Friday, March 30, 2018

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.
********************************

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)

"மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" (லூக்.5:32)

"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" (அரு.8:11)

 "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்.23:34)

என்ற நம் ஆண்டவரின் அருள் வாக்கியங்களை மனதிற்கொண்டு,

எதையும் இயேசுவின் கண்ணோக்குப்படிதான் நோக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்,

இயேசுவின் 'அன்பு' என்ற கண்ணாடி மூலமே பைபிள் வசனங்கட்கு விளக்கம் காண வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும் இவ்வரிகளை எழுதுகிறேன்.

யூதாஸ்

இயேசுவைக் காட்டிக்கொடுத்தது

மிகப்பெரிய பாவம்.

மறுப்பதற்கில்லை.

ஆனால் இராயப்பர் இயேசுவை
மூன்று முறை மறுதலித்தார்.

யூதாஸ் இயேசுவைத் தனக்குத் தெரியும் என்பதன் அடிப்படையில் காட்டிக் கொடுத்தான்.

இராயப்பர் இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மூன்று முறை மறுதலிதத்தார்.

மறுதலிப்பது மிகப் பெரிய பாவம்.

அதையே இயேசு மன்னித்து விட்டார், இராயப்பர் மனஸ்தாபப்பட்டு அழுததால்.

யூதாசும்

'மாசில்லாத இரத்தத்தைக்' காட்டிக் கொடுத்ததற்காக

வருந்தினான், 

வருத்த மிகுதியால்

தற்கொலை செய்துகொண்டான்.

தற்கொலை பாவம்.

ஆனால் யூதாஸ் 'பாவம் செய்யப்போகிரோம்' என்ற அறிவோடு செய்திருக்கமாட்டான்.

'தன் ஆண்டவரைக் காட்டிக்கொடுத்துவிட்டோமே' என்ற உணர்ச்சி வேகத்தில் செய்த   செயல் அது.

உணர்ச்சி கூட, கூட மூளையின் வேலை குறைந்துகொண்டே வரும்.

பாவத்தின் கனாகனம் மூளையின் சிந்திக்கும் ஆற்றலைப் பொறுத்தது.

மூளை முற்றிலும் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டால் நம்மால் பாவம் செய்யவவே முடியாது.

ஆகவே யூதாஸ் செய்த தற்கொலைப் பாவத்தின் கனாகனம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்,

அவர்தான் நமது ஆழ்மனத்தையும் அறிந்தவர்.

நமது கண்ணுக்கு செயலின் வெளிப்புறம் மட்டுமே தெரியும்,  உள் காரணம் தெரியாது.

ஒருமுறை ஒரு மாணவன் வகுப்பிற்குப் பிந்தி வந்தான்.

நான் காரணம் கேட்கவில்லை.

"கையை நீட்டு" என்றேன்.

நீட்டினான்.

பிரம்பினால் இரண்டு அடி கொடுத்தேன்.

முகம் சுழியாமல் வாங்கிக் கொண்டான்.

"ஏண்டா, பிந்தி வந்ததற்கு அடித்திருக்கிறேன். கொஞ்சம்  கூட உணர்ச்சி இல்லையா?  போ. இடத்தில போய் உட்கார்." என்றேன்.

புன்சிரிப்போடு போய் உட்கார்ந்தான்.

'என்னடா இந்தப் பய அடிவாங்கியும் சிரிச்சிக்கிட்டு  போரான். என்ன மன அழுத்தம்' என்று நினைத்துக் கொண்டேன்.

மதிய உணவு இடைவேளை நேரத்தில் என்னிடம் வந்தான்.

"என்னடா? "

ஒரு பையை என் கையில் தந்தான்.

"என்னடா இது? "

"உங்களுக்கு நார்த்தங்காய் ஊறுகாய்னா ரொம்பப் பிடிக்கும்னு அப்பாட்டச் சொன்னேன்.

அவர் தொட்டத்தில வந்து வேண்டிய அளவு பறிச்சிக்கன்னு சொன்னாரு.

அதனாலதான் தோட்டத்துக்குப்   போய்ட்டு வரக் கொஞ்சம் பிந்தி விட்டது."

"Sorryடா. ஆனாலும் எனக்காகக்கூட பிந்திவரக் கூடாது.  ரொம்ப நன்றி"

பையன் பிந்தி வந்தது தப்பு, ஒழுங்குப்படி.

ஆனால் அவன் மனதார தப்பு செய்யல.

ஆக,  யாரின் செயலையும் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது.

யூதாசைப் பொறுத்த மட்டில்

"தந்தையே, இவர்களை மன்னியும்:

ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று

இவர்களுக்குத் தெரியவில்லை"

என்ற இயேசுவின் வார்த்தைகள் அவனுக்கும் பொருந்தும்.

அவன் உயிர் பிரியுமுன் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டிருப்பான்,

அவரும் கருணையோடு மன்னித்திருப்பார்

என்று நம்பினால்

என்ன குறைந்துபோவோம்?

யூதாசுக்கு இயேசுவின் மேல் எந்த வெறுப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவனுக்கு இயேசு கடவுள், சர்வ வல்லவர் என்று தெரியும்.

"நமக்கு 30 வெள்ளிக்காசு கிடைத்துவிடும்.

இயேசு எப்படியும் தப்பித்து விடுவார்."

என்றுதான் நினைத்திருப்பான்.

ஆகவேதான் இயேசுவுக்கு மரணத்தீர்ப்பு ஆனவுடன்

"மனம் வருந்தி,

முப்பது வெள்ளிக் காசுகளையும்

தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,


"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்"

என்றான்

ஆகவே அவன் நோக்கம் கொலை அல்ல,

பணம் மட்டும்தான்.

ஒரு செயலின் கனாகனத்தை அதன் நோக்கம்தான் தீர்மானிக்கிறது.

ஆகவே கடவுள் அவன்மீது இரக்கங்கொண்டு

அவன் உத்தம மனஸ்தாபப்பட வேண்டிய அருள்வரத்தைக் கொடுத்து,

அவனை மன்னித்திருப்பார் என நம்புவோம்.

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.

லூர்து செல்வம்.



Wednesday, March 28, 2018

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்." (பழமொழி. 9:10)

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்."
(பழமொழி. 9:10)
********************************

"Hi! Good morning.!"

"ஏன் ப்ரதர், நேரம் மத்தியானம் ஒரு மணி  ஆகுது, 'Good morning' சொல்றீங்க?"

"என்னப் பொறுத்த மட்டில் இப்பதான் morning.

ஏன்னா, ..."

"நான் ஏன்னு கேட்கல. நீ இப்பதான் படுக்கையை விட்டே எழுந்திருச்சிப்ப."

"ஆமா. யார் இல்லேன்னு சொன்னது?

இன்று வாரத்தில ஒரு நாள் லீவு. அத கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாமா?"

"என்னது?  இன்றைக்கு வாரத்தில ஒரு நாள் லீவா?  அப்படி எந்த ஆபீஸ்ல திங்கள் கிழமை லீவு ?"

"மண்டு மண்டு! என்ன நாள்னு கூட தெரியாம பெரிய இவன் மாதிரி பேசர."

"எனக்கு என்ன நாள்னு தெரியலியா?

சரி, இன்றைக்கு என்ன கிழமை?"

"ஞாயிற்றுக்கிழமைடா மண்டு."

"இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையா? மர லூஸ் ஆயிட்டா?"

"எனக்கா, உனக்கா? போய் காலண்டரப் பாரு."

"காலண்டர என்ன பார்க்கிறது. கையில Phone இருக்கும்போது காலண்டர் எதுக்கு.இதோ பார்த்துக்கோ."

"நீதான் பார்க்ணும்."

Phoneஅ உற்றுப் பார்த்துவிட்டு, "ஐயெய்யோ!
இன்றைக்கு உண்மையிலேயே திங்கட்கிழமைதானா? 

நேற்று முழுதும் தூங்கிக்கிட்டா இருந்தேன்?

வீட்ல உள்ளவங்க எழுப்பிவிடாம என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க?

இன்றைக்கு ஆபீஸ்ல நல்ல டோஸ் கிடைக்கும்."

வீட்டைப் பார்த்து ஓடுகிறான்.

"ஆபீஸ்ல டோஸ் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு வீட்டப் பார்த்து ஓடுகிறான்! "

ஞாயிற்றுக்கிழமை முழுதும் தூங்கியதால் ஞாயிறு பூசைக்குப் போக முடியவில்லையே என்ற கவலை கொஞ்சங்கூட இல்லை.

ஆபீஸ்ல டோஸ் கிடைக்குமே என்ற பயம் நிறைய இருக்கிறது !

இறைவனை மறந்தது பற்றி கவலை இல்லை,

ஆபீஸை மறந்ததுதான் மிகப்பெரிய பயம் கலந்த கவலை!

யார் பெரியவர்?

இறைவனா? 

ஆபீஸ் மேனேஜரா?

இறைவன் அன்பே உருவானவர்.

நமக்கு இறைவன் மீது அன்பு இருக்க வேண்டும்.

நமது சாதாரண வாழ்வில்கூட நமக்குப் பிரியமானவர்கள் விரும்புவதை ஆசையோடு செய்வோம்.

நண்பர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் விழுந்து
விழுந்து கவனிப்போம்.

நமக்குப் பிரியமானவர்கள் வருவதாக Phone செய்தால் அவர்களது வருகையை எதிர்நோக்கி வாசலிலே காத்துக்கிடப்போம்.

அன்பர்கள்மீது நாம் காட்டும் உணர்வுகளில் ஒரு சிறு பகுதியையாவது நம்முள் வாழும் இறைவன்மீது காட்டுகிறோமா?

இறைவன் நம்முள் இருப்பது நமக்குத் தெரியும்,  ஆனால் அதை உணர்கிறோமா?

தவறு செய்யும்போது ஆபீஸில் கிடைக்க இருக்கும் டோஸுக்குப் பயப்படும் நாம்,

இறைவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது பாவத்திற்குரிய சம்பாவனையான நித்திய நரகத்தை நினைத்துப் பயப்படுகிறோமா?

நம்மில் அநேகர் நரகத்தைப் பற்றி பேசுவதையே விரும்புவதில்லை.

நான் மாணவனாக இருந்த காலத்தில், மூன்று நாள் தியானத்தில், மூன்றாவது நாள் தியானத்தை நரகம் ஆக்கிரமித்துக்கொள்ளும்.

Fr.வெனிஷ் நரகத்தின் பெரிய படம் ஒன்றை எங்கள் முன் தொங்கப் போட்டுவிடுவார்.

அந்தப் படமும்,  சுவாமி கொடுக்கும் விளக்கமும் நல்லதொரு பொதுப் பாவசங்கீத்தனம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

இப்பொழுது மக்களின் மனநிலை மாறிவிட்டது.

மக்களின் மனநிலை எப்படி இருந்தாலும், 

மோட்சம் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நரகம் இருப்பதுவும்.

இறைவனின் அன்பில் மூழ்கியவர்கள் நரகத்தை நினைத்து பயப்படவேண்டியதில்லை,

நன்கு படிக்கும் மாணவன் ஆசிரியரின் பிரம்பை நினைத்துப் பயப்பட வேண்டாம் என்பதுபோல.

பாவச் சோதனைக்குச் சம்மதிக்க எண்ணம் வரும்போது நரகத்தைப் பற்றி நினைப்பது நல்லது,

படிக்கச் சோம்பல்படும் மாணவன்ஆசிரியரின் பிரம்பை ஞாபகத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுபோல.

இறைவனிடம் நமக்கு பயபக்தி (பயம் +பக்தி) இருக்க வேண்டும்.

பக்தி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பயம்.

"Fear of God is the beginning of wisdom."

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்."
(பழமொழி. 9:10)

இறைவனின் அன்பில் மூழ்கி வாழ்வோம்.

இறைவன் கட்டளையை மீற பயப்படுவோம்.

லூர்து செல்வம்.

Monday, March 26, 2018

Why do we say, "The church instituted by Jesus is one"?

Why do we say,  "The church instituted by Jesus is
one"?
*******************************

Catholic church is a Divine institution,

which means,  that

it was instituted by God Himself.

There is only one God.

The church of God is also one,

because,  its source is unity.

It was born in the mind of the

Most Holy Trinity, one God in three Persons.

Jesus Himself prayed to His Father :

"...that they may all be one;

that they too may be one in us,

as thou, Father, art in me, and I in thee;

so that the world may come to believe

that it is thou who hast sent me.. "(John.17:21)

Having its source in the Trinitarian unity,

the Church  must be one,

unified

within itself

under one head.

There must be unity within itself,

which is possible only if it is one Head.

By 'unity within itself', I refer to the unity in Faith,  which is the essence of our Church.

The Catholic Church  professes the same  faith that has been passed down from the Apostles (what we Catholics refer to as the deposit of faith).

If anyone breaks away from the Faith which belongs to the Apostolic tradition,  clinging to his own opinions, he stops belonging to the true Church.

Church’s oneness or unity is not created or brought about by us, 

but instead comes from God Himself.

Jesus instituted the Church in accordance with the will of Heavenly Father.

The Church is one

because of its founder:

"The Word made flesh,

the prince of peace,

reconciled all men to God by the cross, . . .

restoring the unity of all in one people and one body." (CCC 813)

The Holy Spirit is the soul of the Mystical body (Church)  instituted by Jesus.

One soul can have only one body.

One Holy Spirit can have only one Church.

How can the same Spirit dwell in more than one Church, giving them opposite inspirations? 

On the Pentecost day the Holy Spirit inspired the Apostles to preach the same Gospel to different people speaking different languages.

So the Church which has unbroken Apostolic tradition till now is the One true Church.

The Church is one in its celebration of  the seven sacraments that were instituted by Christ, especially the Eucharist.

Christ takes care of His Church  through His representative on the earth, the Pope.

So,  only the Church headed by the Pope is the true Church,  instituted by Jesus.

Through the sacrament of Holy Orders,

the Church’s apostolic succession

ensures uninterrupted continuity,

with the teaching and leadership of St. Peter
(the first  pope)

and

the Apostles (the bishops)

in union with him.

We cannot deny the fact

that  there have always been tensions

within the body of Christ,

the Church.

One need only read the Epistles of St. Paul to understand

that our sins have injured this unity from the very beginning.

In fact, "in this one and only Church of God

from its very beginnings there arose certain rifts,

which the Apostle strongly censured as damnable.

Around the period of Renaissance, 

some Church members ignored the oneness of the Church

and

under the pretext of Reformation

broke themselves away from the Church

for selfish motives,

taking with them only the Bible,

that too by ignoring certain books,

that didn't support their motives,

not accepting certain articles of Faith

and

rejecting Papal
Headship and tradition.

Now they are not within the one Apostolic Church,

instituted by Jesus.

They must return to the Catholic Church,

accepting the the authority of the Pope

and

the unbroken Apostolic tradition.

That is the will of God, revealed through the prayer of Jesus,

"I pray for those who are to find faith in me through their word;

21 that they may all be one; "
(John17:20,21)

Let God's will be done.

"Our Father,  Thy will be done on earth as it is done in Heaven."


Lourdu Selvam.

Sunday, March 25, 2018

We are saints.

We are saints.
********************************

The church instituted by Jesus

is

one,

holy,

catholic,

and

apostolic.

What do we mean, when we say that the Church is holy?

Does it mean that all the members of the Church,  right from the Pope to the junior most Christian,  are holy?

We cannot deny the fact that  all of us are sinners.

 8" Sin is with us; if we deny that, we are cheating ourselves; it means that truth does not dwell in us."(1John.1:8)

Jesus came in search of sinners.

32" I have not come to call the just; I have come to call sinners to repentance."(Like 5:32)

If all of us are sinners, why do we say that the Church is holy?

Our church is the mystical body of Christ.

Christ is holy.

So His mystical  Body also is holy.

He has provided it with the Sacraments that make us,  sinners,  holy.

They free us from sins and shower on us the graces that  make us and keep us holy.

We are born with original sin.

Baptism frees us from it and makes our soul holy.

When we commit actual mortal sins by breaking God's commandments and the precepts of the Church, we lose our holiness.

But we can become holy again through the sacrament of penance, confession. 

Holy communion feeds us with the body and blood of Jesus Himself and strengthens us against sin.

Every sacrament has a channel
through which God's grace flows on us and strengthens us against sin and temptation.

Logically speaking,

Only what is holy can make us holy.

Church makes us holy.

So,  Church is holy.

As we are living in this world

and

as the living  church members too are in this world

we find it difficult it understand the fact that

our Church is not a worldly institution.

It was instituted by Jesus,

the second Person of the Most Holy Trinity.

So, it is a Divine Institution, headed by Jesus Himself.

Our Holy Father, a man, is only His Representative on earth.

Our Church is membered not only by us in this world,

but also by the souls in Heaven and purgatory.

Souls in Heaven and purgatory together with us Christians in this world make one Divine family.

That is what we mean when we say,

"The Church is a "communion of saints"

"All the participants in that communion are called saints,

by reason of their destination

and of their partaking of the fruits of the Redemption."

So, though we are sinners,  the redemptive power of Jesus transforms us into saints.

Being of the next world  though we are in this world,

we can have a pretaste of Heaven in this world itself

if we live in the presence of God, who is within us.

Read and meditate on the following Gospel verses for a few minutes:

“you are not of the world, but I chose you out of the world” (John 15:19).

"you are a chosen race,

a royal priesthood,

a consecrated nation,

a people God means to have for himself;

it is yours to proclaim the exploits of the God

who has called you out of darkness

into his marvellous light. (1 Pet. 2:9).

“Do not be conformed to this world

but be transformed by the renewal of your mind” (Rom 12:2).

We can conclude with the words:

True, 

Church is a tent of sinners,

but the tent is holy

and transforms the sinners into holy people,

Of course,  with their cooperation.

Lourdu Selvam.

Friday, March 23, 2018

ஆடிக் கழிவு தவமுயற்சிகள்.

ஆடிக் கழிவு தவமுயற்சிகள்.
********************************

ஆடி மாதம் வந்தாலே போதும் நமது பெண்கள் பட்டாளம் ஜவுளிக் கடைகளை நோக்கி படை எடுத்துவிடும்.

அந்ந மாதம் முழுதும் பாதி விலையில் உயர் ரகத் துணிமணிகளை அள்ளி விடலாமே!

குறைந்த விலையில் நிறைந்த பொருட்கள் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்பார்கள்?

முடிவில்லா நித்திய பேரின்பத்தை அடைவதற்காக,

உலகை வெறுத்து,  காடுகட்குச் சென்று கடுந்தவம் புரிந்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், 10000 ரூபாய்ப் புடவையை வெறும் 100 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பெண்மணி போல,

வாழ்நாளெல்லாம் கடுந் தவம் புரிந்து முனிவர்கள் அடைந்த மோட்ச இன்பத்தை,

ஒரே ஒரு  வாக்கியத்தில் சம்பாதித்துவிட்ட ஒருவரின் வரலாரும் நமக்குத் தெரியும்.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" 

என்று இயேசுவைக் கூறவைப்பதற்கு அவன் பயன்படுத்திய ஒரு வாக்கியம்,

"இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" 

அவன் நினைவு கூரத்தான் சொன்னான்,

இயேசுவோ உறுதிமொழியே கொடுத்துவிட்டார்!

குறைந்த விலை,  நிறைந்த பொருள்!

நல்ல கள்ளனுக்கு மட்டும்தான் மோட்சத்தைக் குறைந்த வார்த்தைகளில் களவாடத் தெரியுமா? 

நமக்குத் தெரியாதா?

"இயேசுவே! என்றென்றும் என்னை உம் நினைவில் வைய்யும். "

இயேசு உறுதியாகச் சொல்வார்,

"மகனே, உன்னை என்னால் எப்படி மறக்க முடியும்?

மறப்பதற்காகவா உனக்காகச் சிலுவையில் என்  உயிரைப் பலியாக்கினேன்?

பயப்படாதே,

நீ என்றென்றும் என்னோடுதான் இருக்கிறாய்."

உலகில் சமாதானத்தை ஏற்படுத்த என்னென்ன முயற்சிகளெல்லாமோ செய்கிறாகள்.

ஆனால் இறைவன் நமக்கு அளித்த விண்ணகச் செய்தி,

"நல் மனத்தோர்க்குச் சமாதானம்."

சமாதானதத்திற்கு வேண்டியதெல்லாம் நல்ல மனது மட்டும்தான்.

நல்ல மனதிருந்தால் மற்றவை தாமே வரும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."   
இயேசுவே கூறிய வார்த்தைகள்.

குறைந்த விலை(நன்மனது), நிறைந்த பொருள் (சமாதானம்).

மனதிருந்தால் மார்க்கமுண்டு.

நல்ல மனதிருந்தால் விண்ணக வழி தானே திறக்கும்!

தவக்கால தவ முயற்சிகட்காக நிறைய கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.

காலையில் ஐந்து மணி.

நல்ல தூக்கம்.

அம்மா எழுப்புகிறார்கள்.

தூங்கணும் போலிருக்கிறது.

இருந்தாலும், 

"இயேசுவே! உமக்காக."

எழுகிறோம்.

"பிதா,  சுதன், பரிசுத்த ஆவியின்பெயராலே,
ஆமென்."

இயேசுவுக்குப் பிடித்த தவமுற்சி,  அவருக்காக எழுவது!

பகலில் நடப்பதெல்லாம் நமது   விருப்பப்படி நடக்கும் எதிர்பார்க்க முடியாது.

நமது விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்தால் நமக்கு என்ன வரும்?

கோபம் வரும்.

கோபம் வரும்போதெல்லாம்,  மனதை விண்ணோக்கி எழுப்பி,

"இயேசுவே உமக்காக."

என்று செபித்து,

இயேசுவின் பாடுகளை நினைத்துப் பார்த்தால் கோபம் மறைந்துவிடும்.

ஒரு புன்னகையோடு,  'இயேசுவே நன்றி'
என்று செபிப்பது மிகப் பெரிய தவமுயற்சி!

ஏனெனில் இயேசுவின் உதவியோடு நம்மை நாமே வென்றிருக்கிறோம்!

ஒரு நாள் முழுவதும் பிறரைப்பற்றி குறை கூறாதிருப்பதே மிகப்பெரிய தவ முயற்சி !

உணவில் ருசி இல்லையா?

பரவாயில்லை.

இயேசுவுக்காகப் புன்முறுவலோடு சாப்பிடுவோம்.

மிகப்பெரிய தவமுயற்சி.

நம்மேல் நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் உண்மையான புன்சிரிப்போடு உரையாடுவது மிகப்பெரிய தவமுயற்சி.

ஒரு நேர உணவை ஒறுப்பது தவமுயற்சிதான்.

அந்த உணவிற்கான விலையைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கும்போதுதான் அத்தவமுயற்சி முழுமைபெறும்.

மற்றவர்கட்கு உதவி செய்ய நினைப்பதே மிகப் பெரிய தவமுயற்சி.

இறைவன் நமது உள்ளத்தை நோக்குகிறார்.

நமது உள்ளத்தில் கள்ளம்,  கபடு இல்லாமலிருந்தால்,

அந்த இடத்தில் ஆண்டவரின் அருள் நிறைந்திருக்கும்.

நம் உள்ளத்தில் வாழும் இயேசுவுக்காக

எதை நினைத்தாலும்,

எதைப் பேசினாலும்,

எதைச் செய்தாலும்,

எவ்வளவு சிறியதாய் இருந்தாலும்

அது தவமுயற்சிதான்.

சிறிய சிறிய துளிகள் சேர்ந்ததுதான் பெரிய கடல்.

சிறிய சிறிய மணல்மணிகள் சேர்ந்ததுதான் பெரிய கடற்கரை.

சிறிய சிறிய நல்லெண்ணங்களும்,

சிறிய சிறிய அன்பு வார்த்தைகளும்,

சிறிய சிறிய தற்செயல்களும்

சேர்ந்ததுதான் மிகப்பெரிய தவ வாழ்க்கை.

நாம் மிகச் சிறியவர்கள்.

நமது சொத்தாகிய இயேசு மிகப் பெரியவர்.

லூர்து செல்வம்.

Thursday, March 22, 2018

ID card. அடையாள அட்டை.

ID card.  அடையாள அட்டை.
*******************************

பள்ளிக்கூடம் சென்றால் மாணவர்கள் கழுத்திலும்,

அலுவலகம் சென்றால் அலுவலர்கள் கழுத்திலும்

ஒரு அட்டை தொங்கும்.

எல்லோருக்கும் தெரியும்,  அது அவர்களுடைய ID card,  அடையாள அட்டை.

இந்த மாணவன் இந்த பள்ளியில் படிப்பவன்,

இவர் இந்த அலுவலகத்தில் பணி புரிபவர் என்பதற்கான சான்று அது.

அதை அணியாமல் பள்ளிக்கோ,  அலுவலகங்களுக்கோ செல்லக்கூடாது என்பது  விதி.

அடையாள அட்டையைப் போலவே,

மாணவர்கள்,

மற்றும்

காவலர், படையினர், செவிலியர் போன்ற சில பணியாளர்களுக்கு

  சீருடை    (Uniform) என்று ஒன்று இருக்கிறது என்றும் எல்லோருக்கும் தெரியும்.

அதை அவரவர் பணி நேரத்தில் அணிய வேண்டும் என்றும் எல்லோருக்கும் தெரியும்.

பள்ளியில் அல்லது பணியில் இல்லாத நேரத்தில் இஸ்டப்பட்ட உடை அணிந்துகொள்ளலாம்,

ஏனெனில் அப்போது அவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை.

ஆக,  பணி நேரத்தில் சீருடை அணியவேண்டும்.

முழுநேரப் பணியாளர்களாய் இருந்தால்?

சீருடையின் நோக்கமே

அவர்களைப் பார்ப்பவர்கட்கு

அவர்கள் யார் என்று தெரியவேண்டும் என்பதுதான்.

அப்படியானால் முழுநேரப் பணியாளர்கள் மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் இருக்கும்போது, 

அது எந்த நேரமாய் இருந்தாலும்சரி,

எந்த இடமாய் இருந்தாலும்சரி

சீருடையில் இருப்பதுதான் முறை.

நான் யாரை முழுநேரப் பணியாளர்கள் என்று குறிப்பிடுகிறேன் என்பதை யூகித்திருப்பீர்கள்.

இப்போது  கூறப்போவது நடந்த சம்பவம்.

ஒரு ஊரில் ஒரு பெரியவர்க்கு  மிகவும்  சுகமில்லை.

அவருக்கு அவஸ்தை கொடுக்க பங்கு சுவாமியாரை அழைத்துவர வேண்டும்.

அந்த ஊர் பங்கின் Substation.

பங்குக் கோவில் 10கி.மீ.க்கு அப்பால் உள்ளது. 

Town bus ஏறிச் சென்று சுவாமியாரைக் கூட்டி வர வேண்டும்.

பெரியவரைப் பார்க்க வெளியூர்க்காரர் ஒருவர் வந்திருந்தார்

சுவாமியாரைக் கூட்டி வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் பங்கு சுவாமியாரைப் பார்த்ததில்லை.

ஆயினும் பங்குக் கோவிலுக்குச் விசாரித்தால் தெரியப்போகிறது என்று சுவாமியைக் கூட்டிவரச் சம்மதித்தார்.

Busல் ஏறி, அருகில் இருந்தவரோடு பேசிக்கொண்டே பங்குக் கோவில் இருந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.

Busலிருந்து இறங்கி, ஒரு Tea குடித்துவிட்டு,  கோவிலுக்கு நடந்தார்.

நேரே சுவாமியின் அறைவீட்டிற்குச் சென்று சீசப்பிள்ளையிடம் விசயத்தைச் சொன்னார்.

"சுவாமி வெளியூர் சென்றிருக்கிறார். அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். இங்கே உட்காருங்கள்" என்று வெராண்டாவில் இருந்த நாற்காலியைக் காண்பித்தார்.

உட்கார்ந்திருந்தபோது   அவரோடு Busல் வந்தவர் கோவிலிலிருந்து வெளியே வந்து ,  சுவாமியின் அறையைப் பார்த்து வந்தார்.

"நீங்களும் சுவாமியைப் பார்க்கவா வந்தீர்கள்?"

"நீங்கள் என்ன விசயமாய் வந்தீர்கள்?"

" ஒரு பெரியவருக்கு அவஸ்தை கொடுக்க சுவாமியை அழைத்துப்போக வந்தேன்."

"அவஸ்தையா? இதை Busல் ஏறுமுன்பே சொல்லியிருக்கலாமே.

சீசப்பிள்ளை, அவஸ்தைப் பையை எடுங்கள்." என்று கூறிவிட்டு,  அவசரமாக அறைக்குள் போய் அங்கியோடு வெளியே வந்தார்.

கூப்பிடப்போனவர்க்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

"நீங்கதான் சாமியாரா? அங்கியில்லாமலிருந்தால் மற்றவர்கட்கு எப்படித் தெரியும்? "

"சரி, வாங்க." என்று கூறிவிட்டு, Bus stand க்கு நடந்து,  Busல் ஏறி, பெரியவரின் வீட்டிற்குச் சென்றார்கள்.

ஆனால் அவர்கள் வீட்டிற்குள்  நுழைந்து கொண்டிருந்தபோது பெரியவரின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது.

குருவானவர் அங்கி அணிந்திருந்தால், பெரியவர் சாகுமுன் அழைத்து வரப்பட்டிருப்பார்.

அவரது ஆசீரோடு ஆன்மா பிரிந்திருக்கும்.

பெரியவரது இப்படிப்பட்ட சாவிற்கு யார் பொறுப்பு?

அன்பாந்த தந்தையரே,

உடை உங்கள் சொந்த விசயம்.

உங்களுடைய  சொந்த விசயத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை.

ஆனால்,

நீங்கள் எங்களுடையவர்கள்.

இயேசு எங்கள் ஆன்மீக நலனை உங்கள் கையில் ஒப்படைத்திருக்றார்.

அங்கி உங்களுக்கு சாதாரண உடையாகத் தெரியலாம்.

ஆனால் எங்களுக்கு அதுதான் உங்கள் ID card,  அடையாள அட்டை.

அதுதான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்களை அடையாளம் காண உதவும்.

ஒருவன்  தேம்ஸ் நதியில் படகில் சென்றபோது குடிக்க நல்ல நீர் கிடைக்கவில்லையே என்று  அழுதானாம்,  அது தேம்ஸ் நதி என்பதை அறியாமல்.

குருக்களோடு பயணிக்கும் ஒருவன் 'பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரு குரு கிடைக்கவில்லையே' என்று அழுதால் எப்படி இருக்கும்?

நீங்கள்தான் எங்களுக்கு இயேசு -

எங்கள் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு  உங்களிடம்தான் தந்துள்ளார்.

Pants,  shirt போட்ட இயேசுவை எங்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

ஒரு ஐந்து நிமிடம் சிந்தியுங்கள்,

அங்கியின் பெருமை புரியும்.

அங்கியைக் கழற்றமாட்டீர்கள்.

ஏனெனில் அது இயேசு அணிந்த உடை.

குணமாக விரும்பியவர் தொட விரும்பிய உடை.

அங்கிக்கு தன்னிலெ எந்த பெருமையும் இல்லை.

இயேசு அணிந்ததால் அதற்கு பெருமை வந்தது.

இயேசு தொங்கியதால் சிலுவைக்கு மதிப்பு வந்தது.

இயேசு அணிந்ததால் அங்கிக்கு மதிப்பு வந்தது.

இயேசுவைப்போல் உடை அணிவதில் உங்களுக்கு என்ன சங்கடம்?

லூர்து செல்வம்.