Saturday, December 30, 2017

திருக் குடும்பம்.

திருக் குடும்பம்.
********************************
ஒரு புதிய பார்வை.

குடும்பத் தலைவர் -
புனித சூசையப்பர்.

மற்ற அங்கத்தினர்கள் -
புனித மரியாள்,
இறைமகன் இயேசு.

புனித சூசையப்பர் - அருள் மிகப் பெற்றவர்.

புனித மரியாள் - அருள் நிறைந்தவர்.

இறைமகன் இயேசு - அருளின் ஊற்று.

கொஞ்சம் உற்று நோக்குங்கள்.

அருள் வரிசையில்

அருளின் ஊற்று - இயேசு  - முதல் இடம்.

அருள் நிறைந்தவர் - புனித மரியாள்  - இரண்டாவது இடம்.

அருள் மிகப் பெற்றவர். -
புனித சூசையப்பர் - மூன்றாவது இடம்.

மூன்றாவது இடத்திலுள்ளர்தான் திருக்குடும்பத்தின் தலைவர்.

குழந்தை இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம்:

தாழ்ச்சி.

அருளின் ஊற்று இயேசுவும்,  அருள் நிறைந்த மரியாளும் அருள் மிகப் பெற்ற சூசையப்பரின் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது முதல் இடமும் , இரண்டாம் இடமும் மூன்றாம் இடத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

சர்வ வல்லவர் தன்னைத்தானே தாழ்த்தியிருக்கிறார்.

தனது வாழ்க்கை மூலம் நமக்கு ஒரு பாடம்  கற்றுத் தந்துள்ளார்.

"29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."
(மத்.11:29)

இயேசுவிடமிருந்து தாழ்ச்சியைக் கற்றுக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment