"உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது."
(மத்.5:30)
கடவுளால் நமக்குத் தரப்பட்ட உடலை இறைப்பணிக்குதான் பயன்படுத்த வேண்டும், பாவம் செய்யப் பயன்படுத்தக் கூடாது.
எந்த உடல் உறுப்பும் நமது விருப்பத்தை மீறி இயங்காது.
கால்களை இறைவன் முன் முழங்கால் படியிடவும், கைகளை கரம் குவித்து இறைவனை ஆராதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட விருப்பம் இல்லை என்றால் திவ்ய நற்கருணைப் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தம்.
ஒரு காலத்தில் திவ்ய நற்கருணைப் பேழையைக் கடக்குமுன் ஒற்றை முழங்கால் படியிட்டு எழுந்து சென்றோம்.
இப்போது சிலர் நட்டமாய் நின்று தலையால் மட்டும் வணங்கிச் செல்கின்றனர்.
திவ்ய நற்கருணையில் இருப்பது மெய்யாகவே நம்மைப் படைத்த கடவுள் என்ற விசுவாசம் இருந்தால் கடவுள் முன் முழங்கால் படியிட மறுப்போமா?
திவ்ய நற்கருணை மெய்யாகவே உணவு (சாக்லேட் போல வெறும் தின்பண்டம் அல்ல) என்ற விசுவாசம் இருந்தால் திவ்ய நற்கருணையை நாவில் வாங்க மறுப்போமா?
ஆரஞ்சு வில்லையை கையில் வாங்கி வாயில் போடுவது போல போடுவோமா?
திவ்ய நற்கருணையை வாங்கும் போது இயேசுவே நம்மிடம் வருகிறார் என்ற விசுவாசம் இருந்தால் நன்மை வாங்கியவுடன் அவரோடு பேசாமல் எங்கோ இருக்கும் நண்பனோடு
Phoneல் பேசுவோமா?
ஞாயிற்றுக்கிழமை பூசை முடியு முன்பே இயேசுவையும் அழைத்துக் கொண்டு கசாப்புக் கடைக்கு ஓடுவோமா?
சிந்திப்போம்.
Mutton சாப்பிட்டால் BP ஏறுகிறது. Mutton சாப்பிட்டு விட்டு BP மாத்திரை போடுபவன் மடயன்.
காரணமான உணவை நிறுத்துபவன்தான் புத்திசாலி.
பாவத்தில் விழாதிருக்க வேண்டுமா?
பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
குடியை நிறுத்த வேண்டுமா?
மதுக்கடை பக்கம் போகக்கூடாது.
"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."
என்று தினமும் வேண்டுகிறோம்.
நமது முதல் தாய் ஏவாளை ஏன் சாத்தான் சோதித்தது?
விலக்கப்பட்ட மரத்தின் அருகே அவளுக்கு என்ன வேலை?
அவள் அங்கே போனதால் தானே சாத்தான் அவளைச் சோதித்தது.
அவள் பாவத்தில் விழ நேர்ந்தது.
TV பெரிய சாத்தான்.
Smart phone குட்டிச் சாத்தான்.
கண்களைக் காப்பாற்ற வேண்டுமா?
இரண்டு சாத்தான்கள் பக்கத்திலும் போகக்கூடாது.
TV பார்ப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தால் கண்ணும் கெடும், கருத்தும் கெடும்.
"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்." என்று வேண்டும் நாம்
சோதனை பக்கத்தில் நாம் போகக் கூடாது.
பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்ப்போம்.
பாவத்தில் விழ மாட்டோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment