Saturday, June 28, 2025

''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு நற்செய்தி 16:18)



''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

" நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது,

சீமோன்  மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;(பாறை)  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
.
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"

 என்று கூறி சீமோன்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படுவார் என்பதை முன்னறிவிக்கிறார். 

பேதுரு என்றால் இராய் (பாறை).
தமிழில் பேதுருவை இராயப்பர் என்று அழைக்கிறோம்.

"உன் பெயர் பேதுரு; (பாறை)

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

இதை விடத் தெளிவாக யாரும் கூற முடியாது.

ஆனால் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுப்பதில் நமது பிரிவினை சகோதரர்கள் கில்லாடிகள்.

அவர்கள் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.

பாப்பரசரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் அவரவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்களாக நியமித்துக் கொள்வதால் தான் இன்று 40,000க்கும் மேற்பட்ட பிரிவினை சபையினர் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள்.

இயேசு பாடுகள் படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

அவர்களிடம் குருக்களும், திருப்பலியும், திவ்ய நற்கருணையும் கிடையாது.

இயேசு உலகுக்கு வந்தது நமது பாவங்களை மன்னிக்க.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

ஆனால் பிரிந்து சென்றவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் கிடையாது.

பாப்பரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ விரும்பாத ஒரு சிலர், சபையை விட்டு வெளியேறி, தங்களை Pastor என அறிவித்துக் கொண்டு செபக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

செபக் கூட்டங்களின் தலையாய நோக்கம் காணிக்கை வசூலிப்பது.

நம்மவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதோடு பிரிந்து சென்றவர்களின் செபக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் அங்கேயும் இயேசு தானே இருக்கிறார் என்பார்கள்.

திருப்பலியும், திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்தில் இயேசு எப்படி இருப்பார்?

நற் செய்தி அறிவிப்பவர்கள் இயேசுவின் சீடர்களின் நேரடி வாரிசுகளா இருக்க வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவ சங்கீர்த்தனம் கேட்க முடியாது.

திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்திற்கு வேறு எதற்காக இயேசுவைப் பின்பற்றுபவர்கள் போகிறார்களோ தெரியவில்லை.

கடன் தொல்லை தீரும், வருமானம் அதிகரிக்கும், வியாதி வருத்தமெல்லாம் நீங்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மக்களைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள் Pastors.

ஆனால் இயேசு அப்படி வாக்களிக்கவில்லை.

"என்னைப் பின்பற்றுபவர்கள் நான் சுமந்தது போல் தங்கள் சிலுவைகளைச் சுமந்து வர வேண்டும்" என்றுதான் கூறியுள்ளார்.

இராயப்பராகிய பாறை மேல் கட்டப்பட்ட திருச்சபையின் வழி காட்டுதலின்படி வாழ்வோம்,

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment