Friday, June 29, 2018

"They will persecute you just as they have persecuted me."

"They will persecute you just as they have persecuted me."
****-****************************

Jesus,

who utilized only three years out of His 33 years of life in this world ,

chose just twelve ordinary and  uneducated men,

out of whom one dropped out even during His lifetime,

bringing down the number to eleven,

to spread His word throughout the world.

"Go, therefore, and make disciples of all nations,

baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit,

teaching them to observe all that I have commanded you.

And behold, I am with you always, until the end of the age.”

Our Holy Mother the Church started with just eleven uneducated persons at the helm.

But the starter is God, with unlimited wisdom.

Of course Jesus had given them training for three years, but the training was not complete.

It was to be an ongoing process, to continue till their last breath.

"I will ask the Father, and he will give you another to befriend you, one who is to dwell continually with you for ever."
(John.14:16)

"And behold I am with you all through the days that are coming, until the consummation of the world."
(Matthew. 28:20)

Jesus promised to be with them always till the end of the world  to be of help to them in their evangelical work.

He also promised to send  them the Holy Spirit to dwell with them constantly.

So one thing is clear:

the evangelical work of the Apostles was successful

not merely because of their effort,

but because of God being with them.

It was because the Holy Spirit was with the Apostles

that they were able to carry on their evangelisation

in the midst of so many sufferings they had to meet with.

it is estimated that there are close to 1.3 billion Catholics in the world.

How was it possible for eleven to become 1.3 billion?

At the beginning,

they didn’t have anything written down yet –

no instruction manual to follow.

But they simply lived Christ.

According to

Acts 2:42-47,

“They devoted themselves to the teaching of the apostles

and to the communal life,

to the breaking of the bread

and to the prayers.

Awe came upon everyone,

and many wonders and signs were done through the apostles.

All who believed were together and had all things in common;

they would sell their property and possessions and divide them among all according to each one’s need.

Every day they devoted themselves to meeting together in the temple area

and to breaking bread in their homes.

They ate meals with exultation and sincerity of heart,

praising God and enjoying favour with all the people.

And every day the Lord added to their number those who were being saved.”

What is mentioned in the above verse was possible only because of the presence of Holy Spirit with them

and because of the 'breaking of bread' ,

that is,

the sacrifice of Holy Mass,

which maintained the real presence of Jesus in their midst.

Not only that, disciples multiplied into disciples, not merely followers.

Followers merely follow the life style of the teacher, 

but disciples voluntarily take upon themselves the duty of

not only  following the  life style of the teacher

but also spreading the same among others.

The Church continued to grow,

as we know from Acts,

and more disciples were added.

One important cause for the growth of Christianity was

  the sufferings and persecutions

that the Christians underwent

with a smiling face for the sake of Christ.

During  the persecutions

the  disciples of Christ

happily offered themselves to be  imprisoned,

beaten,

and even  killed for their belief in Christ.

Of the original Apostles,

John was the only one who didn't  die a martyr’s death.

The same thing continues even in modern times.

According to a report from a January 2017 issue of The Christian Post,

over 900,000 Christians have been martyred in the last 10 years.

In 2016 alone, it was estimated that

a Christian was being killed every six minutes.

In another report,

put out by Christianity Today,

close to 70 million Christians have been martyred.

When we happen to be  persecuted

we have to remember Christ’s message in John 16:33.

“In the world you will have trouble,

but take courage. I have conquered the world.”

And we should also be  encouraged by St. Paul's words

 “It is necessary for us to undergo many hardships to enter the kingdom of God.”
(Acts 14:22)


We must remember that we don't  struggle alone.

The early disciples did 2,000 years ago,

and we do today.

By 'we' I refer to  the 'dedicated' Christians all over the world.

I stress the word 'dedicated',

because, there are many 'born Christians',

who are Christians just because they were born so.

Only those who live a Christian life are dedicated Christians.

Dedicated Christians are those

who live according to Christian values

solely for the service of God

and their neighbours.

It is not enough that we  come together at Mass;

we must  support one another,

we must  pray and care for each other;

and we must  submit ourselves daily to Christ and Christ alone.

Now we are to ask ourselves one simple question,

"Are we dedicated Christians or merely born Christians?"

Throughout the history of our Church

dedicated Christians have only suffered.

"They will forbid you the synagogue; nay, the time is coming when anyone who puts you to death will claim that he is performing an act of worship to God."

'' If the world hates you, be sure that it hated me before it learned to hate you"

"They will persecute you just as they have persecuted me."

"Brothers will be given up to execution by their brothers, and children by their fathers; children will rise up against their parents and will compass their deaths,22 and you will be hated by all men because you bear my name; that man will be saved, who endures to the last."

"all the world will be hating you because you bear my name; but that man will be saved, who endures to the last."

"In those days, men will give you up to persecution, and will put you to death; all the world will be hating you because you bear my name;"

Jesus Himself has foretold that

His disciples will suffer in the hands of the persecutors

because they are His disciples.

"Blessed are you, when men revile you, and persecute you, and speak all manner of evil against you falsely, because of me. 12 Be glad and light-hearted, for a rich reward awaits you in heaven"

Jesus does not ask His disciples to fight against their persecutors.

Neither does He advise them to fight for their rights.

But He says

that we are  blessed when we are persecuted because we are  His disciples,

and that we must be happy as a reward awaits for us in heaven.

"They will persecute you just as they have persecuted me."

These words of Jesus  seem to be telling us

that  being persecuted is in fact the identity

for being a real Christian.

Can we imagine Christ without a cross?

Is it not by the cross at the top that  a Church is  identified?
 
So are we.

We will be identified as true Christians

by our sufferings for Christ,

who suffered for us.

The present political atmosphere inspired me to write this article.

Lourdu Selvam.

Wednesday, June 27, 2018

விலக்கப்பட்ட கனியும், மரியாளின் திரு வயிற்றுக் கனியும்.

விலக்கப்பட்ட கனியும், மரியாளின்
திரு வயிற்றுக் கனியும்.
**********************************

இறைவன் நம் முதல் பெற்றோரை பரிசுத்தமானவர்களாகத்தான் படைத்தார்.

அவரது கட்டளையை மீறி

விலக்கப்பட்ட கனியை உண்டதால் பாவம் புகுந்தது.

விலக்கப்பட்ட உணவுதான்

பாவத்திற்கும்,

அதன் விளைவான மரணத்திற்கும்

காரணமாக இருந்திருக்கிறது.

பாவத்திற்குத் தூண்டியவன் சாத்தான்.

ஒரு உணவினால் புகுந்த மரணத்தை

மற்றொரு உணவினால் வெல்ல

இயேசு திருவுளமானார்.

'இந்த உணவை உண்பார் என்றென்றும்  வாழ்வார்.'

எது அந்த உணவு?

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." (அரு:6:54)

நித்திய மரணத்தை வெல்ல

இயேசு தன்னையே

நமக்கு உணவாகக் கொடுக்கிறார்.

'விலக்கப்பட்டக் கனியைத்' தின்றதற்கான மருந்து,

'பாவத்திலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்ட.'

மரியாளின் 'திரு வயிற்றின் கனி'.

பழைய ஏற்பாட்டின் 'கனி'க்கு மாற்றுமருந்து

புதிய ஏற்பாட்டின் 'கனி'.

பழைய ஏற்பாட்டின் கனியைப் பரிந்துரைத்தவன் சாத்தான்.

புதிய ஏற்பாட்டின் 'கனி'யைப் பரிந்துரைத்தவர்  மரியாளின் 'திரு வயிற்றின் கனி'யும்,

சாத்தானை வென்றவருமான நம் ஆண்டவராகிய இயேசு.

ஆக, திவ்ய நற்கருணைதான்

இயேசுவே நமக்கு அருளும் ஆன்மீக உணவு.

விலக்கப்பட்ட கனி மனித இயல்பையே சீரழித்துவிட்டது.

உடலை ஆளவேண்டிய ஆன்மா

பாவத்தினால்,

உடலால் ஆளப்பட ஆரம்பித்தது.

அதனால்தான் உடல் இச்சைகட்கு ஆன்மா அடிபணிய ஆரம்பித்தது.

மனித உறவுகளும் சீரழிந்தன.

இறைவனின் உறவிலிருந்து மனித உறவு முறிந்தது.

இயேசு தரும் இறை  உணவு

ஆதாம் உண்ட விலக்கப்பட்ட உணவினால் ஏற்பட்ட

சீரழிவுகளைச் சரிசெய்கிறது.

இயேசு தரும் அருள்வரங்கள்

நமது ஆன்மாவைப் பலப்படுத்துவதால்

உடல் இச்சைகளை வெல்வதற்கான

ஆன்மீக பலம் பெறுகிறோம்.

உடல் நமது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

இறையுணவு அடிக்கடி உண்பதால்

இறையன்புடன் பிறர் அன்பும் வளரும்.

இதனால் சமூகத்தில்

இறைவன் தரும் சமாதானம் நிலவும்.

இறைவனே நமது உணவாகி

நம்மோடு இரண்டறக் கலப்பதால்

இறைவனோடு நமது உறவு வலுவடையும்.

நற்கருணை மூலம்

கிறிஸ்து நம்மோடு வாழ்வதால்

நாம் நமது சிந்தனை, சொல், செயலில்

கிறிஸ்துவைப் பிரதிபலிப்போம்.

"வாழ்வது நானல்ல

கிறிஸ்து என்னில் வாழ்கிறார்' எனத் துணிந்து சொல்லலாம்.

இயேசு தன்னையே சிலுவையில் பலியாக்கி

ஏற்றுக்கொண்ட உடல் மரணத்தினால்

நமது பாவத்தினால் ஏற்பட்ட

ஆன்மீக மரணத்தை வென்றார்.

இயேசு பெற்ற இந்த வெற்றியை நமது வெற்றியாக மாற்றுவது

நாம் உட்கொள்ளும் திவ்ய நற்கருணைதான்.

எப்படி?

சாதாரண அப்பத்தையும், இரசத்தையும்

தன் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் இயேசு,

சாதாரண மக்களாகிய நம்மை

இறைமக்களாக மாற்றுகிறார்.

அவரது தந்தையை

நாம் உரிமையோடு 'எங்கள் தந்தையே' என்று அழைக்கும்

வரத்தைத் தந்திருக்கிறார்.

நற்கருணை மூலம் இறைமகனோடு ஒன்றித்துவிட்ட நாம்

இறைமக்களுக்குரிய உரிமையயைப் பெறுகிறோம்.

விண்ணரசின் உரிமைக்குடிமக்களாக மாறுகிறோம்.

ஆதாம் உண்ட விலக்கப்பட்ட கனி நம்மை சாத்தானின் பிள்ளைகளாக்கியது.

மரியாளின் திருவயிற்றுக்கனி

நம்மை இறைவனின் செல்லப் பிள்ளைகளாக மாற்றியிருக்கிறது.

இயேசுவே நமது செல்வம்!

அவரே நமக்கு உணவாகக் கிடைத்திருப்பது நமது பாக்கியம்!

லூர்து செல்வம்.


Monday, June 25, 2018

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கும் இறைவன்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கும் இறைவன்.
********************************

மாறாத கடவுள்

சதா மாறிக்கொண்டேயிருக்கும்

இந்த உலகத்தைப் படைத்தது

மிகப் பெரிய அதிசயம்.

அதை விடப் பெரிய அதிசயம்

மாறாத விதிகளின் அடிப்படையில்

அது மாறிக்கொண்டிருப்பதுதான்.

இயற்கையின் விதிகளில் எந்த மாற்றமும் ஏற்படவேயில்லை.

ஆகவேதான் மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடிந்தது.

மாறாத விதிகளின்படி இயங்கும்

மாறிக்கொண்டையிருக்கும்  உலகை இறைவன் படைத்திருப்பது மிகமிகப் பெரிய அதிசயம்.

இறைவன் அழகான இவ்வுலகைப் படைத்தது

வெறுமனே உலகை அழகுபார்ப்பதற்காக அல்ல.

அம்மா விதவிதமான உணவுப்பண்டங்கள் தயாரிப்பது வெறுமனே அவற்றை அழகுபார்ப்பதற்காகவா?

நாம் உண்பதற்காகத்தானே அம்மா உணவு தயாரிக்கிறார்கள்.

அவ்வாறேதான் இறைவன் உலகைப் படைத்தது மனிதன் வாழ்வதற்காக.

ஆனால் நாம் நிரந்தரமாக இங்கு வாழ்வதற்காக அல்ல.

நாம் Trainஐ உண்டாக்கியிருப்பது பிரயாணம் செய்வதற்காக.

ஆனால் வாழ்நாளெல்லாம் பிரயாணம் செய்துகொண்டே இருப்பதற்காகவா?

ஏறவேண்டிய ஏறி

இறங்கவேண்டிய இடத்தில் இறங்குவதற்குத்தானே.

அவ்வாறேதான் இவ்வுலகில் நாம் வாழ்வது

மறுவுலக வாழ்வுக்காக நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.

மறுவுலக வாழ்வே நிரந்தரமானது.

மறுவுலகில் இறைவனோடு நிரந்தரமாக வாழ்வதற்காகவே

இவ்வுலக வாழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது.

மனிதன் உடலும், ஆன்மாவும் இணைந்த படைப்பு.

உடல்

மாறாத விதிகள் கொண்ட

மாறிக்கொண்டேயிருக்கும்
இவ்வுலக

இயற்கையைச் (Nature) சேர்ந்தது.

ஆன்மா

மறுவுலக வாழ்விற்கென்ற படைக்கப்பட்ட

Supernatural being.

நமது உடல் இயற்கைப் பொருட்களால் (தண்ணீர், காற்று,  உலோகங்கள் etc.) ஆனதால் இயற்கை விதிகட்குக் கட்டுப்பட்டது.

ஆகவேதான் ஆன்மா உடலை விட்டுப் பிரியும்போது, உடல் மண்ணிற்குத் திரும்பிவிடுகிறது.

இயற்கை இயங்க இயற்கை விதிகள் தரப்பட்டுள்ளது போலவே,

ஆன்மா இயங்க Supernatural laws (Commandments of God) தரப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு வித்தியாசம், கடவுள் இயற்கைக்குச் சுதந்திரம் எதுவும் கொடுக்கவில்லை.

அது  விதிகளின்படிதான் இயங்கும்.

காற்று வெப்பமடைந்தால் விரிவடையும்.

தண்ணீரை வெப்பப்படுத்தினால்  ஆவியாகும்.

வேறுமாதிரி இயங்க முடியாது.

ஆனால் ஆன்மாவிற்குச் சுதந்திரம் (Freedom of choice) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மா தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி

விதிகளின்படி இயங்கவேண்டும்.

அப்படி இயங்கினால் மறுவுலகில் நித்தியமாக இறைவனோடு வாழும் சன்மானம் (Reward) கிடைக்கும்.

தன் சுதந்திரத்தை விதிகட்கு எதிராகப் பயன்படுத்தினால்

மறுவுலகில் இறைவனோடு
வாழும் சன்மானம் (Reward) கிடைக்காது.

இந்த இழப்பிற்கு ஆன்மாதான் முழுப் பொறுப்பு,

ஏனெனில் அது ஆன்மா தன் முழுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தித் தேடிக்கொண்ட இழப்பு.

இறைவன் நம் முதல் பெற்றோரை நல்லவர்களாகத்தான் படைத்தார்.

ஆனால் விதிகளை மீறி பாவம் செய்தமையால் நமக்குள் தீமை புகுந்தது.

தீமை உலகிற்குள் புகக் காரணமானவர்கள் நாம்தான்.

கடவுள் தீமை புகுவதைத் தடுக்கவில்லை.

ஏன்?

தீமையைத் தடுத்திருக்க வேண்டுமானால்

நமக்குச் சுதந்திரத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கவேண்டும்.

சுதந்திரம் இல்லாமல் எப்படி சன்மானம் பெறமுடியும்?

சுதந்திரத்தை இன்றி இயங்கினால்

நமக்கும்,

சாவி கொடுத்து இயங்கும் கடிகாரத்திற்கும்

என்ன வித்தியாசம்?

ஆனாலும், நாம் செய்யும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.

  வில்லனின் எதிர்ப்பிலிருந்து ஹீரோ வெற்றிக்கனி பறிப்பதுபோல,

தீமையிலிருந்து இறைவன் நன்மையை வரவழைக்கிறார்.

நாம் செய்த பாவந்தானே இறைவனை மனுவுரு எடுக்கச் செய்தது.

இறைவன் மனிதன் ஆனது நமக்குக் கிடைத்த பாக்கியம் அல்லவா!

இயேசுதானே நமக்குக் கிடைத்த செல்வம் !

யூதர்கள் இயேசுவைக் கொன்றது பாவம்,

ஆனால் அதிலிருந்து இயேசு நமது இரட்சண்யத்தைப் பிறப்பித்தார்.

நீரோ மன்னன் விசுவாசிகளைக் கொன்றான், 

அதுவே அவர்களைப் புனிதர்கள் ஆக்கியது.

வேதசாட்சிகள் சிந்திய இரத்தம்

திருச்சபையின் வித்தாக மாறியது.

புண்ணியவான்கள் மட்டுமே வாழும் பங்கில் பணிபுரியும் பங்குச்சாமியாரைவிட

பாவிகள் நிறைந்த பங்கில் பணிபுரியும் பங்குச்சாமியாருக்குதான் ஆன்மீகப்பணி அதிகம்,

விண்ணில் அவருக்குச் சன்மானமும் அதிகம்.

பகலில் எரியும் மெழுகுதிரியைவிட

இருட்டில் எரியும் மெழுகுதிரிக்கே மதிப்பு அதிகம்.

புனிதமான திருச்சபையே பாவிகளின் கூடாரம்தான்,

ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களின் புகலிடமாக இருப்பதுபோல.

பாவிகளைப் பரிசுத்தவான்கள் ஆக்குவதே
திருச்சபையின் பணி.

திருச்சபைக்குள் வாழ்வோரிடம்கூட குழப்பங்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

அவற்றைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை.

ஏனெனில் குழப்பவாதிகளால் திருச்சபையை ஒன்றும் செய்துவிடமுடியாது,

ஏனெனில் அது கல்லின்மீது கட்டப்பட்ட வீடு.

குழப்பங்களிலிருந்தும் நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.

ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

லூர்து செல்வம்.

Thursday, June 21, 2018

தியானம் எங்கே, நாமும் அங்கே.

தியானம் எங்கே,  நாமும் அங்கே.
****------*******-********---*************-**

"

தியானம் எங்கே,  நாமும் அங்கே.
****------*******-********---*************-**

"செபம் சொல்லும்போது Concentration வேணும்னு சொல்றீங்க,

செபமாலை சொல்லும்போது அது ரொம்ப கஸ்டமாயிருக்கே,  உங்களுக்கு எப்படி.? "

"அதுல என்ன கஸ்டம்னு நினைக்கிறீங்க?"

" மனதை ஒருநிலைப்படுத்தணும்னா சொல்ற செபமும் மனமும் இணைந்திருக்கணும்,

வாயொன்று சொல்ல மனம் வேறெங்கோ இருக்கக்கூடாது.

சரிதான?"

"சரிதான். ஆனால் செபமாலை  சொல்லும்போது என்ன பிரச்சினை?

செபமாலை இரகசியங்களைத் தியானித்துக்கொண்டே 'அருள் நிறைந்த மரியே' சொல்ல வேண்டும். அதில் என்ன பிரச்சினை? "

"பிரச்சினையே அங்கேதான்.

சொல்லும் செபத்திற்கும்,  தியானிப்பதற்கும் சம்பந்தமே இல்லை.

'அருள்நிறைந்த' செபத்தில் கபிரியேல் தூதர் தூதுரைத்த நிகழ்ச்சி வருகிறது.

தியானிப்பதற்கு கர்த்தர் பிறந்தது,  இரத்த வியர்வை வியர்த்தது, உயிர்த்தது போன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன.

நாம் தியானிக்க வேண்டியது எதை?

அருள் நிறைந்த செபத்தையா? உயிர்த்த நிகழ்ச்சியையா? "

"இதில பிரச்சினையே இல்லை.

ஒரு வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.

அம்மா சமயல்கட்டில் நின்று சமையல் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் அருகில் நின்றுகொண்டு உங்கள் வெளிநாட்டு அனுபவங்களை விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த அனுபவத்தை நீங்களே விபரியுங்கள் பார்ப்போம்."

"சரி.

அம்மாவையும், அவர்கள் செய்துகொண்டிருக்கும் சமையல் வேலைகளை ரசித்துக்ககொண்டே அனுபவங்களை விபரித்துக்கொண்டிருக்கிறேன்.

அம்மாவும் வேலைக்கிடையே அப்பப்போ என்னைப் பார்த்து அன்புடன் புன்முறுவல் பூக்கிறார்கள்.

இடையிடையே பேசவும் செய்கிறார்கள்.

இப்போ ஒரு கப் காபி தருகிறார்கள்.

அதைக் குடித்துக்கொண்டே அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்."

"போதும்.

இப்போது உங்கள் மனது உங்கள்  அனுபவங்கள்,  அம்மா, அவர்களுடைய வேலை, அவர்களுடைய அன்பு ஆகிய எல்லாவற்றிலேயும்தானே இருக்கிறது."

"ஆமா."

இப்போ இன்னொரு காட்சி.

இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு போகிறார்.

மாதாவும் அழுதுகொண்டே பின்தொடர்கிறார்கள்.

மாதாவுடன் நீங்களும் போகிறீர்கள்.

  மாதாவுடன் பேசிக்கொண்டே,

அதாவது  

மாதாவை நோக்கி

'அருள் நிறைந்த ' செபத்தைச் சொல்லிக்கொண்டே 

இயேசுவின் பாடுகளைக் கவலையுடன்

பார்த்துக்கொண்டே போகமுடிமா? "

"முடியும்.

சமையல்கட்டில் அம்மாவின் வேலைகளை இரசித்துக்கொண்டே என் அனுபங்களைக் கூறியதுபோல

இயேசுகளின் பாடுகளைத் தியானித்துக்ககொண்டே

மாதாவுக்குள்ள செபத்தை மாதாவுக்குச் சொல்கிறேன்.

மாதாவுடன் பேசும்போது இயேசுவையும்  கவனிக்கிறேன்.

அப்படியே ஒவ்வொரு இரகசியத்தைத் தியானிக்கும்போதும்

மாதா என் அருகில் இருப்பதுபோல

நினைத்துக்கொள்கிறேன். சரியா? "

"Very good. உங்கள் கேள்விக்கு நீங்களே விடை அளித்துவிட்டீர்கள்.

மனம் ஒரு குரங்கு.

கொஞ்சக் கவனக்குறைவாய் இருந்தால்  நாம் ஒன்றைத் தியானித்துக்கொண்டிருக்கும்போது
சம்பந்தமே இல்லாத. நிகழ்ச்சிக்குத் தாவும்.

அப்பப்போ  பிடித்துக் கட்டிப்போடவேண்டியதுதான்.

நமது தியான எல்லையை விட்டு அது வெளியே போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதைப்பற்றித் தியானிக்கிறோமோ

அங்கே நாம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் மனம் அந்த இடத்தை விட்டு வேறெங்கும் போகாது.

செபம் செய்வோம்.

செபமாலை சொல்வோம்.

மாதாவுடன்  இயேசுவை பின்தொடர்வோம்.

லூர்து செல்வம்.

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.
*******************************

நமது செபத்தின் வெற்றிக்கான படிகள்.

1. நம்புங்கள்.

2. செபியுங்கள்.

3. நல்லது.

4. நடக்கும்.

கணிதவகுப்பு,

ஆசிரியர் சொல்கிறார்,

"இப்போ போடப்போற கணக்கின் விடை சரியாக வரவேண்டுமானால் அதற்குரிய எல்லா படிகளும் (Steps) சரியாக இருக்க வேண்டும். ஒரு படி தவறாக இருந்தால்கூட சரியான விடை கிடைக்காது"

இது கணக்கிற்கு மட்டுமல்ல, எல்லா அனுபவங்களுக்கும் பொருந்தும்.

ஒருவர் ஒரு ஊருக்கு கேட்டார்.

"Straight ஆ போங்க.

முதல் Junction ல்ல Right ல திரும்புங்க.

அடுத்து ஒரு  Junction வரும்.

அதில Left ல திரும்புங்க.

அப்புறம் Straight ஆ போங்க." என்றார்.

வழிகேட்டவர்

முதல் Junctionல்ல left ஆ திரும்பி,

அடுத்த Junctionல்ல Right லதிரும்பிப் போனால்

ஊருக்குப் போவாரா?

ஊருக்குப் போவார், ஆனால் வேறு ஏதாவது ஊருக்குப் போவார்.

இப்போ செபத்துக்கு வருவோம்.

செபம் வெற்றி பெற

முதலில் நம்ப வேண்டும்.

எதை நம்ப வேண்டும்?

நல்லது நடக்கும் என்று நம்ப வேண்டும்.

அதாவது செபத்தின் இறுதியில்

என்ன நடந்தாலும்

அது நமக்கு நல்லதாகத்தான் இருக்கும்

என்று நம்பவேண்டும்.

அப்புறம் செபிக்கவேண்டும்.

எப்படி செபிக்கவேண்டும்?

நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்.

அதாவது

செபத்தின் விளைவாக

எது நடந்தாலும்

அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்

என்ற நம்பிக்கையோடு

செபிக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கையோடு செபித்தால் வெற்றி  உறுதி.

ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது.

அந்தப் பெண் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அவன் இறைவனிடம் செபிக்கிறான்.

அவன் உண்மையான பக்தனாக இருதால் எப்படி செபிப்பான்?

"இறைவா,

எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது.

அவளையே திருமணம் செய்ய விரும்புகிறேன்.

அவளே என் மனைவியாக ஆக அருள்புரியும்.

ஆயினும் எனது விருப்பப்படியல்ல,

உமது சித்தப்படியே நடக்கட்டும்.

ஏனெனில் எனக்கு எது நல்லது என்று

உமக்கு மட்டுமே தெரியும். "

இந்த செபம் கேட்கப்படும்.

எது நடந்தாலும் இறைவன் சித்தப்படியே நடக்கும்.

கத்திதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் எந்த பிள்ளைக்கும்

ஒரு நல்ல தகப்பன் அதை வாங்கிக்கொடுக்கமாட்டான். 

இறைவன் நமது நல்ல தந்தை.

நமக்குக் கெடுதியானவற்றை

நாம் எப்படி அடம் பிடித்துக் கேட்டாலும்

அவர் எப்படித் தருவார்?

நாம் செபிக்கும்போது,

1. இறைவன் நமக்கு நல்லதை மட்டுமே செய்வார் என உறுதியாக நம்புவோம்

2.அந்த நம்பிக்கையுடன் செபிப்போபம்.

3.நமக்கு எது நல்லதோ அதைக் கட்டாயம் கடவுள் தருவார்.

4.இறைவனால் எது நடந்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.

லூர்து செல்வம் ..


Wednesday, June 20, 2018

செபமாலை ஒரு பைபிள் தியானம்.

செபமாலை ஒரு பைபிள் தியானம்.
*****************----******-***-----**

"சார் என்ன, சப்தத்தையே காணோம்.",

"ஒரு கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. "

"நீங்களும் ஓடிக்கொண்டிருந்தீர்கள்,

அதாவது நான் இதுவரைச் சொன்னதைக் கவனிக்கவேயில்லை! ''

"கவனித்தேன். ஆனாலும் இன்னொரு கேள்வியும் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது."

"சரி கேளுங்கள்."

"ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவைத்தானே பின்பற்ற வேண்டும்?

நீங்கள் ஏன் 'அம்மா, அம்மா' என்று மாதா பின்னாலே ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? "

"ஹலோ! இந்தக் கேள்வியை நீங்கள்  முதலில்

கிறிஸ்துவிடம் கேட்டிருக்க வேண்டும்.

'ஆண்டவரே!

எங்களை இரட்சிப்பதற்கென்று பிறந்துவிட்டு,

33 ஆண்டு வாழ்க்கையில்

30 ஆண்டுகளை அம்மாகூட இருந்தே

வேஸ்ட் பண்ணிட்டடீங்களே!'

என்று கிறிஸ்துவிடம் கேட்டிருக்க வேண்டும்.

கேட்டிருந்தால் எங்கிட்ட கேட்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது."

"இப்போ நீங்க பதில் சொல்லுங்க."

"நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால்தான் மாதாமீது பக்தி வைத்துள்ளோம்."

"அதெப்படி?"

"இயேசுவின் அறிவுரைப்படி

அவரது
விண்ணகத் தந்தையை

'எங்கள் தந்தையே என்று அழைக்கிறோம்.

இயேசுவை நேசிப்பதால்தான்

அவரின் மண்ணகத் தாயை 'எங்கள் தாயே'

என்று அழைக்கிறோம்.

இதில் என்ன தவறு இருக்கிறது ?

நமது தாயை நேசிப்பதில் என்ன தவறு  இருக்கிறது?

நமது தாயிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?

தாயை அவமதிப்பது மகனை அவமதிப்பதுபோல்தான்."

"சரி, சரி.

நேசியுங்கள்,  பேசுங்கள்.

அதென்ன செபமாலை?

புரியவில்லை."

"செபமாலை மூலம் மாதாவிடம் பேசுகிறோம்.

அதில் எது புரியவில்லை? "

"பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டென்று நினைக்கிறேன்."

"ஹலோ! பைபிள்தான் எங்கள் உயிர்."

"சந்தோஷம். பைபிள் கையில் இருக்கா? "

"இருக்கு."

"பைபிளைத் திறந்து லூக்காஸ் 1: 28ஐ வாசியுங்கள்."

" தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்."

"யாருடைய தூதர்? "

"கடவுளின் தூதர்."

"யாரை வாழ்த்துகிறார்?"

"மரியாளை."

"என்ன சொல்லி வாழ்த்துகிறார்? "

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே."

"இன்னொரு நேரம் சொல்லுங்க."

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே"

"இன்னொரு நேரம் சொல்லுங்க."

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே"

"இன்னொரு நேரம் ....."

"ஹலோ!  என்னையே செபமாலை சொல்ல வைக்கிறீங்க!

சரி.

செபமாலை செபங்கள் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள்தான்.

ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனாலும் ஒன்று புரியவில்லை.

சொன்ன செபத்தையே திரும்பத்திரும்ப சொல்றீங்க."

"அதனால்தான் அதற்கு செபமாலைன்னு பெயர்.

ஒரே ஒரு பூவைக்கொண்டு பூமாலை கட்டமுடியுமா?"

"நான் அதைக் கேட்கல, சார்.
ஒரே செபத்தை 53 தடவை சொல்றதைவிட

அத்தனை வெவ்வேறு செபங்களைக் கோர்த்து

செபக்கதம்பமாலையாகச் சொல்லலாமே."

"செபம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

செபத்தின் அடிப்படைத்தேவை

நம் மனம் இறை மனத்தோடு

இணைய வேண்டும் என்பதுதான்.

ஆனால் நாம் இப்போது சொல்லும்  செபமாலை

நமது அன்னையே

புனித டோமினிக் வழியாக

நமக்குத் தந்தது.

செபமாலையை நமக்குத் தந்த அன்னையை

'செபமாலை அன்னை என்று அழைக்கிறோம்.

'The rosary was given to Saint Dominic 

in an apparition

by the Blessed Virgin Mary

in the year 1214

in the church of Prouille.

This Marian apparition

received the title of 

Our Lady of the Rosary.

நம் அன்னையே தந்ததை
ஏன் மாற்றவேண்டும்?"

"புரிகிறது .

இப்போ புரிகிறது

செபமாலை

ஒரு பைபிள் தியானம் என்று.

ஒரு 153 மணி செமமாலை சொல்லும்போது

பைபிள்படியிலான

இயேசுவின்  வாழ்க்கை வரலாற்றையே

தியானித்து முடித்துவிடுகிறோமே!"

"ஹலோ! நீங்களா இப்படிச் சொல்றீங்க?

நம்ப முடியவில்லையே! "

"ஆமா, நான்தான் இப்படிச் சொல்றேன்.

நம்புங்கள்."

"மரியே வாழ்க."

லூர்து செல்வம்.