Thursday, September 27, 2018

God's eternal plan and our prayer. இறைவனது திட்டமும், நமது செபமும்.

God's eternal plan and our prayer.

இறைவனது திட்டமும், நமது
செபமும்.
****--****-**********************

இறைவன் நித்திய காலத்திலிருந்தே நமது வாழ்விற்காக திட்டம் ஒன்று வகுத்துள்ளார்.

அவர் தனது திட்டத்திலிருந்து மாறுவதில்லை.

இறைவன் மாறாதவர்.

இறைவன் சுதந்திரமாக வகுத்த திட்டத்தை யாராலும் மாற்றமுடியாது.

இறைவன் தன்  திட்டத்திலிருந்து மாறாதவர் என்றால்,

நாம் ஏன் செபிக்கவேண்டும்?

உண்மையில் கடவுளுடைய மனதை மாற்றுவது செபத்தின் நோக்கமன்று.

The point of praying is not to “change God’s mind.”

சில சமயங்களில் நமது செபத்தின் மூலம் இறைவனது மனதை மாற்றிவிட்டதுபோன்ற தோன்றும்.

உதாரணத்திற்கு, நமக்கு நோய் வருவது இறைவனது சித்தம்.

நாம் நோய் நீங்கும்படி செபிக்கும்போது நாம் குணம்பெற்றால், நமக்கு நோயை வரவிட்ட இறைவன் மனம் மாறி நமது நோயை நீக்கி சுகம் தந்துவிட்டதாக நினைக்கத்தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல.

காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனுக்கு,
உலக அனுபவத்தைச் சார்ந்த முக்காலமும் தெரியும்.

கடவுள் நித்தியர்.

ஆகவே அவரது அறிவு(Knowledge) நித்தியமானது.

ஆகவே நமது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நித்திய காலமாகவே இறைவனுக்குத் தெரியும்.

நாம் தாயின் கருவில் உருவாகுமுன்பே நாம் பிறந்தபின் நமது வாழ்வில் நடைபெறப்போகும் அத்தனை நிகழ்வுகளும் அவருக்குத் தெரியும்.

நாம் நோயில் விழப்போவதும்,

நாம் குணம் பெற வேண்டப்போவதும்

நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும்.

ஆகவே, நமது வேண்டுதலுக்கிணங்க. நமக்குக் குணம் தர

அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டம் வகுத்துவிட்டார்.

ஆகவே கடவுள் தன் நித்திய திட்டப்படிதான் (Eternal plan) செயலாற்றுகிறார்.

தன் மாறாத திட்டப்படிதான் இறைவன் குணமாக்குகிறார்.

நாம் செய்யும் எல்லா செபங்களுக்கும் பதில்

நித்திய காலமாகவே தீர்மானிக்கப்படுகிறது.

நாம் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் எடுக்கும் முடிவுகளையும், நமது செபங்களையும் கருத்திற்கொண்டுதான் தன் நித்திய திட்டத்தைத் தீட்டுகிறார்.

தன் திட்டத்தைத் தானே மாற்றமாட்டார்.

அவர் மாறுவதில்லை.

நமது செபத்திற்கு மூன்று  விதமாகப் பதிலளிக்கிறார்.

1. நமது செபத்தை அப்படியே  ஏற்றுக் கொள்ளலாம்.

2. நமது செபத்திற்கு உடனே பதிலளிக்காமல்

நாம் கேட்கும் பொருள்

நமக்கு எப்போது கிடைத்தால்

நமக்கு பயன்தரும் என்று இறைவன்
கருதுகிறாரோ

அப்போது தரலாம்.

3.நாம் கேட்கும் பொருள் நமக்குக் கெடுதி தருவதாயிருந்தால் அதைத் தரமாட்டார்.

ஆனாலும் நமது செபம் வீணாய்ப்போகாது.

நமக்குப் பயன்தரும் வேறு        எதாவது ஒரு பொருளைத் தருவார்.

அவர் எதைத்தந்தாலும், தராவிட்டாலும் அது நமது ஆன்மீக இரட்ண்யத்துக்காகத்தான் இருக்கும்.

செபத்தின் நோக்கம் வெறுமனே உதவிகள் பெறுவது மட்டுமல்ல.

அளவில்லாத அன்பும், நன்மைத்தனமும் எல்லாம் வல்ல இறைவனோடு

நம் உறவை வலுப்படுத்திக் கொள்வதுதான் செபத்தின் நோக்கம்.

நமது தேவைகட்காகவும், பிறர்களுடைய தேவைகட்காகவும் இறைவனிடம் வேண்டுவது செபத்தின் ஒரு பகுதிதான்.

ஆனால் செபத்தின் உண்மையான நோக்கம் இறைவன்தான்.

ஆகவே நமது செபம் இறைவனின் திருவுளத்திற்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

நமது சுதந்திரத்தை

இறைவனுக்குப் பணி புரிய பயன்படுத்தி,

செபத்தை இறைவனோடு இணைந்து வாழப் பயன்படுத்தி வாழ்ந்தால்

இறைவனது திட்டத்தில் நமது இரட்சண்மும் அடங்கும்.

லூர்து செல்வம்.

Monday, September 24, 2018

இறைவன் நமது சுதந்திரத்தில் தலையிடுகிறாரா?

இறைவன் நமது சுதந்திரத்தில் தலையிடுகிறாரா?
**********--******-**************

"Good morning."

"Very Good morning. நேற்று 'ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது' என்று கூறி விட்டு நகர்ந்தாயே, அது என்ன கேள்வி? "

"தானே கொடுத்த அவனது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பது அவர் சித்தம்.'

என்று சொன்னது ஞாபகம் இருக்கா. "

"சரி, இப்போ கேள்வியைக் கேளு."

"கடவுள் நமது சுதந்திரத்தில் தலையிடமாட்டார் என்றால், பாவிகள் மனம் திரும்புவதற்காக வேண்டி என்ன பயன்?

புனித மோணிக்கா தன் மகன் அகுஸ்தீன் மனம் திரும்ப முப்பது ஆண்டுகள் செபித்தாள்,

அவளுடைய செபத்தின் காரணமாக அகுஸ்தீன் மனம் திரும்பினார்

என அவளது வரலாறு கூறுகிறது.

அது எப்படி சாத்தியமாயிற்று? 

சுதந்திரமாகப் பாவியாய் வாழ்ந்தவரை 

அவரது சுதந்திரத்தில் தலையிடாமல் எப்படி  புனிதராக மாற்றமுடியும்? "

"உன் திருமணம் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியும்.

இருந்தாலும் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக சிலவிசயங்களை உன் வாயிலிருந்தே வரவழைக்க
வேண்டியிருக்கிறது."

"விளையாடுறியா? நான் கேட்ட கேள்விக்கும்,  என் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? "

"உலகத்திலுள்ள எல்லாபொருட்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தந்தப்பட்டவைதான்.

All the things  in this world
are interrelated. 

திருமண விசயத்தில் உன் சுதந்திரத்தில் உன் அப்பா தலையிட்டாரா? "

"இல்லை. எனக்கு விருப்பமான பெண்ணையே திருமணம் செய்தேன்."

"காதல் திருமணமா?"

"இல்லை. அப்பா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்தேன்."

"அப்பா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்தால் அப்பா உன் சுதந்திரத்தில் தலையிட்டதாகத்தான் அர்த்தம்."

"இல்லை. அப்பா ஒரு பெண்ணைக் காண்பித்து அவளது நற்குணங்களை விளக்கினார்.

நான் அவளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன்."

"அப்போ,

உனது சுதந்திரத்தில் தலையிடாமலேயே

உன் அப்பாவால்

அவர் நினைத்ததை உன்னிடம் 

சாதிக்கமுடிந்தது,

இல்லையா"?

"முடிந்தது"

"உன் அப்பாவால் முடிந்தது  இறைவனால்  முடியயாதா?"

"புரிந்தது மாதிரியும் இருக்கு,
புரியாதது மாதிரியும் ."

"என்ன புரியல?"

"இல்ல......நான் ஒண்ணும் எங்க அப்பாவ பொண்ணு பார்க்கச் சொல்லல, அவரா பார்த்தாரு, சொன்னாரு, நானும் சரின்னுட்டேன்.

அதேமாதிரி கடவுளும் நாம் கேட்காமலே நம்மை  நல்லவங்களா ஆக்கலாமல்லா".

"அதாவது நீ சோம்பேறியா இருக்கணும், 

உன்ன படைச்சபாவத்துக்கு

நொண்டிப்பிள்ளைய தாய் தூக்கிக்கிட்டு போகிறது மாதிரி

அவரே தூக்கிக்கிட்டு போகணும்.

அப்படித்தானே?"

"டேய்!  நீ சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் நொண்டிப்பிள்ளைதான்டா.

என்னால் சுயமா ஒரு துரும்பக்கூட அசைக்க முடியாது.

கடவுளுடைய அருளுதவி இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

எனக்குச் சுதந்திரம் இருக்கு.

ஆனால் அதைச் சரியாக பயன்டுத்த கடவுளுடைய அருள் தேவை.

அதை நான் கேட்டுப் பெறணும்.

எவ்வளவுக்கு  எவ்வளவு கடவுளுடைய அருளுதவியைக் கேட்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் கடவுளை நெருங்குகிறோம்.

அதிகமான உதவியும் கிடைக்கும்.

கடவுள் ஒருபொதும்  என்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.

ஆனால் அதை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டிய உதவி செய்கிறார்.

God  influences my freedom to make the right choice by His grace and inspiration without violating it.

நாம் நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வேண்டலாம்.

மோனிக்காகவும் தன் மகன் மனந்திரும்ப அருள்வரம் கேட்டு 30 ஆண்டுகள் விடாது செபித்தாள்.

கடவுளும் தன் அருளாலும், (Grace),தூண்டுதல்களாலும் (Inspirations) அவரை ஈர்க்க,

அகுஸ்தீன் தான் மனம்திரும்மவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனம்திரும்பினார்.

கடவுள் அவருடைய சுதந்திர உரிமையில் தலையிடவில்லை,

தனது அருள்வரத்தால் தன்னை நோக்கி ஈர்த்தார்.

ஏண்டா, நான் பேசிக்கிட்டேயிருக்கேன், பித்துப்பிடிச்சவன் மாதிரி உட்கார்ந்திருக்க!"

"ஏண்டா, கேள்வியை எங்கிட்ட கேட்டுட்டு பதில நீயே சொல்லிக்கிட்டு இருக்க!

அப்ப ஏன் எங்கிட்ட கேட்ட?"

"இப்ப என்ன கெட்டுப் போச்சி.

நான் ஏதாவது விட்டிருந்தா நீ சொல்லேன்."

"இறைவனது சுதந்திரம் முழுமையானது.(Perfect)

மனிதன் அளவுள்ளவன். ஆகவே  அவனது சுதந்திரமும் அளவுள்ளது. (Limited)

இறைவனது சுதந்திரம் முழுமையானதாகையால் அதன்மேல் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. (No one can influence it.)

அதாவது  அவர் சுதந்திரமாக எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால் மனித சுதந்திரம் அளவுள்ளதாகையால் அதில் மற்றவர் ஆதிக்கம் செலுத்தமுடியும்.(It can be influenced by others)

உதாரணத்திற்கு, ஒருவருக்கு smart phone உபயோகிப்பதில்  விருப்பம் இல்லை.

அதை வாங்கவோ, வாங்காதிருக்கவோ அவருக்கு முழு உரிமை உண்டு.

அவ்வுரிமையைப் பயன்படுத்தி  Smart phone ஏ வாங்குவதில்லை எனத் தீர்மானித்துவிட்டார்.

ஒருநாள் நண்பர் ஒருவர் ஒரு கூட்டத்தில் Smart phone உபயோகிப்பதன் வசதிகளை விளக்கிக்கொண்டிருந்தார்.

அவ்விளக்கம் அவரைக் கவர்ந்தது.

It had its influence on him.

அவருடைய சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை.

Smart phone வாங்குவதில்லை என்ற தீர்மானத்தை அவரே மாற்றிக்கொண்டார்.

வாங்கினார்.

ஆக கடவுளால் நமது சுதந்திரத்தில் தலையிடாமலேயே
நம்மை மனமாற்றம் செய்ய முடியும்.

நாம் பாவிகள் மனம்மாற வேண்டும்போது

நமது வேண்டுதலுக்கு விடையளிக்கும் வகையில் இறைவன்

தனது அருள்மழையால் அவர்களை ஈர்ப்பார்.

அவர்களும் மனம்திரும்புவர்.

நாம் பிறருக்காக வேண்டும்போது, நமக்காக யாராவது வேண்டிக்கொண்டிருப்பர்.

நாம் ஒருவருக்கொருவர் வேண்டும்போது

இறைவனோடு இணைந்து

நாம் ஒரே குடும்பத்தினர்

என்பதை நிரூபிக்கிறோம்.

லூர்து செல்வம்.

Sunday, September 23, 2018

"எல்லாம் அவன் செயல்."

"எல்லாம் அவன் செயல்."
*******************************

"இயற்கையைக் கடவுள்தான படைச்சாரு? "

"அதென்ன திடீர்ச் சந்தேகம்? இயற்கை உன்ன ஏதாவது பண்ணிச்சா? அது பத்தி கடவுள்ட்ட கம்ப்லெய்ன்ட் ஏதாவது கொடுக்கப்போறீயா? "

"கொஞ்ச வருசத்துக்கு முன்னால சுனாமி வந்து நிறையபேர சாகடிச்சது ஞாபகம் இருக்கா?"

"ஏன், என் ஞாபக சக்திய test பண்றியா?"

"என்ன நீ, நான் சீரியசா கேட்டா நீ நக்கலா பதில் சொல்லிக்கிட்டு இருக்க?"

"நான் பதிலே சொல்லல, நானும் கேள்விதான் கேட்டேன். சரி, ரொம்ப சீரியஸ் ஆயிடாத. பக்கத்தில ஆஸ்பிட்டல் இல்ல. கேட்க வந்தத கேளு."

"நாம் வாழத்தானே கடவுள் உலகப் படைச்சாரு.

உலகம் ஏன் நம்ம விரோதியா பார்க்குது?

சுனாமி, புயல், நிலநடுக்கம், வெள்ளம்னு என்னவெல்லாமோ கொண்டு நம்மக் கொடுமைப் படுத்திக்கிட்டிருக்கு.

கடவுளுக்கு நம்மமேல அன்பிருக்கு.

அப்புறம் ஏன் நம்ம துன்பங்கள் நிறஞ்ச உலகத்தில வச்சாரு?"

"உன் கேள்வி புரியுது. அன்புள்ள கடவுள் ஏன்  உலத்துல துன்பங்கள அனுமதிக்கிறாரு.

சரியா? "
.
"சரிதான். இப்ப பதில் சொல்லு."

"இப்ப நான் ஒரு கேள்வி கேட்கலாமா? "

"கேளு."

"நேற்று சாயந்தரம் உன் மகன்,school ல இருந்து வந்தவுடன் என்ன சொன்னான்? "

"  'school ல என்ன பாடாபடுத்துராங்க, அடிஅடின்னு அடிக்கிறாங்க, இங்லிஸ் வாத்தியார் அடி பின்னிருதாரு, நான் இனிம schoolக்கு போகமாட்டேன்'னு  சொன்னான்."

"அதுக்கு நீ என்ன சொன்ன?"

"அவன் சொல்லும்போதும், நான் பதில் சொல்லும்போதும் நீயும் கூடதான இருந்த."

"பரவாயில்லை. சொல்லு."

"எல்லா அப்பாக்களும் சொல்றதத்தான் சொன்னேன். 'வாத்தியார் அடிக்கது  உன் நன்மைக்குதான். நீ நல்லா படிச்சி வாழ்க்கையில முன்னேற வேண்டுங்கிறதுக்காகக்தான் கண்டிக்கிறாங்க. நல்லாப் படி. ஆவலாதி சொல்வத நிறுத்து'ன்னேன்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமில்லாம கேள்வி கேட்டுக்கிட்டிருக்க!"

"   'அப்பா, இந்த உலகம் ரொம்ப மோசம்பா.

எங்க திரும்பினாலும் கஸ்டமும், துன்பமுமாத்தான் இருக்கு.

அதுவும் நல்லவனுக்குதான் துன்பம் அதிகம் வருது.

நித்திய காலமா என்ன அன்பு செய்கிற நீங்க இப்படி கஸ்டங்கள் நிறைந்த உலகத்தில வாழ வச்சிட்டீங்ளப்பா.

ஏம்பா? 'ன்னு நீ நமது விண்ணகத் தந்தையிடம் சொல்றன்னு வச்சிக்குவோம்.

அவர் என்ன பதில் சொல்லியிருப்பாரு? "

"இதத்தான் நான் உங்கிட்ட கேட்டேன். நீ பதில என்னையே சொல்லச் சொல்ற."

"நீயும் ஒரு அப்பாதான. உன் மகனிடம்  சொன்ன பதில அடிப்படையா வச்சி  ஒரு பதிலச் சொல்லேன்."

"மகனே, நான் உன்னைப் படைத்தது இந்த உலகத்தில நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

நித்திய காலமாக என்னோடு பேரின்பமாக வாழ்வதற்காகத்தான் உன்னைப் படைத்தேன்.

உன்னைப் படைக்கும்போதே மோட்சத்திலேயே படைச்சிருக்கலாம்.

ஆனால்  அதுல உனக்கு என்ன பெருமை.

பரிட்சையே வைக்காம ஒரு மாணவனுக்கு நூறு மார்க்கு போட்டா அந்த மார்க்குக்கு என்ன மதிப்பு?

பந்தையமே வைக்காம,  'நீதான் First, பிடி பரிச'ன்னு
சொல்லி பரிசக் கொடுத்தா அந்த பரிசுக்கு என்ன மரியாதை.

உன்னைப் படைத்தது மோட்ச வாழ்வுக்காகத்தான்.

ஆனால்  நீயே அதைச் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக

உனக்கு முழுச் சுதந்திரக்கொடுத்து,

நீ அனுசரிப்பதற்காகப்

பத்து கட்டளைகளையும் கொடுத்தேன்.

நீ நான் கொடுத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவற்றை மீறினாய்.

மீறியதற்குரிய பரிகாரம் செய்து பரிசுத்தமானால்தான் நீ மோட்ச வாழ்வுக்குத் தகுதி ஆவாய்.

அந்தப் பரிகாரத்தையும் என் மகனே செய்தார்.

அந்த பரிகாரத்தின் பலனைப் பெற

முழு மனதோடு

அவர் சுமந்தது போல

நீயும் சிலுவையைச் சுமந்துதான்,

அதாவது கஸ்டப்பட்டுதான்,

விண்ணக வாழ்வைச் சம்பாதிக்க வேண்டும்.

அதற்காகத்தான் உலகத்திற்குள் கஸ்டங்களையும், துன்பங்களையும் அனுமதித்தேன்.

உன் நன்மைக்காகத்தான் அவற்றை அனுமதித்தேன்.

நீ நல்ல மனதோடு அவற்றை ஏற்றுக்கொண்டு, பாவப் பரிகாரமாக அவற்றை எனக்கு  ஒப்புக்கொடுக்க வேண்டும்.

  பரிசுத்தமடைந்து   என்னோடு பேரின்ப வாழ்விற்குள் நுழைய வேண்டும்.

இப்படி ஆவலாதி எல்லாம்
கூறக்கூடாது.

புரிகிறதா?"

"Very good.

பதிலை உங்கிட்ட வச்சிக்கிட்டு எங்கிட்ட கேட்டிருக்கிற.

பாராட்டுக்ள். "

"பாராட்டெல்லாம் வேண்டாம்.
இனிம நான் கேட்கிற கேள்விகட்கு  நீதான் பதில் கூற வேண்டும்."

"நமது கேள்வி பதிலைத் தொடருமுன்னால ஒரு முக்கிய விசயத்த ஞாபகத்திதில வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல,

ஒவ்வொரு கருத்துக்கும் இரண்டோ அதற்கு மேற்பட்டோ பக்கங்கள் உண்டு.

கண்ணோக்கிற்கு(point of view) ஏற்ப பக்கம் மாறுடும்.

தென்காசி எங்கே இருக்கிறது என்று கேட்டால்

பாவூர்சத்திரத்தில் நிற்பவன்

"மேற்கே இருக்கிறது" என்பான்.

செங்கோட்டையில் நிற்பவன், 

"கிழக்கே இருக்கிறது" என்பான்.

நகை செய்வதற்காகத் தங்கத்தை ஆசாரியிடம் கொடுக்கிறோம்.

ஆசாரி தங்கத்தை தீயிலிட்டு  உருக்கி, கம்பியாக நீட்டி, அடித்து அழகான நகை செய்கிறான்.

நகை தயாரானதும் நாம்,  "நகை Super" என்போம்.

தங்கத்துக்குப் பேசத்தெரிந்தால்,

"அட பாவிகளா, உங்களது மகிழ்ச்சிக்காக என்னை என்ன பாடு படுத்திவிட்டீர்கள்!

என்னைத் தீயில் போட்டீர்களே,

நீங்கள் கொஞ்சம் தீயில் இருந்து

பாருங்கள்!" என்கும்.

ஒரு வட்டம் வரைந்துகொள்.

வட்டத்தின் மையப்புள்ளி வழியே செல்லும் எண்ணற்ற கோடுகள் வரையப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்.

ஒவ்வொரு கோட்டையும்  மற்றொரு கோடு 90°யில்
வெட்டிச்செல்லும்.

ஒரே வட்டத்திற்குள் எண்ணிறந்த 90°கோணங்கள்
கிடைக்கும்.

ஒவ்வொரு 90°கோணத்தையும் ஒரு கண்ணோக்கு (Point of view) என்று எடுத்துக்கொள்வோம்.

ஒரு 90°கோணத்தில் உள்ளவர்கள் ஒரே கண்ணோக்கு உள்ளவர்கள்.

ஒரே கண்ணோக்கு உள்ளவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது எளிது.

நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தைப் பொறுத்தட்டில் இரண்டு கண்ணோக்குகள் உண்டு.

1. உலகியல் கண்ணோக்கு.
2.  விசுவாசக் கண்ணோக்கு.

நம் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் ஒரே விசுவாசத்தைக் கொண்டவர்கள்.

நமது வாழ்வைப் பொறுத்தமட்டில்

விசுவாசத்தை எடுத்துவிட்டால் நமது வாழ்வே பொருளற்றதாகிவிடும்.

ஆகவே நீ எந்தக் கேள்வியைக் கேட்டாலும் எனது பதில் விசுவாசக் கண்ணோக்கில்தான் இருக்கும்.

நீயும் அதே கண்ணோக்கில் கேட்டால்தான் புரியும்.

சரி கேள்."

"இவ்வளவு  பெரிய முன்னுரையா? 

இயற்கையைப் படைத்தவர் இறைவன்.

மனிதனைப் படைத்தவரும் இறைவன்.

நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஆயிரகக்கணக்கான மனிதர்ளின் மரணத்திற்குக் காரணமாகின்றனவே.

இறைவன் இதை ஏன் அனுமதிக்கிறார்?"

"நமது விசுவாசப்படி
எல்லாம் இறைவனின் சித்தப்படிதான் நடக்கின்றன.

நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்றவை இயற்கைச் சீற்றங்களல்ல.

நாம் அழிவு எனக் கருதும் நிகழ்வுகளுக்கு அவை காரணமாக இருப்பதால் நாம் அவற்றைச் சீற்றம் என்கிறோம்.

ஆனால்அவை இறைவன் வகுத்த இயற்கை விதிகளின்படி நடக்கும் நிகழ்ச்சிகள்தான்.

அவற்றின் விளைவுகளும் இறைவன் சித்தத்திற்குள் அடங்கும். ஆயிரக்கணக்கானோர் மரணிப்பது உலகியல்கருத்துப்படி சோகநிகழ்வாகத் தோன்றலாம்.

விசுவாசப்படி மரணம் மண்ணுலக வாழ்விலிருந்து,

நாம் எந்த வாழ்வுக்காக படைக்கப்பட்டோமோ அந்த மறுவுலக வாழ்விற்கான நுழைவாயில்.

யார்யார் எப்போ மரணிக்கவேண்டும்,

எங்கே மரணிக்கவேண்டும் என்பதெல்லாம் இறைவன் திட்டத்திற்குள் அடங்கும்.

ஆயிரக்கணக்கில் மரணித்தாலும்,

இலட்சக்கணக்கில் மரணித்தாலும்,

ஏன், உலகோர் அனைவரும் மொத்தமாக மரணித்தாலும்

எல்லாம் இறைவன் செயல்தான்.

இறைவன் செயலை மனமுவந்து ஏற்றுக்கொள்வது அவருடைய மக்களாகிய நமது கடமை."

"ஒரு சந்தேகம்.

எல்லாம் இறைவன் செயல் என்கிறாயே,

நாம்  பாவம் செய்வது கூடவா?"

"இக்கேள்விக்குப் பதில் சொல்ல கொஞ்சம் முன்னுரை தேவை.

இறைவன் மனிதனை நல்லவனாகப் படைத்தார்.

முழுச் சுதந்திரத்தோடு அவனைப் படைத்தார்.

அவனோ தனக்குத் தரப்பட்ட
சுதந்திரத்தைத் தவராகப் பயன்படுத்தி அவரது கட்டளையை மீறிப் பாவம் செய்தான்.

அவன் பாவம் செய்யவேண்டுமென்பது அவரது சித்தமல்ல.

ஆனால் தானே கொடுத்த அவனது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பது அவர் சித்தம்.

ஆகவே மனிதன் பாவம் செய்தபோது இறைவன் தடுக்கவில்லை.

மனிதன் பாவம் செய்தது அவன் செயல், இறைவன் செயல் அல்ல.

ஆனால் அதைத் தடுக்காதது இறைவன் செயல்.

நமது சுதந்திரத்தில் இறைவன் தலையிடமாட்டார்.

ஆனால்  முழுச் சுதந்திரத்தோடு

நமது சுதந்திரத்தை

நாமே இறைவன் பாதத்தில் ஒப்புவிக்கலாம்.

We can voluntarily surrender our freedom  to the will of God.

"இதோ ஆண்டவருடைய அடிமை." என்று மாதா சொன்னபோது இதைத்தான் செய்தார்.

விசுவசிப்பவர்கட்குப் புரியும்."

"இன்னொரு கேள்வி இருக்கிறது. அது நாளைக்கு."

நமது சுதந்திரத்தை இறைவன் பாதத்தில் சரணடைய பயன் படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 20, 2018

Jesus' style.

Jesus' style.
*******************************-

Jesus was born not in a royal palace, but in  a cattle shed.

Jesus was not a powerful political ruler,  but a common carpenter.

Jesus came not to wage war, but to spread peace and to forgive.

Jesus preached the Gospel not merely by words,  but by action and life.

Jesus came not to be served, but to serve.

Jesus, the King, wore   a crown not of gold, but of thorns.

Jesus' throne was not made of gold, but it was a wooden cross.

Jesus was not on His throne  in royal dress, but naked, stripped of His clothes by His enemies.

Jesus was not buried with a royal procession, but was laid in a simple tomb which belonged to another person.

Jesus comes to us at every Mass not with bright lights and a big show but in simple bread and wine, really present in them.

This is Jesus' style.

We are the followers of Jesus.

How is our style?

How far is it like that of Jesus?

Lourdu Selvam.

Wednesday, September 19, 2018

பாவம் செய்வான் எனத் தெரிந்திருந்தும், ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?

பாவம் செய்வான் எனத் தெரிந்திருந்தும்,  ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?
*******************************-

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

இறைவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார்.

இயற்கை இயங்க விதிகளை (laws of nature) வகுத்தது போலவே

மனிதன் இயங்கவும் விதிகளை (Commandments) வகுத்து அளித்தார்.

இயற்கைக்கு சுதந்திரம் இல்லாததால் அது படைக்கப்பட்ட தருணத்திலிருந்து விதிகள்படி இயங்கிவருகிறது.

ஆனால் மனிதனுக்குச் சுதந்திரம் (Freedom of choice and action.) அளிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்தை சரியாகப்பயன்படுத்தி,

கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பது

இறைவனது திட்டம்.

ஆனால்,

மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட
சுதந்திரத்தைத்

தவறாகப் பயன்படுத்திப்

பாவம் புரிந்திருக்கிறான்.

நல்லவனாகப் படைக்கப்பட்ட மனிதன்
பாவியாக மாறியிருக்கிறான்.

உண்பதற்காக அளிக்கப்பட்ட உணவை மண்ணில் கொட்டிவிட்டு,

"உணவைத் தந்ததால்தான் மண்ணில் கொட்டினேன்." என்று

உணவை அளித்தவர்மீது பழியைப் போடுவது எவ்வளவு தவறானதோ, 

அவ்வளவு தவறானது

"இறைவன் சுதந்திரம் தந்ததால்தான் மனிதன் பாவம் செய்தான்" என்று கூறுவது!

சிலர் எழுப்பும் கேள்வி:

"கடவுள் சர்வத்தையும் அறிந்தவர்,

மனிதன் பாவம் செய்வான் என்று முன்கூட்டியே அவருக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும் ஏன் அவனைப் படைத்தார்?"

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார."

தன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனுக்குக் கடவுள் கொடுத்த அன்புக் கட்டளை:

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."

'நாம் நம்மை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கும்போது' நாம் இறைவனின் சாயலைப் பிரதிபலிக்கிறோம்.

அதாவது,

தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது இறைவனின் இயல்பு,

அதாவது அன்பின் இயல்பு.

அன்பு மயமான கடவுள் அளவுகடந்த விதமாகத் தன்னைநேசிப்பது போல

நேசிப்பதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

தன்னை நேசிப்பதுபோல நம்மையும் நேசிப்பது அவர் இயல்பு.

அன்பு

அன்பு  செய்வதற்காகவே

அன்புக் கட்டளையைக் கொடுத்து

அன்பர்களாக

நம்மைப் படைத்தார்.

கடவுள் தன் சுதந்திரத்தையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்.

நாம் அன்பு செய்யும்போதும், சுதந்திரமாகச் செயல்படும்போதும்,

நமது சுதந்திரத்தை இறைவனையும்,பிறரையும் அன்பு செய்யப் பயன்படுத்தும்போது

நாம் இறைவனின் சாயலைப் பிரதிபலிக்கிறோம்

" கடவுள் சுதந்திரம் தராமலிருந்திருக்கலாம்,

பாவம் செய்யாதிருந்திருப்போம்."

எனச் சிலர்  எண்ணுகிறார்கள்.

அதாவது  சாவி கொடுக்கப்பட்ட. பொம்மைகளாகப் படைக்கப்பட்டிருக்க விரும்புகிறார்கள்.

பொம்மைகட்கு சுதந்திரம் கிடையாது.

சாவி கொடுத்தபடிதான் இயங்கும்.

ஆனால் பொம்மைக்கு அன்பு செய்யத் தெரியாது.

பக்கத்துவீட்டில் பையன் பெற்றோர் சொல்லை கேட்கவில்லை என்பதற்காக,

நாம் பிள்ளைக்குப் பதிலாக    ரோபோ பொம்மை ஒன்று வாங்கி இரசித்துக் கொண்டிருப்போமா?

ரோபோ Program செய்தபடி இயங்கும்.

ஆனால் நம்மீது அன்பு காட்டுமா?

சுயமாக அன்பு செய்ய வேண்டுமானால் அன்பு செய்பவருக்கு சுதந்திரம் இருக்கவேண்டும். 

அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும்தான் நம்மை சுதந்திரத்தோடு படைத்தார்.

நாம் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோம் என்று அவருக்குத் தெரியும்.

மனிதனைப் படைப்பது அவரது நித்திய காலத்திட்டம்.

மனிதன் பாவம்  செய்யப்போவது நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும்.

மனிதன் செய்யவிருக்கும் பாவத்துக்குத் தானே பரிகாரம் செய்யவும் நித்திய காலத்திலிருந்தே தீர்மானித்துவிட்டார்.

ஒரு சிறிய கற்பனை உரரையாடல்:

இறைவன்: மகனே,  நான் அன்பு செய்வதற்காகவும்,

அன்பு செய்யப்படுவதற்காகவும்

உன்னை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியிருக்கிறேன்.

உனக்கு முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன்.

நான் உன்னை நேசிக்கிறேன்.

நீயும் என்னை அன்பு செய்வாயாக.

மனிதன் : இறைவா, நான் உம்மை அன்பு செய்கிறேன்.

ஆனால்  நீர் எனக்கு சுதந்திரம் அளித்திருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

"ஏன்? "

"நான் என் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் புரிந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்."

" நீ பாவம் புரிவாய் என்று எனக்குத் தெரியும்."

"பின் ஏன் என்னைப் படைத்தீர்? "

"அன்பு செய்யத்தான்.

நீ பாவம் செய்தாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்.

உனது பாவத்திற்கு நானே பரிகாரம் செய்வேன்."

"அது எப்படி?

நீர் இறைவன். உம்மால் கஸ்டப்பட முடியாது.

கஸ்டப்படாமல் எப்படிப் பரிகாரம் செய்ய முடியும்?"

"பரிகாரம் செய்வதற்காக நானே மனிதனாகப் பிறந்து பாடுகள்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிரைக்கொடுத்து பரிகாரம் செய்வேன்."

"இது  எதற்கு வீண் வேலை.

என்னைப் படைக்காதிருந்தால்
உமக்கு ஒரு கஸ்டமும் இல்லை.

கஸ்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஏன் எனக்காக கஸ்டத்தை தேடிப்போய் ஏற்கவேண்டும்? "

"அன்பு.

அன்பு மட்டுமே காரணம்.

அன்பின் நிமித்தம் உன்னைப் படைத்த நான்

என் அன்பிலிருந்து என்றும் மாறமாட்டேன்.

நீ பாவம் செய்தாலும், நீ வருந்தும்பொது மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்.

ஏன் படைத்தீர் என்று கேட்பதை விட்டு விட்டு அன்பு செய்.

அதைத்தான் நான் விரும்புகிறேன்."

"ஆண்டவரே நீர்  சர்வத்தையும் அறிந்தவர்,

சர்வ ஞானம் உள்ளவர்.

நீர் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

உம்மை விசுவசிக்கிறேன்,

நம்புகிறேன்,

நேசிக்கிறேன்."

ஆண்டவர் நமக்குச் சுதந்திரம் தந்திருக்கிறார்,

முழுமனதோடு அன்பு செய்ய.

அன்பு செய்வோம், அவரடி அடைவோம்.

லூர்து செல்வம்.