிட முடியாது.

இவையெல்லாம் வேண்டும்.

ஆனாலும்,  மாதாவைப்போல் வாழ்ந்தால் மட்டுமே நாம் அவளுடைய பிள்ளைகள் ஆகமுடியும். 

மாதாவைப்போல் வாழ்வது எப்படி?

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன்,

தன்னையே மறுத்துத்

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு

என்னைப் பின்தொடரட்டும்."(மத்.16:24)

இயேசு தன் பொதுவாழ்வின்போதுதான் இவ்வறிவுரையைச் சொன்னார்.

ஆனால் இயேசு இதைச் சொல்வதற்கு முன்னாலேயே சிலுவை வாழ்வை வாழ ஆரம்பித்துவிட்டாள்.

விண்ணகம் நோக்கிய அவளுடைய ஆன்மீகப் பாதை மலர்ப் பாதை அல்ல,

முட்பாதை,

துன்பங்களும், துயரங்களும் நிறைந்த பாதை.

அவளுடைய வயிற்றில் கருத்தரித்து வளர்ந்தது

மனித உரு  எடுத்த எல்லாம் வல்ல இறைவனது திருமகன் என்பது அவளுக்குத் தெரியும்.

கபிரியேல் தூதர் அவள் இறைவனின் தாயாகவிருக்கும் நற்செய்தியை அறிவித்தபோது

அவள், "நான் இறைவனின் தாயாகவேண்டுமென்றால் எனக்கு வசதியான வாழ்க்கையயைத் தரவேண்டும்" என்று நிபந்தனை ஏதும் போடவில்லை.

மாறாக, ''இதோ ஆண்டவரின் அடிமை" என்று தன்னையே தாழ்த்திக்கொண்டாள்.

தொடர்ந்து தன் வாழ்நாளின் கடைசிவரை

இறைவனின் 'அடிமை'யாக,

அவரது திருச் சித்தத்தை

எதிர்க்கேள்வி கேட்காமல் நிறைவேற்றுபவளாக வாழ்ந்தாள்.

பிறர் அன்பு பிறர் பணியில் வெளிப்படவேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

மரியாள் யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து நடந்தே  சென்று,

கர்ப்பிணியான எலிசபெத்தம்மாளுக்குப் பணிபுரிந்தாள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது,

மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து   பிறந்த கட்டளைப்படி

பெயரைப் பதிவுசெய்யக்

கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,


யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

இப்போதுபோல போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ,

சூசையப்பரும்,  

  நிறைமாத கர்ப்பிணியான மாதாவும்

எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்!

ஆயினும் இறைவனது சித்தத்தை முணுமுணுக்காமல் நிறைவேற்றினார்கள்.

சென்ற இடத்தில் சத்திரத்தில்கூட இடம் கிடைக்காமல்,

ஒரு மாட்டுத்தொழுவில்,

அங்கு வீசியிருக்கும் சாணி நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு

இறை இயேசுவைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது

இறைவனின் சித்தம்.

மாதா மலர்ந்த முகத்துடன் இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தாள்!

மாட்டுத்தொழுவில்

படுக்கக்கூட இடமில்லாமல்

மாடுகளின் தீவனத்தொட்டியில் படுத்து உறங்கிய

ஏழைப்பாலகனின் பிறப்பைக் கொண்டாட

எத்தனை இலட்சங்கள் செலவழிக்கிறோம்!

இது அவரைக் கேலி செய்வது மாதிரி இல்லை?

கிறிஸ்மஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடலாமே!

இலட்சங்கள் கையை உறுத்திக்கொண்டிருந்தால்,

தேவையில் வாடும் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே!

இறைவன் உத்தரவுக்குப் பணிந்து,

ஏரோது மன்னனிடமிருந்து இயேசு பாலகனைக் காப்பாற்ற,

சூசையப்பரும், மாதாவும் குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள்.

இயேசு சர்வவல்லப தேவன்.

அவர் நினைத்திருந்தால் ஏரோதுவைக் காலிபண்ண ஒரு வினாடிகூட ஆகாது.

ஆனால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகப்

பாடுபடுவதற்கென்றே மனிதனாகப் பிறந்தார்.

அப்பாடுகளில்

அவரைப் பெற்ற மாதாவும்,

வளர்த்த சூசையப்பரும்,

நாமுங்கூட,

பங்கெடுக்கவேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

"அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்."

திருக்குடும்பம் எகிப்துக்குச் சென்ற செய்தியை ஒரு வாக்கியத்தில் முடித்துவிட்டார் நற்செய்தி ஆசிரியர் மத்தேயு.

ஆனால் அவர்களது எகிப்திய பயணத்தின்போது

என்னென்ன கஸ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்று

சிறிது எண்ணிப்பாருங்கள்.

சூசையப்பர் வயது முதிர்ந்தவர்,

மாதாவுக்கு 15 வயது,

இயேசு குழந்தை,

கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து எகிப்துக்கு  நடைப்பயணம்,

சாப்பாட்டிற்கு என்ன செய்திருப்பார்கள்,

இரவுகளில் எங்கு தங்கியிருப்பார்கள்,

  கொசுக்கடியால் தூங்காமல் எத்தனை இரவுகள் கஸ்டப்பட்டிருப்பார்கள்

என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்தால்

இயேசுவுக்காக சூசையப்பரும்,  மாதாவும் சுமந்த

சிலுவையின் கனம் புரியும்.

பிரயாணத்தின்போது நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள்பற்றி,

(வாய்வழிச் செய்தியாய் வந்தவை)

நான் நடுநிலைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது

என் தாய் கூறியவை

என் ஞாபகத்தில் பசுமையாக உள்ளன.

ஒரு மலைப்பபகுதி வழியாக

திருக்குடும்பம் நடந்துகொண்டிருந்தபோது

தூரத்தில் கையில் வாள்களுடன் படைவீரர்கள் வருவது

சூசையப்பர் கண்ணில் பட்டது.

உடனே அவசர அவசரமாக மாதாவையும், குழந்தையையும்  அழைத்துக்கொண்டு அருகிலிருந்த. ஒரு குகைக்குள் நுழைந்துவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் குதிரைகளில் வீரர்கள் அந்தப்பக்கம் வந்தார்கள்.

ஒரு வீரன் சொன்னான்,

"இந்த குகைக்குள் அவர்கள் நுழைந்ததை நான் பார்த்தேன்."

இன்னொருவன் குகை அருகே சென்று குகை வாயிலைப் பார்த்துவிட்டு,

"வாயில் முழுவதும் சிலந்திகள் வலை பின்னியிருப்பதைப் பாருங்கள்.

மாதக்கணக்காக வாயிலில் யாரும் நுழைந்திருக்க முடியாது."

என்றான்.

வீரர்கள் அவன் சொன்னதை ஏற்று அவ்விடம் விட்டு அகன்றனர்.

குகைக்குள் பாலன் இயேசு புன்முறுவல்பூத்துக் கொண்டிருந்தார்.

அன்றைய இரவை அங்கே கழித்துவிட்டு,

காலையில் எழுந்து சென்றனர்.

அப்போது அங்கு சிலந்தி வலை ஏதும் இல்லை.

மற்றொரு நிகழ்வு.

சூசையப்பரும், மாதாவும், குழந்தை இயேசுவும் வயல் வழியே நடந்து சென்றார்கள்.

அப்பொழுது  வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலை வயலுக்கு வந்தவர்கட்கு ஒரே ஆச்சரியம்.

பயிர் வளர்ந்து விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது.

அப்போது வாளுடன் வந்த வீரர்கள்,

"இந்த வழியே ஒரு வயதானவரும், 15. வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஒரு குழந்தையுடன்  இந்த வழியே சென்றதைப் பார்த்தீர்களா? "

ஒரு விபசாயி,

"ஆமா. வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தபோது
போனார்கள்."

"இப்போது பயிர் அறுவடைக்குத் தயாராக உள்ளது.

அப்படியானால் மூன்று மாதங்களுக்கு முன்பே  இவ்வழியே போயிருக்க
வேண்டும்.

அவர்கள் வெளிநாட்டுக்குப் போயிருப்பார்கள்,

வாருங்கள். மன்னனிடம் சொல்லுலவோம்"

என்று கூறி விட்டுப் போய்விட்டார்கள்.

எகிப்து ஒரு அந்நிய நாடு அங்கு சென்று வாழ சூசையப்பரும்,  மாதாவும் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள்!

நாம் மாதாவின் பிள்ளைகள் என்று கூறிக்கொண்டு சொகுசாக வாழ ஆசிக்கிறோம்!

மரியாள் வாழ்நாளெல்லாம் இயேசுக்காகவே  வாழ்ந்தார்கள்.

சிலுவைப்பாதை முழுவதும் இயேசுடன் இருந்தார்கள்.

நமக்காக தன் மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.

மாதாவை நமது தாயாகத் தந்துவிட்டுதான்  இயேசு மரித்தார்.

மாதா எப்படி ஒவ்வொரு வினாடியும் இயேசுவுக்காக     வாழ்ந்தார்களோ

அப்படியே நாமும்  வாழ்ந்தால்தான் நாம் மாதாவின் பிள்ளைகள் என்று கூறலாம்.

மாதாவைப்போல நாமும் நமது சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம்.

வாழ்க மரியாள்!

லூர்து செல்வம்.