Saturday, June 14, 2025

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.


ஒரு கோடிஸ்வரனின் 10 வயது மகன் திறந்த வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அருகில் ஒரு புதைகுழி இருந்தது அவனுக்குத் தெரியாது.

ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தவன் தவறி புதைகுழிக்குள் விழுந்து விட்டான்.

தன்னைக் காப்பாற்றும் படி கத்தினான்.

கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தான்.

அவன் கத்தியது ஒரு ஏழைக் கூலியின் காதில் விழுந்தது.

அவன் தாமதிக்காமல் ஓடிவந்து பையனின் ஆபத்தான நிலையில் தன் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் கட்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான்.

பையன் நன்றி கூறிவிட்டு தன் இல்லம் சென்றான்.

கொஞ்சம் பொறுத்து காப்பாற்றப்பட்ட பையனின் பணக்கார அப்பா மகனைக் காப்பாற்றிய ஏழைக் கூலியின் குடிசைக்கு வந்து,

"எனது மகனின் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

எவ்வளவு பணம் வேண்டும், கேளுங்கள்.

எவ்வளவு கேட்டாலும் நன்றியுடன் தருவேன்." என்றான்.

ஆனால் ஏழைக் கூலி

"யாராவது உதவியை விற்பார்களா? நீங்கள் நன்றி சொன்னதே போதும். பணம் வேண்டாம்" என்று கூறிவிட்டான்.

பணக்காரன் ஏழைக் கூலியின் மகனைப் பார்த்தான்.

"பணம் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம். உங்கள் பையனின் படிப்புக்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்" என்றான்.

மகனின் நலன் கருதி ஏழை அதை ஏற்றுக் கொண்டான்.

பணக்காரனின் உதவியோடு ஏழை பையன் நன்கு படித்ததோடு

 மருத்துவக்கல்லூரியில்  படித்து, தலைசிறந்த டாக்டர் ஆனது மட்டுமல்ல,

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ உதவிய புது மருந்து ஒன்றையும் கண்டுபிடித்தார்.

அவர்தான் பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்த

சர் அலெக்சாண்டர் பிளெமிங் (Sir Alexander Fleming) 

புதை குழிக்குள் விழுந்து காப்பாற்றப் பட்ட பையன் வளர்ந்தபின் சுகமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அநேக மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 

சர் அலெக்சாண்டர் பிளெமிங் தான் கண்டுபிடித்த புது மருந்தின் உதவியுடன் அவரைக் காப்பாற்றினார்.

புதை குழியிலிருந்து
காப்பாற்றப்பட்டவர், இங்கிலாந்தின் பிரதமராக இருந்து, இரண்டாம் உலகப் போரில்,நேச நாடுகளின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்!

அன்று பணக்காரப் பையன் புதைகுழிக்குள் விழாதிருந்திருந்தால் நமக்கு பென்சிலின் மருந்து கிடைத்திருக்காது.

விழுந்தவன் இறந்திருந்தால்
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்றிருக்கும்.

இந்தியா செர்மனி கைக்கு மாறியிருக்கும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

ஒரு ஏழையின் பிறரன்பு முயற்சி உலகத்தையே காப்பாற்றியது.

உதவி நிச்சயம் பலன் தரும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment