Sunday, December 24, 2017

சமாதானம் செய்ய வந்த சர்வ வல்லவர்.

சமாதானம் செய்ய வந்த சர்வ வல்லவர்.
********************************

சமாதானம் = சமம் + தானம்.

சர்வ வல்லவர்  இறைவன்.

மிக உயர்ந்தது அவர் ஸ்தானம்.

பாதாளத்தில் விழுந்தான்
மனிதன் பாவத்தினால்,

சமாதானம்  கேட்கக்கூட திராணி இல்லை அவனுக்கு.

இரங்கினார் இரக்கத்தின் தேவன்.

சம தானத்தில் சமாதானம் செய்திட,

மனிதனைத் தன் நிலைக்கு உயர்த்திட,

மனிதநிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் இறைவன்.

மனிதனை ஏற்றிட தானே இறங்கினார் மனித நிலைக்கு.

சம தானத்திற்கு இறைவன் இறங்கி,

நம்மைத் தன் பிள்ளைகளாக்கினார்.

தந்தை எவ்வழி பிள்ளைகளும் அவ்வழி.

நாம் மாறுவோம்

சமாதானத்தின்

தூதுவர்களாய்!

  "சமாதானம் செய்வோர்

பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள்

கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்." (மத்.5:9)

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment