Sunday, May 20, 2018

ஒரு ரோஜா செடி பேசுகிறது.

ஒரு ரோஜா செடி பேசுகிறது.
********************************
நான் வளரும் பூந்தோட்டத்திற்கு வருவோர் எல்லோரும்  என்னைப் பற்றிதான் பெருமையாய்ப் பேசுகிறார்கள. 

எனது பூக்கள் மிக அழகானவை;  

நறுமணம் மிக்கவை. 

எனது பூக்களைச் சூடாத பெண்களையும், எனது பூமாலைகளைப் பயன்படுத்தாத விழாக்களை யும் காண்பது அரிது.

என்னால் அவ்வளவு அழகான மலர்களை எவ்வாறு பூக்க முடிகிறது?

அது ஒரு பெரிய இரகசியம்.

ஆரம்பத்தில் எனது உரிமை யாளர் போட்ட உரத்தையும், ஊற்றிய தண்ணீரையும் சாப்பிட்டு கொழுகொழு என வளர்ந்தேன்.

நான் அழகாக இருந்தேன்.

ஆனால் ஒரு பூ கூட பூக்கவில்லை.

எனக்கே என்மீது பாவமாயிருந்தது.

ஒருநாள் என் உரிமையாளர் கையில் ஒரு பெரிய கத்தரிக்கோலுடன் என்னை நோக்கி வந்தார்.

எனக்கு நடுக்கம் வந்துவிட்டது.

"என்னை வெட்டி வீசப்போகிறார். உண்டு காெழுத்து பூக்காத எனக்கு சரியான தண்டனை கிடைக்கப் பாேகிறது."

 மனதுக்கூள்ளே அழுதேன்.

கத்தரிக்கோல் என் மேல் காேரதாண்டவமாட  காெழுத்து வளர்ந்த என் கிளைகளெல்லாம் வெட்டி வீசப்பட்டன.

இறகுகளை இழந்த காேழிபாேல மாெட்டையாகிவிட்டேன்.

 எனக்கே அசிங்கமாக இருந்தது.

ஆயினும் பாெறுமையாய் இருந்தேன்.

தோட்டக்காரர் என்னைச்சுற்றி கொத்தி உரமிட்டு நீரூற்றி வந்தார்.

கொஞ்ச நாட்களில் புதிய தளிர் விட ஆரம்பித்தேன்.

என்ன ஆச்சரியம்!

முன்னை விட வேகமாக வளர ஆரம்பித்தேன்!

ஏராளமான அழகான பூக்களைப் பூத்துக் குலுங்க ஆரம்பித்தேன்.

இப்போது புரிந்தது.

வீணாக வளர்ந்த கிளைகளை  தோட்டக்காரர் வெட்டி வீசியதால்தான் என்னால்புதிய வளர்ச்சியடைந்து அழகான பூக்களைப் பூக்க முடிந்தது.

என் கதையை வாசித்த அன்பர்களே, நீங்களும் இவ்வுலகில் இறைவனால் நடப்பட்ட ரோஜா செடிகள்தான்.

புண்ணியங்களான அழகான பூக்களை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அவற்றிற்கு எதிரானவையெல்லாம் வெட்டி எறியப்பட வேண்டும்.

அந்த வேலையை இறைவன் உங்களில் செய்யும்போது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் இறைவன் உங்களுக்குக் கஷ்டங்களை அனுப்புவதே உங்களிடமுள்ள வேண்டாத குணங்களை நீக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்ததான்.

துன்பங்கள் மறைமுகமான ஆசீர்வாதங்கள்.(Blessings in disguise)

ஆகவே துன்பங்கள் வரும்போது அவற்றை இறைவனுக்கு நன்றியோடு ஒப்புக்கொடுங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment