Wednesday, January 26, 2022

நாம் யூதாசைப் போல நடந்து கொள்ளலாமா?

நாம் யூதாசைப் போல நடந்து கொள்ளலாமா?


"தாத்தா, உங்கள ரொம்ப நாளா பார்க்கவே முடியல?"

"ஏன், என்னாச்சி? கண்ணில் ஏதாவது கோளாறா?

கண்டாக்டரிடம் கண்ணைக் காண்பிக்க வேண்டியதுதானே!"

"என் கண்ணில் எந்தக் கோளாறும் இல்லை. நீங்கள் வெளியூருக்குப் போயிருந்தீர்களோ?"

"உள்ளுரிலேயே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் வெளியூருக்குப் போனது மாதிரிதான்.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை?"

"ரொம்ப நாளா மனதுக்குள்ளே கிடக்கும் ஒரு சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்."

", என்ன சந்தேகம்?"

"நரகம் இருக்கிறதுதானே?"

", மோட்சம் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நரகம் இருப்பதும்.

மோட்சமும், நரகமும் நாம் வாழும் உலகத்தைப் போல இடங்கள் அல்ல. வாழ்க்கை நிலைகள்.

மரணத்துக்குப் பின் முடிவுல்லா காலமும் இறைவனோடு ஒன்றித்து வாழும் பேரின்ப நிலை மோட்சம்.

முடிவுல்லா காலமும் இறைவனைப் பிரிந்து வாழும் பேரிடர் நிலை நரகம்."

"நரகத்திற்கு யார் போவார்கள்?"

", சாவான பாவ நிலையில் மரணிப்பவர்கள் நரகத்திற்குப்
போவார்கள்."

"நமக்குத் தெரிந்த சாவான பாவ நிலையில் உள்ள எல்லோரும்
நரகத்திற்குத்தானே
போவார்கள்?"

", உன் கேள்வியே தவறு. நாம் மனிதர்களின் உடலை மட்டுமே பார்க்க முடியும்.

ஆன்மாவைப் பார்க்க முடியாது.

உனக்கு தெரிந்தவர்களின் ஆன்மா சாவான பாவத்தில் இறந்தது என்று உனக்கு எப்படி தெரியும்?

சம்பந்தப்பட்டவர்களின் ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?"

"பாவ நிலையில் வாழ்கின்றவர்களை நமது கண்ணால் பார்க்கிறோமே!"

",ஒருவன் பாவ நிலையில் வாழ்கிறான் என்று தீர்ப்பிட நமக்கு அதிகாரம் இல்லை.

மனிதர்களின் உள்ளங்களை அறியும் இறைவனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. 

 "நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்." (மத். 7:1)

யூதர்கள் இயேசுவையே "தேவ தூஷணம் சொன்னார்" என்று குற்றம் சாட்டினார்கள். 

மற்றவர்களைப் பாவிகள் என்று நாம் தீர்ப்பிட்டால், நாம் இயேசுவைக் குற்றம் சாட்டிய யூதர்களை விட மோசமானவர்கள் ஆகிவிடுவோம்.

கடவுளின் உரிமையை பறிக்க நமக்கு அதிகாரம் இல்லை.

அதுமட்டுமல்ல, பாவ நிலையில் வாழ்பவர்கள் எல்லாம் அதே நிலையில்தான் மரிப்பார்கள் என்று நமக்கு தெரியாது.

அதுவும் இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

தாய்த் திருச்சபை மோட்சத்திற்கு சென்ற சிலரின் பெயர்களை புனிதர்களாக வெளியிட்டிருக்கிறது.

ஆனால் நரகத்திற்கு சென்ற யாரின் பெயரையும் வெளியிடவில்லை ."

"உலகப் போர்களின் போது லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்கள் பெயர்கள் நமக்கு தெரியும்.

அவர்கள் நரகத்திற்கு சென்றிருப்பார்கள் என்று கூறினால் அதில் உண்மை இருக்காதா?"

", அதில் உண்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் கொலைகள் செய்தது பாவம்தான். ஆனால் தங்களது மரண சமயத்தில் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறதே!"

"யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது பாவம்தானே?"

", ஆமா."

"தற்கொலை செய்து கொண்டது பாவம்தானே?"

",ஆமா."

" அப்படியானால் யூதாஸ் நரகத்தில் தானே இருப்பான்?"

"தேவையில்லை.

உனக்கு யூதாஸ் தற்கொலை செய்து கொண்டதுவரைதான் தெரியும்.

அவன் இறந்து கொண்டிருந்த போது அவனது உள்ளத்தில் என்னென்ன எண்ண ஓட்டங்கள்
இருந்தன என்பது உனக்கு தெரியுமா?

செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு கேட்க வாழ்வின் இறுதி வினாடியில் ஒரு சிறு பகுதியே போதுமே!

A small fraction of a second is enough to feel sorry for our sins and request for God's forgiveness."

"As for Judas, 

the church has never definitively said that Judas

 — or any individual, for that matter — is surely in hell. 

It’s conceivable, I suppose, that at the last moment Judas, filled with remorse, could have repented and sought the Lord’s forgiveness."
(Father Kenneth Doyle)

"அப்படியானால் யூதாஸ் மோட்சத்தில்தான் இருக்கிறான் என்று நம்பலாமா?"

",யாரையும் குற்றவாளி என்று தீர்ப்பிடவே நமக்கு உரிமை இல்லை.

நல்லவிதமாய் நினைப்பதில் தவறில்லை.

யூதாஸ் நரகத்தில் இருக்கிறான் என்பது திருச்சபையின் போதனை அல்ல.

அவன் எங்கு இருக்கிறான் என்பது பற்றியும் திருச்சபை எந்தவித கருத்தும் கூறவில்லை.''

"யூதாஸ் எதற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான்?"

'',பணத்தின் மீது உள்ள ஆசையால் தான்." 

"யூதர்கள் இயேசுவைக் கொல்வதற்காகத் தேடினார்கள்.
யூதாஸ் அவர்களுக்கு உதவி செய்தான்.

அப்படியானால் அவரைக் கொல்வதற்காகத்தானே உதவி செய்தான்?"

",கொல்வதற்காக உதவுவது அவனது நோக்கமாக இருந்திருந்தால்,

அவர் மரணத் தீர்வையிடப்பட்டபோது சந்தோசப் பட்டிருப்பான்.

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்று வருந்தி

வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போயிருக்க மாட்டான்.

 தற்கொலை செய்து கொண்டதுதான் அவன் செய்த தப்பு.

இராயப்பரைப் போல் அவனும் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

நாமும் பாவம் செய்யும்போது யூதாசை போலவே நடந்து கொள்கிறோம்.

சுய இன்பத்துக்காகவே பாவம் செய்கிறோம்.

ஆனால் நமது பாவம்தான் இயேசுவின் மரணத்திற்கு காரணம் என்பதை மறந்து விடுகிறோம்."

"அப்படியானால் யூதாஸ் பணத்தை நேசித்ததைவிட இயேசுவை அதிகம் நேசித்தான், சரியா?"

", சரி. ஆனால் 

ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்ற இயேசுவின் போதனையை மறந்து

ஒரே நேரத்தில் இயேசுவையும், பணத்தையும் நேசித்ததுதான் அவன் செய்த தப்பு.

நமக்குப் பணம் கிடைத்துவிடும், ஆனால் இயேசு எப்படியும் தப்பித்து விடுவார் என்று அவன் நினைத்திருப்பான்.

அவன் நினைத்தபடி நடக்கவில்லை."

"இன்னும் ஒரே ஒரு கேள்வி.

யூதாஸ் நரகத்திற்கு போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.

அப்படியானால் அவன் மோட்சத்திற்கு போயிருப்பான் என்று நம்பலாமா?"

", போவதற்கு வேறு நிலை இல்லை."

"தாத்தா ஏதாவது கூற விரும்புகிறீர்களா?"

",நாம் எல்லோரும் பாவிகள்தான்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு கேட்போம்.

நம்மை மன்னிப்பதற்கென்றே இயேசு இன்னும் நமது பங்கு குருவின் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment