Sunday, September 29, 2019

பக்தி எதில் அடங்கியிருக்கிறது?


பக்தி எதில் அடங்கியிருக்கிறது?
*****     *****     *****     ******

"தம்பி இங்கே வா."

"தாத்தா!  சொல்லுங்க."

..."நல்ல பையன். தினமும் காலையில ஒழுங்கா கோவிலுக்கு வந்துட்ற, ரொம்ப சந்தோசம்.

உங்கிட்ட பேசணும்போல இருக்கு, பேசலாமா?"

"நடந்து கொண்டே பேசலாமா?  நான் வீட்டுக்குப் போயி Schoolக்குப் புறப்படணும்."

..."நீ நடந்து கொண்டே பேசு. நான் பேசிக்கொண்டே நடக்கிறேன்."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"உனக்கு நடக்கிறது முக்கியம். இங்கே நின்னா Schoolக்குப் புறப்பட முடியாது.

ஆகவே நீ  நடந்து கொண்டே பேசு.

எனக்கு உன்னோட பேசறது முக்கியம்.

ஆகவே நான் பேசிக்கொண்டே நடக்கிறேன்."

"அதாவது முக்கியத்துக்கு முதல் இடம்."

..."ஆமா. உனக்கு யார் மேல பக்தி அதிகம், இயேசு மேலேயா அல்லது மாதா மேலேயா?"

"தாத்தா, அன்பை அளப்பதற்கு நம்மிடம் அளவுகோல் எதுவும் கிடையாது.

சர்வத்தையும் உணர்ந்த கடவுளுக்கு மட்டும்தான் நமது அன்பின் ஆழம் தெரியும்.

என்னைப் பொறுத்தமட்டில் இயேசுவை என்னால் இயன்ற அளவு அன்பு செய்கிறேன்.

இயேசுவின் தாயையும் என்னால் இயன்ற அளவு அன்பு செய்கிறேன்.

யாரை அதிகமாக என்று கேட்டால், என்னிடம் ஒரு பதில்தான் இருக்கிறது.

இயேசு  என்னைப் படைத்து இரட்சித்த கடவுள். அவரின்றி நான் இல்லை.

கடவுளை 
முழு உள்ளத்தோடும்
முழு ஆன்மாவோடும்
முழு மனத்தோடும் அன்பு செய்ய வேண்டும் இயேசு  கூறியுள்ளார்.

நான் சின்ன பையன், அந்த அளவை இன்னும் எட்டவில்லை.

ஆனால் 'அருள் நிறைந்த மரியாள்' தன் வாழ்நாள் முழுவதும் தன் மகனை

முழு உள்ளத்தோடும்
முழு ஆன்மாவோடும்
முழு மனத்தோடும்

அன்பு செய்தாள்.

கடவுளை நேசிக்கும் நான் 'அவருக்காக' அவரது தாயையும் நேசிக்கிறேன்.

'அவருக்காக' என்று சொன்னேன், ஏனென்றால் மகனுக்காகத்தான் தாய்.

மகன் இல்லாவிட்டால் தாயில்லை.

மகன் கடவுள்.

கடவுளை கடவுள் என்பதாலேயே நேசிக்கிறேன்.

மாதாவை கடவுளின் மாதா என்பதற்காகவே நேசிக்கிறேன்.

எல்லாம் அவருக்காகத்தான்.

நேசத்தின் அளவு தெரியாது.

ஆனால் ஒன்று உண்மை.

இவ்வுலகத்தில் உள்ளவர்களை நேசிப்பதை விட இயேசுவை அதிகமாக நேசிக்கிறேன்."

..."அதை மட்டும் எப்படி அளக்க முடிகிறது?"

"அளக்கவில்லை.

'உனக்கு நான் வேண்டுமா?  அல்லது இந்த உலகம் வேண்டுமா?'

என்று இயேசு  நம்மிடம் கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும்?

அதேபதில்தான் நீங்கள் கேட்ட கேள்விக்கும்."

..."Correct. 'என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.

என்னைவிடத் தன் மகனையோ மகளையோ
அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.'
(மத்.10:37)

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

இப்போ ஒரு கேள்வி,  மாதா பக்தி பற்றி.

ஒருவன் மாதா பக்தன் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?"

"ஒருவன் மாதாவின் நற்குணங்களைத் தானும் பின்பற்றி வாழ்ந்தால் அவன் மாதா பக்தன்.

மாதாவைப் போல யாராவது ஆண்டவரது அடிமையாக முழு அர்ப்பணிப்போடு வாழ்ந்தால்

அவனை மாதா பக்தன் என்று அறிந்து கொள்ளலாம்."

..."Correct.  மாதாவின் நற்குணங்களில் சிலவற்றையாவது கூறமுடியுமா?"

"மாதாவைப்பற்றி என்னுடைய அம்மா நிறைய சொல்லி யிருக்காங்க.

மாதா ரொம்ப தாழ்ச்சி உள்ளவங்க.

மெசியா ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் என்று தீர்க்கத்தரிசிகள் சொல்லியிருக்காங்க.

ஆகையினால் அந்தக் காலத்து யூதக் கன்னிப் பெண்கள் தங்கள்  வயிற்றில் மெசியா பிறக்கமாட்டாரான்னு ஆசைப்படுவாங்களாம்.

ஆனால் மாதா அப்படியெல்லாம் ஆசைப்பட்டது மாதிரி தெரியல.

ஆசைப்பட்டிருந்தால் கபிரியேல் தூதர் தூது உரைத்தவுடனே

"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

என்று சொல்லியிருக்க மாட்டாங்க.

எடுத்த எடுப்பிலேயே 'ஏற்றுக் கொள்கிறேன்'னு சொல்லியிருப்பாங்க.

ஆனால் மாதாவுக்கு அந்த எண்ணமே இருந்ததில்லை.

ஆனாலும் அதுதான் கடவுளின் திருவுளம் அறிந்வுடனே,

'இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள்.

அடிமைக்கு சொந்த விருப்பு முக்கியமல்ல, எஜமானனின் விருப்புதான் முக்கியம்.

இது அம்மாவின் தாழ்ச்சியைக் காட்டுகிறது.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய விசுவாசம்.

கபிரியேல் தூதர்  "கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்று சொன்னவுடனே மறுகேள்வி கேட்காமல் விசுவசித்தார்கள்.

நாம் பைபிள் வாசிக்கும்போது எல்லா விசயமும் புரியாது.

எல்லாவற்றையும் புரியக்கூடிய அளவுக்கு நாம் பெரிய ஞானிகள் அல்ல.

ஆனால் இறைவார்த்தையைப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய கீழ்ப்படிதல்.

இயேசு கைக்குழந்தையாக இருக்கும்போது

கபிரியேல் தூதர் சூசையப்பரின் கனவில்  தோன்றி இட்ட கட்டளைகளுக்கு

மாதாவும் கீழ்ப்படிந்தார்கள்.

குழந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போனது,

திரும்பிவந்தது,

நசரேத்துக்குப்போனது

எல்லாவற்றுக்கும் அம்மாவின் கீழ்ப்படிதல்தான் காரணம்.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய இடைவிடாத செபம்.

இயேசு 30 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்தார்.

கடவுளின் அருகில் இருப்பதும், அவரோடு பேசுவதும்தானே செபம்.

அம்மா இடைவிடாது மகனிடம் பேசினார், அதாவது, செபித்தார்.

ஒருவகையில் அம்மாவின் வாழ்க்கையே ஒரு செபம்தான்.

தன் வாழ்க்கை முழுவதையும் தன் மகனினுக்காக வாழ்ந்த ஒரே பெண்மணி அம்மா மட்டடும்தான்!

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய சுய ஒறுத்தல்.

அம்மா என்றாலே தன் குடும்பத்திற்காக தன்னைத்தானே ஒறுத்து வாழ்பவள்தான்.

திருமணமானவராக இருந்தாலும்

தான் இறைவனுக்குக் கொடுத்திருந்த கற்பு நெறி வார்த்தைப்பபாட்டை முன்னிட்டு

திருமண சுகத்தை தியாகம் செய்தவள் நம் அன்னை.

தன் வயிற்றில் இருந்தது எல்லாம் வல்ல கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.

ஆயினும் அவரைப் பெற்று எடுப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவத்தையே அவர் தந்தபோது

தன்னையே ஒறுத்து தொழுவத்தையே ஏற்றுக்கொண்டார்.

உலகத்தையே படைத்தவர் தன் மகனாக இருந்தும் வாழ்வதற்கு பங்களாவைக் கேட்கவில்லை.

மற்ற ஏழைகளைப் போலவே ஒரு சாதாரண வீட்டில்தான் அவரை வளர்த்தாள்.

தன்னையே ஒறுத்து அவரது பாடுகளின்போது இறுதிவரை அவருடனே இருந்தாள்.

அவரது ஒறுத்தல் வாழ்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மற்றும் அவளது மாசு மரு அற்ற தன்மை,

அன்பு,

பொறுமை,

கருணை

போன்ற குணங்களும் பிடிக்கும்"

"வீடு பக்கத்தில வந்தாச்சோ?"

"ஆமா, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

..."கடைசி  நான்கு  குணங்களையும் விளக்கவில்லையே.

அதை வச்சிக் கண்டுபிடிச்சேன்."

"ஆமா தாத்தா. இதுதான் எங்க வீடு. உடனே ஸ்கூலுக்குப் புறப்படணும்.  வரட்டுமா தாத்தா?"

"வா. நாளை சந்திப்போம்."

நாம் மாதாவைத் தேடுவது உதவிகள் கேட்பதற்காகத்தான்.

குழந்தை கேட்டு,

வேலை கேட்டு,

வெற்றி கேட்டு

மாதாவைத் தேடி திருப்பயணங்கள் மேற்கொள்கிறோம்.

இதெல்லாம் வேண்டாமென்று சொல்லவில்லை.

ஆனால் பக்தி அடங்கி இருப்பது

பயணங்களில் அல்ல,

மாதாவைப்போல் வாழ்வதில்.

லூர்து செல்வம்.

Tuesday, September 24, 2019

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"  (லூக்8:21)

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" 
(லூக்8:21)
*******        *******        ********

"ஹலோ!  நில்லுங்க, சார்."

"வணக்கம், சொல்லுங்க."

"ஏன், நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா,பார்த்தவுடனே வணக்கம் சொல்றதுக்கு?"

"ஹலோ! யார் என்ன சொன்னாலும்,

பைபிளே சொன்னாலும்,

அதற்குத் தவறாகவே அர்த்தம் பண்றதுல ஒண்ணாம் நம்பர் நீங்கதான்.

எங்க இருந்து இந்த கலையைக் கற்றுக்கிட்டீங்க?"

"நான் எங்க தவறா அர்த்தம் பண்ணினேன்?

என்னைப் பார்த்து,

'வணக்கம் சொல்லுங்க'ன்னு சொன்னது  நீங்கதானே?"

"உங்களுக்கு 'வணக்கம்' சொன்னது நான்.

'வணக்கம்' சொல்லிவிட்டு,

கொஞ்சம் இடைவெளி(,) விட்டு,

நீங்க சொல்ல வந்தத 'சொல்லுங்க'ன்னு சொன்னேன்.

'இடைவெளி'யை நீங்களே சாப்பிட்டுவிட்டு,

நான் உங்களிடம் வணக்கம் கேட்டதா சொல்றீங்க!

சரி விடுங்க. என்ன நிற்கச் சொன்னது நீங்க. என்ன விசயம்? சொல்லுங்க."

"பைபிள் வாசிக்கிற பழக்கம் உண்டா?"

.." Introductory questionலாம் வேண்டாம். கேட்க வந்தத நேரடியாகவே கேளுங்க."

"மரியாள் இயேசுவைப் பார்க்கவந்தபோது அவர் மக்களைப் பார்த்து,

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" 

என்று சொன்னார் தெரியுமா?"

.."தெரியும். சொல்லுங்க."

"இதிலிருந்து என்ன தெரிகிறது?"

.."உங்களுக்கு என்ன தெரிகிறது?"

"இயேசுவுக்கு தன்னைப் பெற்ற தாயின்மேல்  விசேச அக்கரை இல்லை என்று தெரிகிறது.

அவரது அக்கரை எல்லாம் தன்னைப் பின்பற்றுவோர் மேல்தான்.

நீங்கள்தான் 'மாதா, மாதா' என்று மரியாளைக் கொண்டாடுகிறீர்கள்."

.."எதை வைத்து
இயேசுவுக்கு தன் தாயின்மேல்  விசேச அக்கரை இல்லை என்று சொல்கிறீர்கள்?"

"தாய் மேல் விசேச அக்கரை இருந்திருந்தால் அவங்க வந்திருப்பது தெரிந்தவுடன் போய்ப் பார்த்திருப்பார்.

'கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்'

என்று கூறியிருக்கமாட்டார்."

"இயேசு தன் தாயைப் போய்ப் பார்க்கவில்லை என்று யார் சொன்னது?"

"பைபிளில் எழுதப்படவில்லையே! "

..'' 'இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது.'

என்று பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?

சரி, உங்கள் கருத்துப்படி இயேசுவுக்குத் தாய் மேல் அக்கரை இல்லை, அப்படித்தானே?"

"விசேச அக்கரை ஒன்றும் இல்லை.

அவரைப் பொறுத்தமட்டில் மரியாள் அவர் பிறக்க உதவிய ஒரு பெண்மணி, அவ்வளவுதான்."

.."அதாவது அவரே நமக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளில்

நாலாவது கட்டடளையைப் பற்றி அவரே அக்கறைப்படவில்லை, அப்படித்தானே?"

"மிஸ்டர், இயேசு கடவுள்.

மரியாள் அவரால் படைக்கப்பட்ட ஒரு பெண்மணி.

தான் மனிதனாய்ப் பிறக்க அவளைத் தாயாய்ப் பயன்டுத்திக்கொண்டார், அவ்வளவுதான்.

நீங்கள் அவளைக் கடவுளின் தாய் என்கிறீர்கள்."

.."அப்படியானால் அவள் இயேசுவின் தாய் அல்ல. அப்படித்தானே?"

"இயேசுவின் தாய், கடவுளின் தாய் அல்ல."

. ."அப்படியானால் இயேசு கடவுள் அல்ல!"

"என்ன மிஸ்டர் உளர்கிறீங்க"

.."உளர்வது நான் அல்ல.

யோசியுங்கள்.

இயேசு  கடவுள்.

மரியாள் இயேசுவின் தாய்.

ஆகவே

மரியாள் கடவுளின் தாய்.

இதில் உளரல் எங்கே இருக்கிறது?"

"அப்படியானால் இயேசு பிறக்குமுன் உலகில் கடவுளே இல்லையோ?"

"உளர ஆரம்பித்துவிட்டீர்."

.."நீர் சொல்லுகிறது விளங்கவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்."

"உண்மையிலேயே படிக்க விரும்புகிறவனுக்கு ஆசிரியர் பாடம் நடத்தலாம்.

ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லிலும் குற்றம் காண தீர்மானத்தோடு இருப்பவனுக்கு ஆசிரியர் எப்படி பாடம் நடத்துவார்?"

"அப்படியானால் மாணவன் சந்தேகம் கேட்கக்கூடாதா?"

.."சந்தேகம் பாடத்தில் இருக்கலாம். ஆசிரியர் மீது அல்ல.

இயேசு பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள்.

இயேசு கடவுளாய் இருப்பதால் அவர் தேவஆள்.

இயேசு மனிதனாய் உற்பவிக்குமுன் அவருக்கு இருந்தது ஒரே சுபாவம், தேவ சுபாவம்.

இயேசுவாகிய தேவ ஆள் கன்னி மரியின் வயிற்றில்
மனிதனாய் கருவுற்றபோது மனித சுபாவத்தையும்  எடுத்துக்கொள்கிறார்.

மனுவுரு எடுத்தவர் தேவஆள்.

கன்னிமரியின் கருப்பையில் இருந்தது 

நித்தியகாலமாக தனக்கிருந்த தேவ சுபாவத்தோடு, மனித சுபாவத்தையும் எடுத்துக்கொண்ட,

பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய கடவுள்.

அதாவது

ஆள் ஒன்று,

சுபாவம் இரண்டு.

தேவசுபாவம், மனித சுபாவம்.

இயேசு

முழுமையாக கடவுள்.
Fully God.

முழுமையாக மனிதன்.
Fully Man.

கடவுள் மனிதனாய்ப் பிறக்கிறார்.

அதாவது

கன்னிமரி பெற்றது கடவுளாகிய இயேசுவை.

கடவுளைப் பெற்றதால் அவள் கடவுளின் தாய்.

கடவுளுக்கே மனு உருக் கொடுத்தவள் சாதாரணப் பெண்மணியா?

தனக்குத் தாயாக இருக்கவேண்டும் என்பதற்காக

இறைவன் தானே விசேசமான விதமாகத் தேர்ந்தெடுத்து,

சென்மப்பாவ மாசிலிருந்து காப்பாற்றி,

அவள் அற்பப் பாவம்கூட செய்யாதிருக்கும் அளவிற்கு அவளை அருள்வரங்களால் நிறப்பி

விசேசமான விதமாகப் பராமரித்து வந்த இறையன்னை உங்களுக்கு சாதாரணப் பெண்மணியா?"

"சரி. ஏற்றுக்கொள்கிறேன்.
சாதாரணப் பெண்மணி அல்ல.

ஆனால்

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்."

என்று இயேசு ஏன்  சொன்னார்?"

.."ஏதாவது ஒரு பொருளைப் பற்றி உயர்வாகப் பேசவேண்டுமென்றால்

அதைவிட உயர்ந்த பொருளோடு ஒப்பிடுவது இலக்கிய மரபு.

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.' 

ஆசிரியருடைய பெருமையை விளக்குவதற்காக புலவர் அவரை இறைவனுக்கு ஒப்பிடுகிறார்.

தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே புவியில் மனிதனாய்ப் பிறந்த இறைமகன்

நாமும் அவரைப்போலவே இறைத்தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிக்கிறார்.

அப்படி நிறைவேற்றுபவர்கள் தன்னுடைய 'தாய்' என்கிறார்.

அதாவது தன் 'தாய்' போன்றவர்கள் என்கிறார்.

அவரைப் பொறுத்தமட்டில் 'அருள் நிறைந்த' அவரது அன்னைதான் மனித குலத்திலேயே உயர்ந்தவள்.

ஆகவே கடவுளின் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள் தன் தாய்க்குச் சமமானவர்கள் என்கிறார்.

நமது மொழியில் சொல்வதானால் இயேசு இப்படிச் சொல்லியிருப்பார்:

"மக்களே, எனது தாய் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.

எனது சொற்படி நீங்கள் நடந்தால் நீங்களும் என் தாய்தான்.

என் தாயை நேசிப்பது போலவே உங்களையும் நேசிக்கிறேன்.

என் தாய் என்னை நேசிப்பதுபோல நீங்களும் என்னை நேசிக்க வேண்டும்.

நேசித்தால்தான் என் சொற்படி நடப்பீர்கள்."

நம்மிடம் இயேசு பேசினால் இப்படித்தான் சொல்வார்.

இயேசுவின் பேச்சில் அவரது தாயின் பெருமை வெளிப்படுகிறது.

இயேசு  தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நீங்கள் சொன்னால்

நீங்கள் இயேசுவை அவமதிக்கிறீர்கள் என்றுதான் அருத்தம்."

.."அதற்காக அவளுக்கு விழா எடுக்க வேண்டுமா?

அது இயேசுவை அவமதிப்பது ஆகாதா?"

.."உங்கள் தாயின் பிறந்த நாளைக் கொண்டாடி யிருக்கிறீர்களா?"

"ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.

உறவினர்களுக்கு அழைப்புக் கொடுத்து பிரமாண்டமா கொண்டுவோம்."

"அப்படியானால் விழாவுக்கு வருவோர் அனைவரும் உங்களை அவமதிப்பதாகத்தானே அருத்தம்?"

"இல்லை. என் தாயைப் புகழ்கின்றவர்கள் உண்மையில் என்னைப் பெருமைப் படுத்துகிறார்கள்."

.."உங்கள் தாய்ப்பற்றுக்கு பாராட்டுக்கள்.

இயேசு தன்  தாயின் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் உள்ளவர்.

அதை மனதில் வைத்துக் கொண்டு சிந்தியுங்கள்.
தெளிவு கிடைக்கும்."

லூர்து செல்வம்.

Monday, September 23, 2019

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)
******      *******      *******      ***
"ஹலோ! சார்,என்ன இது திருதிருன்னு முழிச்சிக்கிட்டிருக்கீங்க?"

"வேறு எப்படி முழிக்கிறதுன்னு தெரியலீங்க!"

"ஏன்? என்னாச்சி?"

"பஸ்ஸ விட்டுட்டேன்."

"கழுத போது. ஒரு பஸ் போனா இன்னொரு பஸ். இங்க நிமிசத்துக்கு ஒரு பஸ் வந்துட்டும் போய்ட்டும் இருக்கு. எதாவது ஒண்ண பிடிச்சி போகவேண்டியதுதானே! 

அதுக்காக. எதையோ பறி கொடுத்தது மாதிரி நிற்கிறீங்க!"

"பறி கொடுத்தது மாதிரி இல்ல, பறி கொடுத்துட்டுதான் நிற்கிறேன்.

சாப்பாடு ருசியா இருக்கேன்னு ஆறஅமர ருசிச்சிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

என் Luggageஓட  பஸ்  போய்ட்டு."

"போனா போகுது சார், வேறே Luggage வாங்கிக் கொள்ளலாம்."

"கடையிலபோயி 'ஒரு Luggage போய்டிச்சி,இன்னொன்று தாங்க'ன்னா சிரிப்பான்.

என்னுடைய Certificates இருந்த bag போய்டிச்சி சார்."

"Certificatesஆ?  ஏதாவது Interview க்குப் போய்க்கிட்டிருந்தீங்களா?"

"ஆமா சார்."

"ஐயோ பாவன்னு சொல்ல மாட்டேன். நல்ல வேள போயிடிச்சின்னு சந்தோசப்படுவேன்."

"ஏன்யா,  அடுத்தவன் துக்கத்தில
சந்தோசப்படுத நீயெல்லாம் ஒரு மனுசனா?"

"உன் துக்கத்தில சந்தோசப்படல,
ஏதோ ஒரு ஆபீஸ் பிழைச்சிதேன்னு சந்தோசப்படுகிறேன்."

"என்னது? ஒரு ஆபீஸ் பிழைச்சிதா?"

"ஆமா.ருசியான சாப்பாட்டுக்காக பஸ்ஸ விட்டிட்டிங்கள,

Suppose உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதுன்னு வச்சிக்கிடுவோம்,

ஒரு நேரத்து ருசியான சாப்பாட்டுக்காக நீங்கவேலை பார்க்கிற ஆபீச கைவிடமாட்டீங்க என்பதற்கு என்ன guarantee?"

இதை எழுதும்போது

ஒரு வேளைத் தின்பண்டத்திற்காக

"தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்ட" எசாயூ (ஆதி.25:33) ஞாபகத்துக்கு வருகிறான்.

இந்தமாதிரி ஆசாமிகள் உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நேரே ஆன்மீகத்திற்கு வருவோம்.

அற்ப சிற்றின்பத்திற்காக அழியா பேரின்பத்தை விட்டுக் கொடுத்துக் கொண்டிருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே, போகிறது.

இவ்வுலகையும் அதைச் சார்ந்த பொருட்களையும் இறைவன் நமது பயன்பாட்டிற்காகத்தான் படைத்தார்.

அவற்றைப் பயன்படுத்தாமல் நம்மால் வாழமுடியாது.

முதலில் உலகைப் படைத்துவிட்டு, பிறகு அதிலுள்ள மண்ணைக்கொண்டுதான் மனிதனைப் படைத்தார்.

ஆகவே மனித உடல் மண்ணிலுள்ள உலோகங்கள், மற்றும் தண்ணீர்,காற்று ஆகியவற்றாலாகிய ஒரு
சடப்பொருள்தான்.

அப்பா நமது கையில் பணத்தைக் கொடுத்து

வாங்கப்படவேண்டிய பொருட்களின் பட்டியலையும் கொடுத்து

கடைக்கு அனுப்பி வைத்தால் நாம் என்ன செய்யவேண்டும்?

பணத்தைக் கொடுத்து பட்டியல்படி பொருட்களை வாங்கிவர வெண்டுமா?

அல்லது

கடைக்கே போகாமல் பணத்தை நம் இஸ்டப்படி செலவழிக்க வேண்டுமா?

கடவுள் நமக்கு ஒரு உடலைக் கொடுத்து,

உலகத்தையும்  கொடுத்து,

நேரத்தையும் கொடுத்து, சொல்கிறார்,

"பிள்ளைகளே,

நீங்கள் நித்திய காலமும் என்னோடு வாழ

உங்களைத் தயாரிப்பதற்காக

உங்களுக்கு உலகத்தையும் நேரத்தையும் கொடுத்திருக்கிறேன்.

அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கட்டளைகளையும் கொடுத்திருக்கிறேன்.

எனது கட்டளைகள்படி அவற்றைப் பயன்படுத்தினால் நித்திய காலமும் என்னோடு பேரின்பமாக வாழ்வீர்கள்.

எனது கட்டளைகளை மீறி உங்கள் இஸ்டப்படி பயன்படுத்தினால் நித்தியமும் என்னை இழந்து பெருந்துன்பத்தில் வாழ்வீர்கள்."

ஆக நாம் வாழும் உலகும், நேரமும், உடலும் தரப்பட்டிருப்பது இறைவனுக்காக வாழ,

நமது இஸ்டப்படி வாழ அல்ல.

முதலில் நமது உடலை இறைப்பணிக்காக பயன்படுத்த வேண்டும்,

வெறுமனே 'இரை'ப்பணிக்காக அல்ல!

சாப்பாட்டு இன்பத்தில் Interview வைக் கோட்டைவிட்ட ஆசாமியைப்போல,

நாம் உடல் சிற்றின்பத்திற்காக
நித்திய பேரின்பத்தை கோட்டைவிட்டுவிடக் கூடாது!

பணம், உணவு உட்பட உலகப்பொருகட்கள் நம்மிடம் தரப்பட்டிருப்பது

அவற்றை நமக்காக மட்டும் பயன்படுத்த அல்ல,

இறைவனுக்காக நம் அயலானோடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகவும்தான்.

நமக்குத் தரப்பட்டிருக்கும் நேரம் நமக்கு மட்டும் பயன்படுத்துவதற்றாக அல்ல,

இறைப்பணிக்காகவும், பிறர்பணிக்காகவும் பயன்படுத்துவதற்காகவும்தான்.

உண்மையில் இறைவனுக்காக செய்யப்படும் பிறர்பணியும் இறைப்பணிதான்!

இறைவன் நமது எஜமான். நாம் பயன்படுத்துபவை எல்லாம் அவருக்கே சொந்தம்.

அவற்றை அவர் சொன்னபடி பயன்படுத்தினால் நாம் அவரது ஊழியர்கள்.

அவரைப்பற்றிக் கவலைப்படாமல் அவற்றை அவற்றிற்காகவே பயன்படுத்தினால்

நாம் அந்தப் பொருட்களின் ஊழியர்கள்.

இன்று பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் உண்மையில் பணத்தின் அடிமைகள்.

ஏனெனில் பணம்தான் அவர்களின் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கிறது.

எஜமானுக்காக எதையும் செய்யும் ஊழியர்களைப்போல பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் லஞ்ச ஊழல் பிரச்சனைக்கு மித மிஞ்சிய பணஆசைதான் காரணம்.

எதையும் பணத்தால் சாதிக்கமுடியும் என்று எண்ணுபவன் கடவுளைத் தேடமாட்டான்.

ஏனெனில்,

"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."

பணஆசை உள்ள எவரும்,

யாராக இருந்தாலும் சரி,

ஆன்மீகவாதியாக இருக்க முடியாது,

ஆன்மீக வியாதியாக வேண்டுமானால் இருக்கலாம்!

'இறைவனுக்காக' செய்யப்படும் பிறர்பணி இறைப்பணியாக இருப்பதால்,

உலகப் பொருட்களைக் கொண்டு பிறர்பணி ஆற்றுவோம்,

இறையருள் பெற்று ஈடுஇணையற்ற விண்ணக வாழ்வை  அடைவோம்.

இறைவனோடு நித்திய பேரின்பத்தில் இணைவோம்.

லூர்து செல்வம்.