பங்குக் குருத்துவம்.
"தாத்தா, ரொம்ப நாளா எனக்கொரு சின்ன சந்தேகம். எதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குச் சாமியார மாத்துதாங்க?"
"போடாப் பொடியா, பங்குச் சாமியாரை யாராலும் மாற்ற முடியாது.''
"அப்போ நீங்கள் கோயிலுக்கே வருவதில்லையா?"
"'ஏன் அப்படிக் கேட்கிற?"
"வந்திருந்தா நம்ம பங்குச் சாமியார் transfer ஆகிப் போய் விட்டது தெரிந்திருக்கும்."
"'இப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்."
"'கேளுங்கள்."
"போன வாரத்துக்கு முந்தியவாரம் பங்கு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூசை வைத்தது யார்?"
"பங்குச் சாமியார்."
"'போன வாரம் பூசை வைத்தது யார்?"
"பங்குச் சாமியார்."
"இந்த வாரம் பூசை வைத்தது யார்?"
""பங்குச் சாமியார்."
"ஆக, பங்குச் சாமியார் மாறவில்லை."
"ஆனால் அதே சாமியார் இல்லை."
"'பங்குக் குருவானவர் மாறவில்லை, அவரை மாற்ற முடியாது."
"ஆயர் தானே மாற்றுகிறார்."
"'ஒரு குருவானவரை குருவானவராக்கியது யார்?"
"ஆயர்."
"ஆயர் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு குருப் பட்டம் கொடுத்தார். குருவாக ஆக்கியது யார்?"
"இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள் என்று சொன்ன இயேசு."
'"இயேசு ஆக்கியதை யாராலும் மாற்ற முடியாது. பங்குக் குருவை ஆயர் நியமித்திருக்கலாம். அவர் நியமித்த ஆளை அவர் மாற்றலாம். குருவானவரை மாற்ற முடியாது."
"நீங்கள் சொல்வது புரியவில்லை. புரியும் படி கூறுங்கள்."
"சென்ற வாரம் நமது பங்குக் குருவின் பெயர் என்ன?"
"அருட்தந்தை ஜேம்ஸ்."
"'இந்த வாரம் நமது பங்குக் குருவின் பெயர் என்ன?"
"அருட்தந்தை சந்தியாகு."
"'அவரும் பங்குக் குருவானவர் தான். இவரும். பங்குக் குருவானவர் தான்."
"ஆக பங்குக் குருவானவர் மாறவில்லை என்கிறீர்கள். இதில் ஏதோவொரு மறை உண்மை மறைந்திருக்கிறது. அதை வெளியே கொண்டு வாருங்கள்."
"'இறைமகன் மனிதனாகப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்கி, நமது பாவங்களை மன்னிப்பதற்காக.
நோக்கம் பாவ மன்னிப்பு, அதற்காகத்தான் பலி.
'நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
(மத்தேயு நற்செய்தி 28:20)
விண்ணகம் எய்திய இயேசு எப்படி உலகம் முடியும் வரை நம்மோடு இருக்க முடியும்?''
"திவ்ய நற்கருணை மூலமாக."
"'திவ்ய நற்கருணை பேழைக்குள் இயேசு ஓய்வு எடுக்கிறாரா?
அல்லது, செயல் புரிந்து கொண்டிருக்கிறாரா?"
" ஓய்வு எடுப்பதற்கா திவ்ய நற்கருணை? செயல் புரிந்து கொண்டிருக்கிறார்."
'"எப்படி? குருவானவர் எடுக்கும் போது வெளியே வருகிறார். அதுவும் குருவின் கரங்களில்.
குருவானவர் பேழைக்குள் வைத்து பூட்டியவுடன் வெளியே வர முடியாது. பிறகு எப்படி செயல் புரிகிறார்?"
"ஏதோ பொடி வைத்து கேட்கிறீர்கள். பேசாமல் நீங்களே சொல்லிவிடுங்கள்."
'"பேசாமல் எப்படிச் சொல்ல முடியும்?"
"சரி பேசியே சொல்லுங்கள்."
"'குருவானவர் மூலம் தான் செயல் புரிகிறார்.
பங்கைப் பொறுத்த மட்டில் பங்குக் குருவானவர் தான் இயேசுவின் சார்பில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்,
அதாவது,
பங்குக் குருவானவர் மூலமாக இயேசு தான் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
இயேசுதான் பங்குக் குருவானவர் உருவத்தில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
"இது என் உடல்.'' என்று சொல்வது இயேசு, பங்குக் குரு மூலமாக.
"இது என் இரத்தம் 'என்று சொல்வது இயேசு, பங்குக் குரு மூலமாக.
கல்வாரி மலையில் இரத்தம் சிந்திய விதமாக ஒப்புக் கொடுத்த பலியை நமது ஆலய பீடத்தில் இரத்தம் சிந்தாத விதமாக ஒப்புக் கொடுப்பதும் இயேசு தான், பங்குக் குரு மூலமாக.
ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிக்கு முன்பும் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்து கொண்டு நமது பாவங்களை மன்னிப்பவர் இயேசுதான், பங்குக் குரு மூலமாக.
அன்னை மரியாள் தன் மகனை பரம தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது போல அவளுடைய பிள்ளைகளாகிய நாமும் குருவோடு இணைந்து இயேசுவைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.
பங்குத் திருச்சபை இருக்கு மட்டும்
அதாவது உலகம் முடியும் வரை பங்குக் குருவானவர் மூலமாகத் தான் இயேசு இயங்குவார்.
ஆயர் பங்குக் குருவானவர் பொறுப்பு வகிக்கும் அருட் தந்தையை மாற்றலாம், பங்குக் குருவானவர் தொடர்ந்து இருப்பார்.''
"தாத்தா, இதை ஒரே வாக்கியத்தில் கூறிவிடலாம்.
நாம் பங்குக் குருவானவரில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
அப்போது தான் நாம் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறுவோம்."
'''பங்குக் குருவானவர் பொறுப்பில் இருக்கும் அருட் தந்தை நமது உறவினராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம்,
ஆனால் அவரில் நாம் பார்க்க வேண்டியது இயேசுவை மட்டுமே.
பங்குத் தளத்தில் நமது ஆன்மீக வழிகாட்டி (Spiritual Director) பங்குக் குருவானவர் தான்.
ஆனால் அவருக்கு ஆன்மீகப் பணி தவிர வேறு எந்தப் பணியும் கொடுக்கப்படக்கூடாது.
பள்ளிக்கூட நிர்வாகம் அவர் பொறுப்பில் இருப்பதால் ஆசிரியர்கள் அவரை நிர்வாகியாகவே பார்க்கிறார்கள்.
அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும்.
நமது ஆன்மீக வழிகாட்டியை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாவ மன்னிப்புத் தந்து நமது ஆன்மாவைப் பரிசுத்தமாகப் பாதுகாக்க இயேசுவே குருவானவர் மூலமாகச் செயல்புரிகிறார்."
"தாத்தா, ஒரு நுண்ணறிவுக் கேள்வி கேட்கட்டுமா?"
"கேள்."
"'நமது பாவூர்சத்திரம் பங்கில் அருட்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தான் தொடர்ந்து பணியாற்றப் போகிறார். எப்படி?"
"இதற்கு நுண்ணறிவு தேவையில்லை, சாதாரண அறிவே போதும்.
பீற்றரும், இராயப்பரும் ஒருவர் தான்.
அதேபோல ஜேம்சும், சந்தியாகும் ஒருவர் தான்.
செபதேயுவுக்கும், சலோமி மரியாளுக்கும் பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தான் ஜேம்ஸ். அதாவது, சந்தியாகப்பர் என்றும் அழைக்கப் படும் பெரிய யாகப்பர்."
"அப்போ ஜேம்சும், சந்தியாகுவும் ஒருவர் தான்.
பன்னிரு சீடர்களில் பெரிய யாகப்பருக்குக் கிடைத்த விசேட வரம் ஏதாவது இருக்கிறதா?"
"'பன்னிரு சீடர்களில் அவர்தான் முதல் வேத சாட்சி.
அவருடைய பெயரைத் தாங்கிய குருவானவரின் வழி நடத்துதலில் வாழும் நாம் இயேசுவின் சாட்சிகளாக வாழ்வோம்."
லூர்து செல்வம்
No comments:
Post a Comment